Thursday, January 29, 2009

கண்கள் பனித்தது இதயம் பிளந்தது இன்னும் கொஞ்சம் பொறுங்கள்



முத்துத்தமிழன் முத்துக்குமாரிற்கு அஞ்சலிகள்

2 comments:

  1. Anonymous8:27 AM

    என்ன உங்க ஆளுங்க திட்டபடி எல்லாம் சரியா நடக்குது போல இருக்கு வாழ்த்துக்கள்

    இலங்கையை உருப்படாம செய்த்து போல அடுத்தது தமிழ்நாடு வாழ்க வளமுடன்.

    அது என்ன இந்தியா எதிரி நாடாம் ஆனா இந்தியா தலையிட்டு போரை நிறுத்த வேண்டுமாம்.

    போடா வெண்ணை

    ReplyDelete
  2. முத்துக் குமாரின் உணர்வை மதிக்கிறேன். அதே வேளை இது போன்ற குறிப்பாக தீக்குளிப்பு போன்ற போராடங்கள் தேவையில்லாதது. அருள்கூர்ந்து யோசித்து மாற்றுப் போரட்ட வடிவத்தை கையிலெடுங்கள்.

    இது குறித்து தி.க.தலைவர். கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள செய்தி இதோ:

    “அந்தோ! கொடுமை! கொடுமை!! ஈழத் தமிழர் பிரச்சினை:
    சென்னையில் இளைஞர் தீக்குளித்து மரணம்

    தற்கொலைப் போராட்டத்தைக் கைவிட்டு
    அறப்போர்பற்றி சிந்தியுங்கள்!
    தமிழர் தலைவர் கி. வீரமணி அன்பு வேண்டுகோள்

    ஈழத் தமிழர் படுகொலையைத் தடுக்க வேண்டி மாணவர்கள் உண்ணாவிரதம் போன்ற அறப்போர்களில் ஈடுபட்டதைத் தாண்டி, இன்று சென்னை சாஸ்திரி பவன் முன்பு தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் தனக்குத்தானே தீக்குளித்து இறந்து விட்டார் என்ற செய்தி மிகுந்த வேதனைக்குரியது; ஆழ்ந்த துன்பத்தைத் தருவது.
    இந்தியப் பேரரசு இதுபோன்ற கொடுமைகள் நடக்காவண்ணம் மேலும் போர் நிறுத்தத்திற்கு வற்புறுத்த முன்வாருங்கள்.

    ஈழத் தமிழர் படுகொலையைத் தடுக்க இங்குள்ள நாம் உயிர்த் தியாகம் செய்வது என்பதனால் முழுப் பயன் அடைந்து விட முடியாது. நாம் அனைவரும் ஒன்றுபட்டு போராடிட உயிருடன் இருப்பது அவசியமாகும்.

    எனவே, மாணவத் தோழர்களே, இளைஞர்களே அருள்கூர்ந்து இம்மாதிரி தற்கொலைப் போராட்ட முயற்சியைக் கைவிட்டு, வேறு ஆக்க ரீதியான அறப்போர்கள் பற்றி சிந்தியுங்கள் என்று அன்புடனும், உரிமையுடன் மாணவத் தோழர்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.

    ———நன்றி “விடுதலை” 29-1-2009

    ReplyDelete