Navigation


RSS : Articles / Comments


ஈழப்போராட்டத்தில் எனது(பொய்)சாட்சியம் 10

7:54 AM, Posted by sathiri, No Comment

ஈழப்போராட்டத்தில் எனது(பொய்) சாட்சியம் புஸ்பராசாவின் புத்தகம் பற்றிய பார்வை பாகம்.10

கடந்த பதிப்பில் ஈ பி ஆர் எல் எவ் வினரின் கரைநகர் கடற்படை தளத் தாக்குதல் பற்றிய விபரத்தை எழுதியிருந்தேரன் அதனை படித்த பலரும் அந்த கட்டுரையில் என் சோபா வை பற்றி ஒரு வசனம் கூட எழுதவில்லை என்று மின்னஞ்சலிலும் மற்றும் தொலை பேசியிலும் கேட்டு வாட்டி எடுத்து விட்டார்கள். காரணம் ஈபி இயக்கம் என்றால் காரை நகர் கடற் தளம் நினைவில் வருவது போல காரைநகர் கடற் தளம் என்றாலே சோபா நிச்சயம் எம்மவர்களிற்கு நிச்சயம் நினைவில் வருவார்.

ஈழத்தில் நடந்த அகிம்சை போராட்டங்களாயினும் சரி ஆயுதபோராட்டங்களாயினும் சரி அதில் தமிழீழ பெண்களின் பங்கு எப்பொழுதுமே முக்கியமானதாக இருந்திருக்கின்றது. அந்த வகையில் ஈழத்தில் ஒரு முகாம் தாக்குதலிற்கு சென்று அதில் இறந்து போன முதல் தமிழ் பெண் என்பதால் சோபாவின் பெயர் அனைவர் நினைவிலும் நிலைத்து நிற்கின்றது.இந்த முகாம் தாக்குதலில் ஈ பி யினரின் சொந்த தயாரிப்பான (மோட்டர்) குறுந்தூர எறிகணையை இயக்குகின்ற குழுவில் சோபாவும் இருந்தார் .

எறிகணையை (செல்) எறிகணை செலுத்தி குளாயினுள் இறக்கி விட்டு பின்னர் அதன் திரியை பற்றவைக்கவேண்டும்.அப்படி செய்த போது எறிகணை வெளியேறாமல் குளாயின் உள்ளேயே வெடித்ததால் அதனருகில் இருந்த பலருடன் சோபாவும் இறந்து போனார்.இவர் 15 வயதிலேயே ஈபிஆர்எல்எவ் இயக்கத்தில் இணைந்து 17 வயதில் இறந்து போனார். புஸ்பராசா அவர்கள் எழுதிய புத்தகத்தை சமர்ப்பணம் செய்தவர்களில் சோபாவும் ஒருவர்.

சரி இனி ஈழபிரச்சனையில் இந்திய தலையீடுகள் எங்கே ஏன் எப்படி ஆரம்பித்தது என்று அனேகமாக பலரும் அறிந்தது தான் எனவே அவற்றை நான் விரிவாக விபரிக்க தேவையில்லை ஆனாலும் அவற்றை சுருக்கமாக ஒரு பார்வை பார்த்து கொண்டு செல்வோம்.இலங்கை சுதந்திரடைந்த காலத்திலிருந்தே இன்று வரை இலங்கையரசானது இந்திய அரசை அவ்வப்போது தனது தேவைகளிற்குமட்டும் பாவித்து கொண்டதே தவிர எந்த காலத்திலும் இந்திய அரசுடன் மனந்திறந்த நட்புபேணியது கிடையாது. வங்காள தேசத்திறகான இந்தியா பாக்கிஸ்தான் யுத்தத்தின் போது பாகிஸ்தான் விமானங்களிற்கு சிறீமா அரசு இரத்மலானையில் எரி பொருள் நிரப்பிய அதே நேரம் பின்னர் ஜே வி பி கிளர்ச்சியை அடக்க இந்திய இராணுவத்தை நாடியது என்று பல உதாரணங்களை சொல்லிகொண்டே போகலாம்.

இப்படி இலங்கையரசு தனது அவசர தேவைகளிற்கு மட்டும் இந்தியாவை பாவித்து கொண்டு அதன் நட்பு எல்லாம் அமெரிக்க இஸ்ரேல் மற்றும் மேற்குலக நாடகளுடன்தான் இருந்து வந்தது.வந்துகொண்டிருக்கின்றது. ஆனாலும் இது எல்லாம் தெரிந்தும் இன்னமும் இந்திய அரசு இலங்கை கேட்பதையெல்லாம் ஓடியோடி எங்கையாவது தேடிபொறுக்கியாவது கொண்டு வந்து கொடுத்துகொண்டுதான் இருக்கின்றது.
ஏன்?? எல்லாம் ஒரு ஆசைதான் என்ன ஆசை?? ஆங்கிலேய அரசு இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்குகின்ற பத்திரத்தித்தில் இரவு கையெளுத்திட்ட நேரு அவர்கள் படுக்கைக்கு போனதும் நித்திரையில் ஒரு கனவுகண்டார்

அதுதான் வல்லரசுகனவு ஆங்கிலேயரை போல பெரிய சண்டினாக உலக வல்லரசாக முடியாவிட்டாலும் தென்கிழக்காசியாவில் குட்டி சண்டியனாக இந்தியா ஒரு வல்லரசாக வேண்டும் என்று கனவு கண்டார்.அதை செயல்படுத்தவும் தொடங்கினார்.இதனால் இந்தியாவின் சனாதிபதி தேர்தலிற்கு இலங்கை மக்களும் வாக்கு போடவேண்டிய ஒரு நிலை வந்து விடும் என்று இலங்கை ஆட்சியாளர்களிற்கு ஆரம்பத்தில் இருந்தே ஒரு கலக்கம் அப்படி ஒரு நிலை வந்தால் பவம் இலங்கையால் என்ன எதிர்க்கவா முடியும் அதனால்தான் இலங்கை திறந்த பொருளாதார கொள்கை என்கிற போர்வைக்குள் அமெரிக்காவுடன் கள்ள தொடர்பை ஏற்படுத்தி கொண்டது.

இந்த கள்ள தொடர்பினை இந்தியா அறிந்ததும் முறை மாப்பிள்ளை நானிருக்க மூன்றாவது மனிசன் எப்பிடி உள்ளை நுளையலாம் என்று கையை பிசைந்தபடி ஆத்திரத்துடனும் ஆதங்கத்துடனும் அங்குமிங்கும் நடந்து திரிந்தது.அப்போதுதான் இலங்கையில் சில தமிழ் இளைஞர்கள் அரசிற்கெதிராக ஆயுதபோராட்டத்தை தொடங்கியுள்ளனர் என்கிற செய்தி அல்வாவாக இனித்தது இந்தியாவிற்கு.பிறகென்ன ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு தானே கொண்டாட்டம் .

இந்தியா காத்திருந்த சந்தர்ப்பமும் கனிந்து வந்தது 83 யூலை கலவரத்தின் தமிழர் மீது சிங்களம் ஆடிய வெறியாட்டத்தை மற்றைய நாடுகளை விட இந்தியா சற்று அதிகமாகவே அதிகாரதோரணையுடன் கண்டித்தது இலங்கையில் அப்போது அரசுகட்டிலில் படுத்திருந்தத ஜே.ஆரை வெறுப்பேற்றியது அமெரிக்க காதலன் இருக்கின்ற தைரியத்தில் இது எங்கள்வீட்டு பிரச்சனை உங்கள் வேலையை நீங்கள் பாக்கலாம் சொல்லிவிட இந்தியாவிற்கு இன்னமும் கோபம் கழுத்துவரை வந்து மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் தவித்தபோதுதான் இலங்கை அரசை அடிபணிய வைக்க இன்னொரு வழியை கையாள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

இந்திய அரசு மற்றும் புலனாய்வு அதிகாரிகள் சேர்ந்து சில திட்டங்களை வகுத்து செயல்படுத்த தொடங்கினார்கள்.அந்த திட்டத்தில் முக்கியமானதும் முதலாவதுமாக ஈழத்தில் உள்ள போராட்ட குழுக்களை பற்றிய விபரங்களை சேகரித்து அவற்றில் சிலவற்றை தெரிந்தெடுத்து பயிற்சியும் ஆலோசனை மற்றும் ஆயுதங்களும் வழங்குவது ஆகும். போராட்ட குழுக்கழுடன் தொடர்புகளை ஏற்படுத்தி திட்டத்தை செயல்படுத்த அவர்கள் தங்களிற்கு நன்கு பழக்கமான நம்பிக்கையுள்ள ஒரு ஈழதமிழரை நியமித்தார்கள் அவர் வேறு யாருமல்ல ஈழத்தமிழர்கள் எல்லோரும் அன்புடன் தந்தை செல்வா என்று அழைத்த எஸ்.யே.வி. செல்வநாயகத்தின் மகன் சந்திரகானே அவர்.

அவரது தலைமையிலேயே இந்த திட்டங்கள் யாவும் ஒழங்கு படுத்தபட்டன.சந்திர காசனும் தன்னுடய தலைமையில் அன்றை போராட்ட இயக்கங்களான ரெலோ ஈபிஆர்எல்எவ் மற்றும் ஈரோஸ் உறுப்பினர்களிற்கு இந்திய அரசின் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த போதுதான் புலிகள் இயக்கத்திற்கும் இந்த இந்திய அரசின் திட்டம் பற்றி தெரிய வந்தது எனவே புலிகள் அமைப்பும் இந்தியாவிடம் உதவிகளை பெறமுயற்சி செய்தனர். இந்த முயற்சி பற்றிய விரிவான விபரங்களை ஓரளவு புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் திரு அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எழுதிய போரும் சமாதானமும் என்கிற புத்தகத்தில் விபரித்தள்ளார். புலிகளிற்கும் பயிற்சிவழங்க இந்திய அரசு முன்வந்தாலும் புலிகளின்தலைமை ஒருவிடயத்தில் தெளிவாக இருந்தது

இந்திய அரசு இலங்கையரசின் கொட்டத்தையடக்கி ஒரு குட்ட குட்டி ஈழத்தமிழர்களிற்கு சில அதிகாரங்களை இலங்கையரசிடம் இருந்து பெற்றுகொடுக்குமே தவிர எந்த சந்தர்ப்பத்திலும் தனி ஈழம் அமைவதை அனுமதிக்காது என்று தெரியும். இந்த விடயத்தில் மட்டும் புளொட் அமைப்பை பாராட்டலாம் அவர்களும் இதே சிந்தனையை தான் கொண்டிருந்தனர். எனவே புலிகள் இந்திய அதிகாரிகள் இழுத்த இழுப்பிற்கெல்லாம் ஆடாமல் தங்களது தனித்தன்மையை பேண விரும்பினர்.

அதனால் சந்திர காசனின் தலைமையில் மற்றைய இயக்கங்களுடன் பயிற்சி திட்டத்தில் இணையாமல் முடிந்தால் தங்களிற்கு நேரடியாகவும் தனியாகவும் பயிற்சிகளை வழங்கும் படி கேட்டு கொண்டனர் அவர்கள் கோரிக்கைக்கு றோ அதிகாரிகள் அரைமனதுடன் ஆனால் மட்டுபடுத்தபட்ட ஒரு பயிற்சியை வழங்க சம்மதித்தனர் . புலிகளும் தங்கள் உறுப்பினர்களை பயிற்சிக்கு தயார்படுத்தி முதலாவதாக நூறு பேர் கொண்ட ஒரு அணியை பொன்னம்மான் தலைமையிலும் இரண்டாவது நூறு பேர்கொண்ட இன்னொரு அணியை றஞ்சன்லாலா தலைமையிலும் இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் அமைந்திருந்த இந்திய இராணுவத்தின் பயிற்சி முகாமான டொக்ரா டண் முகாமிற்கு அனுப்பி வைத்தனர்.

இத்துடன் இந்தியா புலிகள் அமைப்பிற்கு வழங்கிய பயிற்சியும் முடிவிற்கு வந்தது. இதே நேரம் புலிகள் தவிர்ந்த வேறு இயக்கங்கள் வேறு நாடுகளிலும் பயிற்சிகளை பெற்றுகொண்டிருந்தனர். அவை அடுத்த பாகத்தில்

ஈழப்போராட்டத்தில் எனது(பொய்)சாட்சியம் 9

8:05 AM, Posted by sathiri, No Comment

ஈழப்போராட்டத்தில் எனது (பொய்) சாட்சியம் பகம் 9


காத்தடிக்கிது கலகலக்கிது காரை நகரை ஈபி அடித்த கதையை இந்த வாரம் பாக்கலாம். எண்பதுகளில் முக்கியமான 5 பெரிய இயக்கங்களில் ஈபிஆர்எர்எவ் வும் ஒன்று என்று முதலில் கூறியிருந்தேன் அதில் அதிகமான உறுப்பினர்கள் தொகையை கொண்டது புளொட் அமைப்பாகும் ஆனால் அந்த அமைப்பின் தலைம அளவு கணக்கில்லாமல் ஆட்களை அள்ளியெடுத்து பயிற்சி கொடுத்து விட்டு பின்னர் அவர்களிற்கு வேண்டிய ஆயுதங்கள் இல்லாமலும் ஏன் அவர்களிற்கு உணவே கொடுத்து பராமரிக்க முடியாமலும் திண்டாடிக் கொண்டிருந்தது எனவே அவர்கள் இலங்கை அரசிற்கு எதிராக தாக்குதல்கள் நடத்தவார்கள் என்று எதிர் பார்த்து கொண்டிருக்க அவர்கள் தங்களிற்குள் தாங்களே தாக்குதல்களை நடத்தி கொண்டிருந்தார்கள்.

அடுத்தாக ரெலோவும் சில தாக்குதல்களை செய்திருந்தது ஈரோஸ் இயக்கம் வடகிழக்கிற்கு வெளியெ சில குண்டு தாக்குதல்களை நடத்தியிருந்தது. புலிகள் தொர்ச்சியாகவே வழைமை போல அவர்களில் தாக்குதல்கள் ஏதோ வடிவத்தில் இலங்கை அரசிற்கெதிராக நடந்து கொண்டுதான் இருந்தது.
ஆனால் ஈ பி மட்டும் கணிசமான உறுப்பினர் தொகை மற்றும் ஆயுதங்கள் என்று இருந்தும் எவ்வித தாக்குதலும் அதன் தொடக்க காலத்திலிருந்த செய்திருக்கவில்லை அது அப்படியே தொடர்ந்தால் கடைசியில் அதன் உறுப்பினர்களிடமே ஒரு வெறுப்பு நம்பிக்கையீனம் வளர தொடங்கி விடும் அபாயம் இருந்தது.


அதனால் அது பொதுமக்களிடமும் தங்கள் உறுப்பினர்களிடமும் ஒரு நம்பிக்கையையும் ஒரு உற்சாகத்தையும் ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அதன் இயக்க தலைமை ஒரு தாக்குதலுக்கான திட்டத்தை போட்டது. அதுதான் காரை நகர் கடற்படை தளத்தை தாக்கும் திட்டம். 1985 ம் ஆண்டு மாசி மாதம் 10 ந்திகதி தாக்குவதாக அதற்கு நாளும் குறிக்கபட்டது. அந்த செய்தி ஈபி யின் இராணுவபிரிவான பி எல் ஏ உறுப்பினர்களிற்கு தெரிவிக்கபட்டதும் அந்த செய்தி ஈபியின் முக்கிய ஆதரவாளர்கள் என்று பரவி அந்த தாக்குதல் நடப்பதற்கு சில நாட்களிற்கு முன்பே வீதியில் சாதாரணமாக சந்தித்து கொள்ளும் இருவர் "என்ன ஈபி காரைநகர் அடிக்க போகுதாமே "என்று கதைக்கின்ற அளவிற்கு யாழ் குடா எங்கும் அந்த செய்தி பரவி விட்டிருந்தது.


அப்படியானால் எங்கு என்ன செய்தி கிடைக்கும் என்று தன்னுடைய புலனாய்வு வலையை விரித்து வைத்திருக்கும் எதிரிக்கு செய்தி எப்படி போயிருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.ஈபி அமைப்பினரிற்கு யாழ் குடாவில் மானிப்பாய் மற்றும் அதனை அண்டிய கிராமங்களான நவாலி சங்கு வேலிப்பகுதிகளிலேயே இருபத்தைந்திற்கும் மேற்பட்ட சிறு முகாம்களும் மூன்று பெரிய பயிற்சி முகாம்களும் அமைந்திருந்தது எனவே இந்த தாக்குதலுக்கான தயாரிப்பு வேலைகளும் அதிகமாக இந்த பகுதிகளிலேயெ நடந்தது.

மானிப்பாயில் உள்ள வாசிகசாலையின் பொறுப்பாளராக ஈபி அமைப்பின் அரசியல் பிரிவில் இருந்த அலெக்ஸ் என்பவர் இருந்ததனால் மானிப்பாய் வாசிக சாலையும் ஈபி அமைப்பின் அதிகாரபூர்வமற்ற ஒரு அரசியல் அலுவலகமாகத்தான் இயங்கி வந்தது.
எப்பொழுதும் ஈபி அமைப்பின் அரசியல் உறுப்பினர்கள் அங்கு காணப்படுவார்கள் அந்த அமைப்பின் சுவரொட்டிகள் துண்டு பிரசுரங்கள் என்பனவும் அங்குவைத்துதான் அதிகமாக எழுதப்படும். நான் செய்திபத்திரிகை புத்தகங்கள் படிக்க அங்குதான் போவது வழைமை அதனால் எனக்கும் பல ஈபி அரசியல் பிரிவினர் பழக்கமானார்கள்.காரை நகர் தாக்குதல் நடப்பதற்கு இரண்டு நாள்களிற்கு முன்பே அந்தவாசிகசாலையில் ஈபி உறுப்பினர்கள் பரபரப்பாக சுவரொட்டிகள் தயாரிக்க தொடங்கிவிட்டிருந்தனர்.


காரைநகர் கடற்படைத்தளம் மீதான தாக்குதல் பலநூறு கடற்படையினர்பலி என்றும் பலரக ஆயுதங்கள் கைப்பற்ற பட்டன என்றும் அவற்றில் எழுதியிருந்தார்கள். அவற்றை பார்த்த நான் அலெக்ஸ் என்ற உறுப்பினரிடம் கேட்டேன் என்ன முதலே இப்பிடி எழுதிவைச்சிட்டு தாக்கதலுக்கு போகபோறீங்களா?? சிலநேரம் ஏதும் பிழைச்சால் என்று சந்தேகத்தோடு இழுத்தேன்
.அதற்கு அவர் சொன்னார் இல்லை பிழைக்காது அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்திருக்கு என்று நம்பிக்கையோடு சொன்னார்.தாக்குதல் நாளன்று மாலை யாழ்குடாவின் பெரும்பாலும் அனைத்து சந்திகளிலும் ஈபி உறுப்பினர்கள் காவலில் நின்றனர்.அந்த தாக்குதலுக்கென்று விசேடமாக ஒரு கனரக வாகனமொன்றை கவசவாகனமாக தயாரித்து மூளாய் பகுதிக்கு அனுப்பியிருந்தனர்.


ஈபியினரின் வாகனங்கள் மற்றும் பொதுமக்களிடம் வாங்கி வைத்திருந்த வாகனங்களில் என்று மாலையே ஈபியின் இராணுவ பிரிவான பி எல் ஏ (மக்கள் விடுதலை இராணுவம்)உறுப்பினர்கள் மட்டுமன்றி அரசியல் பிரிவினர் மற்றும் ஆதரவாளர்கள் கூட அந்த வாகனங்களில் ஏறி காரை நகரிற்கு அண்மித்த இடங்களிற்கு போய்கொண்டிருந்தனர்.
அதில் போனவர்கள் பலரின் கைகளில் ஆயுதங்களே இருந்திருக்கவில்லையென்பது குறிப்பிட வேண்டிய விடயம்.ஏதோ கோயில் திருவிழாவிற்கு போவது போல கைதட்டி ஆரவாரம் செய்தபடி சந்திகளில் நின்ற மக்களிற்கு கைகாட்டியபடி போய்கொண்டிருந்தனர்.அப்போ நானும் மானிப்பாய் மருதடி சந்தியில் நின்று வேடிக்கை பார்த்துகொண்டிருந்த போது அங்கு நின்ற பழைய புலிஉறுப்பினர் ஒருவர் சொன்னார் இவங்கள் போறதை பார்தால் காரை நகர் அடிக்க போற மாதிரி தெரியேல்லை.


வீணா கன பேரை பலி குடுக்கபோறாங்கள் என்றார். எல்லோரும் எதிர்பார்த்துகொண்டிருக்க நள்ளிரவு தாண்டியதும் வெடிச்சத்தங்கள் கேட்க தொடங்கியது . அப்பொழுதே ஈபியின் அரசியல் பிரிவினர் அவசர அவசரமாக ஏற்கனவே எழுதிவைத்திருந்த காரை நகர் கடற்படைத்தளம் வீழ்ந்து விட்டு பலநூறு படையினர் பலி என்கிற சுவரொட்டிகளை ஒட்டதொடங்கி விட்டிருந்தனர்.


காரணம் தாக்குதலுக்கு போனவர்களிற்கும் சரி காவலிற்கு நின்றவர்களிற்கும் சரி அரசியல்பிரிவினரிற்கும் சரிதொடர்பு கொள்ள எவ்வித தொலை தொடர்பு வசதிகளும் அவர்களிடம் இருந்திருக்க வில்லை.எதிரி ஏற்கனவே கிடைத்து விட்ட தகவல்களால் தனது நிலைகளை பலப்படுத்தி பதுங்கியிருந்து தொடுத்த தாக்குதலில் தாக்குதலை வழிநடத்தியவர்களின் அனுபவமின்மையாலும் சரியான தொலை தொடர்பு வசதிகள் இல்லாததாலும் களநிலைமையை உடனடியாக கட்டுபாட்டிற்கு கொண்டு வரமுடியாமலும் உடனடியாக பின்வாங்கி அங்கிருந்து வெளியெற முடியாமலும் பல ஈபி உறுப்பினர்களும் அந்த தாக்குதலை வழிநடத்திய முக்கியமான ஒருவரான சின்னண்ணை என்கிற சின்னவனும் இறந்து போனார்கள்.இறந்துபோன தங்களது உறுப்பினர்கள் பலரின் பெயர் விபரங்களை கூட ஈபியினர் வெளியிடாமல் மறைத்துவிட்டனர்.இந்த தாக்குதலை வழிநடத்திய பி எல் ஏ தளபதிகளில் இன்றைய ஈ.பி.டி.பி டக்ளஸ் தேவானந்தாவும் ஒருவராவார்

இவர் பி எல் ஏ தளபதியாக இருந்த காலத்தில் உருப்படியாக செய்த ஒரேயொரு தாக்குதல் தமிழ்நாடு சூழைமேட்டில் இவர் பயணம் செய்த ஆட்டோகாரன் மீற்றருக்கு மேலை அஞ்சுரூபாய் போட்டு குடுங்க என்று கேட்டதற்காக சுட்டுகொன்றுவிட்டார்.
இவரை விடுவோம் இவரைப்பற்றி எழுத போனால் கட்டுரை எங்கேயோ போய்விடும். இங்கு அவர்கள் திட்டம் போட்டதில் தவறுஒன்றும் இல்லை ஆனால் முக்கிய விடயம்.ஒரு யுத்தகள வீரனிற்கு வெறும்பயிற்சிகளும் ஆயுதங்களும் ஆலோசனைகளும் மட்டும் அவனை சிறந்தவீரனாக்கி விடாது அதற்கு முக்கியம் அவனது யுத்தகளஅனுபவங்கள் தான் அதற்கு சிறந்த உதாரணத்தை நாங்கள் எங்கும் தேடி போக வேண்டியதில்லை


இலங்கை இராணுவத்தையே உதாரணமாக எடுக்கலாம் இலங்கை இராணுவம் உலக நாடுகளிடம் பெறாத பயிற்சிகளா?? அல்லது அவர்கள் பெறாத ஆலோசனைகளா??அவர்களிடம் இல்லாத ஆயுதங்களா?? ஆனாலும் அவர்களால் புலிகளை வெற்றி பெற முடியாததன் காரணம். புலிகளின் களஅனுபவம் சரியான வழிநடத்தல் மற்றும் அவர்களின் களஅனுபவங்களினுடான மனோபலமும் யுத்ததந்திரமும் என்றுசின்ன குழந்தையும் சொல்லும்.


எனவே அதுவரை ஒரு கண்ணிவெடித்தாக்குதலை கூட செய்து அனுபவமில்லாத இயக்கம் எடுத்த எடுப்பிலேயெ ஒரு தளத்தின் மீதான தாக்குதலை நடாத்த திட்டமிட்டதுதான் தவறு.ஒரு காவல் நிலையை தாக்குவதானால்கூட அதற்கு ஓரளவு எதிரியின் நடமாட்டம் அவனது நடவடிக்கை பற்றிய வேவுதகவல்கள் தரவுகள் கட்டாயம் தேவை. ஆனால் காரைநகர் தளத்தின் பாதுகாப்பு அரண்கள் அதன் பாதுகாப்பு வேலிகள் எப்படி எங்கே எல்லாம் அமைந்திருக்கும் என்று சரியான வேவு தகவல்கள் எதுவுமின்றி ஏன் காரைநகர் தளம் என்னவடிவில் எத்தனை கி.மீ சுற்றளவில் எங்கே சரியாக அமைந்திருக்கின்றது என்கிற அடிப்படை தகவல்கள் கூட அவர்களின் தாக்குதல் அணியினரிற்கு போதியளவு தெரிந்திருக்கவில்லை என்பதுதான் மோசம்.

ஏனெனில் தாக்குதலிற்கு சென்றவர்களில் யாழ்மாவட்டம் தவிர்ந்த வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களும் இருந்தனர் இவர்களிற்கு காரைநகர் தளம் மற்றும் அமைந்திருந்த இடம் என்பன பற்றிதெரிந்திருக்கவில்லை.இதுவும் அந்த தளத்தின் மீதான தோல்விக்கு ஒரு காரணம். இத்துடன் இதை நிறைவு செய்து இனி இந்திய படையுடன் இவர்கள் சேர்ந்த இருண்ட காலத்திற்கு செல்வோம் அடுத்த பகுதியில்

12:17 PM, Posted by sathiri, No Comment

ஈழப்போராட்டத்தில் எனது (பொய்)சாட்சியம் பாகம் 8


இந்தவாரத்தொடர் நிர்மலா பற்றியது புஸ்பராசாவின் புத்தகம் பற்றிய விமர்சனத்தில் இருந்து சிறிது விலகிசென்றாலும் இன்றைய காலத்தின் மற்றும் இன்றைய இளம் புலம் பெயர் சந்ததியினரிற்கு சில விடயங்களையும் தெழிவு படும்தும் நோக்கத்திற்காகவும் எழுதப்படுகிறது ராஜினியின் சகோதரி நிர்மலா இவரது கணவர்பெயர் நித்தியானந்தன் நிர்மலா நித்தியானந்தன் என்கிற பெயர் 82 களில் இலங்கையில் பத்திரிகைகளில் பிரபல்யமாக அடிபட்ட பெயர் போராளிகளிற்கு உதவினார்கள் என்பதாலும் ஆயுதபோராட்டத்திற்கு ஆதரவளித்தவர்கள் என்கிற காரணத்ததால் இலங்கையரசால் சிறையிலடைக்கப்பட்டு 83 யூலை படுகொலைகளில் வெலிக்கடை சிறையில் இருந்து உயிர் தப்பி பின்னர் அங்கு உயிர் தப்பியவர்கள் மட்டகளப்பு சிறைக்கு மாற்றபட்ட பொழுது இவர்களையும் மட்களப்பு சிறைக்கு மாற்றினார்கள்

அங்கு 23ந்திகதி செப்ரெம்பர் மாதம் 83 ஆண்டு உள்ளிருந்த பல இயக்கங்களையும் சார்ந்தவர்களால் மட்டகளப்பு சிறை உடைக்கபட்டு பலர் தப்பியோடினார்கள் அதில் நித்தியானந்தனும் தப்பிக்கொள்ள இந்நத சிறையுடைப்பு சிறையிலிருந்த ஆண்கள் தாங்கள் மட்டும் தப்பியோடும் நோக்கில் உடைக்கபட்டதால் சிறையின் பெண்கள் பகுதியிலிருந்த பெண்களையோ நிர்மலாவையோ அவர்களால் மீட்க முடியவில்லை தப்பியோடி வெளியில் வந்தவர்களிற்கு அந்த நேரம் புளொட் மற்றும் ஈபிஆர்எல் எவ் அமைப்பினர் உதவி செய்து அவர்களை இந்தியா தமிழ் நாட்டிற்கு தப்பிசெல்ல உதவினார்கள். பின்னர் தாங்கள் தான் அந்த சிறையை உடைத்தது என புளொட்டும் ஈபி யும் பின்னர் மாறி மாறி உரிமை கோரி கொண்டனர்.

இது இப்படியிருக்க 84ம் புலிகள் மட்டகளப்பு சிறையை உடைத்து நிர்மலா மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் ஊடாக தமிழ் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரிற்கு புலிகள் அமைப்பினரே உதவிகள் செய்து புலிகள் அமைப்பின் ஆதரவு ஏடான விடுதலைப்புலிகள் என்கிற பத்திரிகையை நிருவகிக்கும் பொறுப்பும் இவரது கணவன் நித்தியானந்தத்துடன் இணைத்து வழங்கப்பட்டது. இதே காலகட்டத்தில் புலிகள் அமைப்பு பெண்கள் படைப்பிரிவை கட்டியமைக்கும் பணியை ஆரம்பித்திருந்தனர் அப்போது புலிகள் இயக்கத்தில் அதிகளவு பெண்கள் இணைந்திருக்காத காலகட்டம் எனவே புதிதாய் போராளிகளை இணைக்கவும் ஏற்கனவே இணைந்த போராளிகளிற்கு அரசியல் மற்றும் போராட்டம் பற்றிய தெளிவூட்டல்கள் என்பனவற்றை வழங்க புலிகளின் தலைமை முடிவுசெய்து

அதற்கான பொறுப்பை திருமதி அடேல் பாலசிங்கத்திடம் அந்த பொறுப்பு கையளிக்கப்பட்டது.இது நிர்மலாவிற்கு வெறுப்பை உண்டு பண்ணியது.தானே பெண்ணியவாதியெனவும் படித்தஇலக்கியவாதி ஈழப்பெண்களில் போராட்டத்திறகாக சிறைசென்றபெண் நானிருக்க எப்படி அடேல் பாலசிங்கத்திற்கு அந்த பொறுப்பை கொடுக்கலாமென்று இயக்கத்தினுள் ஒரு குழப்பத்தை உண்டுபண்ணி இயக்கத்தை விமர்சிக்க தொடங்கினார். இவரை பற்றி அடேல் பாலசிங்கம் அவர்கள் எழுதிய சுதந்திர வேட்கை என்கிற நூலில் பக்கம்115ல் இவ்வாறு கூறுகிறார் " விடுதலைப்புலிகள் இயக்கத்தில் நிர்மலாவை இணைப்பதற்கு பிரபாகரன் அவர்கள் ஆர்வமாக இருக்கவில்லை

பெண்ணிய எண்ணக்கரு தொடர்பான தெளிவான முரண்பாடு இருவரது எண்ணப்போக்கிலும் காணப்பட்டது.பிரபாரகரனுடைய சித்தார்ந்த பார்வையில் நிர்மலாவினது பெண்விடுதலைப்பார்வை ஒர் அச்சடித்த மேற்குல பெண்விடுதலைப் பார்வையாக இருந்ததேயன்றி உண்மையாக விடுதலை வேண்டி நின்ற தமிழ்பெணகளை இனம்கண்டு தழுவக்கூடிய பெண்விடுதலை இலட்சியமாக இருக்கவில்லை. எனவே பெண்கள் பிரிவை கட்டியெழுப்பும் எந்தவொரு பொறுப்பையும் நிர்மலாவிடம் கொடுக்கும் திட்டம் பிரபாகரனிடம் இருக்கவில்லை" . இப்படி எழுதியிருக்கிறார்.அதைவிட புலிகள் அமைப்பில் ஆயுதம் தாங்கிய முதல் பெண் போராளி என்று பார்த்தாலும் கூட அது திருமதி அடேல் பாலசிங்கம் அவர்களே.

தனக்கு பதவிகள் பொறுப்புக்கள் தராததால் நிர்மலா வெறுப்படைந்து புலிகள் இயக்கத்தை விமர்சிக்க தொடங்கினார் அதே நேரம் புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினரும் புலிகளின் தலைமைக்கு மிகநெருங்கியவராகவும் இருந்த வடக்கு புன்னாலைகட்டுவனைச்சேர்ந்த சின்னையா சிவகுமார் (ராகவன்) என்பரிற்கும் இவரிற்கும் காதல் பூத்து கனிந்தது இதனை அறிந்த நித்தியானந்தன் புலிகளின் தொடர்புகள் மற்றும் அவர் நடாத்திய பத்திரிகையின் பொறுப்புகளை விட்டு வெளியேறி வெளிநாடொன்றிக்கு சென்றுவிட நிர்மலா ராகவனைப் பயன் படுத்தி புலிகளின் தலைமைக்கு எதிராகவும் அதே நேரம் புலிகள் அமைப்பை உடைத்து அதனை கைப்பற்றும் நோக்குடன் காய்கள் பழங்கள் எல்லாத்தையும் நகர்த்திப்பார்த்தார்.

ஊகூம் ஒண்றும் நடக்கவில்லை அதுமட்டுமல்ல ஒரு விடுதலைப்போராட்டத்தை கட்டுக்கோப்புடன் உறுதியாக கொண்டு நடாத்தகூடிய வல்லமை ராகவனிடம் இல்லையென்பது ராகவனுக்கே தெரியும் அதுமட்டுமல்ல நிர்மலாவின் பேச்சைகேட்டு யாரும் அவரை நம்பி பின்னால் போகிற நிலைமையிலும் இருக்கவில்லையென்பதும் உண்மையே . எனவே இவர்கள் இருவரும் இயக்கத்திலிருந்து வெளியேறி அவர்கள் விரும்பிய படி விரும்பிய இடத்திற்கு சென்று அவர்களின் சொந்த வாழ்க்கை தொடர இயக்கத்தின் தலைமை வழியனுப்பி வைத்தது.

இவர்கள் இருவரும் புலத்து பெண்ணியம் பேசும் ராயேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் உதவியுடன் இங்கிலாந்து வந்து குடியேறி எங்கிருந்து என்ன செய்கிறார்கள் என்றே பல ஆண்டுகள் சத்தமில்லாமல் இருந்தவர்கள் தற்சமயம் புலிகள் இலங்கை அரசுடன் செய்து கொண்ட போர் நிறுத்த உடன்படிக்கையின்பின்னர் பழைய குருடியின் வீட்டுகதவை தட்டதொடங்கியிருந்தாலும் தமிழர்கள் யாரும் இவர்கள் கதை கேட்கும் குருடர்களாய் இல்லை என்பது மட்டுமல்ல ராஜினியுடன் அவர் உயிருடன் இருந்த காலத்திலேயே தொடர்புகள் ஏதும் இல்லாதிருந்த திரணகமவும் மற்றும் மனைவின் நடத்தைகளால் அவரைவிட்டு பிரிந்த நித்தியானந்தனும் இவர்களுடன் சேர்ந்து புலியெதிர்ப்பு கதைப்பது வேடிக்கை.

கூடவே சேர்ந்து வேறு பலபுலத்து புலியெதிர்பு காரர்களையும் நிர்மலா ஒண்றிணைத்து மனிதவுரிமைவாதிகள் என்கிற பெயரில் புலிக்கு புல்லு தீத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை புண்ணாக்காவது தீத்தியே தீருவது என்று புலம்பி திரிகிறார்கள். மீண்டும் புஸ்பராசாவின் புத்தகத்தை தட்டுவோம்.அதில் பத்மநாபாவை மட்டுமல்ல இந்திய படை காலத்தில் வடகிழக்கு மாகாண முதலமைச்சராய் இருந்த வரதராயபெருமாள்பற்றி பக்கம் 326 ல் இப்படி சொல்கிறார் வடகிழக்கிற்கு முதலமைச்சராக வரும் எல்லா தகுதியும் கொண்ட ஒரவரையே பத்மநாபா முதலமைச்சராக்கினார்்

இப்போது இருக்கும் அத்தனை அரசியல் வாதிகளிற்கும் சவால்விட கூடிய கூர்மையான அறிவுத்திறண் கொண்டஒரு இளம் அரசியல் வாதியாக அவரைப்பார்த்தேன் எங்களது மக்களிற்காக ஜெனரல் கல்கத்தடன் அவர் எவ்வளவோ வாதாடினார். சந்தேகம் கொள்பவர்கள் ஒரு சுதந்திரமான சூழலில் அவரை அரசியல் களத்தில் விட்டுப்பாருங்கள் என்று சவால் விடுகிறேன் என்று சவாடல் விட்டு அவர் சார்ந்திருந்த ஈ பி அர் எல் எவ் இயக்கத்தை பற்றி அவர் வைக்கின்ற புழுகு பூக்களை வைக்க எமது காதின் அளவு போதாது. அதேநேரம் ஒரு கணிசமான தொகை உறுப்பினர்களையும் பலத்தையும் கொண்டிருந்த அதே நேரம் எண்பதுகளின் முக்கியமான 5 இயக்கங்களின் வரிசையில் இருந்த ஈபிஆர் எல் எவ் இயக்கத்தை பற்றி ஆகா ஓகொ என்று புகழ்ந்தவரால்

அந்த இயக்கம் இயங்கிய காலத்தில் இலங்கை அரசபடைகளிற்கெதிராக உருப்படியாக செய்த ஒரு தாக்குதலை கூட அவரது புத்கத்தில் விபரிக்க முடியவில்லை காரணம் அப்படி எந்த தாக்குதல்களுமே அந்த இயக்கத்தால் செய்யப்பட்டிருக்கவில்லை.ஆனாலும் ஈபிஆர்எல்எவ் இயக்கம் என்றதும் ஈழத்துமக்கள் அனைவரினதும் ஞாபகத்திற்கு வருவது கரைநகர் கடற்படைத்தளமே. காரணம் அவர்கள் அந்த தளத்தை தாக்கி அது தோல்வியில் முடிந்ததே காரணம் . யுத்தம் என்பதில் வெற்றிதோல்விகள் சாதாரணமானவைதான் . புலிகள் இயக்கம் கூட தங்கள் தோல்விகளைத்தான் தங்கள் அடுத்த வெற்றியின் பாடமாக்கினார்கள்.

ஆகவே ஈபி யினர் காரை நகர் தளத்தை தாக்கியதை நான் விமர்சிக்கவில்லை அந்த தாக்குதலை நெறிப்படுத்திய விதம் தான் விமர்சனத்திற்கும் நகைப்பிற்கும் வழி கோலியது.அந்த தாக்குதல் நடந்து முடிந்த பின்னர் அந்த காலகட்டத்தில் இளையவர்கள் நக்கலாக ஒரு பாடலை பாடுவார்கள் காத்தடிக்குது கலகலக்குது காரை நகரை ஈபி அடிக்குது சோத்து பாசலுக்கு புளொட் அடிக்கிது தூரத்திலை ஈரோஸ் அடிக்கிது விட்டு விட்டு ரெலோ அடிக்கிது இடைவிடாமல் புலி அடிக்கிது என்று பாடுவது ஞாபகத்தில் இருக்கிறது. இந்த தாக்குதலுக்கு அனேகமான தயாரிப்பு வேலைகள் மானிப்பாயிலேயே நடந்தேறின. எனக்கு ஈபிஆர்எல்எவ்வின் அரசியல் பிரிவில் பொறுப்பாய் இருந்த மானிப்பாயை சேர்ந்தவர்களான் டேவிற்சன் மற்றும் ஜோர்ச் போன்றவர்கள் பாடசாலைகாலத்திலேயே நன்கு பழக்கமானவர்களாக் இருந்ததனால் அவர்களின் காரை நகர் முகாம் தாக்குதல் பற்றிய விபரங்கள் மற்றும் தயாரிப்புவெலைகளையும் பார்வையிட கூடிய சந்தர்ப்பங்களும் கிடைத்தது எனவே காரை நகர் அடித்த கதையுடன் அடுத்த பாகத்தில் சந்திப்போம்

விசா

1:37 PM, Posted by sathiri, 3 Comments

எனக்கு வயது 30 திருமணமாகிவிட்டது மனைவிக்கு வயது 25 ஒரு மகன் இருக்கிறான் வயது 2 மனைவி இப்போ அடுத்த தரம் கரப்பமாகி 8மாத கர்ப்பிணி பிரான்ஸ் நாட்டிற்கு வந்து 10 வருசமாகிது பாரீசிலை இருக்கிறன் எனக்கோ எனது மனைவிக்கோ பிரான்ஸ் நாட்டு வதிவிட அனுமதி பத்திரம் இன்னமும் கிடைக்க வில்லை.

இனி எனது மிச்ச சோகத்திற்கு போகலாம் வாருங்கள் பாரிசிலை ஒரு உணவு விடுதியிலை வேலை செய்யிறன். நண்பன் ஒருதனின்ரை விசாவிலை தான் அது முதலாளிக்கும் தெரியும். அங்கை எட்டு வருசத்திற்கு முதல் பாசையும் தெரியாமல் கோப்பை கழுவிற வேலைக்கு போய் சேந்து பிறகு படிப்படியா வேலையை பிடிச்சு இண்டைக்கு நான் தான் அங்கை பிரதான சமையல் காரன்.

முதலாளியும் நல்லவன் வயசான கிழவன் எங்களிட்டை எப்பிடி அன்பா வேலை வாங்கிறதெண்டு அவனுக்குதெரியும் இப்ப அவனுக்கு ஏலாது வயசு போட்டு தெண்டு கடையை ஒருத்தனுக்கு வித்து போட்டான். வித்து போட்டு போகேக்கைநல்லா மாடு மாதிரி வேலை செய்வன் எண்டு என்னை பற்றி நல்லா சொல்லி போட்டு என்ரை விசா பிரச்சனையையும் சொல்லி பேட்டுதான் போனவன். புதுசா வாங்கினவனுக்கு ஒரு 40 வயது வரும் ஆனால் ஆள் சரியான துன்பம் பிடிச்சவன். தான் முதலாழி எண்ட கொழுப்பு மனிசரை மதிக்க தெரியாத ஒருத்தன்.

ஒரு நாழைக்கு ஒரு பெட்டையோடை வந்து விடிய விடிய தண்ணியடிச்சு கொண்டிருப்பான். சரி சரி அது அவனின்ரை சொந்த பிரச்சனை என்ரை பிரச்சனைக்கு வருவம். நான் இருக்கிற இடத்திலை இருந்து வேலைக்கு போக ஒரு அரை மணித்தியாலம் பாதாள தொடர் வண்டியிலை (சுரங்க ரெயின்)போக வேணும் அங்காலை ஒரு 5 நிமிச நடை .வேலையிடம் உந்த சுரங்க வண்டி நிலையத்திலை இருந்து வெளியிலை போகேக்கைஆண் பெண்ணெண்டு சில வயசான சிலபேர் மலிஞ்ச வைனைவாங்கி குடிச்சு கொண்டு போற வாற ஆக்களிட்டை காசு கேட்டு கொண்டும் இருப்பினம். வந்த புதிசிலை அவையளை பாக்கேக்கை எனக்கு அதிசயமா தான் இருந்தது இஞ்சையும் பிச்சைகாரரா எண்டு. பிறகு பழகிட்டிதுசில நேரத்திலை நானும் சில்லறையளை போட்டிட்டு போறனான்.சில நேரங்களிலை அதிலை வழைமையா இருந்த ஆக்கள் காணாமல் போடுவினம் வேறை புது ஆக்கள்வருவினம்.

காணாமல் போனவை வேறை இடம் போனவையா அல்லது இறந்திட்டினமா எண்டெல்லாம் எண்டெல்லாம் எனக்கு கவலை இல்லை இப்ப ஒரு கிழைமையா புதிசா ஒருத்தன் என்ரை வயதிருக்கும் வயது ஒரு 35க்கை தான் இருக்கும் கையிலை ஒரு பழைய இரண்டு கம்பியறுந்த கித்தார் பக்கத்திலை ஒருநாய்.அந்த கித்தாரை தட்டி தட்டி தனக்கு தெரிந்த ஆங்கில பிரெஞ்சு பாட்டுகளை பாடுவான் எண்டிறதை விட வசனமா சொல்லுவான். அவனுக்கு முன்னாலை உள்ள தொப்பியிலை சில சனம் காசு போடும்.

சேந்த காசுக்கு வழமை போல வைனும் வாங்கி தனக்கும் நாய்க்கும் ஏதாவது சாப்பாடு வாங்கி சாப்பிட்டிட்டு நான் இரவு வேவை முடிஞ்சு வரேக்கை பக்கத்திலை ஒரு கடுதாசி மட்டையை போட்டிட்டு அதிலை அவனும் அவன்ரை தலை மாட்டிலை அவனின்ரை நாயும் நல்ல நித்திரை கொண்டு கொணடிருப்பினம் எனக்கு அவனை பாத்தாலே எரிச்சலா வரும் இளம் வயசு கைகால் எல்லாம் ஒழுங்கா இருக்கு ஏன் என்னை மாதிரி உழைச்சு சாப்பிடலாம்தானே அதை விட்டிட்டு பிச்சையெடுத்து கொண்டு இவனுக்கு ஒரு சதம் கூட போட கூடாது எண்டு மனசுக்கை நினைச்சு கொண்டு வேலைக்கு போவன்.

திரும்பவும் ஆற்ரையோ கதையை சொல்லி கொண்டு போறன் என்ரை கதைக்கு வருவம். நேற்ரைக்கு வேலைக்கு வெளிக்கிட்டு அவசரமா தொடர் வண்டியை பிடிப்பம் எண்டு ஒடினன் வண்டி வரேல்லை யரோ தண்டவாளத்திலை குதிச்சு தற்கொலை செய்திட்டாங்களாம் அதாலை வண்டி வரதாமதமாகும் எண்டு அறிவிச்சாங்கள்.

சே நான் வேலைக்கு போற நேரத்திலையா எவனாவது தற்கொலை செய்ய வேணுமெண்டு மனதுக்குள் திட்டியவாறே வேலையிடத்திற்கு எனது கைத்தொலை பேசியில் நிலைமையை அறிவித்து விட்டு அரை மணி நேரம் பிந்தி வந்த வண்டியில் வேலையிடத்திற்கு போனால் அங்கை அண்டைக்கெண்டு முதலாளி முன்னுக்கு நிண்டான். நான் அவனிடம் போய் வணக்கம் எண்டன் அதுக்கு அவன் என்னை பாத்து நக்கலா வாங்கோ முதலாளி வாங்கோ வணக்கம் எண்டான். எனக்கு கோவம் பத்தி கொண்டு வந்தது எண்டாலும் அடக்கி கொண்டு பிரச்சனையை விளங்க படுத்த முயல சரி சரி போய் வேலையை பார் எண்டு ஏதோ நாயை துரத்திற மாதிரி சொன்னான்.

நானும் பேசாமல் போய் வேலையை தொடங்கினன். என்ன செய்ய நாய் வேடம் போட்டா குலைச்சு தானே ஆகவேணும்.இரவு 12 மணியாகி கொண்டிருந்தது எனது வேலையை முடித்து விட்டு புறப்பட தயாரான போது வழமை போல ஒரு பெண்ணுடன் தண்ணியடிச்சு கொண்டிருந்த முதலாளி காரன் என்னை பாத்து சொன்னான் பொறு நாங்கள் சாப்பிட வேணும் எண்டான் . நான் சொன்னன் இன்னும் அரை மணி நேரத்திலை கடைசி றெயின் கெதியா சாப்பிட்டா நல்லது எண்டு சொல்ல அவனோ தனது நண்பியிடம் பாத்தாயா வேலைக்கு வந்ததே பிந்தி அதிலை அய்யா சொல்லேக்கை நாங்கள் சாப்பிட வேணுமாம் என்றான். அவனின்ரை நண்பியோஒருபடி மேலே போய் எதுக்கு அவருக்கு கரைச்சல் குடுக்கிறாய் பேசாமல் அவரை வீட்டிலை இருக்க விட்டிட்டு மாமதா மாதம் சமபளத்தை அனுப்பி விடலாமே

இப்ப என்ன றெயின் இல்லாட்டி நடந்து போ காலிருக்குதானே எண்ட அங்கு நின்ற மற்றைய வேலை காரர் எல்லாரும் சிரிக்க எனக்குஅவமானமா போட்டுது. முதலாளி ஏதும் சொன்னாலும் பறவாயில்லை சம்பளம் தாறவன் எண்டு பொறுக்கலாம் ஆனால் ஆனால் அவனின்ரை ஒட்டுண்ணியெல்லாம் என்னை நக்கலடிக்கிது எண்டு எனக்கு ரோசம் பொங்கி கொண்டு வர ஒருநிமிசம் என்ரை நிலைலைமை எல்லாத்தையும் மறந்துபோய் கோவத்திலை நீ விரும்பினா போட்டு சாப்பிடு எண்டு முதலாளியிட்டை சொல்லி போட்டு வெளியேறிட்டன். வீட்டை போய் மனிசியிட்டை பிரச்சனையை சொன்னன். ஏதோ கோவத்திலை விட்டிட்டு வந்திட்டன்

விசாவுமில்லாமல் வேறை வேலை எடுக்கிறதும் கஸ்ரம் எங்கை வேலைக்கு போனாலும் முதல் விசா மற்றது வேலை செய்த அனுபவம் இரண்டையும்; தான் கேப்பாங்கள் ஏதோ ஒரு எட்டு வருசம் ஒரு பிரச்சனையுமில்லாமல் காலம் ஒடிட்டிது வேலையை விட்டா விசா இல்லாமல் உதவி பணம் கூட கிடைக்காது. சரி எதுக்கும் நாளைக்கு போய் அவனிட்டை மன்னிப்பு கேட்டிட்டு வேலையை செய்வம் எண்டு மனிசிக்கு சொல்லிப்போட்டு படுத்திட்டன். இண்டைக்கு காலைமை எழும்பி வழமை போலை வேலைக்கு போனன் அங்கை என்ரை இடத்திலை புதிசா வெள்ளை ஒருத்தன்

வேலைசெய்து கொண்டு நிண்டான்.முதலாளியிட்டை போய் காலை வணக்கம் எண்டன். நிமிந்து பாத்து என்ன வேணுமெண்டான்.நான் நேற்று செய்தது பிழை மன்னிச்சு கொள்ளுங்கோ இனி அப்பிடி தவறு வராமல் நான் நடக்கிறன் எண்டு மன்னிப்பு கேட்டன். முதலாளியோ உன்னை எனக்கு தெரியாது போகலாம் எண்டான். அவனுக்கு தெரியும்எனக்கு விசா இல்லாத படியால் சட்டப்படி என்னால் எதுவும் செய்ய முடியாது எண்டு.

விசா இல்லாத நாயே உனக்கெல்லாம் எதுக்கு ரோசம் கோபம் எண்டு என்னை நானே திட்டியவாறு சுரங்க ரயில் நிலையத்தை நேக்கி நடந்தன். இனியென்ன செய்யலாம் தெரிந்த தமிழாக்களிட்டைதான் நிலைமையை சொல்லி வேலை கேக்க வேணும்.;வீட்டையும் உடனை போக மனம் வராமல் சுரங்க இரயில் நிலைய படியிலை கொஞ்ச நேரம் இருந்தன். அந்த கித்தார் கார பெடியன் தொப்பியை முன்னுக்கு வைச்சிட்டு கித்தாரை தட்டினபடி ஜோர்ச் மைக்கலின்ரை பிரீடம் பிரீடம் எண்ட எண்ட பாட்டை பாடிக்கொண்டிருந்தான். அவனை கொஞ்ச நேரம் உத்து பாத்தன் என்ன கவலை இல்லாதா மனிதன் மாத கடைசியிலை வாடகை பிரச்சனையா? மின்சார கட்டணமா?தண்ணி கட்டணமா? சீட்டா வட்டியா? ஊருக்கு பணம் அனுப்ப வேண்டுமா? என்று எதுவித பிரச்சனையுமற்ற ஒருமனிதன் அன்றாடம் கிடைக்கிற பணத்திலை தனக்கும் தன்ரை நாய்க்கும் உணவு மிச்சத்துக்கு மலிந்த வைன் அதோடை பிரச்சனை முடிஞ்சுது. இப்போ என்னை பாக்கவே எனக்கு வெறுப்பாக இருந்தது அவன் கடவுளாக தெரிந்தான் அவன் பாடும் பாடல் தேவ கானமாக இனித்தது சட்டை பையினுள் கையை விட்டு சில சில்லறைகளை அவனது தொப்பிக்குள் போட்டு விட்டு வீடு நோக்கி பயணமானேன் _________________

நிழலாடுடும் நினைவுகள்2

12:56 AM, Posted by sathiri, 6 Comments

நிழலாடும் நினைவுகள் 2

1996ஆம் ஆண்டு ஆனி மாதம் மத்திய சென்னையில் ஒரு காலை நேரம் அவசர அவசர மாக வெளிக்கிட்டு சில பைகளில் நான் தயார் படுத்தி வைத்திருந்த பொருட்களையும் எடுத்துக் கொண்டு தயாராய் வீட்டு வாசலில் காத்து நின்ற ஒட்டோவில்ப் போய் ஏறிய படி ஓட்டோக்காரனிடம் வரசளவாக்கம் போங்க என்றுவிட்டு அமர்கிறேன். எனக்குள் ஒரு இனம் புரியாத சந்தோசம் ராணியக்காவை பாக்க போறன். இன்றைக்கு சுமார் 8 ஆண்டுகளிற்குப் பிறகு ராணியக்காவை பார்க்க போகின்ற மகிழ்ச்சி எனக்குள்.

இப்ப எப்பிடி இருப்பார்? என்று எனக்குள் சில கற்பனைகள்!! எனது மனதில் 8 ஆண்டுகளிற்கு முன்பு பார்த்த ராணியக்காவின் உருவத்திற்கு ஏற்றதாய் சில உடுப்புகள் அவரிற்காக வாங்கியிருந்தேன். ராணியக்கா எனது சொந்த அக்கா இல்லை ஏன் சொந்தம் கூட இல்லை . ராணியக்காவின் தாய் தந்தை ஈழத்தில் வேறு ஒரு ஊரை சேர்ந்தவர்கள் அவர்கள் சாதி மாறி காதலித்து கலியாணம் செய்ததால் அவர்கள் உறவினர்களால் பிரச்சனை என்று எங்கள் ஊரிலிருந்த ஒருவரின் உதவியுடன் எங்கள் ஊரில் இருந்த வெறும் காணி ஒன்றில் வந்து குடிசை போட்டு வாழத் தொடங்கினார்கள்.

தந்தை இலங்கை போக்குவரத்துச் சபையில் சாரதியாக இருந்தவர். அவர்களின் மூத்தமகள்தான் ராணியக்கா பின்னர் இரண்டு மகன்கள். நாட்டுப் பிரச்சனைகள் காரணமாக யாழ் குடாவில் இலங்கை போக்குவரத்துச் சபையின் சேவைகள் இல்லாது போனதால் ராணியக்காவின் தந்தையின் வேலையும் பறி போக அவர்களது குடும்பம் மிகவும் பொருளாதார பிரச்னையில் விழுந்தது. அப்போது பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்த ராணியக்காவும் தனது படிப்பை இடை நிறுத்தி விட்டு குடும்ப பாரத்தை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

தந்தை பின்னர் தூர இடங்களிற்குப் போய் சாமான்கள் வாங்கி வந்து ஊர்ச் சந்தையில் விப்பார் .ராணியக்காவின் தாயர் துணிகள் தைத்து குடுப்பவர். ராணியக்காவும் தாயாரிடம் தையல் பழகிக் கொண்டு ஒரு மிசினும் வாங்கி ஊரில் உள்ளவர்களிற்கு உடுப்புகள் தைத்து குடுத்தும் மற்றும் வீட்டை சுற்றியள்ள காணியில் தோட்டம் ஆடு மாடு கோழி வளர்த்தல் என்று என்னென்ன வகையில் பொருளாதாரத்தை பெறலாம் என்று யோசித்து யோசித்து செய்தார். அத்துடன் தம்பியர் இருவரையும் கவனமாகப் படிப்பித்து அவர்களை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வருவதும் அவரது எதிர் கால கனவில் ஒன்றாய் இருந்தது.

அவரது மூத்த தம்பி ரமணன் எனது பாடசாலை நண்பன். அவனுடன் அவர்களது வீட்டிற்குப் போய் வரத் தொடங்கிய எனது நட்பு காலப்போக்கில் என்னை அவர்களது குடும்பத்தின் ஒருவன் போல ஆக்கிவிட்டது. நான் எப்போதும் கத்திக் கல கலப்பாய் கதைப்பதால் ராணியக்கா எனக்கு செல்லமாய் வைத்த பட்ட பெயர் காகம். நானும் அவரை அவர் குள்ளமாய் இருந்ததால் உரல் குத்தி என்று கூப்பிடுவேன். மாலை வேளைகளில் நானும் ரமணனும் வெளியில் போகும் போது தோட்டத்தில் வேலை செய்து கொண்டு நின்றபடி ராணியக்கா கூப்பிடுவார். பெடியள் எங்கை போறியள் அந்த ஆலமரத்திலை ஏறி ஆடு மாட்டுக்கு கொஞ்சம் குளை வெட்டித் தந்திட்டு போங்கோடா....... என்பார் .

சரி பிறத்தாலை கூப்பிட்டிட்டாள் இனிப் போற காரியம் உருப்பட்ட மாதிரித்தான் என்று நான் சலித்துக் கொள்ள . ஓமடா உங்கடை முக்கிய அலுவல் என்ன எண்டு எனக்குத் தெரியும் தானே உதிலை சந்தியிலை போய் நிண்டு போற வாற பெட்டையளை பார்த்து வீணி வடிக்கப் போறியள் அதை விட பிரயோசனமா குளையாவது வெட்டலாம் தானே என்பார். போடி உரல் குத்தி நீ பனையிலையே பாஞ்சு பாஞ்சு ஏறுவியே நீயே ஏறி வெட்டடி என்று விட்டு நாங்கள் சைக்கிழை மிதிக்கவும். நில்லடா காகம் என்ற படி

தோட்டத்தில் உள்ள மண்ணாங்கட்டிகளை பொறுக்கி எங்களை நொக்கி எறிந்த படி இரண்டு பேரும் இனி வீட்டுப் பக்கம் வந்து பாருங்கோ இருக்கு இரண்டு பேருக்கும் என்றபடி தனது வேலையைத் தொடர போய் விடுவார் . இப்படியே ஒவ்வொரு நாளும் எங்களுக்குள் சின்னச்சின்ன சீண்டல்கள் சண்டைகள் என்று தொடர்ந்து கொண்டேயிருக்கும். ஆனாலும் ஒரு நாள் கூட உண்மையாய் சண்டை பிடித்தது கிடையாது. ராணியக்கா குள்ளமாக இருப்பார். ஆனால் கடின உழைப்பினால் உருண்ட உறுதியான தேகம்

நீண்ட தலைமுடி. அவர் தனது தலை முடியை பாராமரிக்கவே ஒவ்வொரு நாளும் அரை மணித்தியாலமாவாவது செலவிடுவார். ஒவ்வொரு நாளும் சம்போ வைத்து கழுவி பின்னர் தலை முடியை ஒரு கதிரையில் பரப்பிவிட்டு அதற்கு சாம்பிராணி புகை போடுவார். அப்பொதும் சரி வேறு வேலைகள் செய்யும் போதும் சரி ராணியக்கா புதிய வார்ப்பு பட பாடலான “இதயம் போகுதே .....” என்கிற பாடலைப் பாடிக்கொண்டே வேலைகளை செய்வார். அவரிற்குள் ஒரு காதல் இருந்ததா? யாரையாவது காதலித்தாரா?? என்று ஏதும் எனக்குத் தெரியாது

அந்த பாடல் ஏன் அவருக்குப் பிடிக்கும் என்று நான் இது வரை கேட்டதில்லை. சரி இன்றுதான் அவரைப் பார்க்க போகிறோமே கேட்டால்ப் போச்சு என்றபடி ராணியக்காவின் நினைவகளில் மூழ்கிப் போயிருந்த என்னை சார் மணி குடுங்க ஆட்டோக்கு பெற்றோல் போடணும் எண்டு நினைவுகளைக் கலைத்தான். அவனிற்கு ஒரு அம்பது ருபாய் தாளை எடுத்து நீட்டி விட்டு ராணியக்காவை பற்றிய நினவகளில் மீண்டும் மூழ்கிப் போனேன். இப்படியே சிரிப்பும் சந்தோசமுமாய் இருந்த குடும்பத்தில் ஈழத்தின் பல குடும்பத்தில் விழுந்த இடியை போலவே இவர்களது குடும்பத்திலும் இந்தியப் படை காலத்தின் ஒரு நாள் 1988ஆம் ஆண்டு தை மாதம்

ஒரு இரவு ஒரு இடி விழுந்தது. அன்று இரவு வழமை போல ஊரடங்குச் சட்டம் வீதி ரோந்து வந்த இந்திய இராணுவம் என்ன நினைத்ததோ ராணியக்காவின் வீட்டிற்கள்ப் புகுந்து படுத்திருந்த அவர்களை எழுப்பி எல் ரி ரி தெரியுமா?? என்று மிரட்டினார்கள் சுமார் பத்து பேரளவில் வீட்டிற்குள் புகுந்து சாமான்கள் எல்லாவற்றையும் கிழறிக்கொண்டிருக்க ஒரு சீக்கியன் ரமணனனை யு ஆர் எல்ரி ரி என்று கேட்க அவனும் நோ சேர் நோ என்றவும் அவன் ரமணனை துப்பாக்கி பிடியால் தாக்கவே அதைப் பாத்துக் கொண்டிருந்த ராணியக்கா பொறுக்க முடியாமல் இருவருக்கும் இடையில் புகுந்து அந்த சீக்கியனிடம் தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் அவன் எல் ரி ரி இல்லை படிக்கிற மாணவன் என்றவும்.

அந்த சீக்கியன் ராணியக்காவின் தலை மயிரை பிடித்து இழுத்து மறு பக்கம் தள்ளி விட்டு ரமணனனை தொடர்ந்து தாக்க ராணியக்கா வெறி கொண்டவராய் மீண்டும் பாய்ந்து அந்த சிக்கியனின் துப்பாக்கியை பிடித்து அடிக்க வேண்டாம் என்ற தடுக்க . இன்னொரு ஆமிக்காரன் வந்து அந்த சீக்கியனின் காதில் கிந்தியில் ஏதோ சொல்ல . அவன் உடனே நீதான் எல் ரி ரி வா உன்னை விசாரிக்க வேண்டும் என்று ஆங்கிலத்தில் கூறிய படி ராணியக்காவை வெளியே இழுத்து கொண்டு போக ராணியக்காவும் தம்பி ரமணணனை எப்படியாவது காப்பாற்றி விட வெண்டும் என்கிற துடிப்பில் அவர்களுடன் நாளை காலை கட்டாயம் உங்கள் முகாமிற்கு நானும் தம்பியும் வருகிறோம்

தயவு செய்து இப்போ தொந்தரவு தராதீர்கள் என்று கெஞ்சிப் பார்க்கிறார் ஆனால் அவர்களோ வீட்டில் உள்ளவர்கள் எல்லாரையும் ஒரு அறையில் இருத்தி விட்டு வெளியில் வந்தால் சுட்டுவிடவோம் என மிரட்டிவிட்டு ராணியக்காவை பலாத்காரமாக இழுத்துப் போகிறார்கள். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்திலுள்ளவர்களும் யாரும் வெளியே வரப் பயம் காரணம் ஊரடங்கு உத்தரவு இருந்தது வெளியே வந்தால் ராணுவம் சுட்டுவிடும். விடியும் வரையும் அழுதபடியே விழித்திருந்த ராணியக்காவின் தாயாரும் தந்தையும் விடிந்ததும் அருகிலுள்ள இந்திய இராணுவ முகாமில் போய்த் தங்கள் மகளைப் பாக்க வேணும் என்று அழுதபடியே விசாரித்தார்கள்

ஆனால் அங்கு காவல் கடைமையில் நின்ற இராணுவத்தினனோ அங்கு யாரையும் அப்படிக் கைது செய்து கொண்டு வரவில்லையென்று கூறிவிட்டான். அவர்களது சத்தம் கேட்டு அந்த மகாம் பொறுப்பதிகாரியோ தங்கள் முகாமிலிருந்து யாரும் யாரையும் கைது வசய்யவில்லை வேண்டுமானால் வேறு அருகிலிருக்கும் முகாம்களில் போய் விசாரிக்கச் சொல்லி அனுப்பி விடுகிறான். அவர்களும் அருகிலிருந்த மற்றைய முகாம்கள் எல்லாம் போய் விசாரித்து கொண்டிருக்க ஊரில் ஒருவர் ஊரின் ஒதக்கு புறமாக வயற்பக்கம் ஒரு பாழடைந்த வீட்டில் ராணியக்காவின் உடல் கிடப்பதாக வந்து சொல்ல

ஊர் இளைஞர்கள் சிலருடன் நானும் சேர்ந்து அந்த வீட்டை நொக்கி ஓடினோம். அங்கு நான் கண்ட காட்சி ராணியக்காவின் உடலில் ஒரு துணிகூட இல்லாமல் அவரது சட்டையைக் கிழித்து வாயில் அடைத்தபடி கைகள் பின்புறமாக கட்டப்பட்டிருந்தது. இரத்த வெள்ளத்தில் ராணியக்கா கிடந்தார்\. எனக்கு உடனேயே புரிந்து விட்டது என்ன நடந்து விட்டதென்று. ராணியக்கா அந்த மிருகங்களுடன் முடிந்தவரை போராடியிருக்க வேண்டும் அதனால் அவர் தலையை கூட அசைக்க முடியாமல் ஒரு பெரிய கல்லை தலை பக்கமாக வைத்து அவரது நீண்ட தலை முடியை அதில் இறுக்கிக் கட்டிவிட்டு அமைதி காக்க காந்திய தேசத்திலிருந்து வந்த அகிம்சாவாதிகள் தங்கள் கருணை அன்பு சமாதானம் எல்லாவற்றையுமே காமக் கழிவுகளாய் அந்த அப்பாவிப் பெண்ணின் மீது வெளியேற்றி விட்டுச் சென்று விட்டார்கள்.

நல்ல வேளை அவரது அந்தக் கோலத்தை அவரது தாய் தந்தையர் கண்டிருந்தால் அந்த இடத்திலேயெ மாரடைப்பு வந்து இறந்து போயிருப்பார்கள். அவரருகில் போய் உடலை மெதுவாய் தொட்டுப் பார்த்தேன் உடல் சூடாகவே இருந்தது நாடித்துடிப்பும் இருந்தது. உடனடியாகவே அருகில் இருந்த வீட்டுக்காரர் ஒருவரிடம் ஒரு செலையை வாங்கி ராணியக்காவை சுற்றி கொண்டு ஊரில் வீட்டில் வைத்தியம் செய்யும் வைத்தியரிடம் கொண்டு ஓடினோம். வைத்தியரும் தன்னால் முடிந்த முதலுதவிகளை செய்து விட்டு குளுக்கோஸ் ஏற்றி விட்டு என்னிடம் சொன்னார் தம்பி என்னட்டை உள்ள வசதியை வைச்சு இவ்வளவுதான் செய்யலாம்.

உடனை வசதியுள்ள ஏதாவது ஆஸ்பத்திரிக்கு உடனை கொண்டு போனீங்களெண்டாத்தான் ஆளை காப்பாற்றலாம் இல்லாட்டி கஸ்ரம் எண்டார். யாழ்ப்பாணம் வைத்திய சாலைக்கு கொண்டு போக ஏலாது காரணம் அந்த வைத்தியசாலையும் இந்திய இராணுவத்தின் வெறியாட்டத்திற்குள்ளாகி சரியாக இயங்க தொடங்கியிருக்கவில்லை. அடுத்ததாக மானிப்பாய் வைத்திய சாலைக்குத் தான் கொண்டு போகவேண்டும் ஆனால் அங்கும் சுற்றிவர இராணுவக் காவல் என்ன செய்யலாமெண்டு யொசித்த போதுதான்

மானிப்பாய் வைத்திய சாலையிில் வேலை செய்கிற ஒரு தாதி எனக்கு நல்ல பழக்கம் உடனே அவரிடம் ஓடிப்போய் விடயத்தை சொல்ல அவரும் தாமதிக்காமல் உடைனேயே தனது தாதி உடைகளை அவசரமாக அணிந்து கொண்டு என்னுடன் வந்து ஒரு வானில் ராணியக்காவை ஏற்றிக்கொண்டு யாரும் வர வேண்டாம் தானே எப்படியாவது வைத்திய சாலைக்குள் கொண்டு போய் விடுவேன் ஆனால் தான் செய்தி அனுப்பும் வரை யாரும் வைத்திய சாலை பக்கம் வர வேண்டாம் பிறகு பிரச்னையாயிடும் என்று கண்டிப்பாய்ச் சொல்லி விட்டு ஒரு வெள்ளை துணியை ஒரு தடியில் கட்டி அதனை வானின் முன்புறத்தில் கட்டிக் கொண்டு எப்படியோ வைத்திய சாலைக்குள் கொண்டு போய்

அங்கு வைத்தியர்களின் ஒரு வார கால போராட்த்தின் பின்னர் கோமா நிலையிலிருந்த ராணியக்காவின் உயிரை மட்டும் அவர்களால் இழுத்து பிடித்து நிறுத்த முடிந்தது ஆனால் அவர்களால் ராணியக்காவின் உணர்வுகளையோ நினைவுகளைகயோ திருப்ப கொண்டுவர முடியாமல் போய் விட்டது. ராணியக்கா தனது ஞாபகங்களை இழந்து மன நோயாளியாகி விட்டார். அது மட்டுமல்ல அவரது அடி வயிற்றிலும் பலமாக துப்பாக்கிப் பிடியால் தாக்கியிருக்கிறார்கள் அதனால் இடுப்பிற்கு கீழே உணர்வுகளும் அற்றுப் போய் விட்டது என்று அந்த தாதி என்னிடம் கூறினார். அதன் பின்னர் எனக்கும் அவர்களுடனான தொடர்பு இல்லாமல் போய் விட்டாலும்


அவ்வப்போது தெரிந்தவர்களிடம் விசாரிப்பேன் சில காலத்தின் பின்னர் அவர்கள் குடும்பமாக வள்ளத்தில் இந்தியா போய் விட்டதாக அறிந்தேன். நானும் பின்னர் பிரான்சிற்கு வந்த பின்னர் ரமணன் கனடாவில் இருப்தாக ஒரு செய்தி கிடைத்தது எப்படியும் அவனை தொடர்பு கொள்ளலாம் என நினைத்து தெரிந்தவர்கள் மற்றும் ஐரோப்பிய கனடிய தமிழ் வானொலிகள் ஊடாகவும் பலதடைவைகள் தொடர்ச்சியான எனது தேடலில் ஒரு நாள் ரமணனின் தொலைபேசி அழைப்பு எனக்கு வந்தது.

அவனுடன் கதைத்த போது நான் முதல் கேட்ட கேள்வி ராணியக்கா எப்பிடி இருக்கிறார் என்பதுதான். கன கால போராட்டத்தின் பின்னர் இந்தியாவில் பெரிய பெரிய வைத்தியர்களிடம் எல்லாம் காட்டி இப்ப கொஞ்சம் பரவாயில்லை என்றான் . நானும் அந்த வருடம் இந்தியா போக வேண்டி இருந்ததால் ரமணனிடம் விலாசம் விபரம் எல்லாம் பெற்றுக் கொண்டு இதோ இப்போது ராணியக்கா வீட்டிற்கு வந்து விட்டேன். எனக்காக மதிய சமையல் செய்து விட்டு ராணியக்காவின் தந்தையும் தாயும் காத்திருந்தனர்

என்னை கண்டதும் தாயார் வந்து கட்டியணைத்து அழுதே விட்டார். அவர்களிடம் அக்கா எங்கை என்று கேட்க ஒரு அறையைக் காட்டினார்கள் உள்ளே போனேன். எனக்கோ பெரிய அதிர்ச்சி நான் தேடி வந்த ராணியக்கா இவர் இல்லை என் கற்பனையில் இருந்த ராணியக்கா இவர் இல்லை பார்ப்பதற்கு ஒரு 60 வயதிற்கும் மேற்பட்ட ஒரு கிழவியின் தோற்றம் பல மாதங்கள் பட்டினி கிடந்தது போல கண்கள் எல்லாம் உள்ளே போய் அவரது பற்கள் எல்லாம் வெளியே தெரிய தொடரச்சியான மருந்து பாவனைகளால் அவரது தலை முடியும் உதிர்ந்து போனதால் மொட்டை அடித்திருந்தனர். மெதுவாக அவரது அருகில் போய் அவரின் கைகளை பிடித்து பார்த்தேன்

தோட்ட வேலையெல்லாம் செய்து எவ்வளவு உறுதியாய் இருந்த அவரது கைகள் ஒரு பிறந்த குழந்தையின் கையை போல சூம்பி போய் மிருதுவாய் இருந்தது. ராணியக்கா நான் தான் காகம் வந்திருக்கிறன் என்னை ஞாபகம் இருக்கா என்றேன். அவரோ எந்த வித சலனமும் இல்லாமல் சுவரையே வெறித்துப் பாத்தபடி இருந்தார். நானும் சில பழைய கதைகளை சொல்லிச் நானே சிரித்தும் பார்த்தேன் அவர் எந்த வித உணர்ச்சிகளையும் காட்டிக் கொள்ளவில்லை. அதற்கு மேலும் அங்கு என்னால் நிற்க முடியாமல் அறையை விட்டு வெளியே வந்த போது தாயார் சொன்னார் தம்பி இப்ப வருத்தமெல்லாம்
மாறிட்டுது தானே தன்ரை வேலையள் எல்லாம் தனிய செய்ய தொடங்கிட்டா

ஆனால் இப்பிடித்தான் வெறிச்சுப் பாத்தபடி ஒருதரோடையும் ஒரு கதையும் இல்லை ஆனால் டொக்ரர் மார் சொல்லினம் இப்ப ஒரு பிரச்சனையும் இல்லை ஆனால் மனரீதியான தாக்கத்திலை இருந்து இனி அவாவே தான் கொஞ்சம் கொஞ்சமா வெளிலை வரவேணுமெண்டு . அதக்காக தான் இப்ப நாங்களும் கொஞ்சம் வெளியிலை கூட்டிக் கொண்டு திரிய வெளிக்கிட்டிருக்கிறம் அப்பிடியாவது கொஞ்சம் பழைய மாதிரி இல்லையெண்டாலும் கொஞ்சமாவது கதைச்சால் நிம்மதி என்றார்.

நானும் அவர்களுடன் மதியம் உணவருந்தி விட்டுப் புறப்பட தாயாராகியபடி மீண்டும் ராணியக்காவிடம் போய் ஏதோ எனக்கு அவரை முத்தமிடவேண்டும் போல் இருந்தது. குனிந்து அவரது கன்னத்தில் முத்தமிட்டு விட்டு ராணியக்கா நான் போகப் போறன் திரும்ப ஒரு சந்தர்ப்பம் கிடைச்சால் கட்டாயம் வாறன் என்றபடி அவரை உற்று பார்க்க அவரது கைகள் மெதுவாய் உயர்ந்தி எனது கைகளை சில நிமிடங்கள் பிடித்தவர் பின்னர் விட்டு விட்டார் முகத்தில் எந்த வித உணர்ச்சியும் இல்லாமல் அவரது கண்களில் இருந்து கண்ணிர் வடிந்துகொண்டிருந்தது.

என்னை அவருக்கு அடையாளம் தெரிகிறது நான் கதைப்பது எல்லாமே அவருக்கு புரிகிறது என்பது மட்டும் எனக்குப் புரிந்தது. ஆனாலும் தனக்குத் தானே ஒரு கூட்டை கட்டி அதற்கு ஒரு பூட்டும் போட்டு வாழ்ந்து கொண்டிருந்தார் ராணியக்கா. அவர் அப்படி இருந்ததும் எனக்கு சரியாகத்தான் பட்டது காரணம் அவர் அந்த கூட்டை விட்டு வெளியே வந்து கதைக்கத் தொடங்கினால் பலரின் பல நுறு கேள்விகளிற்கு பதில் சொல்லியே மீண்டும் மன நோயாளியாகி விடுவார்.

பின்னர் ஓராண்டுகள் கழித்து ரமணணின் தொலை பேசி அழைப்பு வந்தது.ராணியக்கா நேற்று தற்கொலை செய்திட்டா நான் இந்தியாவுக்கு வெளிக்கிடுறன் என்றான் . எப்பிடி?? என்றேன் வீட்டுக்காரர் கவனிக்காத நேரம் அவாக்கு இரவிலை வழமையா குடுக்கிற நித்திரைக் குளிசை எல்லாத்தையும் எடுத்து போட்டுட்டாவாம் வீட்டுக்காரரும் அவா நித்தரை கொள்ளுறா எண்டு கன நேரமா கவனிக்க வில்லையாம் என்றான்.

எனக்கு தற்கொலை செய்பவர்கள் மீது வாழ்க்கையில் போராட முடியாத கோழைகள் என்று கொபம் வரும் ் அனால் போராட்டமே வாழ்க்கையாய் அமைந்து விட்ட ராணியக்காவின் முடிவு எனக்கு கோபத்தை தரவில்லை. ஆனால் என்னிடம் இன்னமும் விடை தெரியாத ஒரு கேள்வி இந்த இளம் வயதில் இத்தனை கொடுமைகளை அனுபவிக்க ராணியக்கா செய்த பாவம் தான் என்ன ???? இந்தக் கெள்வி ஈழத்தில் பல ராணியக்காக்களினது கேள்வியும் இதுவே............................

ஈழபொராட்டத்தில் எனது(பொய்) சாட்சியம் பாகம்7

7:09 AM, Posted by sathiri, No Comment


சுபத்திரனிடம் பொறுப்பு ஒப்படைக்க பட்டதும் அவர் அந்த வேலையை செய்து முடிக்க தங்களது திருநெல்வேலி முகாமிலிருந்து நான்கு பேரை தெரிவு செய்து பொறுப்பை ஒப்படைக்கிறார். எங்கும் சந்திக்கு சந்தி இந்திய இராணுவத்தின் காவலரண்கள் ரோந்துகள் ஒட்டுக்குளுக்கனான ஈ.என்.டி.எல்.எவ். மற்றும் ஈ.பி. ஆர்.எல்.எவ். முகாம் என்று உயர் பாது காப்பு பகுதியாக மாறியிருந்த திருநெல்வேலியில்.1989 ம் ஆண்டு புரட்டாதி மாதம் 21ந் திகதி காலை வழைமை போல தனது கடைமைகளிற்காக ராஜினி தன்னுடைய சைக்கிளில் யாழ் பல்கலை கழகம் நோக்கி போய்க்கொண்டிருக்கிறார். அப்போது நடந்த சம்பவத்தை பார்த்தவர்கள் கூறியது அவரிற்கு எதிரே இரண்டு சைக்கிள்களில் நான்கு இளைஞர்கள் வந்துகொண்டிருக்கின்றனர் அவரை கடந்து ஒரு சைக்கிள் செல்ல ராஜினியை கடந்து பினேசென்ற சைக்கிளில்முன்னிற்கு இருந்தவன் ஒரு பெரிய துப்பாக்கியை சாரத்தால் சுத்தியபடி வைத்திருந்தான்.
மற்றைய சைக்கிள் அவரிற்கு எதிரே நிக்க அந்த சைக்கிளில் முன்இருந்து வந்த ஒருவன் தனது கைத்துப்பாக்கியால் முதலில் ராஜினியை நோக்கி சுட சைக்கிளை ஓட்டிவந்தவனும் ராஜினியை நோக்கி கைத்துப்பாக்கியால் சுட்டான் .ராஜினி அந்த இடத்திலேயே இறந்து போனார். இப்போ பெருக்கி பிரித்து பாருங்கள் கணக்கு சரியாக இருக்கும் யார் ராஜினியை கொன்றார்கள் என்று.ராஜினி கொல்லப்பட்ட செய்தி அறிந்ததும் சிறிதரனிற்கு தலை சுற்றியது காரணம் அவரிற்கு தெரியும் அடுத்த தலை தன்னுடையததான் என்று. என்ன செய்யலாமென யோசித்தவர். இந்தியபடை காலத்தில் யாழ் அசோகா விடுதிதான் ஈ.பி.ஆர்.எல்.எவ்.வின் தலைமை முகாமாகவும் அன்றைய வடகிழக்கு முதலமைச்சர் என்று சொல்லிக்கொண்ட வரதராஜபெருமாளின் அலுவலகமாகவும் இயங்கிவந்தது.எனவே
ஈ.பி. ஆர். எல்.எவ். வுடன் தொடர்புடைய ஒரு வைத்திய சாலை ஊழியரை அவசரமாக அசோகா விடுதிக்கு அனுப்பி வைத்தார். அவரை வந்து சந்திக்கும்படி அழைப்பும் கிடைத்தது.அந்த ஊழியரையும் அழைத்துக்கொண்டு அசோகா விடுதிக்கு அரக்கபரக்க ஓடினார் சிறீதரன்.அவரை மட்டும்பரிசோதனைகளின் பின்னர் உள்ளே அழைத்தனர் உள்ளே போனவரிற்கு வரதராஜபெருமாள் வணக்கம் சொன்னார்.சிரமப்பட்டு சிரித்தபடி சிறீதரனும் வணக்கம் சொல்லி எதிரே அமர ஏளனமாக பார்த்தபடியே வரதராஜபெருமாள் சொன்னார். பாருங்கள் எத்தனையாயிரம் படை எவ்வளவு ஆயுதங்கள் உலகின் மிகப்பெரிய இராணுவம் எங்கள் பக்கம். முழத்திற்கு முழம் சந்திக்கு சந்தி எங்கள் ஆட்கள் வடக்கு கிழக்கு எங்கும் எங்கள் கட்டுப்பாட்டிற்குள். இன்னமும் சில சில்லறை புலிகளே மிச்சம் சல்லடை போட்டு தேடி அழித்து அந்த புலிளை புதைத்த இடத்தில் புல்லுமுளைக்கவிடுவோம்.ஆனால் நீங்களோ சிறுபிள்ளைதனமாய் இதற்குள் இருந்துகொண்டு மனிதவுரிமை மண்ணாங்கட்டி என்று எழுதிகொண்டு எதற்கு வேண்டாத வேலை??எங்கள் சொல் கேட்டால் நீங்கள் முன்னேற ஆயிரம்வழி இல்லையென்று அடம்பிடித்தால் ஒரேயொருவழி அது ராஜினிசென்றவழி இதில் எந்தவழி நீங்களே முடிவுசெய்யலாம் இது உங்களிற்கு மட்டுமல்ல உங்களைசேர்ந்தவர்களிற்கும் என்றார்.சிறிது யோசித்த சிறீதரன் இந்தமுறை உண்மை சந்தோசமாக சிரித்தபடி எழுந்தவர் நீங்கள் சொன்ன முதல்வழி என்வழிஎன்றுவிட்டு வெளியேறியவர் வெளியேநின்ற அந்த வைத்திய சாலைஊழியரைபார்த்து சொன்னார் புலிகள்தான் ராஜினியை கொன்றுவிட்டார்கள் என்றவும்.புரிந்துகொண்ட அந்த ஊழியரும் புன்னகைத்தார்.பின்னர் யாழ்பல்கலைகழக வளாகத்திற்கு வந்த சிறீதரன் ராஜினியை புலிகள்கொன்றுவிட்டனர் என்றும் அவரிற்கு தெரிந்த ஆனால் அந்த காலகட்டத்தில் பிரபல்யம் இல்லாத மூன்று புலிஉறுப்பினர்களின் பெயரையும் கூறி(இவர் கூறியவர்கள் ஒருவர் கோண்டாவிலையும் மற்றவர் சாவகச்சேரியையும் இன்னொருவர் மானிப்பாயையும் சேர்ந்வர்கள்) வில்லில்லாமலேயே பாட ஆமா புலிகள்தான் கொன்றுவிட்டனர் ராஜன்கூலும் பின்பாட்டுபாடினார்.ஆகா படித்தமனிதர் பெரிய மனிதர்அதுவும் கணிததுறையில் முனைவர் பட்டம் பெற்ற ஒரவர் சொல்லிவிட்டாரேஅவர் சொன்னால் சரியாக இருக்கும் என்று சிலரும் நம்பிவிட்டனர்.நாளிற்கு நாள் சிறீதரனின் விசுவாசத்தை பார்த்த ஈ.பி.ஆர்.எல்.எவ். இயக்கமும் சிறீதரனிற்கு வேண்டிய வசதிகளும் பணஉதவிகள் செய்தது மட்டுமல்லாமல் பாதுகாப்பிறகென கைத்துப்பாக்கியும் ஒரு வோக்கிரோக்கியும் கூட கொடுத்திருந்தனர்.சிறீதரனும் பின்னர் சண்டிலிப்பாய் கல்வளையில் இருந்த அவரது வீட்டிற்கு செல்வதை தவிர்த்து யாழ் நகரபகுதியிலேயே பாதுகாப்பாக இருந்தபடி வாங்கின பணத்திற்கு புலியெதிர்பு பாடிகொண்டிருந்தார்.
இதுதான் ராஜினியின் கொலை புலிகள் வாலில் கட்டிவிட்டகதை. இதே விபரத்தை அதாவது ஈ.பி அமைப்புதான் கொலை செய்தனர் என்கிற விபரத்தை அதே அமைப்பிலிருந்து பிரிந்துசென்று பின்னர் ஈ.பி.டி.பி அமைப்பில் இணைந்து அந்த அமைப்பில் ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்த அற்புதராஜா என்பவர் ஈ.பி.டி.யினரின் பத்திரிகையாகிய தினமுரசு பத்திரிகையிலும் அற்புதன் என்கிற பொயரில் ஆதாரங்களுடன் எழுதியிரந்தார் என்பதும் குறிப்பிடதக்கது.இது இப்படியிருக்க ராஜினியின் சகோதரியான நிர்மலா திடீரென சிலவருடங்களாக சிறீதரன் பாடிய அதேபாழைய பாட்டை ஏன் பாடுகிறார்??????அடுத்த பாகத்தில்...................

7:18 AM, Posted by sathiri, No Comment

ஈழபோராட்டத்தில் எனது(பொய்)சாட்சியம் பாகம் 6

படுகொலைகளை கண்டிப்போம் படுகொலைகளை கண்டிப்போம் இது இலங்கை அரசு புலிகள் ஒப்பந்தத்திற்கு வந்ததன் பின்னர் புலத்தில் மாற்று கருத்தாளர் என்றும் மனிதவுரிமைவாதிகள் உஎன்றும் சொல்லிகொண்டு ஒரு குழுவினரின் குரல் கொஞ்சம் சத்தமாகவே ஒலிக்க ஆரம்பித்துள்ளது.இவர்கள் படுகொலைசெய்யபட்ட சிலரின் பெயர்களை வைத்துகொண்டு தங்கள் சுய நலங்களிற்காக புலிகள்தான் இந்த கொலைகளை செய்தார்கள் என்று திருப்ப திருப்ப சொல்லியும் எழுதியும் வருகின்றனர்.

அப்படி அவர்களின் பட்டியலில் படுகொலைசெய்யபட்ட ஒருவரான சபாலிங்கத்தை பற்றிய உண்மையான விபரத்தை இதேதொடரில் முதலில் பார்த்தோம். அடுத்ததாக முக்கியமான இன்னொருத்தர் ரயனிதிரணகம. இவரது பெயர் ரயனி அல்ல ராஜினி என்பதே உண்மையான பெயர் ராஜினி எப்படி ரயனியானார் என்று தெரியாது. அது முக்கியம் அல்ல இங்கு இவரின் சகோதரி தான் இன்று இங்கிலாந்தில் மாற்று கருத்தாளர் என்று மனிதவுரிமை பேசிகொண்டிருக்கும் சிலரிற்குள் முக்கியமான நிர்மலா நித்தியானந்தன் ஆவார். இவரை விட ராஜினிக்கு இன்னும் இரு சகோதரிகள் உள்ளனர்.

ராஜினி ஆரம்ப காலங்களில் ஈழவிடுதலையை ஆயுதபோராட்டம் மூலமே பெற்று கொள்ள முடியும் என்பதில் அசையாத நம்பிக்கை வைத்திருந்தார் அத்துடன் கூட்டணியினரையும் கடுமையாக விமர்சித்தவர்களில் ஒருவர்.இவர் தனது பல்கலைகழகத்தில் கல்வி பயின்ற காலத்திலேயே திரணகம என்ற சிங்கள இனத்தவரை காதலித்த திருமணம் செய்து கொண்டார். பின்னர் 85 களில் மேற் படிப்பிற்காக இங்கிலாந்து வந்திருந்த சமயம் இங்கிலாந்தில் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக வேலைத்திட்டங்கள் பலவற்றையும் செய்தவராவார் .இப்படி இங்கிலாந்தில் இருந்த காலகட்டத்தில் ராஜினிக்கும் அவரது விரிவுரையாளர் ஒருவருக்கும் எற்பட்ட காதலினால் திரணகம ராஜினியை பிரிந்துவிட அத்துடன் இருவருக்குமான தொடர்புகள் இல்லாது போய்விட்டது.

தான் ராஜினியை பிரிந்ததற்கான காரணங்கள் ராஜினியின் இயக்க தொடர்புகள் மற்றும் விரிவுரையாளருடனான தொடர்புகளே காரணம் என்று திரணகம பகிரங்கமாகவே பல இடங்களில் கூறியிருக்கிறார் இதில் இரகசியம் ஏதும் இல்லை. பின்னர் 86 களின் ஆரம்பத்தில் இவரது சகோதரி நிர்மலா புலிகளிற்கு ஆதரவாய் தமிழ்நாட்டில் இருந்தபடி புலிகளின் களத்தில் என்கிற பத்திரிகையை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்தபோது இவர் புலிகளுடன் முரண்பட்டுகொண்டு வெளியேறியதால்(இதன் விபரத்தை இன்னொருமுறை விரிவாய் பார்ப்போம்)ராஜினியும் இங்கிலாந்தில்புலிகளிற்கு ஆதரவான வேலைகளை நிறுத்தி கொண்டார்.

பின்னர் இலங்கை திரும்பிய இவரிற்கு யாழ்பல்கலை கழகத்தில் மருத்துவபீட விரிவுரையாளர் பணி கிடைத்தது. அப்போதுதான் ஈழ விடுதலை போராட்டததின் இன்னொரு அத்தியாயத்தின் திறப்பிற்கு வழி கோலிய இலங்கை இந்திய ஒப்பந்தம் நடந்து இந்திய இராணுவத்தின் வருகையும் அதை தொடர்ந்து இந்திய இராணுவத்திற்கும் புலிகளிற்குமான மோதல் வெடித்திருந்த கால கட்டம். இந்திய இராணுவத்தின் கண்மூடித்தனமான பொதுமக்கள் மீதான தாக்குதல்களும் வெறியாட்டங்களும் நடந்துகொண்டிருந்த வேளை எல்லாவற்றிற்கும் மேலான மோசமான யுத்தகால சர்வதேச விதிகள் அத்னையையும் மீறிய யாழ்வைத்தியசாலை படுகொலையை 21ம் திகதி ஒக்ரோபர் மாதம் 1987ம் ஆண்டு இந்திய இராணுவம் மேற்கொண்டது.

இந்த காலகட்டங்களில்தான் ராஜினியும் சகமருத்துவபீட விரிவுரையாளரான சண்டிலிப்பாயை சேர்ந்த கோபாலசிங்கம் சிறீதரன் என்பரால் மேலும் அங்கு கணணித்துறையில் இருந்த ராயன்கூல்மற்றும் கலைப்பீட ராஜமோகன்ஆகியொரை இணைத்து யாழ்பல்கலைகழகமட்டத்தில் ஒரு மனிதவுரிமை அமைப்பை தோற்றுவித்து இந்திய இராணுவ மற்றும் இந்தியபடைகளுடன் சேர்ந்தியங்கி ஒட்டுக்குளுக்கள் முக்கியமாக ஈ.பி.ஆர்.எல். எவ் பின் மனிதவுரிமை மீறல்களையும் அவர்களின் பொதுமக்கள் மீதான படுகொலைகளையும் ஆதாரங்களுடன் தொகுத்து முறிந்தபனை என்னும் ஒரு புத்தகத்தை வெளியிட்டனர். இந்த புத்தகத்தை எழுதியதில் அதாவது யாழ்வைத்தியசாலை படுகொலைபற்றிய விபரங்களை ராஜினியே எழுதினார்.

இதனால் சர்வதேசத்திற்கு இந்திய இராணுவத்தின் கோரமான பக்ககங்களை காட்டிநின்றது உண்மையே.இதனால் இந்திய இராணுவ அதிகாரிகள் இந்திய உளவுபிரிவு மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ்.அமைப்பினரிற்கும் இந்த யாழ் மனிதவுரிமை அமைப்பிறகும் ஒரு பனியுத்தம் தொடங்கிவிட்டிருந்தது. அனால் ராஜினியும் சிறீதரனும் தொடர்ந்தும் ஈ.பி. ஆர்.எல்.எவ் வின் தேசிய விடுதலை இராணுவத்திற்கான கட்டாயஆள்சேர்ப்புபற்றிய விபரங்களையும் வெளி கொணரும் நோக்குடன் அவற்றை ஆதாரங்களுடன் சேகரித்து ஆவணங்களாக்க தொடங்கியபோது பனியுத்தம் நடாத்தியவர்களிற்கு குளிர் காச்சல் அடிக்க தொடங்கியது.

இதற்கு மேலும் இந்த யாழ்பல்கலைகழக மனிதவுரிமை அமைப்பை எழுதவிட்டு அழகு பார்க்கமுடியாது என்று தீர்மானித்து இந்திய இராணுவ அதிகாரிகளும் ஈ.பி.ஆர்.எல்.எவ் வின் முதலமைச்சராக இருந்த வரதராஜபெருமாளும் ஒரு தீர்மானத்திற்கு வந்தனர்.இந்த அமைப்பின் தலையை வெட்டிவிட்டால் பிறகு வால்ஆடாது தலை யார்? பூவா தலையா போட்டு பார்த்தனர். அந்த அமைப்பின் தலையாய் இருந்தவர் சிறிதரன் ஆனால் பூவா தலையா போட்டு பார்த்தவர்களிற்கு இரண்டு பக்கமும் தலை விழுந்தது. ஆம் இரண்டு தலைகள் மற்றது ராஜினி காரணம் சிறீதரனைவிட ராஜினிக்கு வேறுமனிதவுரிமை அமைப்புக்களுடனான தொடர்புகள் அதிகம் அதைவிட தனிப்பட்டரீதியிலும் வெளிநாட்டு தொடர்புகளும் இருந்தன.ஆகவே சிறீதரனை போட்டால் ராஜினி வெளிநாடொன்றிற்கு தப்பிசென்றுவிட்டால் நிலைமை இன்னமும் இடியப்பம் (சிக்கல்)ஆகிவிடும் எனவே இரண்டு தலைகளுமே போடபடவேண்டிய தலைகள் தான் எனவே அந்தவேலையை முடிப்பதற்கு அப்போது ஈ.பி.ஆர் எல் எவ் பின் இராணுவ பிரிவு பொறுப்பாய் இருந்த றொபேட்(சுபத்திரன் சாவகச்சேரியை சேர்ந்தவர் இவர் பின்னர் சினைப்பர் தாக்குதலில் கொல்லபட்டுவிட்டார்)என்பவரிடம் ஒப்படைக்கபட்டு முதல் போடவேண்டிய தலை யார் எனபதனையும் அடையாளம் சொல்லிவழியனுப்பி வைத்தனர். இரண்டு தலையில் முதல் தலை?? அடுத்தஇதழில் பார்ப்போம்................


http://www.orupaper.com/issue55/pages_K__32.pdf

12:33 AM, Posted by sathiri, 3 Comments

ஈழபோராட்டத்தில் எனது (பொய்) சாட்சியம் பாகம் 5

புலோலி வங்கி கொள்ளை 1976ம் ஆண்டுவைகாசி மாதம் நிகழ்த்தபட்டது இந்த வங்கி இலங்கை மக்கள் வங்கியின் ஒரு கிராமிய கிளையாகும். இது தமிழ் இளைஞர் பேரவை செயலிழந்த பின்னர் தமிழீழ விடுதலை இயக்கம் என்று தொடங்கியவர்களாலேயே நிகழத்தபட்டதாகும். இஇந்த கொள்ளையை நடத்தியவர்களின் நோக்கம் அந்த கால கட்டத்தில் சிறீ லங்கா காவல் துறை மற்றும் புலனாய்வு தறையினரால் தேடபட்டும் மற்றும் சந்தேக வளையத்திழல் இருந்த இளுஞர்கள் தங்கள் வீடுகளில் இருந்து இடம் மாறியும் தலை மறைவு வாழ்க்கையும் மேற்கொண்டிருந்த படியால் அவர்களது அன்றாட செலவுகளையும் மற்றும் ஆயுத பொராட்டம் நடத்த ஆயுதங்கள் வெடி மருந்துகள் வாங்கவும் இந்த கொள்ளையை திட்டமிட்டனர் ஆனால் கொள்ளை நடந்ததின் பின்னர் நடந்த சம்பவங்களோ வேறானவை.

இந்த கொள்ளை சம்பவம் நடந்த நேரம் துரையப்பா கொலை வழக்கில் சந்தேகத்தின் பெயரில் புஸ்பராசா வெலிக்கடை சிறையில் இருந்தார். ஆனால் இந்த கொள்ளையை கென்ஸ் மோகன் சந்திர மேகன் தங்கமகேந்திரன் கோவைநந்தன் போனறவர்களால் நிகழ்த்தப்பட்டது. இந்த கொள்ளைக்கான திட்டத்தை தீட்டி அதை பொறுப்பெடுத்து நிறைவேற்றியவர்களிலுள் முக்கியமானவர்கள் தங்க மகேந்திரனும் சந்திர மோகனுமே.இதில் தங்க மகேந்திரன் திருகோணமலையை சேர்ந்தவர் இவர் யாழ்ப்பாணத்திலேயே தனது நண்பர்கள் வீடுகளில் அந்த நேரம் வசித்து வந்தார் இந்த கொள்ளை சம்பவத்தை திட்டமிட்ட காலங்களில் புஸ்பராசா குடும்பத்தினருடன் நல்ல உறவை கொண்டிருந்த காரணத்தால் அவர் புஸ்பராசா வீட்டிலேயே அந்த காலகட்டங்களில் வசித்தார்.

இவர்கள் திட்டமிட்டபடி கொள்ளை சம்பவம் மிகவும் கன கச்சிதமாக நிறைவேற்றபட்டது .வங்கியிலிருந்து சுமார் ஆறுலட்சம் பெறுமதியான நகைகளும் இரண்டு இலட்சம் பெறுமதியான பணமும் கொள்ளையிட பட்டதாக செய்திகள் வெளிவந்தன . அதேநேரம் அந்த வங்கியின் முகாமையாளராக பாலகுமார் அவர்களே இருந்தார். (ஈரோஸ் இயக்கத்தின் மாணவர் அமைப்பிற்கு பின்னாளில் பொறுப்பாயிருந்தவர் இப்பொழுது புலிகள் அமைப்புடன் இணைந்து செயல் படுகிறார்) இந்த கொள்ளையில் பால குமாரிற்கும் தொடர்புகள் இருப்பதாக சந்தேகத்தின் பெயரில் கைதாகி பின்னர் விடுதலையானார். 76ம் ஆண்டு எட்டு இலட்சம் என்பது மிக பெரிய தொகையாகும்.

ஆனால் அந்த கொள்ளையைதிட்டமிட்டு கச்சிதமாக செய்து முடித்தவர்களிற்கு கொள்ளையிட்ட பணம் நகைகளை எங்கே கொண்டு போய் பாதுகாப்பாய் பதுக்குவது அந்த பெருந்தொகையான நகைகளை எப்படி விற்று பணமாக மாற்றுவது அதற்கடுத்த படியாக என்ன செய்வது என்கிற திட்டம் எதுவும் இருக்கவில்லை. அதே நேரம் கொள்ளை நடந்து முடிந்ததும் எப்படியும் காவல் துறையும் புலனாய்வு பிரிவினரும் ஏற்கனவே சந்தேக வளையத்தில் இருக்கும் இளைஞர்களை வளைத்து பிடிப்பார்கள் என்கிற காரணத்தால் எல்லோரும் தங்கள் தற்போதைய செலவிற்கு மட்டும் கொஞ்சம் பணத்தை எடுத்து கொண்டு மிகுதி பணம் நகைகளை எங்காவது சில காலம் மறைத்து வைத்து விட்டு சிறிது காலம் தலைமறைவாய் இருந்து விட்டு கொஞ்சம் காவல் துறையின் கெடுபிடி குறைந்ததும் அடுத்ததை யோசிக்கலாம் என்று நினைத்துதங்க மகேந்திரனின் பொறுப்பில் ஒப்படைத்து விட்டு தனித்தனியாக பிரிந்து சென்று விட தங்க மகேந்திரனும் தனக்கு நம்பிக்கையான புஸ்பராசா வீட்டில் அந்த பணம் நகைகளை கொண்டு மறைத்து விட்டு அவரும் தலைமறைவாகி விட்டார்.

மறு நாள் இலங்கையின் எல்லா பத்திரிகைகளிலும் பரபரப்பு செய்தியாக வங்கி கொள்ளை செய்திதான் முதல் இடத்தில் இடம்பிடித்தது. வழைமை போல காவல்துறையும் புலனாய்வு துறையும் தங்கள் நடவடிக்கைகளை முடுக்கி விட்டனர்.அந்த காலகட்டத்தில்புலனாய்வு பிரிவிலும் காவல் தறையிலும் தமிழர்கள் அதிகமாக இருந்த கால கட்டம் . எனவே இந்த வங்கி கொள்ளையை பிடிப்பதற்கான அதிகாரியாய் இங்ஸ்பெக்ரர் பத்மநாதன் தலைமையில் ஒரு குழு அமைக்கபட்டு யாழில் பிரபலமான நகைகடைகள் மற்றும் அடைவுகடைகள் என்பன யாராவது நகைகள் விற்கிறார்களா? என்று கண்காணித்தும் சந்தேகத்தின் பெயரில் பலர்கைது செய்து விசாரிக்கபட்டுகொண்டும் இருந்தனர்.

ஆனால் அவர்களிற்கு சரியான ஆதாரம் எதவும் கிடைக்கவில்லை. ஆனாலும் அவர்களதுசந்தேகமும் விசாரணைகளும் அன்றை காலகட்டத்தில் அரசிற்கு எதிராய் இருந்தஇளைஞர்கள் மீதே இருந்ததாலும் பாலகுமாரிடமும் காவல் துறையின் தீவிர விசாரணைகள் தடந்ததாலும். தங்கள் மீது காவல் துறையின் சந்தேகம் விழுந்து விட்டதை உணர்ந்த தங்க மகேந்திரன் தாங்கள் எந்த நேரமும் கைது செய்யபடாலாம் என்று நினைத்ததால் புஸ்பராசா வீட்டிலிருந்த நகைகளை பாதுகாப்பாக வேறிடம் மாற்ற திட்டம் தீட்டினார் ஆனால் அந்த கொள்ளையை நடத்தியவர்களிற்கு அந்த நேரம் இந்தியாவுடனான தொடர்புகள் ஏதும் இருக்காத காரணத்தால் அவர்களிற்கு இந்தியாவிற்கு தப்பிசெல்லும் யோசனை தோன்றவில்லை எனவே மற்றைய மாவட்டங்களில் அவ்வளவு நகைகளை கொண்டு சென்று விற்க முடியாது பிடிபட்டு விடவார்கள்.

எனவே கொழும்பில் அவர்களிற்கு உறவினர்கள் நண்பர்கள் இருந்ததால் கொழும்பிற்கு கொண்டு போவது என்று முடிவு செய்யபட்டு புஸ்பராசாவின் சகோதரி புஸ்பராணி மூலமாக மூண்று நான்கு தடைவைகளாக சூட்கேசுகளில் துணிகளில் மறைத்து கொழும்பிற்கு இரயில் மூலம் நகைகள் கொண்டு செல்லபட்டது. அங்கு முன்னர் தமிழ் மாணவர் பேரவையிலும் பின்னர் இளைஞர் பேரவையிலும் இருந்த தவராசாவின்(இவர்தான் இன்று ஈ.பி.டி.பி.அமைப்பின் முக்கிய உறுப்பினர் தவராசா)உதவியுடன் களவு பொருளை பொலிஸ்காரன் வீட்டிலேயே ஒளித்து வைத்தால் காவல்துறைக்கு சந்தேகம் வராது என்று சித்தாந்தத்தின் அடிப்டையில் மருதானையில் இருந்த தவராசாவின் காவல் தறையில் இருந்த ஒரு உறவினர் விட்டில் நகைகள் பதுக்கபட்டன.

ஆனால் வேகமாய் புலளாய்வில் இருந்த பத்மநாதன் குழுவினரோ ஒரளவு கொள்ளையரை நெருங்கிவிட்டிருந்தனர். அவர்கள் பரந்தன் இரசாயன் தெரழிற்சாலையில் பொறியியலாளராய் இருந்த தவராசாவின் மூத்த சகோதரன் தங்கராசாவை கைது செய்து விசாரணைக்காய் கொண்டு சென்றதும் அடுத்ததாய் தானும் எந்த நேரமும் கைது செய்ய படலாம் என்று பதறிப்போன தவராசா காவல்துறையிடம் ஓடொடி சென்று தனக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை தனக்கு நகைகள் இருக்கிற இடம் தெரியும் காட்டித்தரலாம் ஆனால் அதற்கு மாற்றீடாக சகோதரனை விடுதலை செய்வதோடு தன்னையும் கைது செய்ய வேண்டாம் எனகேட்டு கொண்டு நகைகள் இருந்த இடத்தையும் யாரால் எப்படி எங்கிருந்து கொண்டுவரப்பட்டது

என்றும் விலாவாரியாக சொல்லி காட்டிகொடுத்து விட்டார். நாகரீகமாக சொல்வதானால் அரசுதரப்பு சாட்சியாக மாறிவிட்டார்.பிறகென்ன ஆத்திலை போட்டு குளத்திலை எடுத்தது மாதிரி அடுத்தநாள் பத்திரிகைகளில் புலோலியில் காணாமல் போன நகைகள் மருதானையில் மீட்கப்பட்டது என்று தலைப்பு செய்திகளில் வெளிவந்தது.அதுமட்டுமல்ல அந்த கொள்ளையில் சம்பந்த பட்ட அனைவரும் பாலகுமாரும் கைதாகி சிறைகளில் அடைக்கபட்டனர்.ஆனாலும் கொள்ளை போன நகைகளில் அரைவாசியே நகைகளே மீட்கப்பட்டது. கொழும்பிற்கு கொண்டுவரும்போது புஸ்பராசாவீட்டிலே கொஞ்சம் காணாமல் போனதாகவும் பின்னர் தவராசாவின் பொறுப்பில் இருந்தசமயம் கொஞ்சம் காணாமல் போனதாகவும் கொள்ளையில் சம்பந்நத பட்டவர்கள்பின்னர் குற்றம் சாட்டினர் .

ஆனால் அதற்கும் தங்களிற்கும் சம்பந்தமில்லை காவல்துறை அதிகாரிகளே பாதியை அள்ளிவிட்டு மீதியை நீதிமனறத்தில் ஒப்படைத்தனர் என்று புஸ்பராசா குடும்பத்தினரும் தவராசாவும் தங்கள் மீதான குற்றசாட்டை மறுத்தனர்.ஆனால் இங்கு யார் எவ்வளவு எடுத்தனர் என்று ஆராய்வது இந்த கட்டுரையின் நோக்கம் இல்லையென்பதால் அடுத்த தொடரில் புஸ்பராசா தனது புத்தகத்திலும் மற்றும் புலத்திலும் மாற்று கருத்தாளர்கள் என்று தங்களை இனங்காட்டுபவர்களும் இன்னொரு முக்கிய கொலைசம்பவத்தையும் திருப்ப திருப்ப புலியின் வாலில் கட்டிவிட துடிக்கின்றனர் அது யாழ்பல்கலை கழக விரிவுரையாளர் ரயனி திரணகம. எனவே அடுத்த பாகத்தில் ரயனியையும் திரணகமவையும் பார்ப்போம்....................._________________விழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்

ஈழபோராட்டத்தில் எனது(பொய்) சாட்சியம் பாகம்4

4:34 AM, Posted by sathiri, No Comment

ஈழ போராட்டத்தில் எனது (பொய்) சாட்சியம் பாகம் 4


சபாலிங்கம் யார்?? எதற்காக ??? எப்படி கொலை செய்ய பட்டார்??
புலத்தில் மாற்று கருத்தாளர்கள் என்றும் மனிதவுரிமை வாதிகள் சனனாயக வாதிகள் என்னும் பல போர்வைகளை போர்த்துகொண்டவர்கள் அவர்யார் ?எப்படியானவர்? எப்படி இருப்பார் ?என்று கூட தெரியாதவர்களாய் வழைமை போல தங்கள் வசதிக்கேற்றபடி சாபலிங்கம் படு கொலை புலிகளால் என்று சில தளங்களில் இன்றும் எழுதி புலம்பியபடி இருக்கிறார்கள் எனவே அவரை பற்றியும் சுருக்கமாக முடிந்தளவு விபரமாக பார்த்தால் இவர் தமிழ் மாணவர் பேரவையில் மாணவனாக இருந்த போது இணைந்து கொண்டார்.
அந்த கால கட்டத்தில் தமிழ் மாணவர் பேரவை அமைப்பாளரான சத்திய சீலன் அவர்களால் 1971ம் அண்டு கார்த்திகை மாதம் திருநெல்வேலி சந்திக்கு அருகில் மாமரவளவு என்று அழைக்கபட்ட மாமரங்கள் நிறைந்த காணி ஒன்றினுள் அதன் உறுப்பினர்கள் அழைக்கப்பட்டு ஒரு இலட்சியத்தை அடைவதற்கான போராட்டத்தில் எப்போதும் எதிரியை விட துரோகியே ஆபத்தானவன் என்கிற கோட்பாட்டிற்கு இணங்க ஆயுத விடுதலை போராட்டத்திற்கான தடை கற்களாக இருக்கும் துரோகிகளை ஒழிப்பதற்கானதீர்மானம் நிறைவேற்றபட்டுசில திட்டங்களும் தீட்டப்பட்டு அதற்கான சில வேலைதிட்டங்கள் பலரிற்கும் பகிர்ந்தளிக்கபடுகிறது அதில் சபாலிங்கத்திடமும் சில பொறுப்புகள் ஒப்படைக்கப் பட்டு அதனை அவர் சரியாக நிறை வெற்றாததாலும் .
அதை விட சபாலிங்கம் ஆரம்ப காலம் தொட்டேஇன்னொரு நாட்டின் இராணுவ உதவியுடனோ அல்லது இன்னொரு நாடு வந்துதான் எங்களிற்கான விடுதலையை வாங்கி தரமுடியும் என்று கனவு கண்டவர் ஆயுத விடுதலை போராட்டத்தினை எமது இளைஞர்களும் எமது மக்களாலும் சுயமாக நடத்தி வெற்றி பெற முடியாது என்று ஒரு தன்னம்பிகையற்ற போக்கினை அவர் கொண்டிருந்ததாலும் அவரின் முரண்பட்ட கருத்துகளால் தமிழ் மாணவர் பேரவையை விட்டு வெளியேற்றபட்டார். பின்னர் புஸ்பராசாவுடன் சேர்ந்து தமிழ் இளைஞர் பேரவையை தொடங்கி அதுவும் செயலற்று போக அதே புஸ்பராசாவுடன் இணைந்து ரெலோ(T.L.O ) தமிழீழ விடுதலை இயக்கம் என்கிற அமைப்பை தொடங்க முயற்சித்து அதுவும் பலனளிக்காமல் போக பின்னர் பிரான்ஸ் நாட்டில் வந்து குடியெறினார் பிரான்ஸ்நாட்டில் பின்னர் சபாரட்டணத்தின் தலைமையில் இயங்கிய ரெலோ( T.E.L.O ) தமிழீழ விடுதலை இயக்கம் அமைப்புடன் தொடர்புகளை எற்படுத்து கொண்டு அந்த அமைப்பிற்காக வேலைகள் செய்யது கொண்டிருந்தவர் அந்த அமைப்பும் ஈழத்தில் புலிகளால் தடை செய்ய பட்டதன் பின்னர்.
அடுத்ததாய் பிழைப்பிற்கு என்ன செய்யலாம் என யோசித்தவருக்கு பிரான்ஸ் நாட்டில் அகதிகள் விண்ணப்பத்திறகான சில நடைமுறை சிக்கல்கள் அவரிற்கு அருமையான ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்தது. பிரான்ஸ் நாட்டில் ( o.f.p.r.a ) என்றழைக்கபடும் நாடற்றவர்களிற்கும் அகதிகளிற்குமான உதவி அமைப்பு. இதுவே பிரான்ஸ் நாட்டில் அகதி அந்தஸ்த்து கோருபவர்களிற்கான விண்ணப்பங்களை முதலில் பரிசீலித்து அவர்கள் அகதிகளாக ஏற்று கொள்ள பட கூடியவர்களா இல்லையா என்பதனை முடிவு செய்யும் அமைப்பு ஆகும். இந்த அமைப்பின் சார்பில் 90 களிற்கு முதல் தமிழ் மொழியிலான மொழிபெயர்ப்பாளர்கள் யாரும் இருக்கவில்லை எனவே பிரான்ஸ் நாட்டிற்கு வரும் தமிழர்கள் தங்கள் அகதிக்கான விண்ணப்பத்தை பிரெஞ்சு மொழியிலேயோ அல்லது ஆங்கிலத்திலேயோ தான் எழுத வேண்டிய கட்டாய நிலை . இதில் பிரெஞ்சு மொழி என்பது ஈழதமிழரிற்கு பரிச்சமில்லாத மொழி ஏன் அப்படி ஒரு மொழி இருக்கிறதா என்பது கூட பிரான்ஸ் வரும்வரை பலரிற்கு அந்த நேரங்களில் தெரிந்திருக்காத ஒரு விடயம் .
எனவே ஆங்கிலத்தில் தான் எழுத வெண்டும் ஆங்கிலத்தை எழத தெரியாத பலரும் அங்கிலம் எழுத தெரிந்தவர்களை நாட பலர் அதை உதவியாகவும் சிலர் தெழிலாகவும் செய்ய தொடங்கினார்கள். அந்த சிலரில் அங்கில அறிவுகொண்ட சபாலிங்கமும் அந்த அகதிகளிற்கான விண்ணப்படிவம் நிரப்பும் பணியை தொழிலாக செய்ய தொடங்கினார் வருவாயும் பெருகதொடங்க காலப்போக்கில் தன்னை ஒரு சட்டஆலோசகராகவே பாவனை செய்து கொள்ள தொடங்கியவர் அகதி அந்தஸ்த்து நிராகரிக்கபட்ட தமிழர்களிடம் தான் அவர்களிற்காய் அகதி அந்தஸ்த்து பெற்று தரமுடியும் என்றுகூறி அதிகளவு பணம் கறக்க தொடங்கினார். ஆனால் அவர் செய்தது சாதாரண முத்திரை செலவுடன்அதன் மறுவிண்ணப்பம் மட்டுமே. இப்படி அவரிடம் பணமும் கொடுத்து பயனின்றி வருடகணக்கில் அலைந்தும் முறையான எதுவித வதிவிட அனுமதி பத்திரமும் கிடைக்காத இளைஞர்கள் தங்கள் பணத்தை திருப்பி கெட்டு தெந்தரவு செய்ய தொடங்கியபோதுதான் இவரது மனித நேயமும் சன நாயகமும் புலியெதிர்ப்பும் பீறிட்டு கிழம்பியது.
தன்னை காப்பாற்றி கொள்ள அவர் வசித்து வந்த கோணெஸ்( gonesse ) என்கிற இடத்தின் காவல் நிலையத்தில் சென்று தான் ஒரு அதி தீவிர இடதுசாரியென்றும் தன்னை தாக்கவும் கொலை செய்யவும் புலிகள் அமைப்பு பலரை ஏவிவிடுவதாகவும் தனக்கு பாது காப்பு தரும்படியும். ஒரு (பெட்டிசத்தை )பதிவை போட்டார்.அதன்பின்னர்இவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் யாராவது இவரிடம் போய் தொந்தரவு குடுத்தால் உடனே அருகிலிருக்கும் காவல் நிலையத்திற்கு தொலைபேசி பறக்கும்.காவல் துறையும் வந்து அந்த நபரை அள்ளிபோட்டுகொண்டு போய்விசாரிக்க அந்தநபரும் அழுதழுது உண்மையை செல்ல காவல் துறையும் சரி சரி பணம் குடுத்ததற்கான எந்தவித ஆதாரமும் உன்னிடம் இல்லாதபடியால் இனி இந்த பக்கம் வந்து தொந்தரவுசெய்ய கூடாது என எச்சரித்து அனுப்பி விடும். ஆனாலும் எவருமே இவரை தாக்க வந்ததற்கானவோ அல்லது கொலை செய்யும் நோக்கோடு சென்றதற்கான ஆதாரங்களுடனோ ஆயுதங்களுடனோ யாரும் கைது செய்ய படவேயில்லை.
இப்படி இவர் காவல் துறையை கூப்பிடுகிறார் என்று அறிந்ததும் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் விசாவும் இல்லை எதுக்கு வீண்வம்பு காசுதானே போனால் போகட்டும் போடா என்று பாடியபடியே அந்தபக்கமே போகாமல் விட்டு விடவும்.சபாலிங்கமும் தனது அதிரடி ஆலோசனை அற்புதமாய் வேலை செய்கிற அற்ப மகிழ்ச்சியில் ஆட்டம் போட தொடங்கினார்.பொன்னும் பொருளும் சேர்த்தவரிற்கு இப்போ பிடித்து கொண்டது பெண்ணாசை அவரிடம் அகதி அந்தஸ்த்து கோருவதற்கான் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய உதவி கேட்டு போன பெண்ஒருவரை தனியெ அழைத்து அவரிடம் தன் காதல் விண்ணப்ப படிவத்தை நீட்டிஅதை பூர்த்தி செய்யுமாறு விண்ணப்பித்தார் அதை அந்த பெண் நிராகரிக்கவே இவரும் சற்று பலாத்காரமாக தனது கோரிக்கையை மீழ்பரிசீலனை செய்யும் படியும் இல்லாவிட்டால் பிரான்சில் அந்த பெண் வாழ்வதே பரிசோதனையாகி விடும் என்று மிரட்ட.
மிரண்டுபோன பெண்ணோ அழுதபடி அவர் அண்ணனிடம் போய் அத்தனையையும் ஒப்பிக்க அவள் அண்ணன் எமன்ஆனான். அன்னார் சபாலிங்கம் அகாலமரணமானார். இதுதான் நடந்தது. இவரது மரணம் புலத்தில் புலியெதிர்பு பேசிதிரிந்தவர்களிற்கும் வெறும் வாய்சப்பாமல் வெத்திலை துண்டு கிடைக்காதா என அலைந்த மாற்றுகருத்தாளர்களிற்கும் மசாலா பீடாவே கிடைத்ததுபோல தங்கள்விருப்பத்திற்கு பழியை புலிகள் மீது போட்டு சப்பி துப்பினார்கள்.ஆனால் அந்த கொலை வழக்கை விசாரித்த கோணேஸ் காவல் துறையொ அந்த கொலை தனிப்பட்ட விரோதம் காரணமாகவே நடந்ததாக உறுதிபட கூறிய பின்னரும் இவர்கள் கதைப்படி சபாலிங்கத்தின் கொலையை ஏதோ கொழும்பு கொச்சிக்கடை காவல் துறையினர் விசாரித்தது போலவும் லஞ்சம் வாங்கி கொண்டு கொலையாளிகளை தப்பவிட்டது போலவும் கதை அளக்கின்றனர்.
பிரன்சில் சபாலிங்கத்தை போலவே ஈழவிடுதலை போராட்டத்தை எதிர்த்து எழதியும் பேசியும் திரிந்த முக்கியமானவர்களில் உமாகாந்தன் புஸ்பராசா மற்றும் கலை செல்வன் போன்றொரும் அடங்குவர்.இங்கு இறந்து போனவர்களின் பெயர்களை மட்டும் தான் எழுதியுள்ளென் காரணம் இன்னமும் பிரான்சில் ஈழவிடுதலை போராட்டத்தை விற்று வயிறுவளர்க்கும் இன்னும் சிலர் இருக்கதான் செய்கின்றனர். ஆனாலும் காலப்போக்கில் அவர்கள் காலத்தின் தேவையறிந்து ஒதுங்கி கொள்ளலாம் அல்லது ஈழபொராட்டத்திறகான் ஆரவு நிலை எடுக்கலாம் என்கிற காரணத்தினாலேயே அவர்களின் பெயர்களை தவிர்த்து இறந்து போனவர்களின் பெயர்களை மட்டும் இங்கு குறிப்பிட்டேன்.மீண்டும் சுற்றிவந்து சுப்பரின் படலையையே தட்டுவோம். ஆம் இந்த தமிழ் இளைஞர் பேரவை பெரும் எடுப்புடன் ஆயுதபோராட்டமே தமிழ் மக்களிற்கான் திர்வு என்று தொடங்கியது அதை முதலில் பார்த்தோம் . ஆனால் அது இயங்கிய காலத்தில் ஒரு காவல் துறை வாகனத்தின் கண்ணாடியையாவது கல்லால் எறிந்து உடைத்தார்களா???என்றால் இல்லை.ஆனால் அந்த காலகட்டத்தில் பரபரப்பாய் ஒன்றை செய்தனர் அதுதான் புலோலி வங்கி கொள்ளை . புலோலி வங்கி கொள்ளை பற்றிய வெளிச்சத்திற்கு வராத சில விடயங்களுடன் அடுத்த வாரம் .................................

சிறு திருத்த குறிப்பு இந்த தொடரில் இரண்டாவது பாகத்தில் தமிழ் மாணவர் பேரவை தொடங்கிய நேரம் தமிழர் விடுதலை கூட்டணி இருந்ததாக தவறுதலாக குறிப்பிட்டு விட்டேன் அப்போது அது உருவாகியிருக்கவில்லை தமிழரசு கட்சியே பெரிய தமிழர் கட்சியாய் இருந்தது.

2:46 AM, Posted by sathiri, No Comment

ஈழபோராட்டத்தில் எனது (பொய்)சாட்சியம் பாகம் 3


சத்தியசீலன் மகாஉத்தமன் மற்றும் ஞானம் ஆகியோர் 1971ம் அண்ட ஆவவணி மாதமளவில் இந்தியா சென்று தமிழ் நாட்டில் சுயமரியாதை கொள்கையின் தந்தையும் திராவிடர் கழக தலைவருமான ஈ.வே.ரா. பெரியார் இந்தியாவின் விஞ்ஞானியும் அறிஞருமான ஜு.டி நாயுடு மற்றும் மா.பொ.சி ஆகியொரை சந்தித்து சிங்கள அரசின் ஏமாற்று வேலைகளை விளக்கி தங்கள் கொள்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் என்பனவற்றை விளக்கியும் அதற்கான முன்னெடுப்புகளிற்கு அவர்களின் உதவியை வேண்டி நின்றனர்.அதற்கு அவர்களும் தங்களால் முடிந்த உதவிகள் வழங்குவதாக கூறி வாழ்த்தி வழியனுப்பி வைத்ததுடன் ஈ. வே.ரா. பெரியார் சத்திய சீலனிடம் சுருக்கமாக ஒரு கட்டுரையும் எழுதிவாங்கி தனது விடுதலை பத்திரிகையில் வெளியிட்டார்
. இந்த மாணவர் பேரவையின் வேகத்தை தடுத்து நிறுத்த உடனடியாகவே கூட்டணிதலைமை இதற்கான ஒரு மாற்று திட்டம் ஒன்றை தீட்ட வேண்டிய அவசியத்திற்கு தள்ளப்பட்டது.இளையதலைமுறையின் வேகத்தையும் ஆற்றலையும் தங்கள் பக்கம் இழுக்கவும் தங்கள் தங்கள் வீராவேச மேடை பேச்சுகளில் இவர்களால் பேச மட்டுமே முடியும் என அவர்களில் நம்பிக்கையிழந்து வேறு வழிகளில் வேறு திசைநோக்கி பயணிக்க புறப்பட்ட இளைஞர்களையும் தங்கள் பக்கம் இழுப்பதோடு அத்தோடு தமிழ் மக்களின் இனஉணர்வுகளின் எழுச்சி பலாபலன்களை ஒட்டுமொத்தமாய் தாங்களே அறுவடை செய்து அதன் விளைச்லை காட்டி சிங்களத்திடம் தங்கள் பேரங்களையும் பாராளுமன்ற கதிரைகளையும் பலமாக வைக்கலாம் என்பதே கூட்டணியின் கணக்காக இருந்தது.அதற்காக அவர்களும் ஒரு இளையவர் அமைப்பை உருவாக்க திட்டம் போட்டனர் அவர்கள் திட்டபடி அதன் அமைப்பாளர்கள் தங்கள் நூலிலேயே ஆடும்பொம்மைகளாகவும் இருக்க வேண்டும் அதன் மற்றைய உறுப்பினர்களிற்கோ பொது மக்களிற்கோ இது கூட்டணியின் கூட்டுவேலை என்று என்று தெரியவும் கூடாது .
அப்படி ஒரு தீவிரவாத போக்கை கொள்கையாக கொண்டஅமைப்பை உருவாக்கி மாணவர்கள் மத்தியிலும் இளைஞர் மத்தியிலும் வேகமாக வளர்ந்துவரும் சிங்களத்திற்கெதிரான தீவிர போக்கையெல்லாம் ஒன்று சேர்த்து இந்த அமைப்பின் மூலமே தங்களிற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என அதன் பால் நாட்டம் கொள்ள வைத்து அதனை இயக்கி கொண்டே கூட்டணிதலைவர்கள் மட்டும் தாங்கள் வன்முறையின் பால் அக்றை கொண்டவர்கள் அல்ல அகிம்சையே எங்கள் போராட்டவழி என்று சொல்லிக்கொண்டு கதர் உடுத்தி கறுப்புகொடி காட்டி கொண்டு வன்முறையின் பால் அக்கறையற்ற நாட்டமற்ற தமிழ் மக்களையும் தன்பக்கமே இழுத்துவைத்திருப்பதென ஒரேகல்லில் பல விழாங்காய் (பலமாங்காய் அடிப்பது சுலபம்) அடிக்க திட்டம் தயார்.
இப்போ அந்த விளாங்காய்களை அடிப்பதற்கான நம்பிக்கையான ஒரு கல்லை தேடினார்கள். அவர்கள் கல்லை தேடிகொண்டிருக்க எறிந்த இலக்கை அடித்துவிட்டு எசமானின் காலடிக்கே திரும்பும் பூமாராங்குகளாக தமிழரசு கட்சியின் வாலிப முண்ணனியிலிருந்து புஸ்பராசாவும். தமிழ் மாணவர் பேரவையிலிருந்து வெளியேறிய சபாலிங்கம் போன்றவர்கள் கிடைத்தார்கள். இப்போ கூட்டணியின் திட்டம் என்ன?? அதாவது ஒரு கோட்டை அழிக்காமலேயெ அதைசின்னாக்க எப்படி பக்கத்தில் ஒரு கோட்டைகீறுகின்ற வித்தை தான் இதுவும்.திட்டமும் தயார் அதை செயல்படுத்த ஆட்களும் தயார் அடுத்தது என்ன. 1973ம் ஆண்டு தைமாதம் கூட்டணி சார்பு மற்றும் எதிர்ப்பு தீவிரபேக்கின் மீது நாட்முடைய வேறு பல இளைஞர்கள் என்று பலரை ஒண்றிணைத்து யாழ் தமிழர் விடுதலை கூட்டணியினரின் காரியாலயத்தில் பெரும் எடுப்புடன் ஆர்ப்பாட்டமாய் ஒரு கூட்டம் கூட்டப்பட்டு அதற்கு தமிழ் இளைஞர் பேரவை என்று பெயரும் வைக்கப்பட்டது.அன்றும் சரி அதன் பின்னரும் சரி இந்த அமைப்பால் நடத்த பட்ட கூட்டங்களிற்கு வேண்டி நிதியுதவி மற்றும் இடவசதிகள் யாவும் கூட்டணியினராலேயெ வழங்கபட்டது.
ஆனால் மணவறையில் அமர்ந்து மணபெண்ணிற்கு தாலியும் கட்டிவிட்டு நான் மாப்பிள்ளை இல்லை என்பது போல புஸ்பராசாவே அந்த அமைப்பிற்கும் கூட்டணியினருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றே அடித்து கூறி வந்தார்.அனால் கால போக்கில் உண்மையை உணந்துகொண்ட அதன் உறுப்பினர்கள் பலரும் அந்த அமைப்பில் இருந்து வெளியெறிவிட அந்த அமைப்பு செயலிழந்து போனது.அந்த அமைப்பும் இயங்கிய காலத்தில் கறுப்புகொடி காட்டி கோசம் போட்டதோடு அதன் இயக்கமும் நின்று போனது.பின்னர் துரையப்பா கொலை நடந்தபோது சந்தேகத்தின் பெயரில் புஸ்பராசா கைதாகி சிறை சென்றுவிட சபாலிங்கத்தின் சத்தமும் காணாமல் போனது.இந்த புத்கத்தில் புஸ்பராசாவும் சரி இன்று புலத்தில் சிலர் தாங்களே சனநாயகத்தின் ஒட்டுமொத்த காவலர்கள் என்றும் மாற்று கருத்து மாணிக்கங்கள் என்றும் கூறிக்கொண்டு ஈழவிடுதலை போராட்டத்திற்கு எதிராகவும் விடுதலை புலிகளிற்கு எதிராகவும் கருத்துகளை முன்வைத்தும் செயற்பட்டு கொண்டும் இருக்கும் பலரும் இந்த சபாலிங்கம் என்கிற பெயரை அடிக்கடி உச்சரித்தபடிதான் இருக்கிறார்கள்.காரணம் காலப் போக்கில் புலம் பெயர்ந்து வந்து பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்துகொண்டிருந்த சமயம் இந்த சபாலிங்கம் கொலை செய்யப்பட்டார். யாரால்??? ஏன்??? எதற்காக ???? அடுத்த பாகத்தில் பார்ப்போம்

தொலைவில்

7:15 AM, Posted by sathiri, No Comment



பாரீஸ் நகரிற்கு ஒரு அலுவலாக நான் போக வேண்டியிருந்தது போய் எனது அலுவல்களை முடித்து கொண்டு அன்று எனது நகரத்திற்கு திரும்ப முன்ன பாரீசில் தமிழர் வர்த்தக நிலையங்கள் அதிகமாக அமைந்திருக்கும் லா சப்பல் என்கிற இடத்திற்கு போனபோது தான் இவ்வனவு தூரம் வந்தனான் சில நிமிடம் வாசனையும் சந்தித்து விட்டு போகலாம் என்று அவனது அலுவலகத்தில் நுளைந்தேன் பலவருடங்களின் பின்னர் மீண்டும் கண்டாலும் உடனே அடையாளம் கண்டு எப்பிடி இருக்கிறாய் எங்கே இரக்கிறாய் என்று வழைமையான விசாரிப்புகள் ஒரு பத்து நிமிட சந்திப்பு அதன் இடையில்தான் பகட்டேன் என்னடா நீ ஏதோ புத்தகம் ஏதோ வெளியிட்தாய் எங்கோ வலைப்பூக்களில் படித்த ஞாபகம் என்ன புத்தகம் என்றேன். ஒரு புத்தகத்தை எடுத்து (வாழ்வின் சில தடயங்களாய்) என்று எழுதி கையெழுத்து போட்டு தந்துவிட்டு படித்துபார்த்து கருத்தை சொல் என்று தந்தான் அவனிடம் விடை பெற்று கொண்டு நான் இருக்கும் நகருக்கு திரும்புவதற்காக விமானநிலையம் வந்து விமானத்தில் ஏறி அமர்ந்ததும் அந்த ஒண்றரை மணி நெர பயணத்தில் அந்த புத்தகத்தை படித்து விடலாம் என தீர்மானித்து புத்தகத்தை திறந்தேன்.புத்தகத்திற்கு முன்னுரை கி.பி. அரவிந்தன் என்று போட்டிருந்தது முன்னுரையை படிக்கவில்லை காரணம் அதை படித்துதான் வாசு தேவனையோ அவனது படைப்புக்களையொ நான் தெரிந்து கொள்ளவேண்டும் என்கிற அவசியம் எனக்கில்லை என்பதால்தான்.பக்கங்களை புரட்டினேன் முதல் கவிதை "எ(வ்)வடம் எ(வ்)வடம் புளியடி புளியடி என்று தொடங்கியது என்ன இது சின்னபிள்ளை தனமாய் எழுதியிருக்கிறான் என நினைத்தவாறே தொடர்ந்து படித்தேன். மீண்டும் திருப்பவும் படித்தேன். எவ்விடம் எவ்விடம் ?
புளியடி புளியடி
எவ்விடம் போகினும்
போக்கிடம் நமக்கினி
புளியடி புளியடி

கண்மூடிகொண்டே நாம்
கையிருந்த மண்ணிழந்தோம்
எவ்விடம் போகினும்
போக்கிடம் நமக்கினி
புளியடி புளியடி

திசைகளையிழந்த நாம்
திரும்புவோம் என்பதும்
புளியடி புளியடி
என்றுதொடங்கி கைவிட்ட மண்ணை கண்டடையோம் இனி என்று ஒரு புலம்பெயர்ந்த தமிழனின் ஏக்கங்களை அவன் மன உணர்வுகளை இதைவிட இலகுவாகவும் உண்மையாகவும் சிறு வயதில் நாங்கள் விழையாடுகின்ற சாதாரண விழையாட்டின் உவமையுடன் எழுதியிருந்ததை நினைத்த வியந்து போனேன்.சிறு வயதில் ஒருவர் கையில் ஒருபிடி மண்ணை குடுத்து அதில் ஒரு குச்சியை நட்டு மற்றவர் அவரின் கண்ணை பொத்தியபடி எவடம் எவடம் என கேட்டபடி அவரை வேறு இடத்திற்கு அழைத்து செல்ல சுற்றியிருக்கும் மற்றவர்களும் கண்மூடபட்டவரும் புளியடி புளியடி எனகத்துவார்கள். எங்காவது ஓரிடத்தில் அந்த கண்மூடபட்டவரை அந்த கைப்பிடி மண்ணை போட வைத்து மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே அவரை கொண்டு வந்து விட்டு கண்களை அவிழ்த்து விடுவார்கள். அவர் அந்த பிடி மண்ணை தேடிப்பிடிக்கவேண்டும் . தேடிப்பிடித்தால் தான் அவர் வெற்றியாளர்.ஆனால் அந்த மண்ணை இன்னமும் தேடிபிடிக்காத அகதிகளாகவே நாம் இன்னமும் அலைந்து திரிகின்றோம்.


அதேபோலவே இன்னொரு கவிதையிலும் புலம் பெயர் தமிழனின் நிலையை அழகாக அப்புத்தகத்தில் ஆணியடிக்கிறார்.
ஊரின்றி ஒதுக்கப் பட்டவர்கள்
ஊரைவிட்டு தப்பி போனவர்கள்
தன்னுர் இன்றி வேறூர் போனவர்கள்
அடைக்கலம் புகுந்த ஊரில் நின்று
ஆர்ப்பரித்தனர்
யாதும் ஊரே யாவரும் கேளீர்
ஊர்களெல்லாம் உள்ளுர நகைத்து கொண்டன
என்று தம்ஊரை தேசத்தை மறந்து விட்டு புலம் பெயர் தேசங்களையெ தம் ஊராக நாடாக நினைத்து தம்பட்டம் அடிப்பவர் தலையில் ஓங்கி ஒரு குட்டு என்று கூட சொல்லலாம்.

அடுத்தபடியாக இப்புத்தகத்தில் வாசு தேவன் வேறு மொழிகளில் வருகின்ற இலக்கியங்களினதும் படைப்பாளிகளினதும் கற்பனை பாத்திரங்களை தனது கவிதைகளிலும் பாவித்திருப்பதால் . அந்த பாத்திரங்கள் அல்லது அந்த படைப்பாளிகள் பற்றிய சிறு விழக்கங்களையும் அந்தந்த கவிதைகளின் கீழ் விபரித்திருந்தால் மற்றை மொழி இலக்கியங்களையொ படைப்புகளையொ அறியாத எம்மவர்களிற்கு இவரின் கவிதைகளை இன்னமும் இலகுவாய் புரிந்து கொள்ள உதவியாய் இருந்திருக்கும் உதாரணத்திற்கு. பதினேழுவயதாயிருந்தவேளை
ஷரத்தூசா தனது வீட்டையும்
அருகிருந்த வண்ணான் குளத்தையும்
வாற் பேத்தைகளையும் துறந்து தூரத்து
தலை நகரமொன்றிற்கு புறப்பட்டான்


என்கிற கவிதையில் தன்னை `ஷரத்தூசா என்கிற பாரசீக நாடோடி பாத்திரத்துடன் ஒப்பிட்டவர் ஷரத்தூசா என்பது யார் ?? என்ன என்றும் கோடேபோன்ற கற்பனை பாத்திரங்களிற்கும் சில விழக்கங்களை அளித்திருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும். இந்த கவிதையில்தான் வருகின்ற வண்ணான் குளம் என்கிற ஒரு குளத்தின் காரண பெயரை வாசுதேவன் பயன்படுத்தியிருந்தமைக்கு சோபா சத்தியின் சத்தியகடதாசி (மொட்டை கடதாசி)யில் அவரது நண்பன் சுகனின் விமர்சனத்தில் புகலிடத்தில் புலவர்களிடம் விஞ்சி நிப்பது கவிமனமா?? சாதிமனமா?? என்று வழைமை போல புலம்பி தள்ளியிருந்ததையும் படிக்க நேர்ந்தது. இதில் மொத்தமாக புத்தகத்தை பற்றி விமர்சித்து விட்டு அதில் அந்த கவிதையையும் சுட்டி காட்டியிருந்தால் அதனை விமர்சனமாக ஏற்றுகொண்டிருக்கலாம் ஆனால் அந்த கவிதையில் வருகின்ற ஒரு வசனத்தை மட்டும் விமர்சித்து தள்ளியிருப்பதால் அது சுகனின் விமர்சன பார்வை அல்ல வழைமை போல விசமப்பார்வையே என்று புரிகிறது. பலகாலமாக புழக்கத்தில் இருந்து வரும் ஒருபெயரை ஒரு கவிதை வரிகளிலேயெ வாசு தேவனால் மாற்றிவிட முடியாது. வ" க்கு பதிலாக க" வையோ ம" வையோ போட்டு எழுதினால் யாருக்கு புரியும்???முடிந்தால் சுகன் போய் அந்த குளத்தின் பெரை மாற்றியமைத்து விட்டு வந்து இந்த விமர்சனத்தை எழுதினால் அதில் நியாயம் உண்டு.

இதை போன்ற விமர்சகர்களிற்கும் இறுதியில் பதில் சொல்லி போகிறார் எனக்கு தெரியும்
யாரும் எதிர்பாராத
ஒருகணத்தில்
எந்த றாடருக்கும்
அகப்படாத
ஒருபுனைவு வெளியில்
நான் உடைந்து
நொருங்கி
வீழ்ந்தபின்னர்
நீங்கள் எல்லோருமாக
சேர்ந்து
எனது கறுப்பு
பெட்டிகளை
தேடுவீர்கள்

அராலி வெளியின்
தாளம் பூ பற்றைக்குள்
அவற்றை நான்
கழற்றி எறிந்து
பல வருடங்களாகி விட்டன
என்பதை இப்போதே
சொல்லி விடுகிறேன்

நேரத்தை
விரயம் செய்யாது
பாதையை பார்த்து
பயணத்தை தொடருங்கள்............

12:47 PM, Posted by sathiri, One Comment

சி. புஸ்பராசாவின் ஈழ போராட்டத்தில் எனது (பொய்) சாட்சியம் பாகம் 2

இந்தவாரம் தமிழ் மாணவர் பேரவை மற்றும் தமிழ் இளைஞர் பேரவையின் தோற்றம் பற்றியும் அவைகளின் நடவடிக்கைகள் பற்றியும் சிலவற்றை பார்க்கலாம். இங்கு தனது புத்தகத்தில் தானும் தான் சார்ந்த சிலரும் 1973ஆம் ஆண்டு தொடக்கிய தமிழ் இளைஞர் பேரவையே முதன் முதல் ஈழவிடுதலையை வென்றெடுக்க ஆயுதப் போராட்டத்தை அறிமுகப் படுத்தியதாக எழுதுகிறார் ஆனால் உண்மையில் அதற்கு முதலே 1970ம் ஆண்டு கார்த்திகை மாதம் 13ஆம் திகதி அந்தக் காலத்தில் யாழ்ப்பாணநகரத்தில் மசால் வடைக்குப் பெயர் போன மலயன் கபே என்கிற உணவு விடுதியின் மேல் மாடியில் உரும்பிராயை சேர்ந்த சத்திய சீலனால் அப்போது இலங்கையரசிற்கு எதிரான தீவிரவாத போக்கு கொண்ட சில இளைஞர்களை ஒன்று சேர்த்து ஒரு கூட்டம் கூட்டபடுகிறது அந்த கூட்டத்தில் இருந்தவர்கள் 1.திரு பொன். சிவகுமாரன்(உரும்பிராய்). 2.முத்துகுவார சுவாமி 3. அரியரட்ணம் ஏழாலை 4.வில்வராயா (நல்லூர்) 5 இலங்கை மன்னன் 6. மகா உத்தமன் (யாழ்.சென்யோன்ஸ் கல்லூரி மாணவன்) 7. சிவராசா(கல்வியங்காடு) 8. தவராசா(இவர்தான் இன்று ஈ.பி.டி.பி யின் முக்கிய உறுப்பினராக உள்ளவர்.).9.சேயோன் (சென்பக்றிஸ் கல்லுரி மாணவன்)10. ஆனந்தன் (சென்யோன்ஸ் மாணவன்) 11. ஞானம் அண்ணா(மண்டைதீவு .)ஆகியோரோடு இன்னும் சிலருடனும் கிட்டத்தட்ட பதினைந்து பேரளவில் அந்த கூட்டத்தில் சமூகமளித்திருந்தனர்.

இதில் ஞானம் அண்ணா என்பர் சிறீலங்கா காவல் துறையில் கடைமையாற்றியவர் இலங்கையரசின் சிங்களம் மட்டும் என்கிற சட்டத்தால் சிங்களம் படிக்க முடியாது என தனது வேலையை உதறி எறிந்து விட்டு யாழ்நகரில் உள்ள ராணி திரையரங்கில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த இளைஞர்களின் கூட்டத்திற்கும் வேறு பல திட்டங்களிற்கும் அவர்களிற்கு ஒர் உந்து சக்தியாகவும் ஊக்கம் அழிப்பவராகவும் செயற்பட்டு வந்தவர் என்பதும் குறிப்பிட வேண்டும். இந்தக் கூட்டத்தில் அந்த இளைஞர்களால் 1970ஆம் ஆண்டு இலங்கையரசின் கல்வியமைச்சர் பதியுதீன் முகமது அவர்களால் கொண்டுவரப்பட்ட கல்வி தரப்படுத்துதல் சட்டம் மற்றும் தமிழர்களை ஒடுக்குவதற்காக சிங்கள ஆட்சியாளர்களின் பல்வேறு சட்டங்களை எதிர்த்தும் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரிகளை எதிர்க்கவும் தமிழர் மத்தியில் ஒரு அமைப்பு தேவை என சத்தியசீலனால் முன்மொழியப்பட்டது.

அத்துடன் இலங்கையரசிற்கு தமிழர் மற்றும் தமிழ் மாணவர்களின் எதிர்ப்பைக் காட்டுவதற்காக மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றை நடத்த தீர்மானிக்கப்பட்டு அதற்காக வடக்கிலுள்ள அத்தனை பாடசாலை உயர் வகுப்பு மாணவர்கள் மற்றும் மாணவத்லைவர்களை அணுகி அந்த அரச எதிர்ப்பு பேரணிக்கு ஆதரவு திரட்டுவது என தீர்மானிக்கப் படுகிறது .அந்த தீர்மானத்தின் படியே அங்கிருந்தவர்கள் வடக்கிலுள்ள அத்தனை பாடசாலைகளிற்கும் சென்று மாணவர்களை சத்தித்து விழக்கம் கொடுக்கப்டுகிறது மீண்டும் அதே மாதம் 17ந் திகதி அதே இடத்தில் வடகிழக்கின் பல்வேறுபட்ட இடங்களிலில் இருந்தும் வந்திருந்த சுமார் நூற்றியம்பது இளைஞர்கள் மற்றும் உயர் வகுப்பு மாணவர்களை ஒன்றிணைத்துத் தமிழ் மாணவர் பேரவை தலைவர் செயலாளர் பொருளாளர் என்று எவரிற்கும் எவ்வித பதவிகளுமற்ற ஒரு அமைப்பாகவும் அந்த அமைப்பின் அமைப்பாளர் என்கிற ரீதியில் சத்தியசிலன் அவர்கள் இருப்பார் எனவும் முடிவுகள் எடுக்கபட்டது (முன்னைய கட்டுரையில் இந்த அமைப்பின் தலைவர் என்று நான் குறிப்பிட்டிருந்தேன் பின்னர் அது சத்தியசீலன் அவர்களால் தலைவர் என்கிற பதவி இல்லை அமைப்பாளர் மட்டுமே என்று சுட்டிக்காட்டப்பட்டது) சத்தியசீலன் அவர்களால் தமிழ் மாணவர் பேரவை என்று அந்த அமைப்பிற்கு பெயர் சூட்டப்பட்டு இனி வருங்காலங்களில் அந்த அமைப்பின் செயல்த் திட்டங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்திலேயே தமிழ் மக்கள் இனியும் சிங்கள ஆட்சியாளர்களின் கீழ் வாழ முடியாது என்றும் தமிழர்கள் ஒரு தனியரைசை அமைக்க வேண்டிய கட்டாயத்தை வலியுறுத்தி அந்த தனியரசை அமைக்க வன்முறையிலான ஆயுதப் போராட்டமே ஒரேயொரு வழியென தீர்மானம் எடுக்கப்பட்டு அதற்கான ஆரம்பக் கட்ட வேலைகளான மாணவர்கள் மற்றும் பொது மக்களிற்கு தமிழ் தனியரசு பற்றிய விளக்கங்களையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த அங்கிருந்தவர்கள் பகுதி பகுதியாகப் பிரிக்கப் பட்டு தமிழ் பிரதேசத்தின் அனைத்து கிராமங்களிற்கும் மற்றும் அனைத்து பாடசாலைகளிற்கும் செல்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இந்த இரண்டு கூட்டங்களிலுமே புஸ்பராசா அவர்கள் இருந்திருக்கவில்லை என்பதும் இங்கு கவனிக்கப்படவேண்டும். அவர்கள் திட்டப்படி கார்த்திகை மாதம் 24ந்திகதி மிக குறுகிய காலத்திலேயெ ஒழுங்கு செய்யப்பட்டாலும் வடக்கின் அனைத்து பாடசாலை மாணவ மாணவியர் மற்றும் பொது மக்கள் என எதிர்பார்த்ததற்கும் மேலாக பல்லாயிரக்கணக்காணவர்கள் பங்கு பற்றி தங்கள் எதிர்ப்பை இலங்கை அரசிற்கு காட்டினர்.

இலங்கையில் முதலாவது மிகப்பெரும் தமிழ் மாணவர்களின் எழுச்சி என்று இந்த ஊர்வலத்தை சொல்லலாம்.இறுதியாக யாழ் முற்றவெளியில் நடந்த பொது கூட்டத்துடன் இந்த ஊர்வலம் நிறைவு பெற்றது. இந்த மாணவர் பேரவையின் தோற்றமும் அதன் திடீர் வளர்ச்சி பெருமளவான மாணவர்கள் மற்றும் பொது மக்களிடையே அதன் பிரச்சாரமும் செல்வாக்கும் அதிகரித்ததைக் கண்டு அன்றைய தமிழர் விடுதலை கூட்டணியின் தலைமை கொஞ்சம் அதிர்ந்து போனது. இந்த இளைஞர்களின் திடீர் வழர்ச்சி தங்களின் தமிழ் மக்கள் மீதான இருப்பையே கேள்விக்குறியாக்கி பாராளுமன்ற கதிரைகளின் கால்களை முறித்துவிடுமோ என்று பயந்தனர் http://www.orupaper.com/issue50/pages_K__Sec3_32.pdf

9:44 AM, Posted by sathiri, No Comment

ஈழப் போராட்டத்தில் எனது (பொய்) சாட்சியம்எழுதியவர் சி. புஸ்பராசா அவரது புத்தகம் மற்றும் அவரைப் பற்றிய ஒரு பார்வை

எங்கள் ஈழ மக்களது வரலாற்றில் மிகப்பெரும் ஒரு சாபக்கேடு எங்கள் வரலாறு பற்றி அவ்வப்பொது போதுமான பதிவுகளை யாரும் மேற்கொள்ளவில்லை. அப்படி ஒரு சிலர் தங்கள் தனிப்பட்ட முயற்சியால் பதிந்து விட்டு போன பதிவுகளும் எதிரிகளால் அவ்வப்போது திட்டமிட்டு அழிக்கப் பட்டும் இங்கு புஸ்பராசா போன்றவர்களால் வேண்டுமென்றே திரிக்கப்பட்டும் எழுதப்படும் புனைகதைப் புளுகுகளே வரலாறாக தூக்கி பிடிக்கப்பட்டு தமிழின எதிரிகளின் தாராள விளம்பரத்தால் அவையே காலப் போக்கில் தமிழனின் வரலாறாகத் திட்டமிட்டு மாற்றப்படும் அபாயமும் இருக்கின்றது.

புஸ்பராசாவின் இந்த ஈழ பொராட்டத்தில் "எனது சாட்சியம்" என்கிற புத்தகம் வெளியான போதே அதனை வாங்கிப் படித்த நான் மற்றும் பல நண்பர்களும் இந்த புத்தகத்தில் பல வரலாற்று திரிபுகளும் அதில் ஈழ போராட்டத்தில் ஆரம்பகால மென்முறை (சாத்வீகப் போராட்டம்)போராட்டத்திலிருந்து அதனை வன்முறை போராட்டமாக மாற்றிய ஆயுதப் போராட்டத்தின் தந்தை என்று புஸ்பராசா அவரகள் தன்னை தானே கோடிட்டு காட்ட முயற்ச்சித்துள்ளார் என்பதும் அவரது புத்தகத்தில் தெளிவாக தெரிகின்றது.

அதனால் அந்தப் புத்தகத்தைப் பற்றியும் புஸ்பராசாவைப் பற்றியும் ஒரு விரிவான விளக்கமான ஒரு கட்டுரை எழத வேண்டும் என்று நான் நினைத்தாலும் அவரது அந்தப் புத்தகம் வெளிவந்த ஆரம்பத்தில் தமிழர்கள் மத்தியில் பாரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தாமல் எந்த இணையங்களிலோ அல்லது பத்திரிகைகளிலோ அதை பற்றிய விபர விவாத விளக்கங்களோ பெரிதாக வெளி வராததால் நானும் எனது கட்டரை எழுதும் நோக்கத்தை கை விட்டு விட்டேன் ஆனால் புஸ்பராசாவின் இறுதிக் காலங்களில் இந்திய பிரபல சில தமிழ் பத்திரிகைகளிலான அவரது பேட்டிகள் மற்றும் அய்ரோப்பாவில் சில வானொலி ஒரு தொலைக்காட்சி என்பனவும் அவரது பேட்டிகளை தொடர்ந்து வெளியிட்டதனால் அவரைப் பற்றி தெரிந்திராத பலரும் யார் அந்த புஸ்பராசா? அவர் புத்தகத்தில் என்ன எழதியிருந்தார் என்று அறியப் பலரும் ஆர்வமாக இருந்தார்கள். அவரை பற்றிய விவாதங்களும் கட்டுரைகளும் இணையங்களிலும் பத்திரிகைகளிலும் மாறி மாறி அடிபடத் தொடங்கியது .

ஊரில் இருந்த வயதானவர்களிற்கு இவர் யார்? ஈழ போராட்டத்தில் இவரின் பங்கு என்ன? என்று நன்றாகத் தெரியும் ஆனால் இணையங்களில் உலாவுகின்ற எமது இளைய சமுதாயம் இவரது பேட்டிகளைப் படித்து விட்டு இவர்தான் ஈழப்போராட்டத்தின் தந்தையா? என்கிற ஒரு வித குழப்பத்தில் ஆழ்ந்து போயுள்ளனர். அதைவிட இந்திய பிரபல பத்திரிகைகளில் அவரது பேட்டி வந்தபடியால் உண்மையாகத்தான் இருக்கும் என்கிற ஒரு எண்ணம் இவரைத் தெரியாத பலருக்கு ஏற்பட்டது . இந்த விடயத்தில் புஸ்பராசாவும் அவரை இயக்கியவர்களும் அவர்களது நோக்கத்தில் ஓரளவு வெற்றி கண்டனர் என்பது உண்மைதான்.

"ஈழப் போராட்டத்தில் பல வரலாற்றுத தவறுகள் இருக்கின்றன விரும்பியவர்கள் எல்லாம் விரும்பிய படி விரும்பியவர்களிற்காக வரலாறு எழுதப்பட்டு விட்டது"என்று தனது புத்தகத்தின் முன்னுரையில் 15 வது பக்கத்தில் கூறிக் கொண்டு தானே தனக்கு விரும்பியதை விரும்பியபடி வரலாறாக எழுதிவிட்டு போயிருக்கிறார். எனவேதான் புஸ்பராசா அவர்கள் இறந்து விட்ட நிலையில் மீண்டும் அவரது புத்தகத்தின் மீதான எனது பார்வைக் கட்டுரையை எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்காக ஆரம்பகால ஆயுதப் போராட்டத்திலிருந்து இன்று தனிப்பட்ட வாழ்க்கைக்குள் இருக்கும் பலர் மற்றும் புஸ்பராசா அவர்கள் தனது புத்தகத்தில் கூறியது போல ஈழ ஆயுதப் போராட்டத்தில் ஆரம்பத்தில் முக்கிய பங்கு வகித்த இளைஞர்கள் பலரும் இருந்த அமைப்பான தமிழ் மாணவர் பேரவையின் தலைவராயிருந்த யாழ் உரும்பிராயைச் சேர்ந்த சத்தியசீலன் ஆகியோருடனும் தொடர்பு கொண்டு தகவல்களைத் திரட்டி மற்றும் எனக்கும் தனிப்பட முறையில் புஸ்பராசா அவர்கள் பற்றித் தெரிந்த தகவல்கைளையும் தருகிறேன்.

புஸ்பராசா அவர்கள் இளமைக் காலத்தில் அவரது பிறந்த ஊரான மயிலிட்டியில் தமிழரசுக்கட்சியின் பிரமுகராக இருந்த சிவனடியான் என்பவருடன் இணைந்து மயிலிட்டி சனசமூகநிலைய இளைஞர்களுடன் தமிழரசுக் கட்சிசார்பாக வேலைகள் செய்யத் தொடங்கினார். இதுதான் இவரது ஆரம்ப அரசியலுடனான தொடர்பு.அந்த கட்சி சார்பாக நடக்கும் கூட்டங்களிற்கு ஒழங்கு செய்தல். அன்று சிறீலங்கா அரசு கொண்டு வந்த தமழருக்கு எதிரான சட்டங்களை எதிர்த்து தமிழரசு கட்சி நடாத்திய ஆர்ப்பாட்டங்கள் கூட்டங்கள் என்பவற்றில் பங்கு கொண்டார். அதனால் அந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டவர்களை காவல் துறை வந்து அள்ளிக் கொண்டு போகும். அதில் இவரும் பலமுறை காவலில் வைக்கபட்டிருந்தார் என்பதும் உண்மை. இவரைப் போல அன்று ஏன் இன்றும் சிறிலங்கா அரசால் பொராட்டத்திற்கு ஆதரவானவர்களையும் சந்தேகத்தின் பெயரிலும் பல நூற்று கணக்கில் தமிழர்கள் சிறைகளில் வாடினார்கள் வாடிக்கொண்டும் இருக்கின்றார்கள். அதே போல புஸ்பராசா சிறையில் இருந்த காலங்களில் ஆயதமேந்தி போராட புறப்பட்ட வேறு பல இளைஞர்களும் இதே காலகட்டத்தில் பிடிபட்டு இவருடன் இருந்த காரணத்தால் புஸ்பராசாவிற்கும் அவர்களுடனான தொடர்புகள் ஏற்படக் காரணமாய் இருந்தது.

அதைவிட சிறையில் இருப்பவர்கள் தங்கள் நேரத்தை போக்க தங்கள் கவலைகள் பிரச்சனைகள் எல்லாவற்றையுமே மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வது வழமை. அப்படி சிறையில் வாடிய ஆரம்பகால ஆயுதமேந்திய இளைஞர்கள் பலர் இன்று உயிருடன் இல்லை இருக்கும் ஒரு சிலரும் தங்கள் குடும்ப வாழ்வில் மூழ்கிப் போய் பெரிதாக எந்தவித பதிவுகளையும் எழுதாததினால் புஸ்பராசா அப்படி அவர்கள் பகிர்ந்த கொண்ட கருத்தக்கள் சம்பவங்களை எல்லாம் சேர்த்து தன்னிடமிருந்த எழுத்துத் திறைமையினால் விடிந்து கோழிகூவுவதற்கு முதலே நாங்கள் எதிரியை தேடி ஆயுதங்களுடன் பறப்பட்டு விடுவோம் என்று தனது வாழ் நாளில் துப்பாக்கியால் ஒரு கோழியைக் கூட சுட்டிருக்காத இவர் தனது புத்தகத்தில் எங்களிற்கு பெரிய பூமாலையொன்றை சுத்துகிறார். எனவே மீதி விபரங்களை தொடர்ந்தும் படிப்பதற்கு . அடுத்த பேப்பருக்கு காத்திருங்கள்.
தொடரும்....
http://www.orupaper.com/issue48/pages_K__30.pdf

நிழலாடும் நினைவுகள்..!

1:20 PM, Posted by sathiri, One Comment

போனவாரம் எனது பாடசாலை நண்பனொருவன் இங்கிலாந்திலிருந்து என்னிடம் வந்திருந்தான். அப்போது வழமை போல எங்கள் பாடசாலைக் காலங்கள் பழைய விடயங்கள் என்று கதைத்துக் கொண்டிருந்த போது அவன் என்னிடம் கேட்டான்." டேய் உனக்கு யாழ்தேவி றைவர் கந்தையாவை ஞாபகம் இருக்கா ??" என்றான் எனக்கு உடனேயே ஞாபகம் வந்தது காரணம் எங்கள் பாடசாலை நாட்களின் சில சம்பவங்களை எப்படி வாழ் நாள் மழுதும் மறக்க முடியாதோ அப்படியே எனக்கு அந்த யாழ்தேவி றைவர் கந்தையாவும்.

மானிப்பாய் இந்துவில் எண்பதுகளில் படித்தவர்களிற்கும் மற்றும் அந்த பகுதிகளில் வாழ்ந்தவர்களிற்கும் யாழ்தேவி கந்தையா என்றால் தெரியாமல் இருக்க முடியாது. ஆனால் நீங்கள் நினைப்பது போல அவர் யாழ்தேவி என்கிற புகைவண்டி ஓட்டுனராக இருக்கவில்லை. அவர் சாதாரண மாட்டு வண்டி ஓட்டுனர்தான். மானிப்பாய் இந்துவின் முன்னால் நிக்கும் பெரிய மலை வேப்ப மரத்தடி தான் அவரது மாட்டு வண்டித் தரிப்பிடம். நாங்கள் பாடசாலை போகின்ற நேரமே 8 மணிக்கெல்லாம் அங்கு வந்து விடுவார். வந்து மாடுகளை அவிட்டு விட்டு வண்டிலின் கீழே கட்டபட்டிருக்கும் சாக்கிலிருந்து வைக்கோலை எடுத்து மாடுகளிற்கு போட்டுவிட்டு யாராவது சாமான்கள் பொருட்கள் ஏத்த சவாரிக்கு வருவார்களா என காத்திருப்பதுதான் அவரது வேலை.

அவரிற்கு அவரது வண்டிலை, வண்டில் என்று யாரும் சொல்லக் கூடாது யாழ்தேவி என்றுதான் சொல்லவேண்டும். அப்போ யாராவது தெரியாதவர்கள் அவரிடம் அய்யா வாடைகைக்கு வண்டில் வருமா?? என்று கேட்டு விட்டால் சரி கந்தையாக்கு கோபம் பொத்துக் கொண்டு வரும் வண்டில் என்று கேட்க கூடாது யாழ்தேவி வருமா?? என்று தான் கேட்க வேண்டும் . யாழ்தேவி வருமா? என்று கேட்டால் அவர் சிரித்த படியே சந்தோசமாக ஓம் ஓம் வாறன் எண்டபடி போவார். காரணம் கந்தையாவுக்கு யாழ்தேவி புகையிரதத்தை விட தனது வண்டில் மாடுகள் வேகமாக ஓடும் என்றொரு அசைக்க முடியாத நம்பிக்கை.

அதற்காகத் தனது வண்டிலும் யாழ்தேவி புகையிரதமும் அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் வரை போட்டிக்கு ஓடி தனது வண்டில்தான் முதலாவதாக யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தது என்று அடிக்கடி மற்றவர்களிற்கு வண்டிலும் விடுவார். அதைவிட காசு கிடைக்கிறது என்பதற்காகத் தனது மாடுகளை போட்டு வதைக்கவும் மாட்டார். ஒரு நாளைக்கு ஓரிரு சவாரி கிடைத்தால் போதும். அதற்கு பிறகு யார் வந்து கேட்டாலும் போக மாட்டார்.

மிகுதி நேரத்தில்அதில் வருபவர்கள் தெரிந்தவர்களிடம் அன்றைய காலகட்டத்தில் அதிகமாக பேசப் பட்ட பாலஸ்தீன போராட்டத்திலிருந்து வியட்னாம் கியூபா என்றும் அமெரிக்கா பொருளாதரத்திலிருந்து ரஸ்யா பொதுவுடைமை இந்தியா ஈழ தமிழரை காப்பாற்ற வருமா? என்ற உலக அரசியல் அனைத்தையும் அலசி ஆராய்வார். ஆனால் கந்தையாவிற்கு இந்திய பிரதமர் இந்திரா காந்தி ஈழத்திற்கு இந்திய இராணுவத்தை அனுப்பி ஈழத்தை பிரித்து தரும் என்று அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார்.

அவரது அரசியல் ஆய்வில் நாங்கள் சிலரும் பொழுபோக்காக பாடசாலை இடைவேளைகளின் பொது பங்கு பற்றுவதண்டு. அப்போ அங்கு ஈழ விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களும் வருவார்கள் அவர்களைக் கந்தையாவிற்கு தெரியும் . அவர்களிடம் கந்தையா சொல்வார் தம்பியவை நீங்களடா சின்ன பெடியள் உங்களாலை இலங்கை அரசோடை ஒண்டும் செய்ய ஏலாது பாருங்கோ அம்மா இந்திரா ஆமியை அனுப்பி எங்களை காப்பாத்துவா என்று அடித்து சொல்வதோடு. பேசாமல் நீங்கள் படிக்கிற வேலையைப் பாருங்கோ என்று விட்டு எங்களிற்கும் பெடியள் நீங்களும் இவங்களோடை சேந்து திரியாமல் படிக்கிற அலுவலைப் பாருங்கோ எண்டு புத்தி மதியும் சொல்வார்.

யார் போனாலும் அங்கு சைக்கிள் திருத்தும் கடை வைத்திருந்தவர் பாவம் சைக்கிள் டியூப்பை தண்ணி வாழிக்குள் அமத்தி எங்காவது ஓட்டை இருக்கிறதா எனத் தேடியபடி கந்தையாவின் கதையை கேட்டே தான் ஆக வேண்டும். மதியமானதும் மாடுகளிற்கு சாப்பாடு போட்டுத் தண்ணி வைத்து விட்டு அந்த சைக்கிள் கடைகாரரிடம் யாருடையதாவது சைக்கிள் நின்றால் அல்லது எங்கள் யாரிடமாவது ஒரு சைக்கிளை வாங்கி கொண்டு மானிப்பாய் எழுமுள்ளியிலுள்ள கள்ளு தவறணையில் போய் ஒரு போத்தல் அடித்து விட்டு அவரது வீட்டிற்கு போய் சாப்பிட்டு விட்டு வந்து வண்டிலில் படுத்து ஒரு குட்டி தூக்கம். பின்னேரமளவில் ஏதாவது சவாரி கிடைத்தால் சரி இல்லாவிடில் மாலை 6 மணியளவில் மாடுகளை வண்டிலில் பூட்டிவிட்டு "ஏய்...." என்பார் மாடுகளிற்கு தெரியும் எங்கு போவது என்று அவை எழுமுள்ளி தவறணையை நோக்கி போய் கொண்டிருக்கும் இதுதான் யாழ்தேவி கந்தையாவின் அன்றாட நிகழ்ச்சிகள்.

இப்படி இருந்நத காலகட்டத்தில் இந்திராகாந்தி கொல்லப்பட்ட செய்தி கேள்விப்பட்டதும் அவரில் நம்பிக்கை வைத்திருந்த மற்றைய ,ஈழத் தமிழர்களை போலத்தான் கந்தையாவும் இடிந்து போனார் இந்திரா காந்திக்கு அஞ்சலி செலுத்து முகமாக நாங்கள் மானிப்பாய் இந்து கல்லூரி சந்தியில் நினைவாலயம் அமைத்து அவரது ஒரு பெரிய படமும் வைத்து வாழை தோரணம் கட்டிகொண்டிருந்தோம். அப்போ கந்தையாவும் எங்களிற்கு உதவியாய் தெரிந்த வீடுகளில் போய் வாழைமரம் தென்னோலை என்று வாங்கித் தனது வண்டிலில் கொண்டு வந்து கட்டி விட்டு தனது வண்டிலிலும் நாலு பக்கமம் நாலு குட்டிவழையும் கட்டி தோரணமும் கட்டி விட்டு என்னிடம் வந்து தம்பி எனக்கு இந்திரா அம்மான்ரை இரண்டு படம் தாடா என்ரை யாழ்தேவிலை இரண்டு பக்கமும் ஒட்ட வேண்டும் என்றார்.

நானும் படத்தை கொடுக்க அதனை வண்டிலில் ஒட்டியவர் அதனை கொஞ்ச நெரம் பாத்து விட்டு. தம்பியவை நான் நினைக்கிறன் உவங்கள் சிங்களவரும் சேந்துதான் ஏதோ சதி பண்ணி அம்மாவை கொண்டிட்டாங்கள்.இனி ஆர் வந்து எங்களை காப்பாத்த போறாங்களோ?? எண்டவர் ஏனடா தம்பியவை வேறை ஏதும் நாடுகள் எங்களுக்கு உதவி செய்யாதோ ?? என்று உலக அரசியலையே அலசும் கந்தையா அப்பாவியாக எங்களிடம் கேட்டார். மதியமானதும் என்னிடம் தம்பி உன்ரை சைக்கிளை ஒருக்கா தாடா எண்டார். எனக்கு தெரியும் எங்கு போகப் போகிறார் என்று எனவே அந்தா நிக்குது எடுத்து கொண்டு போங்கோ எண்டன் .

சைக்கிளை ஓடிக்கொண்டு போன கந்தையா ஒரு மணித்தியாலத்தாலை அதை உருட்டிக்கொண்டு சற்று தள்ளாடிய நடையில் வந்து கொண்டிருந்தார். பார்த்தபோதே விளங்கியது அன்று கொஞ்சம் கூடுதலா அடிச்சிட்டார் எண்டு. வந்தவர் சைக்கிளை விட்டு விடடு அங்கிருந்த இந்திராவின் படத்தின் முன்னால் போய் நிண்டு எங்களையெல்லாம் தவிக்க விட்டிட்டு போயிட்டியே அம்மா என்று ஒரு குழந்தையை போல விக்கி விக்கி அழ தொடங்கி விட்டார். அவரை அன்று சமாதானம் செய்து அனுப்பி வைக்கவே எங்களிற்குப் பெரும் பாடாய் போய்விட்டது.

அந்த கால கட்டங்களில் நானும் பாடசாலையை விட்டு வெளியேறி விட்டதால் எங்காவது எப்பவாது வீதிகளில் சில சமயம் கந்தையாவை கண்டால் கந்தையாண்ணை எப்பிடி இருக்கிறியள் என்பேன் அவரும் ஓமடா தம்பி ஓம் என்ன யுனிவசிற்றி முடிச்சிட்டியோ என்பார். காரணம் கந்தையாவிற்கு மானிப்பாய் இந்துவில் இருந்து யார் வெளியேறினாலும் அவர் நேராக அடுத்தது யாழ் பல்கலை கழகம்தான் போகிறார்கள் என்கிற நினைப்பு.

காலங்களும் நகர இந்திய இலங்கை ஒப்பந்த கால கட்டம் வந்தது இந்திய அரசின் அதிகாரிகளும் இராணுவமும் யாழ் வந்தபோது அவர்களை மக்கள் வீதி வீதியாக மாலை போட்டு வரவேற்றனர். அப்போது மானிப்பாய் சந்தியில் நடந்த வரவேற்பில் கந்தையாவும் சனங்களிற்கு மத்தியில் மண்டியடித்து கொண்டு போய் அவர்களிற்கு ஒரு மாலையை போட்டு விட்டு" இந்தியா வாழ்க இந்திரா மகன் வாழ்க" என்று கையை உயர்த்தி கத்தி விட்டு தூரத்தில் அந்தோனியார் கோயிலடியில் நின்று இவற்றை புதினம் பார்த்துகொண்டு நின்ற எங்களிடம் வந்து . பாத்தியளா இந்த கந்தையா சொன்னது தான் நடந்தது இந்தியனாமி வந்திட்டிது இனி சிங்களவன் வேணுமெண்டால் புடுங்கி பாக்கட்டும் அசைக்க ஏலாது எங்களை எண்டு சொல்லி விட்டு எங்களையும் ஏளனமாகப் பார்த்து விட்டு போனார்.

காட்சிகளும் மாறியது இந்தியஇராணுவத்திற்கும் புலிகளிற்கும் மோதல் வெடித்து யாழ்குடாவில் எல்லாப் பக்கமும் ஒரே குண்டு சத்தங்களாய் கேட்டபடி இருந்தது அப்போ ஒரு நாள் மதியமளவில் இதே நண்பன் என்னிடம் வந்து இதே கேள்வியை கேட்டான். டேய் உனக்கு யாழ்தேவி றைவர் கந்தையாவை தெரியும்தானே ?? ஓம் அவரக்கு என்ன என்றேன் . அந்தாள் நேற்றிரவு கள்ளடிச்சிட்டு போயிருக்குது போலை நவாலி றொட்டிலை படுத்திருந்த இந்தியனாமி சுட்டு ஆள் முடிஞ்சுது பாவம் எண்டான். ஒரு கணம் கந்தையா இந்திராவின் படத்திற்கு முன்பு எங்களையெல்லாம் விட்டிட்டு போயிட்டியே அம்மா என்று புலம்பியதும் இந்திய அதிகாரிகளிற்கு மாலை போட்டு விட்டு இந்தியா வாழ்க என்று கத்தியதும் நிழலாய் வந்து போனது. சில கணம் மூடிய என் கண்களில் இருந்து என்னையும் அறியாமல் சில கண்ணீர்த் துளிகள் கந்தையாவிற்காக அந்த மண்ணில் விழுந்தது.