Tuesday, August 25, 2009

சினேகிதிகளும் சில சில்லெடுப்புக்களும்




அண்மையில் நண்பி ஒருவர் மானுஸ்ய புத்திரனின் சினேகிதிகளின் கணவர்களுடனான சினேகிதங்கள் என்றொரு கவிதையொன்றினை அனுப்பிவைத்து இப்படியான சம்பவங்கள் உங்களிற்கும் ஏற்பட்டிருக்கா என்று கேட்டிருந்தார்..எனக்குத்தான் சினேகிதிகள் அதிகமாயிருக்கே அவர்களிற்கு திருமணமான பின்னர் அவர்களினுடனானதும் அவர்களின் கணவர்களினுடனானதுமான என்னுடைய உறவில் நான் நெளிந்த.வழிந்த சம்பவங்கள் பல... எங்கள் சிறுவயது அல்லது பாடசாலை சினேகிதிகள் வயது வந்து திருமணமாகிப் போன பின்னர்..அவர்களுடன் எங்கள் உறவு முற்றாக அறுந்து போய்விடுகின்றது..அல்லது பெரும்பாலும் குறைந்து போய்விடுகின்றது.ஆனாலும் திருமணமான பின்னர் தொடர்பில் இருக்கின்ற சினேகிதிகளுடனான எங்கள் உறவு என்பது உண்மையிலேயே ஒரு கம்பியில் நடக்கிற வித்தை மாதிரி..

நீ.. நான்..வாடி போடி என்கிற ஒருமைகள் அற்றுப்போய்..நீங்கள் நாங்கள் என்கிற ஒரு அன்னியத் தன்மையில்..அழைக்கவேண்டியிருக்கும்.எனக்கும் ஜரோப்பாவில் சிறுவயது தோழி ஒருத்தி இருக்கிறாள்..நிச்சயிக்கப்பட்ட திருமணம் மூலம் வெளிநாடு வந்தவள்..அவளது கணவன் நல்லவர்தான் ஆனால் ஊரில் வாழ்கின்ற ஒரு சராசரி குடும்பத் தலைவனைப்போன்ற கொஞ்சம் கண்டிப்பு கொஞ்சம் சந்தேகம்..வருடத்தில் ஒருதடைவைதான் அவர்களது வீட்டிற்கு போவேன்.. மற்றும்படி தொலைபேசியில் கதைப்பேன்..அவள் கணவர் இல்லாத நேரங்களில் தொலைபேசியடித்து பல விடயங்களையும் மனம்விட்டு பேசுவாள். சில நேரங்களில் அவள் கதைத்துக்கொண்டிருக்கும் பொழுது கணவன் வேலையால் வந்துவிட்டால்..உனையே ""அவர் வேலையாலை வந்திட்டார் அவரோடை கதையுங்கோ என்று தொலைபேசியை அவரிடம் திணித்து விட்டு போய்விடுவாள்..அதுவரை கலகலவென பல விடயங்களையும் கதைத்துக்கொண்டிருந்த எனக்கு அவரிடம் என்னகதைப்பது என்று தெரியாமல் திக்கித் திணறி " என்ன வேலையோ.?? இப்பதான் முடிஞ்சதோ??எப்ப லீவு??என்று உப்புச்சப்பில்லாத சில கேள்விகளுடன் சும்மாதான் சுகங்கள் விசாரிக்க போனடிச்சனான்.என்று ஒருமாதிரி கதைத்து போனை வைத்துவிட்டு பெருமூச்சு விட்ட சந்தர்ப்பங்கள் ஏராளம்..

அவளதும் பிள்ளைகளினதும் மற்றும்.கணவரினதும் . பிறந்தநாளிற்கு தவறாது வாழ்த்து மடல் அனுப்புவேன்..அதே நேரம் அவளிற்கான வாழ்த்து மடலில் மட்டும் இதயம்..அல்லது சிவப்பு றோசாப்பூ..இல்லையில்லை றோசாப்பூ படமே இல்லாத வாழ்த்து மட்டைதான் தெரிவு செய்து அனுப்புவேன்..மற்றும்படி அவளது வீட்டிற்கு போகும் பொழுது அவளது கணவரிற்கு ஒரு வைன் போத்தல். பிள்ளைகளிற்கு விழையாட்டுப்பொருள் என்று வாங்கிவிட்டு அவளிற்கும் ஏதாவது வாங்கலாமென்று யோசிப்பேன்..அவளிற்கு என்னநிற உடைபிடிக்கும்.என்னென்ன பொருட்கள் பிடிக்கும் என்கிறதெல்லாம் எனக்கு அத்துபடியாய் தெரிந்தாலும் அவளிற்கு பிடித்தமானவற்றை யெல்லாம் எடுத்து பலதடைவை புரட்டிப் புரட்டிப் பார்த்து விட்டு கடைசியில் எதுவுமே வாங்காமல் போவதுதான் வழைமையாகிவிட்டது..அவளிடம் ஏதாவது பொருளை கொடுக்கும் போதும்சரி வாங்கும் போதும் சரி தப்பித்தவறியாவது என் கைகள் அவள் மீது பட்டுவிடாமல் பத்திரமாக பார்த்துக்கொள்வேன்..சாதாரணமாக கதைத்துக்கொண்டிருக்கும் பொழுது சில சமயங்களில் நான் என்னை மறந்து போடி என்று சொல்லி விட்டாலும் ..நாக்கைக்கடித்து மன்னிப்பு கேட்டு அவளது கணவனைப்பார்த்து வழியவேண்டியிருக்கும்.

அவர்களுடன் உரையாடும் பொழுதும்.. எங்கள் ஊர் பற்றியதும்..எங்கள் சிறுவயது சமாச்சாரங்கள் உறவுகள் பற்றிய விடயங்களை பெரும்பாலும் தவிர்த்து ..அவர்களது பிள்ளைகள் பற்றியும்..அவளது கணவன் பற்றியுமே அதிகம் பேசுவோம்..ஆனாலும் அவள் கணவன் விடாக்கண்டன்.நான் கொண்டு போன வைன் போத்தலை உடைத்து கிளாசில் ஊற்றியபடி தொடங்கும் உரையாடலில் ""இவள் படிக்கேக்கை ஒருத்தரையும் காதலிக்கேல்லையோ""என்று கதையோடு கதையாய் சிரித்தபடி அடிக்கடி கேட்பார்..""சேச்சே அவள் நல்லபிள்ளை குனிஞ்சதலை நிமிரமாட்டாள்..ஒரு பெடியளோடையும் கதைக்க மாட்டாள்.நான் பக்கத்து வீடு அதோடை சின்னவயதிலையே பழக்கம் எண்டதாலை என்னோடை மட்டும்தான் கதைப்பாள்""..என்றொரு நற்சான்றிதழ் பத்திரத்தை கொடுத்த கையோடையே அடுத்த கேள்வி வந்து விழும்..இவள் காதலிக்காட்டிலும் இவளின்ரை கலருக்கும் வடிவுக்கும் பெடியள் யாராவது காதல் கடிதம் குடுத்திருப்பாங்கள்தானே??அப்பிடியும் நடக்கேல்லையோ ""என்று அவளைப் பார்த்து சிரித்தபடிகேட்பார்..இது கொஞ்சம் சிக்கலான கேள்விதான்..ஒருத்தருமே கொடுக்கவில்லையென்று பொய்யும் சொல்லமுடியாது..யாரும் நம்ப மாட்டார்கள்.

ஏனென்றால் பாடசாலை நாட்களில் அது நிச்சயமாக அனைவருக்குமே நடந்திருக்கக்கூடிய விடயம்..அதே நேரம் கடிதம் கொடுத்து..அல்லது அவள் படிக்கின்ற காலங்களில் ஒருத்தனை காதலித்து அவளிற்காக நானே கடிதம் பரிமாறியதை நிச்சயமாக இப்பொழுது அவள் கணவனிடம் சொல்லமுடியாது.. அப்படியான சந்தர்ப்பத்தில் சமாளிப்பதற்காக முன்னாலிருந்த வைனை எடுத்து ஒரே மடக்கில் குடித்துவிட்டு அவரது கேள்விக்கணைகளில் இருந்து தப்புவதற்காக ""படிக்கிற காலத்திலை நீங்கள் பல பெட்டையளிற்கு கடிதம் குடுத்து அடிவாங்கி அனுபவம் போலை "" என்று ஒரு ஏவுகணையை அவர்மீது ஏவி விட்டு அது உலகமகா படிகிடிபோல நான் வில்லங்கத்திற்கு விழுந்து விழுந்து சிரிக்க..அவரும் பதில் சொல்லாமல் அசடுவழிந்தபடி அடுத்த விடயத்திற்கு மாறிவிடுவார்..

அதே நேரம் நான் குடித்த போதை எந்த அளவில் நிற்கிறது என்பதையும் அளந்து பார்ப்பதற்காக அடிக்கடி கழிவறைக்கு போவது போல எழுந்து நின்று நிதானித்து நடந்து சுய பரிசோதனை செய்து பார்ப்பேன்.. நடக்கும் போது சாதுவாய் தலை கிறு கிறுத்து நடை தடுமாறுவது போலவோ.. அல்லது சொன்ன ஒரு விடயத்தை திரும்ப சொல்வது போலவோ தோன்றினால் அதற்கு மேல் அங்கிருந்தால் ஏதாவது உளறிவிவேன் என்கிற பயத்தில்.உடைனேயே ..சந்தித்தது மகிழ்ச்சி என்று நன்றி வணக்கங்கள் சொல்லிவிட்டு விடைபெற்று விடுவேன்.. நண்பர்களே உங்களிற்கும் இப்படியான சில்லெடுப்பு அனுபவங்கள் நடந்திருக்கிறதா??நடந்திருந்தால் எனக்கு மகிழ்ச்சியே..எனவே நன்றி வணக்கம்..

Sunday, August 23, 2009

இத்தாலிய இந்துக்கள்.தமிழில் பூசை..

இங்கிலாந்தில் வோல்ஸ் என்கிற இடத்தில் இந்துமதத்தினை பின்பற்றும் இங்கிலாந்து வெள்ளையர்களின் முருகன் கோவிலை பலரும் அறிந்திருப்பிர்கள்.. அதே போல இத்தாலி நாட்டில் altair என்கிற இடத்தில் இந்து மதத்தினை பின்பற்றும் இத்தாலிய நாட்டினர்கள் சிலர் இணைந்து ஆரம்பத்தில்84 ம் ஆண்டளவில் ஒரு யோகாசனம் மற்றும் தியானம் செய்கின்ற ஒரு மண்டபத்தினை அமைத்து அவர்கள் வழிபடுவதற்காக ஒரு அம்மன்சிலையை மட்டும் வைத்து சிறிய கோயிலையும் அமைத்திருந்தார்கள்..காலப்போக்கில் மன அமைதிக்காக தியானம் செய்கிற இத்தாலியர்களின் தொகையுடன் இத்தாலி மற்றும் பிரான்சில் இருக்கின்ற இந்துக்கள். பெரும்பாலான ஈழத்தமிழர்கள் கோயில் பற்றி கேள்விப்பட்டு வரத்தொடங்கிவிட்டார்கள்..அதனால் சிறிய கோயிலும் வளர்ச்சியடைந்து இந்தியாவின் கன்னியாகுமாரியிலிருந்து சிலைகளும் இந்தியாவிலிருந்து சிற்பிகளும் வருவிக்கப்பட்டு அழகிய ஆனால் அளவான கோயிலாக உருப்பெற்று நிற்கிறது..அதனை நிருவாகிக்கின்ற இத்தாலியர்கள் தமிழ்நாட்டிலேயே பெரும்பாலும் இந்துமதம் பற்றியும் தேவாரப்பாடல்களையும் தமிழிலேயே படித்திருப்பதால் பாடல்கள் தமிழில் பாடுவது மட்டுமல்ல பூசைகளும் தமிழிலும் சமஸ்கிருதம் இரண்டும் கலந்தே செய்கிறார்கள்..

அவர்கள் தங்கள் பெயர்களையும் தமிழிலேயே மாற்றியிருக்கிறார்கள்..இன்று பிள்ளையார் சதுர்த்தி விசேட பூசை என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள்.. பிரான்சில் நான் இருக்குமிடத்திலிருந்து 250 கி.மீ தூரம் இரண்டு மணிநேரப்பயணம்..மலைப்பிரதேசத்தில் அமைதியான அடர்ந்த காட்டுப்பிரதேசத்தில் அமைந்திருந்த கோயிலுக்கு போய் வந்தது மட்டுமில்லை உங்களிற்காக சில படங்களையும் எடுத்து வந்தேன் இங்கு இணைக்கிறேன்..

கோயிலின் முகப்பு


பூசைகள் முடிந்தபின்னர் இடம்பெற்ற கலை நிகழ்வில் நடனமாடும் இரண்டு இத்தாலிய மற்றும் ஒரு தமிழ்பெண்

அங்கு பலரின் கவனத்தையும் கவர்ந்து சிறப்பாக நடனமாடிய மீனாச்சி என்கிற இத்தாலியப்பெண்மணி







எங்களுக்கும் கலையை இரசிக்கத்தெரியுமில்லை..

இந்தக் கோயில் பற்றிய மேலதிக விபரங்கள்

Tuesday, August 11, 2009

ஈழம்..இனி ஆயுதப்போர் சாத்தியமா??


ஈழத்தில் இலங்கையரசின் அடக்குமுறைகளிற்கெதிரான அறவழிப்போராட்டங்கள் நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு திருப்புமுனையானயாக 1970 ம் ஆண்டு தமிழ் மாணவர் பேரவை என்கிற மாணவர் அமைப்பினை அமைத்து ஈழத்தமிழரிற்கு இனி ஆயுதப் போராட்டம்மூலமாகவே தீர்வு ஏற்படுமென்று தீர்மானமெடுத்தவர்களின் முக்கியமானவர்களில் சத்தியசீலனும் ஒருவர்..இவரது மாணவர் பேரவையிலிருந்தே பிற்காலங்களில் பிரபாகரன்உட்பட பலஇயக்கங்களையும் தொடங்கிய தலைவர்கள் அனைவரும் தோன்றியிருந்தனர்.இன்று ஈழத்தில் ஆயுதப் போர் முடிவிற்கு வந்துள்ள நிலையில் ஆயுதப்போர் மூலமே தீர்வு எனமுடிவெடுத்த சத்தியசீலனுடனான ஒரு நேர்காணல்..







Wednesday, August 05, 2009

ஈழம்.. முடிந்துபோன ஆயுதப்போராட்டமும்.. முடிவுறாத காமக்கதைகளும்..



ஈழத்திலை ஆயுதப் போராட்டம் முடிசிச்சுதா ... புலிகளின் தலைமையும் இல்லையெண்டு அறிவிச்சிட்டாங்களா இங்கினை ..புலம்பெயர் தேசங்களின் புலிகளின் கட்டமைப்போ நேத்திக்கடனிற்கு(வேண்டுதலுக்கு)உடைச்ச சிதறு தேங்காய் மாதிரி ஆகிப்போய் அதை மீண்டும் கே.பி..என்கிறவர் அமைத்த நாடுகடந்த தமிழீழ அரசு என்கிற கட்டமைப்பில் மீண்டும் அனைவரும் இணைத்து பழையபடி தமிழர்தரப்பு பெரும் சக்தியாக மாற்றமடைந்து வந்துகொண்டிருக்கிறபோது ..இன்னமும் புலிகளினதும் பிரபாகரனினதும் பெயரை வைத்தே பிழைப்பு நடாத்த விரும்பும் சிலர்மட்டும் நெடியவன் தலைமையில் கே.பி தலைமையிலான அணியினரை துரோகிகள் விலை போய்விட்டார்கள் என்றபடி.. தலைவர் மீண்டும் வந்து தாட்டுவைத்த துவக்கை கிழறியெடுத்து போராட்டம் நடாத்துவார்..அதற்கு பணம் தாருங்கள் என்று பணம் சேர்ப்பதிலேயே குறியாய் இருக்கிறார்கள்..

அதுமட்டும் கிடையாதுங்கோ ஏதோ ஏருத்தரையொருத்தர் பார்த்து .காய் கலோ.. எண்டு சொல்லுறமாதிரி ஆளாளிற்கு காய் துரோகி என்கிற நிலைமையாய் போச்சு..ஆனால் கே.பி அணி பக்கம் நிற்கிறவங்களிற்கு மற்றவங்கள் சொல்கிற குற்றச்சாட்டு என்னவெண்டால்... புலிகள் இயக்கத்தில் இருந்து பணமோசடி .பாலியல் மோசடி செய்தார்கள்..என்று அதரப்பழசான அலுத்துப்போன குற்றச்சாட்டுக்களாக உள்ளது.. இனியாவது புதிசாய் ஏதாவது யோசிப்பாங்களா?? ஒரு பாரிய ஆயுத அமைப்பிலை இருந்து வெளியேற்றுறதுக்கு வேறை குற்றச்சாட்டுக்கள் எதுவுமே இல்லையா..என்ன கண்றாவி...இந்த குற்றச்சாட்டு கே.பி..யில்தொடங்கி.. வழுதி..வழியாய் வந்து.. இப்பொழுது என்மீதும் அதே குற்றசாட்டை சுமத்தி நானும் துரோகியாம்..

எல்லாரும் நல்லா கவனமாய் கேட்டுக்கொள்ளுங்கோ.. நான் இப்போ துரோகி..சரி..புலிகள் இயக்கமென்பது.. இதுவரை உலகில் இருந்த விடுதலை இயக்கங்களிலேயே மிகவும் கண்டிப்பான கட்டுக்கோப்பானதொரு ஆயுதஇயக்கம் என்பதை நான் இங்கு எழுதத் தேவையில்லை.. அப்படி அந்த இயக்கத்தில் பணம் களவெடுத்து பாலியல் மோசடியும் செய்தால் உடைனே தலைவர் மோசடி செய்தவரை இயக்கத்திலிருந்து வெளியேற்றி முடிந்தால் பத்திரமாக வெளிநாட்டிற்கும் அனுப்பிவைப்பாராக்கும்...அப்பிடியே வெளிநாடு வந்தவங்களும் புலியளிற்கு ஆதரவாய் இருக்கிறமாதிரி இருந்து கொண்டு வெளிநாட்டு உளவு நிறுவனங்களிற்கு விலை போயிடுவாங்களாம்..முக்கியமாய் றோவிற்கு..இங்கினை கவனியுங்க உலகத்திலையே உளவு நிறுவனமெண்டால் அது றோ மட்டும்தானாம்..

ஏனெண்றால் அதை எழுதிறவங்களிற்கு அதை விட்டால் வேறை உளவு நிறுவனங்களின்ரை பெயரே தெரியாது அதுதான் பிரச்சனை.சரி எங்களைத்தான் தலைவர் வெளியேத்த முதல்லை ஊரிலை ஒரு பெண்ணை பிடித்து கலியாணமும் பண்ணிவைத்து தான் வெளியேத்துவார்..அதுதான் வெளியேத்திட்டாரே..நாங்களும் இயக்கத்திலை சுருட்டின பணத்தோடை முதல்லை இந்திய வருவம்..ஏனெண்டால் அங்கினைதானே எங்களிற்கு புலிகள் இயக்கம் பயிற்சி தந்தது..அதாலை எங்களிற்கு தெரிந்த முதல் வெளிநாடு அதுதான்..அங்கை தமிழ்நாடு.. கன்னடா.. ஆந்திரா..கேரளா என்று முதல்லை மானில வாரியாய் எங்களோடை பாலியல் சேட்டைகளை ஆரம்பிப்போம்..பிறகு அப்பிடியே கொஞ்சம் வெளியாலை போய்

தாய்லாந்து.கம்போடியா..இந்தோனேசியா என்று நாடுவாரியாய் முடித்துக்கொண்டு.. இப்போ ஜரோப்பாவிலை பிரான்ஸ்.. ஜெர்மன்..சுவிஸ் எண்டு உலகலெவலிலை பாலியல் மோசடியள் செய்து கொண்டிருக்கிறம்..இப்போ உலகலெவலிலை நாங்கள் இயங்கத்தொடங்கின படியாலை பணமும் அதிகமா தேவைப்படுதா.. அதுதான் றோவிட்டை விலை போயிட்டம்...றோவிற்கும் என்ன கஸ்ரமோ??எங்கனை வாங்கிட்டு மொத்தமாய் பணத்தை தராமல் தவணை முறையிலை கே.பி..ஊடாக தாறாங்கள்..அதை வைச்சுக்கொண்டு நானும் பொழுது போகாமல் அப்பப்ப ஓசி பேப்பர் ஒண்டிலையும் இணையத்தளங்களிலையும்..ஊர்வம்பளக்கிறது அவங்களிற்கு குடையுதாம்..நாங்கள் றோவிட்டை வாங்கிறம் அதுக்கு எங்களாலை கணக்கு காட்ட ஏலும்.. ஏனெண்டால் ஒவ்வொரு பெட்டையளும் ஒவ்வொரு நாட்டிலை இருக்கிறபடியாலை போக்குவரத்துசெலவு..அங்கை போனால் ஊசார் ஏத்துறதுக்கு தண்ணிச்செலவு.. போகேக்கை வெறும் கையோடை போறது தமிழர் நாகரீகம் இல்லைத்தானே அதாலை ஏதாவது வாங்கிற செலவு இப்பிடி ஏகப்பட்டது இருக்கு தாராளமாய் கணக்கு காட்டலாம்..

ஆனால் நீ்ங்கள் திரும்பவும் ஆயுதப் போராட்டத்திற்கெண்டும்..இராணுவ முகாம்களிலை இருக்கிறவையை வெளியாலை எடுக்கிறமெண்டும்.. மருந்துக்கு எண்டும் சனத்திட்டை காசு சேர்க்கிறீங்களே.. அதிலை யாரையாவது வெளியிலை எடுத்ததை காட்டமுடியுமா?? இல்லாட்டி வாங்கின பணத்துக்குத்தான் அது எங்கை எவ்வளவு போனதெண்டு கணக்கு காட்டமுடியுமா???முடியாதே..
இதை நான் உங்களிட்டை நேரை கேட்டால் உடைனையே .. நான் புலிகள் இயக்கத்திலை எந்தப்பயிற்சி முகாமிலை எத்தனையாவது அணியிலை பயிற்சி எடுத்து எந்தெந்தப் பிரிவிலை எத்தினை வருசம் இருந்தனான் எண்டுகூடத்தெரியாமல்..என்னைப்பற்றி தெரிந்த அரைகுறை தகவல்களைவைத்துக்கொண்டு துரோகி கட்டுரை எழுதிறாங்கள்.. இனியாவது உங்களைப்போலவே அரைகுறை கட்டுரைகளை எழுதாமல்.. என்னுடைய விலாசம் தொ.பே இலக்கம் எல்லாம் பகிரங்கமாய் இருக்கு.. நேரிலை யாரவது வாங்கோ..அல்லது தொ.பே அடிச்சு என்னைப்பற்றிய முழு விபரத்தையும் கேளுங்கோ.. கேட்டுவிட்டு எழுதுங்கோ.. அப்பதான் ஒரு பரபரப்பாய் இருக்கும்...அப்போ வரட்டா????அவ்வ்வ்...........

Tuesday, August 04, 2009

காம சாத்திரி

"ஊருக்கு உபதேசம் உனக்கில்லயடி"

நீங்கள் "சாத்திரி" அல்லது "சிறீ" என்றழைக்கும் சிறீரங்கநாதன் கெளரிபாலனை அறிந்திருப்பீர்கள். ஆனால் அவரின் மறுபக்கத்தை யாரும் அறிந்திருக்க நியாயம் இல்லை. ஒரு பேப்பரில் ஊருக்கு உபதேசம் செய்யும் இவருக்கு உபதேசம் செய்ய யாரும் இல்லை. அதனால், காம களியாட்டங்களுடன் கழிகின்றது இவரது வாழ்க்கை.

இவர் பிரான்சில், நீஸ் நகரில் உணவகம் ஒன்றை நடத்தி வருகின்றார். இவர் யாழ்ப்பாணத்தில் உள்ள சண்டிலிப்பாய் எனும் இடத்தைச் சேர்ந்தவர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் 1984 முதல் 1986 வரை பயிற்சி முகாம் நான்கில் இருந்தவர். குறுகிய காலம் இயக்கத்தில் இருந்த இவர், இயக்கத்தில் இருந்தவர்களுடன் கண்டபடி முறண்பட்டதுடன், இயக்கத்தின் கொள்கைகளுக்கு முரணாக நடந்துகொண்டு ஒழுக்காற்று நடவடிக்கையில் இயக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.


இயக்கதில் குறுகிய காலமே இருந்து ஒழுக்காற்று நடவடிக்கையில் வெளியேற்றபட்ட புலம்பித்திரியும் ஷோபா சக்தி என்பவர் போல்தான் இவரும் வெளியேற்றப்பட்டபின் புலி எதிர்ப்பு புராணங்களைப் பாடத் தொடங்கினார்.
ஆனால், வெளியேற்றப்பட்ட "சாத்திரி" இயக்கத்தின் விசுவாசி போல் காட்டிக் கொண்டாலும் இயக்கத்தைப்பற்றி விமர்சிப்பதை நிறுத்தவில்லை. அதற்கு ஒத்துழைப்பாக இருந்தது இலண்டனில் இருந்து வெளியாகும் 'ஒரு பேப்பர்'. நிதி நெருக்கடியால் நின்றுபோன இந்தப் பேப்பர் இப்போது கேப்பியின் நிதி உதவியுடன் மீண்டும் வலம்வரத் தொடங்கியுள்ளது.
சாத்திரி ஊரில் ஒருவரை திருமணம் செய்திருந்தார். பின்னர் புலம்பெயர்ந்த வந்தவுடன் அந்தத் திருமணத்தை மறைத்து அந்த மனைவியைக் கைவிட்டு பிரான்சில் வெள்ளைக்காரப் பெண் ஒருவருடன் உல்லாசமாக வாழ்க்கை நடத்தினார்.

காலப்போக்கில் அப்பெண்மணியும் கசத்துவிட இந்திய உளவு அமைப்பான "றோ"வின் அறிமுகத்துடன் வந்த கன்னடப் பெண்மணியை மணந்து கொண்டார். இவர்களுக்கு தற்போது ஒரு பெண்குழந்தையும் உண்டு. தற்போது கன்னடப் பெண்மணியுடன் "சாத்திரி" குடித்தனம் நடத்தினாலும், நாலாவதாக இப்போது சீனப் பெண்மணி ஒருவருடன் தொடர்பு இருப்பதை எமது வாசகர்களுக்கு நாம் ஆதாரத்துடன் உறுதிப்படுத்த முடியும். ஆனால் "சாத்திரியின்" குழந்தையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அந்த விபரங்களை இங்கே தவிர்க்கின்றோம்.

இவர் இந்திய புலனாய்வு அமைப்பான "றோ"வுடன் இணைந்து வேலை செய்வதை தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை 2003ம் ஆண்டு தலைமைக்கு உறுதிப்படுத்தியிருந்தது. தற்போது "ஒரு பேப்பரின்" பிரான்சுக்குரிய தொடர்பாளராகவும் இவர் இருக்கின்றார். இப்படிப்பட்ட கோடாரிக்காம்புகளை நீங்கள் இனம் காணுங்கள்.

இந்தத் தகவல்களை நம்ப மறுப்பவர்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள "சாத்திரியுடன்" கடிதம் மூலமாகவோ, தொலை, செல் பேசிகள் மூலமாகவோ நவீன இலத்திரனியல் ஊடாகவோ நீங்களே தொடர்பு கொண்டு கேளுங்கள்...
GOWRIPAL SRI
241, BOULEVARD DU MONT-BORON
06300 NICE
http://meivilampi.blogspot.com/2009/08/blog-post.ஹ்த்ம்ல்

TEL: 09 64 30 06 16
MOBILE: 06 11 14 94 70

என்னடா தன்னைப்பற்றியே எழுதியிருக்கிறானே என்று நினைப்பவர்களிற்கு
எனது குறிப்பு..ஒரு இனத்திற்கான விடுதலைக்காக ஒரு ஆயுதப் போராட்டத்தினை நடத்தி தன்னையும் தன்னுடைய குடும்பத்தையும் அர்ப்பணித்தவனின் வழியை தொடப்போவதாக சொல்லிக்கொண்டு பிரபாகரனின் படத்தையும் போட்டுக்கொண்டு அடுத்த கட்ட ஈழப்போரை நடத்துவதாக சொல்லிக்கொண்டு இப்படி என்னைமாதிரி சிலர் என்னென்ன மோசடி செய்தார்கள் எந்த பெண்களோடை தொடர்பு வைத்திருந்தார்கள் என்றும் யார் யாரோடை படுத்தார்கள் என்கிற ஆராச்சியில் ஈழப்போராட்டத்தை சுருக்கிவிட்ட சிலர் எழுதும் ஒரு இணையத்தில் வெளியானது..அவர்கள் ஒரு பத்திரிகையையும் சில இணையத்தளங்களையும் நடாத்துகிறார்கள்.. அப்படி அவர்கள் நடாத்துகின்ற ஒரு இணையத்தளத்தில் என்னைப்பற்றி எழுதிய உண்மைகள்தான் இவை..இவை பாதிதான் இன்னமும் மீதி அவர்களிற்கு தெரியாது..
எனவே அந்த இணைப்பினை பார்க்க


படித்து மகிழுங்கள் நன்றி
அத்துடன் பாகம் இரண்டினை மற்றவர்களிற்கு சிரமம் கொடுக்காமல் நானே எழுதவுள்ளேன் விரைவில் எதிர்பாருங்கள்..நன்றி