Tuesday, October 23, 2007
மாசில்லாதர்
பரிசுத்தமானவரிற்கு கோடி வணக்கங்கள் அதுதானுங்கோ மாசில்லாதர் என்றால் பரிசுத்தமானவர் என்றுதானே தமிழில் அர்த்தம். அதைதான் சொனேன். இது கொழுவிக்கான உங்கள் பதிவின் பின்னூட்டம்தான்: ஆனால் நான் தமிழிச்சிக்கு அனுப்பிய பின்னூட்டங்களைபோல இதுவும் கடாசபட்டுவிடுமோ என்கிற ஆதங்கத்தில்தான் இங்கும் பதிவாக்குகின்றேன். எனவே பரிசுத்தமானவரோ நான் மெய்யாலும் மெய்யாலுமே உங்களிற்கு சொல்லவழி வருவது யாதெனில் பாரிஸ் மாணிக்க பிள்ளையார் தேரன்று கார்து நோர்த் தொடர்வண்டி(பழைய சொற்றாடல் எழுத்தாடல் முறைப்படி புகையிரத)நிலையத்திற்கு முன்நின்று பிள்ளையார் தேரிற்கு தேங்காய் உடைக்கும் காட்டு மிராண்டிகள் என்று துண்டு பிரசுரம் கொடுத்து விட்டு இன்று கொழுவிக்கு தெரு தேங்காய் வழிபிள்ளையார் இது முதுமொழி அல்லது பழமொழி இதை உதாரணமாக காட்டுபவர். ஒன்று அந்த உதாரணத்தை ஏற்று கொள்பவராகவோ அல்லது அதனுடன் உடன்பட்டவராகவோ மட்டுமேயாக உள்ளவரால்தான் அதனை உதாரமாக்க முடியும்.அப்படியானால் தாங்கள் உதாரணத்தை ஏற்று கொள்கிறீர்களா? உதாரணத்தின் மீதான தேங்காயையும் பிள்ளையாரையும் ஏற்று கொள்கிறீர்களா?பிள்ளையாரை ஏற்று கொண்டால் நீங்கள் நீங்கள் நாத்திகம் பேசுவதற்கு தகுதியற்றவர். அடுத்ததாக தேங்காயை ஏற்று கொள்ளதான்வேணும் ஆனால் தெரு தேங்காயை எடுத்து தன்மண்டையில்உடைத்த மாதிரி என்று உதாரணம் காட்டியிருந்தால் அதற்கும் கேள்விகள் இருக்கு ஆனால் நீங்கள் நாத்திகவாதி ஆனாலும் பிள்ளையாருக்கு என்று எழுதிய விதத்தில் நீங்கள் மீண்டும் நாத்திகம் பேச தகுதி அற்வர். அடுத்ததாக நீங்கள் இரண்டாம் உலகமகா யுத்தத்தின் பின்னர் சிதைந்து பேயிருந்த பிரான்சு தேசத்தை கட்டியெழுப்பி அதன் பொருளாதாரத்தை மீட்டு பிரான்சு தேசத்தை வல்லரசாகவும் உலகின் பேரரசாகவும் வாழ வழிவகைசெய்வதற்காகவும் மேலும் உங்கள் ஒரு தோள் மீது பிரெஞ்சு தேசத்தின் ஒரு பகுதியை வீழ்ந்து விடாமல் தாங்கிகொண்டு நிற்கும் வேளையில் நீங்கள் கட்டியெழுப்பிய பிரான்சு தோசம் சில கோப்பை கழுவ வந்த ஈழதமிழ் அகதிகளால் சிறுபிள்ளைதனமாக சிதைக்கப்பட்டு சின்னா பின்னபட்டு அழிந்து போகமால் காப்பாற்ற வேண்டிய தேவைகள் அனேகம் அனேகம் எனவே ஈழத்தமிழ் அகதிகளால் அவை அழிந்து போகாமல் காப்பாற்றபட வேண்டிட கடைமை .கடைமையின் உணர்வு உணர்வின் உயிர் உயிரின் உறவு உறவின் மானிடம் மானிடத்தின் மனிதம் மனிதத்தின் மரணம் மரணத்தின் புறவாக்கம் புறவாக்கத்தின் உறவாக்கம் உறவாக்கத்தின் உள்நிலை செயற்பாடு உள்நிலையின் வெளிப்பாடு வெளிப்பாட்டின் புறப்பாடு புறப்பாட்டின் காரணி சரி வேண்டாம் இத்தோடு நிறுத்தி கொள்கிறேன் பிறகு எனக்கும் புரியகூடாது என்பதற்காகவே எழுதகிறவர்களிற்கும் வித்தியசம் இல்லாமல் போய் விடும் என்னாலும் அப்படி எழுத முடியும் காரணம் நானும் ஒரு சிவப்பு
மாசிலா உண்மை காதலே மாறுமோ பெரியார் வந்த போதிலே
ReplyDeleteஇது குறித்து அவர்ர பதிவில பின்னூட்டம் இட்டுள்ளேன். வெளியிடாட்டி இங்க கொண்டோடி வாறன்
ReplyDelete//மாசில்லாதர் என்றால் பரிசுத்தமானவர் என்றுதானே தமிழில் அர்த்தம். // அப்படியென்றால் `மாசில்லாதார்` தமிழ்ச்சொல் இல்லையா?
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete