Wednesday, December 24, 2008

புனித கன்னி மரியாளிற்கும் குண்டுவீச்சு



கிளிநொச்சி, பரந்தன் சந்தியில் இருந்து 600 மீற்றர் தூரத்தில் முல்லைத்தீவு வீதியிலுள்ள தேவாலயத்தின் மீது (Holy Cross Convent) சிறீலங்கா வான் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நாளை கிறிஸ்மஸ் நடைபெறவுள்ள நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10:30 மணியளவில் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

தாக்குதல் இடம்பெற்ற தேவாலயத்தின் கூரையில் பாதுகாப்பு இடங்களிற்கான செஞ்சிலுவை அடையாளம் காணப்படுகின்ற போதிலும், சிறீலங்கா வான் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

3 comments:

  1. கிறிஸ்மஸ் என்றால் என்ன? தீபாவளி என்றால் என்ன? பேரினவாதிகளுக்கு 'வான'வேடிக்கைதான். மாதா வீழ்ந்து கிடப்பதைப் பார்க்க... என்ன சொல்வது வழக்கமான வார்த்தைகள்தான். வருத்தமாக இருக்கிறது.

    ReplyDelete
  2. //தமிழ் நதி saidகிறிஸ்மஸ் என்றால் என்ன? தீபாவளி என்றால் என்ன? பேரினவாதிகளுக்கு 'வான'வேடிக்கைதான். மாதா வீழ்ந்து கிடப்பதைப் பார்க்க... என்ன சொல்வது வழக்கமான வார்த்தைகள்தான். வருத்தமாக இருக்கிறது.//

    சிங்களத்திற்கு தமிழ்மண்ணில் எல்லாமே எதிரிகள்தான் அதற்கு சாமி சிலையும் எதிரிதான்.

    ReplyDelete
  3. Anonymous8:17 AM

    உலகக் கிருத்துவ வலைத்தலங்களுக்கும்,
    சர்ச் நிறுவனங்களுக்கும்
    இதை அனுப்பி வையுங்கள்.
    இந்தியா இன்னும் வான் படை
    ஆலோசகர்களை அனுப்பி வைத்துள்ளது
    வெட்கக் கேடு.

    ReplyDelete