Navigation


RSS : Articles / Comments


அன்று சிந்திய ரத்தம் தொடர் 5

12:29 PM, Posted by sathiri, No Comment


அன்று சிந்திய ரத்தம் தொடர் 5
புதிய தலைமுறை வார இதழுக்காக ..

பல மணிநேரம் இருவருக்கும் நடந்த சந்திப்பில் குழப்பத்திலிருந்த கருணாவை மேலும் குழப்பி கிழக்கின் தலைவன் நீதான் என அவன் மனதில் பதியவைக்க பலமணிநேரம் எடுத்தது.இயற்கை வளங்களை வாரி வழங்கும் கிழக்கு .ஆறாயிரம் பேர்கொண்ட படையணி .பல களம் கண்ட தளபதிகள் .அற்புதமான ஆலோசனைகளை அள்ளி வழங்க நான் ..அத்தனையையும் கொண்டுள்ள அஞ்சா நெஞ்சன் நீ ..இத்தனையும் இருந்தும் எட்டி உதைக்கும் வன்னியை இன்னும் கட்டியளுவது ஏன் ??விட்டு விடு ..விடுதலைப்புலிகள் அமைப்பை இரண்டாக வெட்டிவிடு ..என்று சொல்லிவிட்டு கருணாவை உற்றுப்பர்தான் .பாதி கரைந்ததுபோல இருந்தது .நேரத்தை பார்த்தான் நள்ளிரவை தாண்டிக் கொண்டிருந்தது விடிவதற்குள் மீதியையும் கரைத்து விடலாமென்கிற நம்பிக்கை பிறந்திருந்தது.தொலை பேசியில் சிலரை அவசரமாக வரும்படி அழைத்தான் அனைவரும் பிரதேசவா திகளான கிழக்கின் கல்விமான்கள்.அங்கு வந்தவர்கள் வடக்கு வாழ்கிறது ..கிழக்கு தேய்கிறது என்று வகுப்பெடுத்தார்கள் பொழுது புலரத் தொடங்கியிருந்தது .

எல்லாவற்றையும் பொறுமையாய் கேட்டுக்கொண்டிருந்த கருணா நீண்டதொரு பெரு மூசோடு " பிரிந்து விட்டேன் பிரபாகரன் எனக்கு தலைவரல்ல. எனக்கு நானே தலைவன்.இனி எனது அமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகள் அல்ல தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள்" சொல்லி முடித்ததும் சுற்றியிருந்தவர்கள் கைதட்டினர்.சிவராம் எழுந்து கருணாவை கட்டிப் பிடித்து "கிழக்கு விடிந்து விட்டது" என்றபடி வாழ்த்து சொல்லியவன் ..இந்தச் செய்தியை உலகம் முழுதும் அறியச் செய்ய வேண்டும் என்றபடி அவசரமாக சில வெளிநாட்டு ஊடகங்களுக்கும் உள்ளூர் ஆங்கில ஊடகங்களுக்கும் அறிவித்தான்.அடுத்த நாள் கருணா முன்னால் குவிந்திருந்த பத்திரிகையாளர்கள் கேள்விகளுக்கு தலைமையை குற்றம் சாட்டி பேட்டி கொடுத்தவன் தனியாக இயங்கப் போவதாக அறிவித்தான்.
சிங்களவர்களுக்குஆச்சரியம்.புலிகளைநேசித்தவர்களுக்குசோகம் .இலங்கையரசுக்கு சுகம் .பொதுவனவர்களுக்கு குழப்பம் .வன்னித் தலைமையோ வழமை போல் மௌனம் ..அடுத்தடுத்த காட்சிகள் அரங்கேறியது.வன்னித் தலைமைக்கு எதிராக கிழக்கில் ஊர்வலம் ..உண்ணாவிரதம் .பிரபாகரனின் கொடும்பாவி எரிப்புஎன்று நடந்து கொண்டிருக்கும் போது .இன்னொரு பக்கம் தமிழர்களின் உண்மையான நலன் விரும்பிகள் சிலர் அதிர்ச்சியடைந்து இது தமிழனின் சாபக்கேடு ..பெரும் அழிவு வரபோகின்றது அதை எப்படியாவது தடுத்து நிறுத்த நினைத்து பேச்சு வார்த்தைக்கு முயன்றனர் .இரு தரப்பும் இவர்களுக்கான கதவை அடைத்தது ..வடக்கில் புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியது போலவே கிழக்கில் வாழ்த்த வடக்கு மக்கள் கருணாவால் வெளியேற்றப் பட்டு அவர்கள் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டன .கருணாவை நீக்கியதாக புலிகள் அறிவித்தனர்.கருணாவிடம் இருந்த சிலர் வன்னிக்கு தப்பிச் சென்றனர் .சிவராம் கருணாக்கு சார்பாக அறிக்கைகள் விட்டு ஆலோசனைகளும் வழங்கிக் கொண்டிருந்த வேலை வன்னிக்கு வருமாறு புலிகளின் தலைமை அழைத்திருந்தது.

தன்னை எதுவும் செய்து விடமாட்டார்கள் என்கிற தைரியத்தில் தயங்காமல் போனான்.தலைவரை சந்திக்கப் போனவனை சந்தித்தது தலைவரல்ல பொட்டம்மான் .உருவிய பொட்டம்மானின் துப்பாக்கி அவன் தலையை அழுத்தியது .தலையில் துப்பாக்கியை அழுத்தி நிற்பவன் அதன் விசையை அழுத்தும் அந்த ஒரு செக்கன் இடைவெளிக்குள் கதைத்தே கரைத்து விடும் திறமை சிவராமுக்கு உண்டு .பொட்டம்மானோடும் கதைத்தான். அவரை கரைத்தான். துப்பாக்கியை விலக்கிய பொட்டம்மான் தான் சொல்வதை எழுதச் சொல்ல கருணாவின் செயல்களை கண்டித்து அவனுக்கு எதிரான அறிக்கை அடுத்தநாள் பத்திரிகைகளில் சிவராமின் பெயரில் வெளியாகியிருந்தது .
அடுத்தடுத்த நாட்களில் கிழக்கில் புலிகளின் படையணி புகுந்து கொள்ள தன் படையணியை கலைத்து விட்டு தப்பியோடிய கருணாதெற்கில் ஒரு இலங்கை இராணுவ முகாமில் தஞ்சமடைதான்.வன்னியிலிருந்து கொழும்பு வந்த சிவராம் பீரங்கியாய் நம்பிய கருணா புஸ்வானமாய் போனதால் மீண்டும் புலிகளோடு ஒட்டிக்கொள்ள கருணாவோடு தப்பியோடிய பலர் தெற்கில் புலிகளின் புலனாய்வு பிரிவால் தேடி தேடிக் கொல்லப் பட்டனர்.
கருணாவையும் கொலைவெறியோடு தேடித் திரிந்தனர்.இவையெல்லாம் சிவராமின் திருவிளையாடல். காட்டிக் கொடுப்பது அவன்தான் என இன்னொரு தரப்பு கோபம் கொண்டது.சிவராமுக்கான நாளும் குறிக்கப் பட்டது.அதே நேரம் யாரோ ஒரு ஆயுதக் குழுவால் தான் கொல்லப் படலாம் என்பதும் சிவராமுக்கு தெரிந்திருந்தது ஆனால் அது இப்போதைக்கு இல்லை தனது சேவை எல்லோருக்குமே தேவை என்று தனது நண்பர்களிடம் சொல்லவும் தவறவில்லை.தானே அதி புத்திசாலி.சாகசக்காரன்.வீராதி வீரன்.அகாய சூரன் .என்று மற்றவர்களிடம் பெருமை பேசுவது அவனுக்கு பிடிக்கும்.ஆனாலும் ஆபத்து தன்னை நெருங்கி வருவதை உணர்திருந்ததால் அதிகமாகவே குடிக்கத் தொடங்கியிருந்தான்.அப்படி நிறையக் குடித்து விட்டு  ஒரு நள்ளிரவு வீடிற்கு சென்று கொண்டிருக்கும்போது   இலங்கை அரச புலனாய்வு பிரிவினரோடு சேர்ந்த P.L.O.T அமைபினரும் ஒரு வெள்ளை வேனில் அள்ளிப் போட்டு போனார்கள் .

விடுதலைப் புலிகள் ..கருணா குழு ..P.L.O.T ..இலங்கை அரசு என்று அனைவருக்கும் தண்ணி காட்டியபடி தனது ஆய்வுக் கட்டுரைகளால் அனைவரையும் கவர்ந்த சாகசக் காரன் தராகி சிவராம் அடுத்தநாள் அதிகாலை கொழும்பு வீதியோரத்தில் அனைத்தைப் பிணமாக கிடந்தான்.
இப்போ கருணா எங்கே ??
கருணாவை தேட முன்பு வன்னியிலிருந்து புலிகள் எப்படி கருணா அணியை தோற்கடித்தனர் என்று சற்று பார்த்து விடலாம் ..03.03.2004ஆம் திகதி விடுதலைப்புலிகளுடன் இருந்து பிரிந்து செல்வதாக அறிவதைத் தொடர்ந்து, வெருகல் என்று கூறப்படுகின்ற வாகரை பிரதேசத்தின் வடக்கு எல்லை மிகவும் முக்கியத்துவம் பெற்றிருந்தது.மட்டக்களப்பு நகரிலிருந்து வடக்காக அமைந்துள்ள வெருகல் ஆறு மட்டக்களப்பு மாவட்டத்தையும் திருகோணமலை மாவட்டத்தையும் பிரிக்கின்ற ஒரு எல்லையாக இருந்து வந்தது. கருணாவிற்கு ஆதரவான போராளிகள் லெப்டினன் கேணல்.ரெஜி (கருணாவின் மூத்த சகோதரன்) தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் .போராளிகள் வெருகலாற்றுக்கு வடக்காக திருகோணமலை மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி சொர்ணம் தலைமையிலான சார்ள்ஸ் அன்ரனி படையைச் சேர்ந்த நிலைகொண்டிருந்தனர்.அதே நேரம் கருணா பிரிந்த பின்னர் அவரின் அணியிலிருந்து பிரிந்து வன்னிக்குள் சென்ற கேணல் ரமேஷ் கேணல் பிரபா ஆகியோரோடு 600 க்கும் மேற்பட்ட ஜெயந்தன் படையணியும் தளபதி பானு தலைமையில் தயாராக நின்றிருந்தார்கள் .எந்த நேரமும் இரு தரப்பிற்கும் யுத்தம் வெடிக்கலாம் என்கிற நிலைமை கருணா அணியில் இருக்கும் போராளிகள் நிறைய யுத்த அனுபவங்கள் கொண்ட மூர்க்கமான போராளிகள் எனவே அவர்களுடன் நேரடியாக மோதினால் பலத்த இழப்பு ஏற்படுவதோடு சிலநேரத்தில் தோற்றும் போகலாம் எனவே தந்திரமாக கருணா அணியை தோற்கடிக்க முடிவெடுத்தார் பிரபாகரன் .
J’aimeCommenterPartager

No Comment