ஜரோப்பிய அவலம்
ஜரோப்பா வாழ் தமிழர்களே அவதானமாயிருங்கள்.
இலங்கை அரசும் அதன் ஒட்டுகுழுக்களும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் மத்தியில் அவர்களது தமிழ்தேசியத்தின் பற்றுறிதியையும் மற்றும் தமிழீழ விடுதலை ஆதரவையும் மழுங்கடிக்கும் செயற்பாடுகளை அண்மைகாலமாக வேகமாக முடிக்கி விடப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. அதற்காக அவர்கள் வெளிநாடுகளில் தங்கள் சுயநலத்திற்காக விலைபோன பலரையும் ஒன்றிணைத்து அவர்களிற்கு வேண்டிய பொருளாதார உதவிகளை வாரி வழங்கி தங்களிற்கு உதவியாக இணைத்து பல செயற்பாடுகளை புலம்பெயர் தேசமெங்கும் செயற்படுத்த தொடங்கியுள்ளனர். இவர்களின் இந்த செயற்பாடுகள் தற்சமயம் பிரான்ஸ் நாட்டை மையமாக வைத்தே தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு அண்மையில் பிரான்ஸ் நாட்டிற்கு வந்து போன ஈ.பி.டி.பி. ஒட்டுக்குழுவின் தலைவர் டக்டஸ் அவர்கள் பிரான்ஸ் நாட்டில் சிலவிலைபோன தமிழர்களை வைத்து அதற்கான அத்தி வாரத்தை போட்டுவிட்டு போயிருக்கிறார்.
அவர்களது திட்டத்தின் படி பலவேறு அமைப்பகளின் பெயர்களில் பல்வேறு தலைப்புக்களில் பல கூட்டங்கள் அல்லது கலந்துரையாடல்களை ஒழுங்கு படுத்தி அதில் பிரான்ஸ் வாழ் தமிழர்களை உள்வாங்கி அவர்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்தேசிய உணர்வையும் தமிழீழ விடுதலை ஆதரவையும் மழுங்கடிப்பதாகும்.இதற்கெனஇவர்கள் நன்கு திட்டமிட்டு சில கூட்டங்களையும் கலந்துரையாடல்களையும் பிரான்சில் ஏற்பாடு செய்து துண்டு பிரசுரங்கள் தொலைபேசி மூலமாகவும் ஆள்சேர்க்கும் பிரசாரத்தையும் தொடங்கிவிட்டனர். அவர்கள் முதற்கட்டமாக தொடங்கியுள்ள சில நிகழ்வுகள் இதோ 26வது புகலிடபெண்கள் சந்திப்பு இதில் பெண்கள் பற்றி பிரச்சனைகளை ஆராய போகினமாம். 13மற்றும்.14.10.2007 இடம் la courneuve அடுத்ததாக 14.10.2007 சமாதான பறைவைகள் என்கிற தலைப்பில் ஈராக்மீதான ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்க போகினமாம். இடம் sacelleஅடுத்ததாக20.மற்றும் 21 .10.2007 ந் திகதிகளில் தலித்து மகாநாடாம். இடம் sacelle இந்த மூன்று நிகழ்வுகளிலும் உள்ளே கதைக்கபோறது என்னவோ ஈழபோராட்டத்திற்கான எதிர்புகருத்துகள்தான். எனவே பிரான்ஸ் வாழ் தமிழர்களே அவதானமாயிருங்கள். இவர்களை இனங்காணுங்கள்.
தவலுக்கு நன்றி சாத்திரியார், தமிழர்களே உஷாரப்பு உஷார்........
ReplyDelete