Navigation


RSS : Articles / Comments


படலைக்கு படலை

2:08 AM, Posted by sathiri, 2 Comments









படலைக்கு படலைஒருக்கால் தட்டி பாப்பம்

இந்தவாரம் ஒருபேப்பரில் வெளிவந்தது

படலைக்கு படலை என்கிற தொடர் நகைச்சுவை நாடகம் அதன் 5வது ஆண்டில் தொர்ந்தும் புலத்துவாழ் தமிழர்களின் படலைகளை தட்டஇருக்கின்றது. உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களின் சம்பவங்களை எங்கள் பிரச்சனைகளை எங்களின் கவலைகளை .மகிழ்ச்சிகளை .நிகழ்வுகளை என்று அன்றாட வாழ்வினை எங்கள் வீட்டு கண்ணாடியாய் இருந்து அதனை எங்களிற்கே பிரதிபலித்து அதன் மூலம் எங்களை சிரிக்வும் சிந்திக்கவும் செயற்படவும் வைக்கின்றது.


அதுமட்டுமல்ல ஒரு கற்பனை கதைகளையோ புராண இதிகாச கதைகளையோ நாடமாக்குவதென்றாலே சிரமம் அதற்கென தனிப்பட்ட பலரின் உழைப்பு மிக அவசியமாகின்றது.ஆனால் படைக்கு படலை நாடகம் வெறும் நகைசுவை நடிப்பு என்று நின்று விடாமல் எம்மவர் மத்தியில் இன்னமும் புதைந்து போயிருக்கும் சில சம்பிரதாயங்கள்.சடங்குகள் .சமயவிடயங்கள் என்று எம்மவர்களின் அன்றாட வாழ்வியலில் இன்னமும் படிந்திருக்கும் சில கறைகளை படம்பிடித்து அவற்றை கழுவும் நோக்கத்தையும் கொண்டிருப்பதால். இந்த கலைஞர்கள் அவர்களது வசன. நடிப்பு. படபிடிப்பு.மற்றும் தொழில் நுட்ப பிரச்சனைகளை எதிர்கொள்வதோடு மட்டுமன்றி அதற்கு மேலாக எம்மவர்சிலரின் விசனங்கள். விமர்சனங்களையும் எதிர்கொள்ள வேண்டியவர்களாகின்றனர். ஆனால் அதுவே அவர்களது வெற்றியும் ஆகும்.அதன் வெற்றிக்கு அதுமட்டும் காரணமல்ல.நடிப்பதற்கு அதுவும் திரையில் தோன்றுவதென்றாலே அழகான முகம் அதற்கு மேலும் அரிதாரம் பூசி அலங்கரித்து அடுக்கடுக்காய் வசனங்கள் இடையிடை எதுகைமோனையையும் எடுத்துவிடல் என்று நாடக தமிழில் இல்லாமல். எல்லா சம்பிரதாயங்களையும் உடைத்து.அனைவருக்கும் புரியும்படி அழகான பேச்சுதமிழ்.தமிழே அழகு அதை பேச எதற்கு முகஅழகு என்று தமிழை தமிழாக கதைத்து அரிதாரம் பூசி அன்னியபட்டு போகாமல் அடுத்தவீட்டுஉறவுகள் போனறதொரு உணர்வை ஏற்படுத்தும் அதன் நடிகர்களும் அதன் வெற்றிதான். ஒரு வீட்டில் ஒரு இளம் தம்பதியினரின் குடும்பத்தை பின்னணியாய் வைத்து தொடங்கப்பட்ட இந்த தொடர் காலப்போக்கில் பலரையும் இணைத்து பல குடும்பங்களாக வளர்ந்துஅதன் தேவைக்கேற்ப இன்று வெளிப்புறங்களிலும் படப்பிடிப்பக்களை நடாத்தி வளர்ந்து வருகின்றது. எனவே இந்த தொடர் நடிகர்களிற்கும் மற்றும் அதன் தயாரிப்பாளர் சுதன் ராச்சிற்கும் தொழில் நுட்ப கலைஞர்களிற்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்ளுவேம். அடுத்ததாய் மேலே படலைக்கு படலை பற்றியும் அதன் வெற்றிகள் பற்றியதுமான கருத்துக்கள் ஆனாலும் அதில் சில குறைகளும் இருக்கதானே செய்யும் அவை தேவை கருதி புதிதாக இணைக்கபடும் நடிகளின் நடிப்பில் இன்னம் கொஞசம் கவனமெடுத்து அவர்களை பயிற்றுவித்த பின்னர் நடிக்க வைப்பது நலம் ஏனெனில் அவர்கள் ஒளிப்பதிவு(கமறாவை)கருவியை அடிக்கடி பார்ப்பது அல்லது பார்த்து கதைப்பது இயற்கை தன்மையை குறைத்து கொஞ்சம் உறுத்தலாக உள்ளது. அடுத்ததாக வெளிப்புற படப்பிடிப்புகளின் போது சில நேரம் ஒலி ஒளிப்பதிவு தரம் குறைந்ததாகவே இருக்கின்றது அதற்கான வசதிகள் இன்னமும் இல்லாதிருக்கலாம் ஆனாலும் ஒலிப்பதிவின் தரத்தில் வேறு வழிமுறைகள் மூலம் அதாவது ஒலிவடிவத்தை தனியாக பதிவு செய்து இணைப்பதால் அதன் தரத்தை கூட்டலாம். அதேபோல ஒளி ஒலிப்பதிவு முறையில் இன்னமும் நவீன முறைகளை கையாள்வதன் மூலம் எங்கள் படலையை மினுமினுபாக்கி கொள்ளவேண்டும் என்பதே எங்கள் விருப்பமும். யாரோ படலையிலை தட்டினம் பொறுங்கோ யாரெண்டு பார்த்து விட்டு தொடருகிறேன் நன்றி சாத்திரி

ஒரு றேடியோவில் கடந்த திங்கள் இடம்பெற்ற வட்டமேசை அரசியல் கலந்துரையாடல்.

2:24 AM, Posted by sathiri, No Comment

கேட்க - *வட்டமேசை*

சாத்திரியின்: ஐரோப்பிய அவலம் அங்கம்-5

2:06 AM, Posted by sathiri, No Comment

வந்துவிட்டது சாத்திரியின் ஐரோப்பிய அவலம் அங்கம் - 5

நகைச்சுவை நாடகத் தொடர்.

முட்டாள்தி(த)ன கைதுகள்.

11:59 AM, Posted by sathiri, No Comment

இந்தவார ஒரு பேப்ரிற்காக எழுதியது

முட்டாள்தி(த)ன கைதுகள்.

சித்திரை முதலாம் திகதி உலக முட்டாள்கள் தினம். அன்று ஞாயிற்று கிழைமை காலை எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு மறு முனையின் பாரிசில் உள்ள எனது நண்பனொருவன் என்னிடம் டேய் என்ன நித்திரையா?? பாஞ்சு எல்லாரையும் அள்ளிட்டாங்களாம். என்றான் எனக்கு ஒன்றும் புரியவில்லை யார் பாஞ்சது ?? என்னத்தை அள்ளினது என்றேன். பிரெஞ்சு காவல் துறையினர் ஞாயிறு அதிகாலையளவில் பிரான்சில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்பு குழு மற்றும் தமிழர் புனர்வாழ்வு கழக பணியாளர்கள் 17 பேரை கைது செய்து விட்டார்கள் என்றான். நானும் முதலில் அவன் என்னை முட்டாள் ஆக்ககின்றான் என நினைத்தேன். ஆனால் அவனது பேச்சில் இருந்த பதட்டம் அவன் சொல்வது உண்மையாக இருக்கலாம் என நினைத்து. வேறு அது சம்பந்தப்பட்டவர்கள் யாரிடமாவது கேட்கலாமென நினைத்து சில தொலைபேசி இலக்கங்களை அழுத்தினேன். ஆனால் எவருமே இணைப்பில் வரவில்லை. அன்று மாலை பிரான்சின் ஒரு தொலைக்காட்சி செய்தியிலும் மற்றும் வானொலி செய்தியிலும் தமிழீழ விடுதலை புலிகளிற்கு சட்ட விரோத நிதி சேகரிப்பில் ஈடுபட்ட 17 பேர் கைது செய்யபட்டிருப்பதாகவும் அவர்கள் நிதி சேகரிப்பின் போது பொது மக்களை பலவந்தபடுத்தியதால் கைது செய்யபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்கள்.

அதன் பின்னர் மெல்ல மெல்ல யார் யார் கைது செய்யப்பட்டனர், எங்கெங்கு வைத்து கைது செய்யபட்டனர் என்கிற விபரங்கள் வெளியாக தொடங்கின. ஆட்கள் கைது செய்யப்பட்டது மட்டுமல்லாமல் தங்கள் வருமானத்தில் பெரும்பகுதியை அல்லல்படும் ஈழதமிழர்களிற்காக அனுப்பிவைக்கும் சில வர்த்தக நிலையங்கள் கோவில் என்பனவும் காவல் துறையினரால் சோதனைக்குள்ளாக்கபட்டு அங்கிருந்த ஆவணங்கள் எடுத்து செல்லபட்டது. புலம் பெயர்ந்து வாழும் ஈழ தமிழர்கள் தங்கள் தாய் நாட்டிற்காகவும் அங்கு யுத்தத்தால் உறவுகளை இழந்து போன குழந்தைகள் மற்றும் உறவுகளிற்காக தங்கள் உழைப்பின் ஒரு பகுதியை அனுப்புவதும் அதற்குதவியாக தமிழர் புனர்வாழ்வு கழகமும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவும் உதவுவதும் அவர்களிற்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதுவும் இன்று நேற்றல்ல ஈழத்தமிழன் யுத்தத்தால் புலம்பெயர தொடங்கிய காலந்தொட்டு 20 ஆண்டுகளிற்கு மேலாகவே நடை பெறுகின்ற ஒரு நிகழ்ச்சி.

இது ஒன்றும் இரகசியமல்ல தமிழர்கள் வாழுகின்ற நாடுகளில் உள்ள அரசுகளிற்கும் அந்த நாட்டு புலனாய்யவு துறையினரிற்கும் தெரிந்த விடயங்கள் தான். அதுமட்டுமல்ல ஜரோப்பிய ஒன்றியத்தின் புலிகள் மீதான தடை வந்தவுடன் இப்படியான சில நடவடிக்கைகள் நடக்கும் என பலர் எதிர் பார்த்த போதும் கூட அப்படி எதுவும் பிரான்சில் நடைபெறவில்லை. பின்னர் பணம் கடத்தியதாக பிரான்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் வேலை செய்த சில தமிழர்கள் கைது செய்யபட்ட போதும் இவர்களிற்கும் புலிகளிற்கும் தொடர்பு இருக்குமா? என்கிற விதத்திலும் விசாரணைகள் நடாத்தபட்டு அவைகூட ஆதாரங்கழுடன் நிரூபிக்கப்படாமல் அப்படியே அந்த செய்தியும் அமுங்கி போன நேரத்தில் தான் திடீரென இந்த கைது பிரான்ஸ் வாழ் மக்களிடம் பல கேள்விகள் சந்தேகங்கள் குழப்பம், பயம், கோபம் (ஒரு சிலரிற்கு மகிழ்ச்சி) என்று பலவிதமான உணர்வலைகளையும் ஏற்படுத்தியிருந்தது. காரணம் என்ன?? வேறொன்றும் இல்லை பிரான்சின் உள்நாட்டு அரசியல் தான் காரணமே தவிர வேறொன்றுமில்லை.

பிரான்ஸ் உள்நாட்டு அரசியலிற்கு இவர்கள் கைதினால் என்ன லாபம் இப்படியொரு கேள்வி எழுகிறதா? இருக்கின்றது அதுவும் பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலிற்கு இன்னமும் மூன்று வாரங்களே இருக்கின்ற நிலைமையில் ஆழும் கட்சிக்கு லாபம் இருக்கிறது அதுதான் அவர்கள் போட்ட கணக்கு . தற்சமயம் ஆளும் வலது சாரி கட்சியின் பிரதான வேட்பாளர் அதன் உள்துறை அமைச்சராக இருந்த நிக்கோலா சார்கோசி என்பவர். இவர் அதிரடி அரசியல் நடாத்தி கடும் போக்காளர் என்று பெயரெடுத்தவர் அது மட்டுமல்ல இவரது அதிரடி அரசியலால் ஏற்கனவே பிரான்ஸ் வாழ் ஆபிரிக்க அரேபிய இனங்களின் வெறுப்பை தாராளமாகவே சம்பாதித்து விட்டார். அனால் பிரான்சின் வெளிநாட்டவர் வருகையை கட்டுபடுத்தியவர் என்கிற பெயர் புகழ் இவைகள் பிரான்சின் இன மற்றும் நிற கொள்கை கடும்போக்காளர்கள் மத்தியில் இவரது மதிப்பை உயர்த்தியிருந்தாலும் பொது தேர்தல் கருத்து கணிப்புக்கள் இவரை சிறிது குழப்பியிருக்கலாம். காரணம் சோசலிச கட்சி பெண் வேட்பாளரான செகொலனிற்கு வெற்றி வாய்ப்புக்கள் இருப்பதாக கணிப்புகள் காட்டுகின்றன. செகொலனின் தேர்தல் வாக்குறுதிகளில் பிரான்சின் எதிர்காலம் பற்றிய பொருளாதார கொள்கைகள் தெளிவற்றனவாக இருக்கின்றது என்கிற குற்றசாட்டு இருந்தாலும், பிரெஞ்சு குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்களின் ஆதரவு இவருக்கே இருக்கும் என்பது தெளிவு. ஆழும் கட்சிக்கு ஏற்கனவே பிரான்சில் உள்ள வேவையில்லா திண்டாட்டம் மற்றும் வீடற்றவர்கள் பிரச்சனை என்பற்றுடன் மீண்டும் தேர்தல் காலங்களில் நாட்டின் பாதுகாப்பு பிரச்சனை என்பதும் முக்கியமானதொரு பிரச்சனையாக விவாதிக்கப்படுவது வழமை. எனவே தங்கள் ஆட்சியில் நாட்டின் பாதுகாப்பில் அதிக கவனம் எடுப்பதாக காட்டவேண்டிய நிலை ஆனால் அதற்காக அதர பழசாகிவிட்ட அல்கெய்தா பிரச்சனைகளை புது பூச்சு பூசி காட்ட முடியாது. அதைவிட முஸ்லிம் போராட்ட இயக்கங்களின் செயற்பாடுகளை இழுத்து இன்னமும் அராபிய இனத்தவர்களின் எதிர்ப்பை இன்னமும் தேடிகொள்ளவும் விரும்பாது. எனவேதான் புதிதாக புலி தீவிரவாதம் என்கிற ஒன்றை என்கிற ஒன்றை பிரெஞ்சு மக்களிற்கு திரையிட திட்டம் போடப்பட்டிருக்கலாம். அது மட்டுமல்ல இது பிரெஞ்சு மக்களிற்கும் புதிது எனவே அவர்களும் இதனை பற்றி அறிய ஆர்வம் காட்டுவார்கள்.அது மட்டுமல்ல இந்த நடவடிக்கை மூலம் இங்கு வாழும் ஈழத்தமிழர்களின் எதிர்ப்பை சம்பாதித்தாலும். தேர்தலை பொறுத்தவரை இதனால் எந்த வித பாதிப்பும் வர போவதில்லை.

காரணம் பிரான்சில் ஒரு இலட்சத்தும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் வசித்தாலும் அதில் 80 வீதமானவர்கள் அகதிகளாக ஆனால் அனைத்து சலுகைகளையும் பெற்று இங்கு வாழ உரிமையுடையவர்களாகவே உள்ளனர். இவர்களிற்கு அரச அதிபர் தேர்தலில் வாக்களிக்க உரிமை இல்லை. 20 வீதமானவர்களே நிரந்தர குடியுரிமை பெற்று வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள். ஆனால் நிரந்தர குடியுரிமையை பெற்றவர்கள் தங்கள் ஆங்கில மோகத்தால் அதிகமானவர்கள் இங்கிலாந்திற்கும் கொஞ்சம் கனடாவிற்கும் மீதம் பேர் அவுஸ்ரேலியா என்று சென்று ஆங்கிலம் பேசுகின்ற நாடுகளில் குடிபெயர்ந்துவிட, மீதமாக உள்ளவர்களை கூட்டிப்பார்த்தால் எப்படியும் ஒரு எட்டாயிரம் பேரை தாண்டுமா?? என்பது சந்தேகமே. அவர்களும் குடியுரிமையை எடுத்ததும் நாலு நண்பர்கள் உறவினர்களிற்கு சொல்லி பெருமை பட்டுகொள்வதோடு ஊரில் பிரச்சனை குறைந்த காலத்தில் ஊருக்கும் ஒருக்கா போய் வந்து விடுவதோடு சரி. தேர்தல் காலத்தில் வாக்கு போட ஒரு பத்து பேராவது போவார்களா?? என்றால் அதுவும் சந்தேகமே. அந்த பத்து வாக்குகள் பிரான்ஸ் அரசியலில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்திவிடப் போவதில்லையென்று நன்றாக தெரிந்தே இந்த கைதுகள் அரங்கேறியது. அதே நேரம் நன்கு திட்டமிடப்பட்ட முறையில் முன்னரே ஊடகங்களிற்கும் அழைப்பு விடுத்து அவர்களையும் இந்த நடவடிக்கைக்கு அழைத்து சென்றிருந்தனர். காரணம் அதிலும் விடயம் இருக்கின்றது.

பிரான்சில் ஈழ தமிழர்களின் அனைத்து நடவடிக்கைகளும் பிரெஞ்சு புலனாய்து துறையினரிற்கு அத்துபடி. அதில் சில அவர்களது சொந்த தேடல்கள் மீதம் இங்கும் மானத்தை விற்று உடை வாங்கும் ஒரு சில தமிழர். அவர்களின் கணக்குபடி ஆனையிறவு தளவீழ்ச்சியை அடுத்து மகிழ்ச்சியில் அதை திருவிழாவாக கொண்டாடிய பிரான்ஸ் வாழ் தமிழர்கள் தாங்களாகவே முன்வந்து தாயகத்திற்கான பங்களிப்பை வாரி வழங்கினர். அது போன்றே அண்மையில் கட்டுநாயக்கா விமானபடை தளத்தின் மீதான தாக்குதலும் தமிழர்களால் கொண்டாடப்பட்டது. எனவே இப்பொழுதும் அந்த மகிழ்ச்சியில் பணத்தை வாரி வழங்கியிருப்பார்கள் எனவே இப்பொழுது ஒரு தேடுதலை பரவலாக தமிழர் உதவி நிறுவனங்கள் மீதும் சில வர்த்தக நிலையங்கள் மீதும் நடாத்தினால் பெட்டி பெட்டியாக பணம் கிடைக்கும் அதை வைத்தே மீதி பிரச்சாரத்தை முடித்து விடாமென நினைத்திருப்பார்கள். ஆனால் நடந்ததென்னவோ வேறு. பெட்டி பெட்டியாக ஏற்றியதை தொலை காட்சியில் காட்டினார்கள் ஆனால் அவையெல்லாம் அந்த வியாபார நிலையங்களின் ஆவணங்கள். ஆனாலும் இது சாதாரண விடயமல்ல சில எம்மவர்கள் சொன்னார்கள் இந்த கைதுகள் அநியாயம் அக்கிரமம் என்று. ஆனால் இந்த பேச்சுக்கள் வெறும் இயலாமையே எந்த ஒரு நாட்டிலும் நாம் போய் குடியிருந்து கொண்டு அந்த நாட்டின் சட்டம் சரியில்லை, அது கூடாது என்று வாதாட முடியாது. வாதாடவும் கூடாது முடிந்தவரை எமது பக்க நியாயத்தை எடுத்து கூறலாம்.அதற்கு என்ன செய்யலாம். எமது பக்கதற்திற்கான எமது பக்க நியாயத்தை எடுத்து கூற ஒரு அரசியல் பலத்தை கட்டியெழுப்பவேண்டிய கட்டாய கடைமை எம்முன்னால் உள்ளது .

அது மட்டுமல்ல இந்த கைதுகள் நியாயமற்றவை என்பதை இன்றைய அரசிற்கு தெரிவிக்க வேண்டிய கடமையும் எம் முன்னால் உள்ளது. அது யாரால்முடியும் இன்றைய இளையவரால் முடியும் இளையோர் அமைப்பால் முடியும் அவர்களே இனி அடுத்த கட்டத்தை நகர்த்த வேண்டியராகவுள்ளனர். அது மட்டுமல்ல பிரான்சின் ஏனைய தமிழ் அமைப்புக்கள் ஏன் ஊடகங்கள் கூட உறை பனியில் உள்ளே புகுந்தது போலவே உள்ளனர். வெளியே வருவார்களா??

சாத்திரியின் ஐரோப்பிய அவலம் அங்கம் - 4.

12:34 PM, Posted by sathiri, No Comment

ஐரோப்பிய அவலம் அங்கம் நான்கு கேட்க இங்கே அழுத்துங்கள்.

நிழலாடும் நினைவுகள்

11:47 PM, Posted by sathiri, No Comment



கப்ரன் வாசு (கண்ணாடி வாசு.ஜடியா வாசு)வல்வெட்டிதுறை

1984 ம் ஆண்டு ஒரு கோடைகாலத்தின் மாலை நேரத்தில் யாழ் அராலி வீதி கல்லுண்டாய் வெளியில் ஒருவர் மட்டுமே அமரகூடிய ஒரு சிறிய விமானம் உள்ளே அதனை இயக்க தயாராய் வாசு அமர்ந்திருக்கிறான். அதனருகே மாவீரர்களான லெப்.கேணல்அப்பையா அண்ணை குட்டிசிறி. கப்ரன் பாரத் மேஜர் சுபாஸ் இவர்களுடன் மேலும் பல போராளிகள் நிற்கிறார்கள். வாசு மற்யை போராளிகளை பார்த்து எல்லாம் சரி எல்லாரும் சேர்ந்து வேகமா தள்ளுங்கோ இந்த முறையாவது பிளேன் பறக்கவேணும் என்று சொல்லவும் எல்லா போராளிகளும் சேர்ந்த்து விமானத்தை தள்ள அது வீதியில் உருள ஆரம்பிக்கவும் வாசு மற்றவர்களிடம் இன்னும் இன்னும் வேகமா என்று கத்தியபடி அந்த விமானம் மேலே கிழம்ப வசதியாய் அதன் இறக்கைகளை இயக்குகிறான்.அந்த நேரம் பார்த்து ஒரு போராளி ஏலேலோ அய்லசா என்று பாடவும் விமானத்தை தள்ளிய மற்றறைய போராளிகள் தள்ளுவதை நிறுத்தி விட்டு சிரிக்க ஆரம்பித்து விட்டனர். வாசு அவர்களை பார்த்து கோபமாய் கத்துகிறான் மேலை எழும்பினா காணும் நான் எப்பிடியாவது கோட்டைக்குள்ளை கொண்டு போய் இரண்டு ஆமிகாரன்ரை தலையிலையாவது விழுத்துவமெண்டா இவங்களோடைஒண்டும் செய்ய ஏலாது பகிடியை விட்டிட்டு தள்ளுங்கோடா என்கிறான்.

போராளிகள் தொடர்ந்து விமானத்தை தள்ள விமானம் சில அடிகள் மேலே எழுவதும் கீழே விழுவதுமாய் கடைசியில் அந்த வீதியோரத்தில் நின்ற ஒரு பூவரசு மரத்துடன் மோதி ஒரு பக்க இறக்கை உடைந்து போக வாசு சில சிராய்ப்பு காயங்களுடன் விமானத்தை விட்டு இறங்குகிறான். ஆனாலும் விமானம் செய்கின்ற முயற்சி தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.
வாசு எப்பவுமே தன்னைபற்றியோ தன்னுயுரிரைபற்றியோ கவலைபடாமல் எப்படியாவது எங்கேயாவது எதிரிக்கு இழப்பை ஏற்படுத்துவதை பற்றியே சிந்திப்பவன். அது மட்டுமல்ல கண்ணிவெடிகள் தயாரிப்பது ரவைகட்டுவது(ஆரம்பகாலத்தில் 9 மி.மீ.துப்பாக்கி ரவைகூடுகளை சேகரித்து திரும்ப அவைகளை ரவைகளாக தாயாரிப்பார்கள்) அன்றைய காலகட்டத்தில் புலிகள் இயக்கத்தின் பழுதடைந்த ஆயுதங்கள் அனைத்தையும் திருத்துபவனாகவும் இருந்தான். ஈழத்தில் இருந்த போராட்ட குழுக்களிற்கு இந்தியா அன்று ஆயுதங்கள் வழங்கிய போது புலிகள் இயக்கத்திற்கும் ஒரு தொகுதி ஆயுதங்களை வழங்கியது ஆனால் அவை பெரும்பாலும் ஏன் 80 வீதம் பாவிக்க முடியாத ஆயுதங்களையே கொடுத்திருந்தது.

அவற்றையெல்லாம் வாசு இரவு பகலாக இருந்து முடிந்தவரை திருத்தி போராளிகளிடம் கொடுப்பான். அந்த ஆயுதங்கள் யுத்த களத்தில் சில நெரங்களில் இயங்க மறுக்கும்.யுத்தகளத்தில் ஒரு போராளியின் ஆயுதம் இயங்கா விட்டால் அது எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அனைவரிற்கும் தெரியும். அந்த போராளிகள் வாசுவை திட்டியபடியே அந்த ஆயுதங்களை அவனிடம் கொண்டு போய் கொடுப்பார்கள்.அவன் சிரித்தபடியே என்ன மச்சான் செய்யிறது இந்தியா ஆயுதத்தை தந்த நேரம் அதை இரும்பா தந்திருந்தா நான் அதை உருக்கி ஒரு நல்ல ஆயுதமா செய்து தந்திருப்பன்.ஆனால் என்ன செய்ய அவங்கள் இப்பிடி தந்திட்டாங்கள் நானும் முடிஞ்சவரை திருத்திறன் எனறவாறே மீண்டும் அவற்றை திருத்த தொடங்கிவிடுவான்.அப்போது 1987ம் ஆண்டு தொடக்கத்தில் யாழ் நாவற்குழி இராணுவ முகாம் மீது புலிகள் ஒரு தாக்குதலை நடாத்த திட்டமிட்டனர்.

அந்த இராணுவ முகாமிற்கு தண்ணீர் வெளியில் இருந்து ஒரு பெளசர் முலமே எடுத்து செல்லபடுவது வழைமை எனவே அதே போல ஒரு பெளசரை தயாரித்து அதன் உள்ளே வெடிமருந்தை நிரப்பி அதனை முகாம் உள்ளே அனுப்பி வெடிக்க வைப்பது பின்னர் அது வெடித்ததும் அதிர்ச்சியில் இருக்கும் இராணுவத்தினரை தாக்குவது என்று திட்டம் தீட்டப்பட்டு.அதற்கான அந்த முகாம் மீதான வேவுபார்த்தல் மற்றும் இராணுவ நடமாட்டங்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கும் பொறுப்பு அன்றைய சாவகச்சேரி பொறுப்பாளராக இருந்த கேடில்சிடமும். வெடிமருந்து நிரப்பிய பெளசரை தயாரிக்கும் பொறுப்பு வாசுவிடமும் ஒப்படைக்க பட்டது. அதுவும் எதிரிக்கு எந்தவித சந்தேகமும் வந்து விடாதபடி தண்ணீர் கொண்டு போகின்ற அதேபோன்றதொரு அச்சுஅசலாக இன்னொரு பெளசரை தயாரிக்க வேண்டும்.சிரமமானதும் சவாலானதமான ஒரு பணி ஆனால் வாசு ரஞ்சன் என்கிற ஒரு பொறியியலாளரின் உதவியோடு ஆர்வத்துடன் செயற்பட்டான். அசல் தண்ணி பெளசரில் எங்கெங்கு கறள் பிடித்திருக்கின்றது.

எங்கெங்கு நெளிந்திருன்றது என்று பார்த்து பார்த்து நகலை அசல் போல ஒரு மாதங்களிற்கு மேலாக செய்து முடித்தான்.அது மட்டுமல்ல தண்ணீர் பெளசர் இராணுவ முகாமிற்கு உள்ளே போகும் போது இராணுவத்தினர் பெளசரின் உள்ளெ தண்ணீர் தானா உள்ளது என்று பரிசோதித்து தான்அனுப்புவார்கள்.அதனால் அந்த பெளசரின் மேல் பாதியில் தண்ணீரும் கீழ் பாதியில் வெடிமருந்தும் நிரப்பி தயாரிக்கப்பட்டது.தாக்குதலுக༢r />??கான நாளாக 14.02.87 அன்று மாலை தீர்மானிக்கபட்டது.அந்த தாக்குதலிற்கு பொறுப்பாக அன்றைய யாழ் மாவட்ட தளபதி கிட்டு பொறுப்பேற்றிருந்தார்.அவர் போராளிகளிற்கு அன்று காலை தாக்குதல் பற்றிய விழக்கங்களை அளித்து மாலை 6.30 மணியளவில் முகாமின் உள்ளே அந்த பெளசர் வெடிக்கும் அதை தொடர்ந்து தொலைதொடர்பின் ஊடாககட்டளை வந்ததும் முகாம் மீதான தாக்குதலை தொடங்கும்படி வழியனுப்பி வைத்தார்.

அதன்படி போராளிகள் எல்லோரும் அன்று மாலை 4 மணியளவிலேயே தயாராய் நாவற்குழி முகாம் தாக்குதலிற்காக அவரவர் இடங்களில் நிலையெடுத்து காத்திருந்தனர்.இறுதியாக அந்த பெளசரை வெடிக்க வைப்பதற்காக நேர கணிப்பு பொறியை லெப். கேணல் பொன்னம்மானும் வாசுவும் இணைத்து முடித்திருந்தனர். எல்லா போராளிகளும் தங்களிற்கு தந்தவிடயங்களையும் எதிரியை எப்படியெல்லாம் தாக்கலாம் என்று தங்கள் மனங்களிலேயே ஒத்திகை பார்த்தபடி அந்த வெடி வெடிக்க போகும் 6.30 மணி எப்போவரும் என தங்கள் கை கடிகாரங்களை அடிக்கடி ஒரு பரபரப்புடன் பார்த்து கொண்டிருந்த வேளை 5.30 மணியவில் அந் பகுதியையே அதிர வைக்கும் ஒரு வெடியொசை கேட்டது. எல்லா போராளிகளின் முகங்களிலும் ஒரு வித கேள்வி குறி யுடன் தொலை தொடர்பு கருவி வைத்திரந்தவர்களை பார்த்தனர்.

தொலை தொடர்பில் எல்லோரும் கிட்டுவை அழைத்தபடி இருந்தனர்.அண்ணை என்ன நடந்தது. அங்கை வாசு பென்னம்மான் ஒரதரின்ரை தொடர்பும் கிடைக்கேல்லை என்ன நடந்ததெண்டு தெரியேல்லை எல்லாரும் அப்பியே நில்லுங்கோ நான் இடத்திற்கு போய் பாத்திட்டு உங்களை தொடர்பு கொள்ளுறன்கிட்டுவின் குரல் ஒலித்தது. அரை மணி நெரத்தின் பின்னர் அனைவரையும் தங்கள் முகாம்களிற்கு திரும்பும்படி கிட்டுவின் கட்டளை கிடைத்தது. ஆம் 5.30 மணிக்கே அந்த பெளசர் வெடித்து சிதறிவிட்டது. எப்படி எங்கே தவறு நடந்தது என்று யாருக்கும் தெரியாது காரணம் அதனருகில் நின்றிருந்த பொன்னம்மான் கேடில்ஸ் ரஞ்சன் அகியோருடன் வாசுவும் கந்தக காற்றுடன் கலந்து எங்கள் தேசத்தில் வீசும் காற்றாகி போனான். வாசு மட்டுமல்ல அவனது குடும்பத்தில் அவனது சகோதரன் மேஜர் ஜேம்ஸ். சகோதரி கப்ரன் சுந்தரி ஆகியோரும் எங்கள் மண்ணிற்காய் மாவீரர்களாகி போனார்கள். அவர்களிற்காய் எனது தலை தாழ்த்தி வணக்கத்தை தெரிவித்து கொண்டு நினைவுகளை தொடர்வேன்...

மேலே நான் இணைத்த கட்டுரை சுவிசில் இருந்து வெளியாகும் நிலவரம் பத்திரிகைக்காக எழுதியது அந்த கட்டுரையை எழுதி பத்திரிகைக்கு அனுப்பிய பின்னர் புலிகளின் வான்படை நடாத்திய தாக்குதல் செய்திகள் வெளிவந்தபோது ஒருகணம் புலிகளிற்கு ஒரு வான் படை உருவாக்கும் கனவுகளுடன் அயராது உழைத்த வாசு.அப்பையா அண்ணை .குட்டிசிறி .பாரத். போன்றவர்களுயும் பின்னர் சங்கரண்ணாவும் ஒரு கணம் நினைவில் வந்து போயினர்

வந்துவிட்டது சாத்திரியின் ஐரோப்பிய அவலம் அங்கம் - 3,

1:43 PM, Posted by sathiri, One Comment

ஐரோப்பிய அவலம் நகைச்சுவை நாடகம் அங்கம் 3 கேட்பதற்கு கீழுழ்ழ இணைப்பை அழுத்தவும்.....

ஐரோப்பிய அவலம் அங்கம் - 3

நிழலாடும் நினைவுகள்

10:41 AM, Posted by sathiri, No Comment





லெப்.கேணல் ஜொனி(விக்கினேஸ்வரன்: விஜயகுமார்)
பருத்திதுறை(குட்டலை)

இவர் பேராதனை பல்கலை கழகத்தில் பெளதீக விஞ்ஞான மாணவகாய் கல்வி கற்று கொண்டிருந்த காலத்தில் தன்னை விடுதலை போராட்டத்திற்காய் இணைத்த ஒரு போராளி.இந்தியா விடுதலை புலிகளிற்கும் பயிற்சி வழங்க முன்வந்த போது தலைவர் தொலை தொடர்பு மற்றும் அது சம்பந்தமான தொழில்நுட்ப பயிற்சிகளிற்கு ஜொனியை தெரிவு செய்து அனுப்பிருந்தார்.

அப்போது புலிகளிடம் தொலை தொடர்பு வசதிகள் அவ்வளவாக இல்லாத கால கட்டம் யாராவது மிக நம்பிக்கையான ஒருவர்தான் செய்திகளை காவிசென்று மற்றைய போராளிகளிற்கு தெரிவிப்பது வழைமை அப்படி புலிகளின் ஆரம்பகாலத்தில் இருந்தே பல இரகசிய செய்திகளைதாங்கி எடுத்து செல்பராக இருந்தவர்களில் முக்கியமானவர் ஜெனி.


1984ம் ஆண்டு ஆவணி மாதம் பொலிகண்டி பகுதியில் ஒரு எதிர்பாராத விதமாகமோதல் புலிகளிற்கும் இலங்கை இராணுவத்திற்கும் எற்படுகின்றது இராணுவத்திற்கு துணையாக பருத்தி துறை முகாம் இலங்கை கடற்படையும் இணைந்து கொள்ள அந்த மோல் ஒரு தொடர் சண்டையாக மாறிவிட்டது அது இரண்டாம் நாளும் தொடர்ந்தது அந்த காலகட்டதில் புலிகள் அமைப்பில் இருந்த அனேகமான போராளிகள் அந்த சண்டைநடந்த இடத்திற்கு போய் சேர்ந்திருந்தனர்.அவர் வழைமை போல பொலிகண்டி பகுதியில் சண்டையில் ஈடுபட்டிருந்த போராளிகளிற்கு சில செய்திகளை எடுத்து செல்லவும் அங்கு கள நிலைமைகளை அறிந்து வரவும் பண்டிதரின் முகாமில் இருந்து தயாராகிறார்.

அனால் சண்டைக்காக ஆயுதங்கள் அனைத்தையும் மற்றைய போராளிகள் எடுத்து சென்றுவிட்டதால். பாவனைக்கு உதவாது என்று கைவிடபட்ட ஒரு 4.5 வகை றீற்றா கைத்துப்பாக்கிறை எடுத்து இயக்கி பார்க்கிறார். அது பலதடைவை இயக்கினால் ஒரு தடைவை தான் அதன் விசை இயங்கும்.அதில் குண்டுகளை நிரப்பி இடுப்பில் செருகி கொண்டு கட்டியிருந்த சாரத்தினை மடித்து கட்டிகொண்டு புறப்படுகிறார்.

பருத்தி துறை கெருடாவில் பகுதியில் ஒரு ஒழுங்கையில் இவர் போய்க்கொண்டிருக்கும் போது அங்கு மறைந்திருந்த ஒரு இராணுத்தினன் திடீரென ஜொனியை நோக்கி தனது தப்பாக்கியை நீட்டியபடி அருகில் வரும்படி அழைக்கிறான் உடனே ஜொனி சைக்கிளை விட்டு இறங்கி அதை உருட்டியபடி அவனருகில் சென்று அய்யா நான் தோட்டதாலை வாறன் என்றபடி சைக்கிழை நிறுத்திவிட்டு கட்டியிருந்த சாரத்தை சரி செய்வது போல பாவனை செய்தபடி இடுப்பில் இருந்த துப்பாக்கியை திடீரென எடுத்து அவனை நோக்கி இயக்குகிறான். துப்பாகி இயங்கிவிட்டது அந்த இராணுவத்தினன் சுருண்டுவிழ ஜொனி முதல் தடைவையாக தப்பித்து கொள்கிறான்.

பின்னர் 1987ம் ஆண்டு பங்குனி மாதம் பலாலியை அண்மித்த கட்டுவன் பகுதியில் ஒரு மோதல் சம்பவம் அதில் தனது குழுவினருடன் சென்று ஜொனி சண்டையில் ஈடுபட்டு கொண்டிருந்த நேரம் எங்கிருந்தோ எதிரியின் துப்பாக்கி குண்டு ஒன்று ஜொனியின் இடது பக்க கண்ணிற்கு மேலே நெற்றியில் புகுந்து அது வெளியெறாமல் நல்ல வேளையாக மூளையை தாக்காமல் பின்பக்க மண்டையோட்டில் முட்டியபடி உள்ளேயே நின்று விட்டது.பின்னர் சிகிச்சைக்காக தமிழ்நாடு சென்ற ஜொனிக்கு அப்போதைய தமிழ் நாட்டில் முதலமைச்சராக இருந்த திரு எம்.ஜி.ஆர் அவர்கள் தன்னுடைய உதவியாளர் மூலம் ஜொனிக்கு சத்திர சிகிச்சைக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுக்குமாறு உத்தவிட்டிருந்தார்.

இந்தியாவின் பிரபல வைத்தியர்கள் பலர் சேர்ந்து செய்த சத்திர சிகிச்சை மூலம் தலையில் இரந்த கண்டினை அகற்றி இரண்டாவது தடைவையாக ஜொனி சாவை சுகம்விசாரித்து விட்டு திரும்பியிருந்தான்.இந்தியாவhல் ஜொனி தங்கியிருந்த காலகட்டத்தில் ஈழத்தில்மணலாறு பகுதியில் இந்தியபடைகளுடனான மோதல் தீவிரமடைந்து தலைவரை எப்படியாவது பிடித்துவிடுவது என்று இந்திய இராணுவம் போரிட்டு கொண்டிருக்க இந்திய உளவு படையும் தன்னாலான தகிடுதன வேலைகளையும் செய்து கொண்டிருந்தது

அதில் ஒன்றுதான் சண்டையை முடிவுக்கு கொண்டுவர சில யோசனைகள் என்று ஜொனியிடம் சில செய்திகளை சொல்லி அதை தலைவரிடம் கொண்டு போய் சேர்க்க சொல்லிவிட்டு இந்தியாவிற்கு விசுவாசமான ஒட்டு குழுக்களின் உதவியுடன் ஜொனியை பின் தொடர்ந்து சென்று தலைவரின் இருப்பிடத்தை அறிந்து அதை அழிப்பதே இந்திய உளவுபடையின் நோக்கமாகும். அதன்படி ஜொனிவவுனியாவில் கொண்டுவந்து விடப்பட்டு தலைவரைபோய் சந்தித்துவரும்படி வழியனுப்பிவைத்தனர்.

ஜொனிக்கும் இவர்களது திட்டம் புரிந்தது ஆனால் போராட்டத்தின் ஆரம்பகாலந் தொட்டே எதிரிகளை ஏமாளிகளாக்கி செய்திகளை உரிய இடங்களிற்கு எடுத்த சென்ற ஜொனிக்கு இந்திய உளவுபடையையையும் அதன் ஒட்டு குழுக்களையும் ஏமாற்றி தன்னை பின் தெடரமுடியாதவாறு சென்று தலைவரை சந்திப்பது ஒன்றும் பெரிய விடயமாய் இருக்கவில்லை. அதன்படியே தலைவரை சென்று சந்தித்து விட்டு திரும்பிவந்தான். தங்களை ஏமாற்றி தலைவரின் இருப்பிடத்தை அறியமுடியாதவாறு செய்துவிட்டான் என்கிற ஆத்திரத்தில் தூதுவனான நிராயுதபாணியாய் சென்றுவந்த ஜொனியை இந்திய இராணுவம் கொலைசெய்து வீதியிலே வீசி விட்டு சென்று விட்டனர்.,இந்திய வைத்தியர்களால் காப்பாற்ற பட்ட உயிரை இந்திய இராணுவம் நயவஞ்சகமாக பறித்து கொண்டது.

ஐரோப்பிய அவலம் நாடகம் அங்கம் - 2

1:43 PM, Posted by sathiri, No Comment


சாத்திரியின் ஐரோப்பிய அவலம் தமிழ்வெப்றேடியோ ஊடாக மாதம் இருமுறை ஒலிக்கிறது.




புலத்துவாழ் பெரியார் பேராண்டிகளே வணக்கம்.

7:37 AM, Posted by sathiri, 5 Comments

இந்தவார ஒரு பேப்பரிற்காக எழுதிய கட்டுரை

புலத்துவாழ் பெரியார் பேராண்டிகளே வணக்கம்.

பேனா என்பது அதனின்றும் வெளிப்படும் எழுத்து என்பது ஒரு மாபெரும் சக்தி. அறிவுள்ள ஆழுமையுள்ள ஒருவனின் பேனாவால் இந்த உலகையெ புரட்டி போடலாம். ஆனால் இன்று தொழில் நுட்ப வளர்ச்சிகாரணமாக எத்தனை பேர் பேனா பிடித்து எழுதுகிறார்கள் என்னபது சந்தேகமே ஆனால் எழுதுபவர்களின் தொகை கூடியுள்ளது என்பது மட்டும் உண்மை.அது தொழில் நுட்பம் எமக்கு தந்த நல்லதொரு பயன்பாடு.காரணம் முன்னர் எல்லாம் சாதாரணமாக ஒரு சிறு கதையை எழுதி அதை பலபேரிடம் கொண்டு போய் சேர்ப்பதென்றாலே எழுதியவன் பாடு பெரும்பாடு. சில நேரங்களில் எழுதியவனே அலுத்து போய் விரக்தியில் அதை கிழித்து எறிந்து விட்டு போவதும் நடப்பதுண்டு .

எனக்கும் அப்படி அனுபவங்கள் உண்டு அனால் இப்பொழுது அப்படியல்ல .வீட்டிலிருந்த படியே எழுதியதை இந்த உலகில் குறைந்தது ஒலு நூறு பேராவது படிக்க கிடைக்க செய்யமுடியும். அதனால் எல்லோருமே எழதுகிறார்கள் என்னவெல்லாமோ எழுதுகிறார்கள்.என்ன சாத்திரி புலம்பகிறான் எண்டு நினைக்கிறீர்கள் உண்மைதான் புலம்புகிறேன் காரணம். ஈழதமிழரை பொறுத்தவரை சா(தீ) யம்என்பது மெல்ல மெல்ல மறக்க பட்டு அதன் கூர்கள் மழுங்கடிக்கபட்டு அது புலத்திலும் நிலத்திலும் மறைந்து கொண்டிருக்கின்ற நேரம்.

புலத்தில் உள்ள சிலரோ தற்சமயம் தங்கள் புலைமைகளை எழுத்தில் காட்டுவதற்கு என்று சிலரும். இந்த சாதியை எதிர்க்கிறேன் என்கிற பெயரில் மீண்டும் அந்த சாதிஆயுதத்தை கூர்தீட்டி அதை எம்மவர் கைகளில் கொடுத்து எமக்குள் நாங்களே அடிபட்டு மடிந்து போகஎன்று ஒரு பெரிய சதியை தீட்டி சிலர் தலித்துகளிற்காக பேராடுகிறோம் என்றும் பறப்பட்டு இருக்கின்றனர்.அந்த போலி தலித்துகளிற்கான போராட்டத்தில் பிரான்சில் தானும் ஒரு எழுத்தாளன் என்று அடையாளபடுத்தி கொண்டு சோபாசக்தி என்பவர் எழுதிதள்ழுகிறார்.ஈழத்தில் தலித்துகள் என்கிற சொற்பதம் இருந்ததாக இவர்எழுத்துக்கள் மூலமாக தான் தெரிந்து கொண்டேன்.இவர் எதிர்ப்பது உண்மையில் ஈழத்து மண்ணின் மேல்சாதியினரையல்ல அந்த போர்வையில் எல்லாவற்றிற்கும் மேலான எமது விடுதலை போராட்டத்தையே என்பது இவரது எழுத்தக்களை படித்தவர்களிற்கு நன்கு புரியும்.இதற்கு மேல் இவரை பற்றி எழுதி இவரை ஒரு பெரியவராக்க நான் விரும்பவில்லை.அடுத்ததாக சாதிகள் இந்து மதத்தாலும் அதன்வருண வேதத்தால்தாலும் தான் வந்தது எனவே இந்து மதத்தை எதிர்ப்போம் என்று பெரியார் பாதையில் சிலர்.

சரி இந்துமதத்தின் வரண வேதத்தால் தான் சாதிவந்ததாகவே இருக்கட்டும். இதை எழுதுபவர்கள் எத்தனை பேரிற்கு இந்த வருண வேதத்தை பற்றி தெரியும் அல்லது எத்தனை பேரிற்கு அது எழுதபட்டிருக்கும் மொழியான சமஸ்கிருதம் தெரியும் என்று பார்த்தால் எவருக்குமே சுத்தமாக தெரியாது. எப்போதோ செத்து போன சமஸ்கிருத மொழியில் எழுதபட்டதாக சொல்லபடுகின்றகின்ற சாதியத்தை மட்டும் சாக விடாமல் அதை எதிர்க்கிறேன் பேர்வழியென்று நீறூற்றிவழர்க்கிறீர்கள்.இந்༢r />?? சாதியை எதிர்ப்பதாக சொல்லிகொண்டு சைவ மதத்தை எதிர்ப்பவர்களிடம் ஒரு கேள்வி? உலகில் உள்ள எல்லாமதங்களின் மூல நூல்களிலும் மதசடங்குகளிலுமே தற்காலத்திற்கு உதவாத பலவிடயங்களும் பல மூடநம்பிக்கைகளும் இருக்கதான் செய்கிறது.

அவற்றை நாங்கள் தான் காலத்திற்கு ஏற்றவிடயங்களை ஆராய்ந்து அதன் மூடபழக்கவழக்கங்களை அறிவியல் தொழில் நுட்பத்தின் உதவிகளுடன் அகற்றி மதத்தை தூய்மையாக்க வேண்டுமே தவிற தூற்றுவது புத்திசாலித்தனம் அல்ல.ஆரியன் சாதியை தோற்றுவித்தான் என்பதற்காக மதத்தை வெறுப்பது அசிரியர் சரியில்லையென்பதற்காக படிக்கவே மாட்டேன் என்பது போல.சரி ஆரியன் சாதியை தோற்றுவித்தான். அதில் சூத்திரனிற்குள் ஆயிரம் சாதியை தோற்றுவித்தது யார்?? நாம்தானே.ஆகவே ஆரியன் தோற்றுவித்த சாதியை அழிப்போம் அழிப்போம் என்று கத்துவதை விட நாம் தோற்றுவித்ததை முதலில் நாமே அழிக்கலாமே.அடுத்ததாய் இந்த புலத்தில் நாத்திகம் புரட்சி பேசுபவர்களை நான் நீண்டகாலமாகவே கவனித்ததில் தனிப்பட்டவாழ்க்கையில் எவருமே அதை கடைப்பிடித்தவர்களை காணவில்லை.புரட்சிபேசி தாலியும் பொட்டும் பெண்களிற்கு வேலி அதை அழிப்போம் என்று சொன்னவர்களின் மனைவிமார்கள் அனைவருமே விழா காலங்களில்தாலியுடனும் பொட்டுடனும் தான் உலா வருகின்றனர்.

அதைவிட நாத்திகம் பேசுகின்றவர்களின் மனைவி பிள்ளைகள் கோவிலுக்கு தவறாமல் போய் வருகிறார்கள். அதற்கு அவர்கள் தரும் விழக்கம் அது அவர்களின் தனிப்பட்டவிருப்பு அதில் நான் தலையிட முடியாது என்பார்கள். ஒரு கணவனுடன் அவனைபற்றி எல்லாவற்றையுமே தெளிவாக புரிந்து எல்லாகருத்துகளுடனும் ஒத்து போய் இறுதிவரை சேர்ந்திருக்கும் மனைவியையே தன்னுடையை நாத்திக கருத்துடன் ஒத்து போக வைக்க முடியாதவர்கள் எப்படி மற்றவர்கள் தன்னுடைய கருத்தை கேட்டு அதன்படி நடக்கவேண்டும் எதிர்பார்க்கலாம்.ஊருக்கு சொல்ல முதல் உங்கள் வீட்டில் சொல்லி திருத்த பாருங்கள்.அது மட்டுமல்ல கோவிலுக்கு போகும் மனைவியிடம் " அப்பிடியே என்ரை அவிட்ட நட்சத்திரத்திற்கு ஒரு அருச்சனை பண்ணிகொண்டுவா"என்று சொல்லிவிட்டு கடவுள் எதிர்ப்பு எழுதிகொண்டிருப்பார்கள்.சரி அதை எதிர்த்து எழுதியும் பேசியும் வந்தசில புரட்சி பெண்கள் கூட தாலியை கட்டிகொண்டு தலைமறைவாகிவிட்டனர்.(பெயர்கள்
குறிப்பிட விரும்பவில்லை)இறுதியாக ஒன்று எழுதவிரும்புகிறேன் பெரியார் சாதியை எதிர்த்தார் கடவுள் சிலையை செருப்பால் அடித்தார் காரணம் கடவுளின் பெயரால் அந்த காலங்களில் சிலர் மற்றவர்களை அடிமை படுத்தியதன் காரணத்தால் நான் சாமி சிலையையே செருப்பால் அடிக்கிறேன் சாமி என்னை ஒன்றும் செய்யவில்லை எனவே சாமிபெயரால்உங்களை அடிமைபடுத்த முடியாது எனவே பயபடாதீர்கள் என்று படிப்பறிவு மற்றும் வெளியுலக அறிவு அற்ற மக்களை நம்பவைக்கவே.அனால் இன்று அதுவும் புலத்தில் சாமியை காரணம் காட்டிதான் சாதியை ஒழிக்கவேண்டிய அவசியம் இல்லை.

அதுமட்டுமல்ல இன்று புலத்தில் சாதிகள் என்றால் என்னவென்றே தெரியமல் நாம் எல்லோரும் மனித சாதி என்று நினைத்து கொண்டிருக்கும் இளையசமுதாயத்தினரிடம் .மெல்ல செத்துகொண்டிருக்கும் சாதியை அதை எதிர்க்கிறேன் என்று சொல்லி கொண்டேஅதற்குள் மதத்தையும் இழுத்து அவற்றை இளையசமுதாயத்திடம் அறிமுகபடுத்தி அவர்கள் கைகளிலும் ஆயுதத்தை கொடுக்காதீர்கள்.காரணம் எமது இனவிடுதலையுடன் இந்த சாதிவிடுதலைக்காகவும் நாம் கொடுத்த விலை அதிகம் நன்றி சாத்திரி

74 வது உலக தேசிக்காய் திருவிழா

12:18 AM, Posted by sathiri, 5 Comments










74 வது உலக தேசிக்காய் திருவிழா
வருடா வருடம் கொண்டாடப்படும் உலக தேசிக்காய்த்திருவிழா பிரான்சின் மொந்தோன் நகரில் 17 ந் திகதி மாசி மாதம் ஆரம்பமாகியுள்ளது. இது பங்குனி 4ந் திகதி வரை நடைபெறும் இந்த திருவிழாஒவ்வெரு ஆண்டும் ஒரு நாட்டின் கலை கலாச்சாரங்களை சிறப்பாக பிரதிநிதித்துவ படுத்துவது வழைமை. அந்த வரிசையில் இந்த ஆண்டு இந்திய கலை கலாச்சாரங்களை பிரதிநிதித்துவ படுத்தி கெளரவிக்கபட்டது. இந்த நிகழ்வின் சிறப்பே அங்கு அமைக்கபடும் அந்தனை அலங்காரங்களும் முழுக்க முழுக்க தேசிக்காய் மற்றும் ஒரேஞ்சு( ) பழங்களாலேயே அமைக்கபடும். இந்த அரங்காரங்களிற்காக அந்த பகுதி^களில் கிடைக்கும் தேசிக்காய் மற்றும் ஒரேஞ்ச் பழங்கள் தவிர்ந்து ஸ்பெயின் நாட்டில் இருந்தும் தொன் கணக்காக வருவிக்க படுவது வழைமை. இந்த ஆண்டு இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிப்பதான முழுக்க முழுக்க தேசிக்காய் மற்றும் ஒரேஞ்சு பழங்களால் அமைக்கபட்டிருந்த பிரமாண்டமான் தாஜ்மகால். பெரிய பிள்ளையார் உருவம்.நான்முகன் உருவம் .புத்தர்ரின் உருவங்கள் பெரும்பாலான மக்களை கவர்ந்தது.அது மட்டுமல்ல இந்தியாவில் இருந்து விசேடமாக பரதநாட்டிய மற்றும் ராஜஸ்தானிய நடன குழுவினரும் அழைக்கபட்டு அவர்களது நடனங்களும் நடைபெற்றன

சாத்திரியின் ஜரோப்பிய அவலம் (நாடகம்)

2:33 AM, Posted by sathiri, One Comment

இராணுவ அரசியல் ஆய்வு(நகைச்சுவை)

12:46 AM, Posted by sathiri, 2 Comments

அண்மையில் இந்தியா தமிழ் நாட்டில் பயங்கர ஆயுதங்கள் செய்வதற்கான பொருட்களுடன் ஈழ தமிழர் உட்பட பலர் கைது செய்யபட்டனர் அந்த கைது எப்படி?? எங்கே?? யரால்?? நடந்தது என்பது பற்றிய ஒரு ஆய்வு . ஆய்பவர் புகள் பெற்ற அரசியல் இராணுவ ஆய்வாளர் உங்கள் ஆட்டுப்பால் அப்பாஸ்.


கடந்த வாரம் தமிழ்நாட்டில் ஆயுதம் கடத்தியதாக சிலர் கைது செய்ய பட்டனர் உண்மையில் நடந்தது என்ன?? தை மாதம் 25 ந்திகதி நள்ளிரவு 12.05 தமிழ்நாடு சி.பி.ஜ தலைமை காரியாலத்திற்கு ஒரு போன் கால். போன் அடிக்கிறது . ஆ`ஹா``ஹா`ஹா......... இகி கி கி....ஆ``ஹா`ஹா`ஹா .......... இ கி கி கி...... என்ன அது போன் அடிக்கின்ற சத்தம் தான் . ரெலி போன் மணியை போல நீங்கள் சிரிக்கும் போது போன் மணி மட்டும் நீங்கள் சிரிப்பதை போல அடிக்காதா??

இப்ப போன் சிரிக்கிற அழுகின்ற ஏன் நீங்கள் ஒப்பாரி வைக்கிறமாதிரி கூட அடிக்கும் . சரி ஆய்விற்கு வருவோம். ரெலி போனை சி்.பி.ஜ அதிகாரி உண்ணி கிருஸ்ண மேனன் போனை எடுக்கிறார்.மறு மனையில் கலோ சி பி ஜ ங்களா??. ஆமா சி பி ஜ இன்ஸ்பெக்ரர் உண்ணி கிருஸ்னன் ஸ்பீக்கிங் நீங்க யாரு?? உங்களுக்கு என்ன வேணும்.மறுமுனையில். சார் சார் இங்கை ஒரு குறூப் பயங்கர ஆயுதங்கள் கடத்தி கிட்டு இருக்காங்க சார் உடனே வந்தீங்கன்னா அரஸ்ட்டு பண்ணிடலாம் அவங்களை பாத்தா சிலோன் தமிழங்க மாதிரி இருக்கு


உண்ணி ஆச்சரியமாய் கேட்கிறார் ஆயுதம் கடத்திறாங்களா?? அதுவும் சிலோன் தமிழங்க எண்டு எப்பிடி டெபனற்றா சொல்லுறிங்க
மறு முனையில். ஆமா சார் அவங்க சிலோன் தமிழங்க தான் ஏணெண்ணா அவங்க தமிழ்லை பேசறாங்க சார் அதை விட இரண்டு பாக்சை தூக்க முடியாம தூக்கிட்டு போனாங்க அது நிச்சமா வெப்பனா தான் இருக்கும் இப்ப ஒரு லாட்சிலை தங்கி இருக்காங்க உடனே ஸ்பாட்டக்கு வாங்க சார்.உண்ணி அவசரமாய் புறப்பட்டபடி ஓகே ஓகே அந்த லாட்ச் அட்ரசையும் உங்க பெரையும் சொல்லுங்க உடனே நான் என்னோடை ரீமோடை வாறேன்.மறுமுனையில் உள்ளவர் விலாசத்தை சொல்ல உண்ணி கோபமாய் உங்க பெயர் என்ன சொல்லலலையே நீங்க யார்??

என்கிறார் மறு முனையில் உள்ளவர் நான் இந்தியன் சிட்டிசன் என்று விட்டு போனை வைக்கிறார். இந்த தகவல் உண்மையாக இருக்குமா பெயரை கேட்டா கமல் நடித்த இந்தியன் பெயரையும் அஜித் நடித்த சிட்டிசன் படபெயரையும் சொல்லுறானே என யோசித்த உண்ணி சரி எதற்கு போய் பார்க்கலாம் என நினைத்து மேலதிகாரிகளிற்கு தகவல் தெரிவித்து விட்டு ஆயுதங்களுடன் ஒரு 100 போர் கொண்ட ஒரு காவல் துறை குழுவினரை அழைத்த கொண்டு சென்று அந்த லாட்சை அடைகிறார் இப்போது அதிகாலை 3 மணி ஊரே உறங்கி கொண்டிருந்தது. சப்தம் எதுவுமின்றி மெதுவாக அந்த லாட்சை சுற்றி வழைத்த போலீசார் அந்த லாட்சின் கதவுகளை உடைத்து கொண்டு உள்ளே சென்று அங்கிருந்த அனைவரையும் கைது செய்கின்றனர்.

எது வித மோதலும் இன்றி அனைவரையும் கைது செய்த மகிழ்ச்சியில் உண்ணி உடனே அனைத்த பத்திரிகையாளர்களிற்கும் போன் செய்து தாங்கள் பயங்கர ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் செய்யகூடிய உதிரி பாகங்களுடன் பலரை கைது செய்திருப்பதாகவும் காலை விடிந்ததும் பத்திரிகையாளர் மகா நாடு கூட்டபட்டு அவர்களிற்கு அந்த ஆயுதங்கள் மற்றும் பொருட்கள் காண்பிக்க படுவதடன் அதன் விளக்கங்களும் அளிக்கப்படும் எனவே அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம் என்று விட்டு போனை கட் செய்கிறார்.மறு நாள் காலை 6 மணி பத்திரிகையாளர்கள் எல்லோரும் கையும் மைக்குமாய் உண்ணிகிருஸ்ணனை சுற்றி உண்ணிபோல ஒட்டியபடி சார் எப்பிடி இவங்களை பிடிச்சீங்க எப்படி தகவல் கிடைத்தது? அந்த ஆயுதங்கள் எங்கே? இப்போ அந்த தீவிர வாதிங்க எங்கே? என்று கேள்விகளை தொடுக்கின்றனர்.

உண்ணியோ அவர்களை அமைதிபடுத்தி பிளீஸ் வெயிற் கேள்வி கேட்காமல் நான் சொல்லறதை மட்டும் கேளுங்க பக்கத்திலை இருக்கிற லாட்சிலை தீவிர வாதிங்க இருக்கிறதா கிடைச்ச எங்கள் புலனாய்வு பிரிவின் தகவலின்படி நாங்க அதை ராத்திரி ரவுண்டப் பண்ணி அந்த லாச்சிலை இருந்த 60 பேரையும் அரஸ்ட்டு பண்ணினோம் அதிலையார் உண்மையான தீவிர வாதிங்க எண்டு இன்னமும் தெரியாததாலை அவங்களை பக்கத்திலை உள்ள அலங்கார் சினிமா தியேட்டரிலை அடைச்சு வைச்சிருக்கிறோம்.

பிறகு நாங்க அந்த அறுபது பேரையும் போட்டு மிதிக்கிற மிதியிலை உண்மையான தீவிரவாதிங்க யார் எண்டதை கண்டுபிடிச்சிடுவம்.இப்ப நீங்க எல்லாரும் போய் அவங்களை பாக்கலாம் போட்டோ எடுக்கலாம் அவங்களை பாக்கிறதுக்கு காலரி றிக்கற் 50 ருபா பால்கனி றிக்கற் 80 ருபா.அடுத்ததா அவங்க தீவிரவாதிங்க எண்டதாலை சென்சார் போடு ஏ சேர்ட்டிபிக்கற்தான் குடுத்திருக்காங்க அதனாலை வயசுக்கு வந்தவங்க மட்டும் தான் பாக்கமுடியும்.அதை பாத்திட்டு வாங்க நான் பின்னர் ஆயுதங்கள் மற்றும் அதன் விபரங்களை சொல்கிறேன் என்று அனுப்பிவைத்தார்.

பத்திரிகையாளர்கள் கைதானவர்களை பார்த்து போட்டோ எல்லாம் எடுத்து கொண்டதும் திரு உண்ணி கிருஸ்ணணமேனன் அவர்கள் பறிமுதல் செய்யபட்ட ஆயுதங்களை பத்திரிகையாளர்களிற்கு காண்பித்தார் அதில் பலலட்சம் சைக்கிள் போல்ஸ்கள். ரியூப்புகள் .கிறீஸ் டப்பாக்கள் மற்றும் 120 மி.மீ்150 மி .மீ 180 மி .மீ நீளமுடை இரும்பு குழாய்கள் என்பன இருந்தன . அவற்றையெல்லாம் ஆச்சரியமாக பார்த்த பத்திரிகையாளர்களிற்கு விழக்கமளிக்கையில் இந்த போல்சுகளை இங்கிருக்கும் கிறீஸ்சில் தடவி இந்த குளாய்களில் போட்டு ஒரு கம்பியால் ஓங்கி குத்துவதன் மூலம் அந்த போல்சுகள் பல கி.மீற்றர் தூரம் வரை சென்று ஒரு இலக்கை அழிக்கும் வல்லமை உடையது உதாரணத்திற்கு போர்பஸ் பீரங்கி போன்றது.

அடுத்தாக இன்னொரு முறையாகவும் இந்த போல்சுகளை பயன் படுத்தலாம் அதாவது இரண்டு பெரிய தடிகளை ஒரு நேர் கோட்டில் அருகருகாக நட்டு அவற்றில் ஒரு இந்த சைக்கிள் ரியூப்புகளை கட்டிவிட்டு அந்த ரியூப்பில் இந்த போல்சுகளை வைத்து நன்றாக இழுத்து விட்டால் அது ஆகாயத்தில் வேகமாக பறக்கும் இதன் மூலம் ஆகாயத்தில் பறக்கும் போர் விமானங்களையும் ஏன் அடுத்த நாட்டை கூட தாக்கலாம். உதாரணமாக எங்கள் அக்னி ஏவுகணை போன்று இவர்களை கைது செய்ததன் மூலம் ஒரு பயங்கர சதியை முறியடித்துள்ளோம்.

என்று விளக்கியவர் அருகில் இருந்த பெண்போலீஸ் உதவியாளரின் தலையில் இருந்த றபர்பாண்டை கழற்றி தன்னுடைய சட்டைபையில் இருந்த இரண்டு பேனாக்களில் கட்டி அதில் ஒரு இரும்பு குண்டை வைத்து இழுத்து விட்டு செய்முறையாக செய்து காட்டிபோது அத்தனை பத்திரிகையாளர்களும் வாயடைத்து அதிர்ச்சியில் உறைந்து சிலையாகி போனார்கள். பின்னர் அவர்களை காவல் துறையினர் கடப்பாரைகள் கொண்டு வந்து கிண்டியெடுத்து அவர்களை வழியனுப்பி வைத்தனர். நன்றி மீண்டுமோர் பரபரப்பான விறுவிறுப்பான அரசியல் ஆய்வில் உங்களை சந்திக்கும் வரை உங்கள் புறுபுறுப்பு தாங்காமல் விடைபெறுவது சாத்து

நிழலாடும் நினைவுகள்

4:07 AM, Posted by sathiri, No Comment





சுவிசில் இருந்து வெளியாகும் நிலவரம் பத்திரிகைக்காக எழுதியது

இதுவும் ஒரு இந்திய படை காலத்து நினைவுகளே

1988ம் ஆண்டு சித்திரை மாதம் ஒரு மாலைப்பொழுது என்னை வீதியில் கண்ட நண்பனொருவன் என்னிடம் சொன்னான் டேய் உன்னை வாகீசன் தேடி வந்தவன் இவ்வளவு நேரமும் மெமோறியல் மைதானத்திலை ( மானிப்பாய் கிறின் மெமோறியல் பாடசாலை)பாத்து கொண்டுநிண்டிட்டு போட்டான் நளைக்கு பின்னேரம் மெமோறியல் மைதானத்தடிக்கு வருவானாம் கட்டாயம் தன்னை சந்திக்க சொன்னான் முக்கிய விடயமாம் என்று சொல்லிவிட்டு போ னான். அட அவனை சந்திக்க முடியவில்லையென்கிற கவலையுடன் மறுநாள் எப்படியாவது அவனை சந்தித்து விடுவது என்று நினைத்தபடி வீட்டை நோக்கி போனேன். வேலுப்பிள்ளை வாகீசன் இதுதான் அவனது சொந்தபெயர்.சண்டிலிப்பாய் கல்வளை என்னுமிடத்தை சேர்ந்தவன்.

எனது இளமைகாலத்து நண்பர்களில் இவனும் முக்கியமானவன் பழைய ஞாபகங்கள் வந்து போகும் போதெல்லாம் இவனது ஞாபகங்களும் கட்டாயம் வரும் . இவனுடன் எனது நட்பு தொடங்கியது ஒரு சுவாரசியமானது பாடசாலை காலங்களில் இளவயதில் நான் அடிதடி நாயகன்புரூஸ்லியின் தீவிர ரசிகன் புரூஸ்லியின் படங்களை பார்த்து விட்டு வீட்டில் வந்து கண்ணாடியின் முன் நின்று சேட்டை கழட்டிவிட்டு புரூஸ்லியை போலவே உடலை வழைத்து நெளித்து அபிநயம் பிடித்து பார்ப்பேன் அல்லது தலைகணியை கட்டிதூக்கி விட்டு கையாலும் காலும் அடிப்பது.

இப்பிடி என்னையும் ஒரு புரூஸ்லியாக கற்பனை பண்ணிதிரிந்த காலங்கள். ஒருநாள் புரூஸ்லியன் படம் ஒன்றை பார்த்துவிட்டு வந்த நான் (enter the tragan)என்று நினைக்கிறேன்.அந்த படத்தில் புரூஸ்லி செய்வதை போலவே வீட்டு முற்றத்தில் கை காலை ஆட்டிபடி நின்று கொண்டிருந்த நான் திடீரென புரூஸ்லி அந்த படத்தில் அந்தரத்தில் எழும்பி எதிரியை அடிக்கிற கட்டத்தை நினைத்தபடி நானும் புரூஸ்லியாக மாறி பாய்ந்து முற்றத்தில் நின்ற கதலி வாழை குட்டிக்கு சுழன்று காலால் ஒரு அடிவிட்டேன். வாழைக்குட்டி இரண்டாய் மடிந்து விழ நான் எனது வெற்றிகளிப்பில் துள்ளி மகிழ "அட அறிவு கெட்டவனே" என்றபடி முதுகில் ஓங்கி ஒரு அடிவிழுந்தது அய்யோ அம்மா என அலறியபடி திரும்பி பார்த்தேன்

எனது அக்கா என்னைப்பார்த்து அறிவிருக்காடா அந்த வாழைக்குட்டியை பக்கத்து வீட்டு பவளமக்காவிற்கு விக்க அஞ்சு ரூபாய்க்கு விலைபேசி இரண்டு ரூபாய் அற்வான்சும்(முற்பணம்) வாங்கிட்டன் அதை போய் இப்பிடி அனியாயமாய் அடிச்சு முறிச்சு போட்டியே என்று ஏதோ பங்குச்சந்தையில் பல இலட்சங்கள் நட்டமைந்தவர் போல என்னை மீண்டும் தாக்க துரத்திகொண்டு வர நானும் புரூஸ்லி கடவுளை மனதில் நினைத்தபடி ஓடிப்போய் முற்றத்தில் நின்ற வேப்பமரத்தில் பாய்ந்து ஏறி தப்பிக்கொண்டேன்.கீழே நின்றபடி அக்கா கற்களை பொறுக்கி என்னை நோக்கி எறிந்து கொண்டிருந்தார் இதையெல்லாம் கவனித்த அம்மா வந்து அக்காவை சமாதானம் செய்துவிட்டு என்னை கீழே இறக்கி என்னிடம் சொன்னார் உனக்கு கராட்டி பழக ஆசையெண்டா போய் முறைப்படி அதை பழகு சும்மா வீட்டிலை நிக்கிற வழை மரத்தை முறிக்காதை இப்பிடியெ போனால் இன்று வாழை நாளை முருங்கை மா வேம்பு இலுப்பை மரம் எண்டு எல்லாத்தையும் நீ காலாலை அடிச்சு முறிச்சு போடுவாய்

( அம்மா அப்பிடி நினைச்சதற்கு சத்தியமாய் நான் பொறுப்பு இல்லை சொல்லிட்டன்) அதனாலை போய் முறைப்படி கராட்டியை பழகு என்று பணம் தந்து அனுப்பி விட்டார் . 80 களில் மானிப்பாய் மொமோறியல் பாடசாலையில் சனி ஞாயிறு நாள்களில் கராட்டி பயிற்சி வகுப்புகள் நடப்பது வழக்கம்.சனி ஞாயிறுகளில் அங்கு பயிற்சி பெறும் பல நூறு மாணவர்கள் ஒரேயடியாக எழுப்பும் ஒலியால் அந்த பகுதியே அதிரும்.நானும் அங்கு போய் என்னை பயிற்சியில் இணைக்க பதிவு செய்து கராட்டி பயிற்சியை பழக தொடங்கிய காலங்களில்தான் அங்கு என்னை போலவே ஆரம்ப பயிற்சியில் இருந்த வாகீசனுடன் எனது நட்பும் ஆரம்பமானது. ஆரம்ப நட்பு கால போக்கில் எம்மிருவருக்குமிடையில் நல்லதொரு புரிந்தணர்வு நட்பாக மாறி இருவரும் ஒன்றாய் திரிந்தும் ஒருவர் வீட்டிற்கு ஒருவர் சாதாரணமாய் போய் வருகின்றஅளவிற்கு பிணைந்து போனது.

நான் அவனை தேடி சண்டிலிப்பாய் போனால் அவனது வீட்டிற்கு அருகில் இருக்கும் கல்வளை பிள்ளையார் கோயில் தேரடியில் இருந்து அவனுடனும் வேறு நண்பர்களுடனும் மணிக்கணக்காய் பேசுவோம். அவன் என்னிடம் வந்தால் என்வீட்டில் அருகிலிருக்கும் மருதடி பிள்ளையார் தேரடி எங்கள் அரட்டை இடமாக மாறும். பொழுது போக்காய் அரட்டை திரைப்படம் நடிக நடிகையர் எங்கள் பாடசாலை நிகழ்வுகள் என்று இருக்கும் 83 கலவரத்தின் பின்னர் எங்கள் பேச்சுக்களும் நாட்டு பிரச்சனை அரசியல் என்று மாறி போனது. அது மட்டுமல்ல அந்த கால கட்டத்தில் ஆயுத போராட்ட இயக்கங்களும் ஊருக்கொன்றாய் உருவாகிய கால கட்டம் . அனேகமான இளைஞர்கள் ஏதாவது ஒரு இயக்கத்துடன் தொடர்புகளொ அல்லது உதவிகளோ செய்தவர்களாகவே இருந்தனர் .

வாகீசனும் அப்படித்தான் ஆனால் சரியான போராட்ட இயக்கத்தை இனம்கண்டு புலிகள் இயக்கத்திற்கு அவனது கிராமத்தில் அந்த இயக்கத்தின் தேவைகளிற்கு பல உதவிகளையும் செய்தான் அது மட்டுமல்ல அன்றைய கால கட்டத்தில் லெப்.கேணல் திலீபனுடன் இணைந்து பல அரசியல் வேலை திட்டங்களையும் செய்தான்.அதனால் அவன் புலிகள் இயக்க சார்பானவன் என்று ஊரில் அடையாள படுத்தபட்டிருந்தாலும் ஊரில் அவன் மற்றைய இயக்க காரர்களுடனும் நல்ல நட்பு இருந்து வந்தது. ஆனாலும் ஒவ்வொருநாளும் மாலை மானிப்பாய்வீதிகளில் எங்கள் இருவரையும் கட்டாயம் காணலாம். 84 களின் பின்னர் பல வேறு காரணங்களால் இருவரும் அடிக்கடி சந்தித்து கொள்ள முடியாத சூழ்நிலை ஆனாலும் எங்கள் நட்பு அப்படியே தான் இருந்தது சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சந்தித்து கொள்வோம்

முக்கியமாக எங்கள் கோவில் திருவிழா காலங்களில் நாங்கள் எங்கு எந்த பகுதியில் ஏன் எந்த நாட்டில் இருந்தாலும் கட்டாயம் திருவிழா காலத்தில் கட்டாயம் சந்தித்து கொள்வோம்.அந்த வருடமும் அதே சித்திரை மாதம் எங்கள் ஊர் கோயில் திருவிழா நடக்க வெண்டிய மாதம் அனால் இந்தியபடை ஆக்கிரமிப்பால் அது நடக்கவில்லை அனாலும் வாகிசன் என்னை சந்திக்க வந்திருந்தான் அன்று சந்திக்கமுடியவில்லை எனவே எப்படியும் மறுநாள் அவனை எப்படியாவது சந்திப்பது என்று முடிவுடன் மறுநாள் மாலை மானிப்பாய் மெமோறியல் பாடசாலை இருக்கும் இடத்திற்கு சென்றென் அங்கு பாடசாலை மைதானத்தின் ஒரு மூலையில் இரந்த பெரியபுளியமரத்தடியில் சைக்கிளில் எனக்காக காவல் நின்றான்.

அவனை கண்டதும் போய் அவனிடம் எப்பிடியடா இருக்கிறாய் கண்டு கன காலம் ஆகிது இப்ப எங்கை பாத்தாலும் இந்தியனாமி திரியிறாங்கள் இந்த வருசம் திருவிழாவும் நடக்கேல்லை அதாலை மற்ற சினேகிதங்களையும் இந்த வருசம் சந்திக்க முடியெல்லை இப்ப இவ்வளவு பிரச்சனைக்கை என்னை எதுக்கு தேடிவந்தனீ என்று விசாரித்தேன். வா இதிலை கன நேரம் இருக்காமல் எங்கையாவது ஒரு ஒதுக்கு புறமா போய் நிண்டு கதைப்பம் என்றபடி வாகீசன் தொடர்ந்தான். உன்னட்டை ஒரு முக்கிய விசயம் சொல்ல வேணும் அதுதான் வந்தனான் உனக்கு தெரியும் தானே என்ரை அக்கா அண்ணா மார் எல்லாரும் வெளிநாட்டிலை தானே. இப்ப நானும் அம்மா அப்பாவும் தான் அண்ணணன் மார் அம்மா அப்பாக்கு முதலும் ஸ்பொன்சர் அனுப்பியிருந்தவை அம்மா அப்பா என்னை தனிய இஞ்சை விட்டிட்டு போக ஏலாது எண்டு போகேல்லை ஆனால் இப்ப பிரச்சனையும் கூடிட்டுது அம்மா அப்பாக்கு ஒண்டு நடந்தா அது என்னாலை தான் எண்டு மற்ற சகோதரங்கள் எல்லாம் என்னிலை தான் குற்றம் சொல்லவினம்

அதோடை இப்ப என்னையும் கனடாக்கு கூப்பிட ஒழங்கு பண்ணியிருக்கினம் அதாலை இப்ப நானும் அம்மா அப்பாவோடை கொழும்புக்கு போறதா முடிவெடுத்திருக்கிறன் இப்ப கொஞ்ச நாளா போக்கு வரத்தும் தொடங்கி கொழும்புக்கு பஸ்சும் ஓடுது.அது எப்ப நிக்குமோ தெரியாது அதுதான் உன்னட்டை சொல்லிட்டு போறதுக்கு தான் தேடி திரிஞ்சனான் எண்டான். நல்லது சந்தோசமா போட்டு வா போனதும் எங்களை மறந்திடாதை கடிதம்போடு ஆனால் கவனம் இப்ப எல்லா இந்தியனாமி சென்றியிலையும் (சோதனை நிலையம்) பழைய புளொட்காரர் நிண்டு தெரிஞ்ச ஆக்களை பிடிக்கிறாங்களாம் எதுக்கும் கவனம் என்றேன். சிரித்தபடியே சொன்னான் என்னை ஏன் பிடிக்கிறாங்கள் நான் ஆரோடை பிரச்சனை பட்டனான் என்னை பிடிக்க. ஒண்டும் நடக்காது சரி வா ஏதாவது குடிக்கலாம் என்று என்னை அழைத்தான் . இப்ப எங்கை போய் என்னத்தை குடிக்கிறது எல்லா சந்தியிலையும் வந்து குந்திட்டாங்கள் போசாமல் இதிலை நிண்டு கதைச்சிட்டு போவம் எண்டவும் அவன் விடுவதாய் இல்லை வற்புத்தவே சரி வா சங்கு வேலி பக்கமா போவம் அங்கை ஒழுங்கைக்குள் ஒரு கடை இருக்கு அங்கை ஏதாவது குடிப்பம் என்று இருவரும் சைக்கிளை மிதித்தபடி அநத கடைக்கு போய் கதைத்து கொண்டே சில முறுக்குகளை வாங்கி சாப்பிட்டு சோடாவும் குடித்தோம்

அதற்கு அவனே காசை குடுத்து விட்டு அவன் புறப்பட தயாரானான் சரியடா நான் போட்டு வாறன் என்றவன் ஏதோ யோசித்தவனாய் என்னிடம் டேய் உன்ரை சேட்டை கழட்டு என்றான் எனக்கு புரியாமல் எதுக்கடா சேட்டை கழட்ட சொல்லுறாய் என்றவும் அவன் தன்னுடைய சேட்டை கழற்றி என்னிடம் தந்து விட்டு டேய் உன்ரை சேட்டை தா உன்னுடைய ஞாபகமாய் என்னட்டை அது இருக்கட்டும் எப்பவாவது ஒரு நாள் நாங்கள் சந்திக்கேக்கை நீ என்ரை சேட்டை என்ரை ஞாபகமாய் பத்திரமாய் வைச்சிருக்கிறியா பாப்பம் ஆனால் உன்ரை சேட் என்னட்டை பத்திரமாய் இருக்கும் என்றவன் என்னுடைய சேட்டை வாங்கி போட்டு கொண்டு சரியடா எங்கையாவது எப்பவாவது சந்திப்பம் என்று கையை காட்டியபடி சென்று விட்டான்.இரண்டு நாட்களின் பின்னர் எனக்கு வாகீசனை முருகண்டியில் வைத்து பிடித்துவிட்டாகளாம் என்கிற செய்தி கிடைத்தது உடனே அவனது வீட்டிற்கு சென்றேன் அவனை கைது செய்ததும் தாயும் தந்தையும் இந்திய இராணுவத்திடம் எவ்வளவோ கெஞ்சி கூத்தாடி போராடிபார்த்து விட்டு திரும்ப வீட்டிற்கு வந்துவிட்டனர்.அவனது தந்தையிடம் விபரம் கேட்டேன்.

தம்பி நாங்கள் முருகண்டிலை இறங்கி பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்க போட்டம் இவன் பக்கத்திலை இருக்கிற தேதண்ணி கடைக்கை பேனவன் யாரோ இவனை தெரிஞ்ச பழைய புளொட்காரனாம் ஆமியோடை நிண்டவன் அவன் தான் இவனை கண்டிட்டு பிடிச்சு கொண்டு போனவங்கள் நானும் அவனிட்டை கெஞ்சி பாத்தன் வேணுமெண்டா கேக்கிற காசுகூட தரலாம் எண்டும் கேட்டு பாத்தன் கடைசியா ஒரு தொகை காசும் எங்கடை ஊர் ஆமி பொறுப்பானவனின்ரை கடிதமும் வாங்கிவர சொன்னாங்கள் விடறம் எண்டிருக்கிறாங்கள் அதுதான் காசு புரட்டியாச்சு தொட்டிலடி ஆமிகாம்பிலை போய் கடிதமும் கேட்டனான் தந்திட்டான் அவனும் மகனை விட சொல்லி வயலஸ்சிலை செய்தி அனுப்பிறனெண்டான் நாளைக்கு அதுகளை கொண்டு ஊராக்களும் எல்லாரும் போறதா இருக்கிறம் எண்றார் கவலையாக.

எனக்குள் ஒரு நம்பிக்கை எப்படியும் விட்டு விடுவார்கள் அவனை ஊரிலேயெ அனைவருக்கும் பிடிக்கும் எவருக்கும் எந்த தீங்கும் நினைக்காதவன் அதனால் ஊர்மக்களே திரண்டு போய் அவனை விட சொல்லி கேட்கும் போது கட்டாயம் விட்டுவிடவார்கள் என்கிற நம்பிக்கையில் மறுநாள் அவர்கள் போய் வாகீசனுடன் மீண்டும் வரும்வரை நான் அந்த ஊரிலேயே தெரிந்த ஒரவர் வீட்டில் தங்கியிருந்தேன். மறுநாள் காலை இரண்டு பேரூந்து வண்டிகளில் ஊர் மக்கள் எல்லோரும் புறப்பட்டு போயிருந்தனர்.மாலையாகியிருந்தது அவர்களின் வரவை எதிர் பார்த்தபடி அவனும் நானும் இருந்து கதைக்கும் அந்த கோயில் தேரடியில் காத்திருந்தேன். இருள தொடங்கியிருந்தது போன பேரூந்து வண்டிகள் வந்து கொண்டிருந்தன பின்னால் இன்னொரு காரும் வந்து அவர்கள் வீட்டின் முன்னால் நின்றது நான் எழுந்து அவர்களை நோக்கி போய் கொண்டிருக்கும் போதே அவர்களின் அழுகுரல்கள் எனக்கு கேட்க தொடங்கியது.

வேகமாய் ஓடிப்போய் பார்த்தேன் கடைசியாய் வந்த காரில் இருந்து வாகீசனை பிணமாய் இறக்கினார்கள் அவனது தலையை சுற்றி ஒரு துணியால் கட்டியிருந்தனர். நான் அவர்களிடம் ஏன் என்ன நடந்தது என்று கேட்டபடி துணியை விலக்கி பார்க்க முயன்றபோது ஒருவர் சொன்னார் தம்பி துணியை எடுக்காதையும் என்று சொல்லி நடந்ததை விபரித்தார்.நாங்கள் போய் காசும் கடிதமும் கொண்டந்திருக்கிறம் ஆளை விடுங்கொ எண்டு கேக்கவும் ஆள் நேற்றிரவு தப்பியோடிட்டார் எண்டாங்கள் நாங்கள் நம்பிக்கையில்லாமல் ஆமிகாரரிட்டை கெஞ்சி கொண்டிருக்கேக்கை தான் அங்கை கடை வைச்சிருக்கிற ஒரு பெடியன் சொன்னான் அண்ணை நேற்றிரவு ஒராளை கண் கட்டினபடி பின் பக்கமா காட்டு பகம் கொண்டு போனவங்கள் காட்டுக்கை போய் தேடி பாருங்கோ எண்டான் நாங்களும் காட்டுக்கை தேடேக்கை ஒரு இடத்திலை கிடங்கு கிண்டின அடையாளம் கிடந்திது தோண்டி பாத்தம் அந்த பாவியள் அவனை சித்திரவதை செய்து அவனின்ரை இரண்டு கண்ணையும் தோண்டி எடுத்திட்டு உயிர் இருக்க கூடியதாவே தாட்டிருக்கிறாங்கள் .

நாங்கள் எடுக்கேக்கை உடம்பு சூடாதான் இருந்தது அனால் உயிர் இருக்கேல்லை வாற வழியிலை பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு போய் ஏதாவது செய்து கொண்டு வரலாம் எண்டு நினைச்சனாங்கள் ஆனால் நேரம் போட்டுது ஊரடங்கு சட்டம் தொடங்கிட்டுது அதாலை நேரை வீட்டை கொண்டத்திட்டம். வைச்சிருக்காமல் நாளைக்கே காரியங்களை பாக்க வேணும் என்று கலங்கியபடி சொன்னார்.வாகீசனது உறவினர்களின் ஓலத்துடன் அவனும் அன்றைய இரவுடன் நிதந்தரமாய் உறங்கிபோனான். கால போக்கில் அவன் எனக்கு தந்த சேட்டும் எங்கோ தொலைந்து போக இன்னமும் தொலைந்து போகாத அவனது நினைவுகளுடன் அவனிற்கு அஞ்சலி செலுத்தி என் நினைவுகளை தொடருவேன் நன்றி சாத்திரி

9:30 AM, Posted by sathiri, One Comment

நிழலாடும் நினைவுகள்

சுவிசில் இருந்து வெளியாகும் நிலவரம் பத்திரிகைக்காக

லெப் கேணல் அப்பையா அண்ணைஅப்பையா அண்ணை

புலிகள் இயக்கத்தின் தலைவரிலிருந்து புதிதாய் சேர்ந்த போராளிகள் வரை அவரை அழைப்பது அப்படித்தான் இயக்கங்கள் பல ஆரம்பித்த எண்பதுகளில் இயக்க பெடியள் என்றாலே இருபதுவயது கார இளைஞர்கள் மட்டுமே என்கிற எல்லாரது எண்ணங்களையுமே மாற்றியமைத்து புலிகள் இயக்கத்தின் ஆரம்ப காலத்திலேயே 50 வயதான ஒரு மனிதர் இருந்தார் என்றால் அது அப்பையா அண்ணைதான்.

ஈழ பொராட்ட வரலாற்றில் ஆரம்பங்களில் இலங்கையில் எங்கு கண்ணிவெடி தாக்குதல் நடந்தாலும் மக்களிற்கு புலிகள் இயக்கம் தான் ஞாபகத்திற்கு வரும் ஆனால் புலிகள் இயக்கத்தினரிற்கோ உடனே ஞாபக்திற்கு வருபவர் அப்பையா அண்ணை காரணம் அண்றைய காலகட்டத்தில் இலங்கை அரசபடைகளிற்கு எதிராக நடாத்த பட்ட அத்தனை கண்ணி வெடித்தாக்குதல்களிலும் அப்பையா அண்ணையின் பங்கு இருந்தது.

1982ம் ஆண்டு யாழ் காரைநகர் வீதியில் பொன்னாலை பாலத்தில் வைத்து புலிகளால் நடாத்தபட்ட கண்ணிவெடித்தாக்குதல் ஒன்று சரியாக வெடிக்காததால் இலங்கை புலனாய்வு பிரிவினர் அந்த தாக்குதல் பற்றி புலனாய்வு செய்ததில் அதில் அப்பையா அண்ணையின் பங்கு இருந்ததை தெரிந்து கொண்டு அன்றிலிருந்து அவரும் அரசபடைகளால் தேடப்பட அவரும் மற்றைய போராளிகள் போல தலைமறைவு வாழ்க்கைக்கு தள்ளபட்டார்.

ஆனால் புலிகள் மீண்டும் இன்னொரு கண்ணிவெடித்தாக்குதலிற்கு திட்டமிட்டு அதற்கான கண்ணிவெடி மற்றும் வெடிக்கவைக்கும் பொறிமுறைகளை தயாரிக்கும் பணி அப்பையா அண்ணையிடம் ஒப்படைக்கபட்டது.அப்பையா அண்ணையும் அந்த பணியை செய்துமுடித்து விட்டு மற்றைய போராளிகளிடம் அதை ஒப்படைக்கும் போது சொன்னார் சொன்னார் தம்பியவை இந்த முறை பிழைக்காது என்றார். அவர் சொன்னது போலவே அந்த தடைவை பிழைக்கவில்லை1983 ம்ஆண்டு யூலை மாதம் 23 ந் திகதி இரவு 11 மணியளவில் திருநெல்வேலி தபால்பெட்டி சந்தியடியில் இலங்கை வரலாற்றையே புரட்டிபோட்ட அந்த கண்ணி வெடி வெடித்தது.

அந்த தாக்குதலில் அப்பையா அண்ணையும் பங்களித்திருந்தார். அதன்பின்னர் கண்ணிவெடிகள் செய்வது மட்டுமின்றி வெவ்வேறு என்னென்ன வடிவங்களில் எல்லாம் வெடிபொருட்களை பயன்படுத்தி எதிரிக்கு இழப்பை ஏற்படுத்தலாம் என்று சிந்தித்து புதிது புதிதாய் ஏதாவது ஆராச்சிகளில் ஈடுபட்டு கொண்டேயிருப்பார் அது மட்டுமல்ல பல போராளிகளிற்கும் வெடிபொருட்கள் பற்றிய அறிவை ஊட்டி பயிற்சிகளும் ஆலோசனைகளும் வழங்குவார்.அது மட்டுமல்ல போராட்டத்தின் ஆயுதபாவனையில் புதியமுறைகளை புகுத்தவேண்டும் என்கிற ஆர்வமும் அவரிடம் இருக்கும். இன்று புலிகளின் இராணுவ அணியில் கிட்டு பீரங்கி படையணி குட்டிசிறி மோட்டார் என்று தனி படை பிரிவுகள் இயங்குகின்ற வேளை இவற்றுக்கெல்லாம் மூல காரணமாக அப்பையா அண்ணை இருந்தார் என்றாலும் மிகையாகாது.

புலிகள் மோட்டார் செல்களை தயாரிக்க தொடங்கிய காலம் அப்பையா அண்ணை மானிப்பாய் பகுதிகளில் இரு ஆயுததொழிற்சாலைகளை நிறுவி கண்ணிவெடிகள் மோட்டார் ஏவும் குளாய்கள் செல்கள் என்று என்று தாயாரிப்பில் இறங்கினார். அந்த காலகட்டங்களில் குறைந்தளவு தொழில் நுட்பவசதிகளுடன் உள்ளுரில் கிடைக்கும் பொருட்களை கொண்டே இவைகளையெல்லாம் தயாரிக்கவேண்டிய கட்டாயம்.எனவே எங்கு பழுதடைந்த ( C.T.B ) இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்துவண்டிகள் இருந்தாலும் அவற்றை கட்டியிழுத்து வந்து வெட்டி உடைத்து உருக்கி செல்லாக வடிவமைத்து கொண்டு போய் யாழ் கோட்டைபகுதியில் காவல் கடைமையில் இருக்கும் போராளிகளிடம் கொடுத்து சொல்லுவார் இண்டைக்கு யாரோ சிங்களவனுக்கு காலம் சரியில்லை தம்பி அடியடா என்பார் போராளிகளும் அதை வாங்கி செல்லை குளாயில் போட்டு பின்பக்கம் திரியை கொழுத்தி விடுவார்கள் அதுவும் அவை உள்ஊரிலேயெ குறைந்தளவு தொழில் நுட்பங்களுடன் தயாரிக்கபட்டிருந்ததால் சீறியபடி எழுந்து அங்கும் இங்கும் ஆடியபடிபோய் கோட்டை பகுதிக்குள் விழும்

வீழ்ந்ததம் சில வினாடிகளில் வெடித்து சத்தம் கேட்கும் போராளிகளும் அப்பையா அண்ணையும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்து துள்ளி குதிப்பார்கள்.சில நேரங்களில் அவை வெடிக்காமலும் போகும் ஆனாலும் சோர்ந்து போக மாட்டார் அடுத்தடைவை வெடிக்கும் என்று போராளிகளிற்கு நம்பிக்கையூட்டிவிட்டு போவார்.யாழில் புலிகளிற்கும் இலங்கை இராணுவத்திற்கும் முதன் முதலில் நடந்த கைதி பரிமாற்றம் ஒன்றின் போது அன்றைய புலிகளின் யாழ்மாவட்ட தளபதி கிட்ண்ணாவிடம் யாழ் கோட்டை முகாம் பொறுப்பதிகாரி கொத்தளாவளை சொன்னார் நிங்கள் அனுப்பிய அலுமினியம் கோட்டைக்குள் நிறைந்து கிடக்கிறது முடிந்தால் இரண்டு வாகனம் அனுப்புங்கள் எற்றி அனுப்பிவிடுகிறேன் அதுமட்டுமல்ல உங்கள் செல்லுங்கு பயந்து இருபத்தி நாலு மணி நேரமும் ஆமிகாரர் பாவங்கள் பங்கருக்குள்ளையே தான் வாழ்க்கை என்று சொல்லி சிரித்தார்.

ஒரு நாள் மானிப்பாய் வீதியில் தன்னுடைய 90 சிசி மோட்டார்சைக்கிளில் ஒரு போராளியுடன் போய் கொண்டிருந்தார். அங்கு ஒரு வாகனங்கள் திருத்துமிடத்தின் முன்னால் சில இரும்பு கழிவுபொருட்கள் குவித்து வைக்கபட்டிருந்தது அப்பையா அண்ணை பின்னால் இருந்த போராளியிடம் தம்பிடேய் ஒடிப்போய் கராச்காரரிட்டை அந்த இரும்புகள் தேவையா எண்டுகேள் தேவையில்லாட்டி ஒரு பையிலை அள்ளிகொண்டுவா என்றார்.அந்த போராளியோ அண்ணை எதுக்கு அந்த கறள்பிடிச்ச இரும்புகள் பேசாமல் நடவுங்கோ என்றான் .

ஆனால் அவரோ விடுவதாய் இல்லை தம்பி அதுகளை வெட்டி பண்டிக்கை ( பண்டி சாச் என்பது ஒரு கண்ணிவெடியின் பெயர்) போட்டு அடிச்சா ஆமிகாரன் உடைனை சாகாட்டிலும் பிறகு ஏற்பாக்கி வருத்தம் வந்து சாவான் என்றார்.இப்படி தமிழீழத்தின் பகுதிகளில் கிடைத்த சிறிய ஆணிகள் கம்பிகள் இரும்புகள் என்று எல்லாவற்றையுமே எதிரிக்கு எதிராய் எப்படி திருப்பலாம் என்று சிந்தித்து செயல்பட்டவர். அதுமட்டுமல்ல ஆரம்பத்தில் புலிகளிற்கு விமானப்படை ஒன்றை உருவாக்கும் கனவும் ஒன்று அவரிடம் இருந்தது அதற்கான தயாரிப்பு வேலைகளிலும் அவர் இறங்கி இரு விமானங்களையும் தயாரித்திருந்தார் அவையின் பரீட்சாத்தமான பறப்புகள் வெற்றியை தரவில்லை பின்னர் இந்திய படையின் வருகை அவரின் தொடர் முயற்சிக்கு முட்டுகட்டையாக அமைந்து விட்டது மட்டுமல்ல மானிப்பாயில் அமைந்திருந்த இவரது தொழிற்சாலையும் இந்திய படைகளால் தாக்கியழிக்கபட்டது.

ஆனாலும் இவரது தொடர் முயற்சியின் பயனாக கிடைத்த பல கண்டுபிடிப்புகளான கண்ணி வெடிகள் கடல்கண்ணிகள் மோட்டார் செல்கள் என்று புலிகள் இயக்கத்தின் போராட்டகாலத்தில் அவைகளிற்கு பெரிதும் உதவியது.பின்னர் 1997ம் அண்டு யெயசுக்குறு காலப்பகுதியில் அவரது தள்ளாதவயதில் மல்லாவி பகுதியில் வைத்து கடத்திகொண்டுபோய் கொலைசெய்யபட்டார். இன்று புலிகளின் படையணியினர் ஏவியதும் சீறியெழுந்து சென்று கண்ணிமைக்கும் நேரத்தில் இலக்கு தவறாமல் துல்லியமாக எதிரியின் இலக்கை அழிக்கும் நவீன ஆட்லெறி செல்களை பார்க்கும் போது அன்று அப்பையாண்ணை செய்து ஏவியதும் ஆகாயத்தில் ஆடியாடி போகும் அந்த அலுமினிய செல்களையும் அதன் பின்னால் இருந்த அவரது உழைப்பையும் அவரையும் ஒரு கணம் நினைவு கூருவோம்.

கலைஞர் நினைத்தால் இந்திய அரசின் போக்கை மாற்றலாம்..

7:17 AM, Posted by sathiri, One Comment

கலைஞர் நினைத்தால் இந்திய அரசின் போக்கை மாற்றலாம்..

கலைஞர் நினைத்தால் இந்திய அரசின் போக்கை மாற்றலாம்..
எழுதியவர் துரைரத்தினம்
Monday, 15 January 2007
- தொல்.திருமாவளவன் சுவிஸ் நிலவரம் பத்திரிகைக்கு வழங்கிய சிறப்பு செவ்வி - "கலைஞர் நினைத்தால் இந்திய அரசின் போக்கை மாற்றி ஈழத்தமிழர்களுக்கு விடிவை ஏற்படுத்த முடியும்''...
பொதுநிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு
விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் பொதுச்செயலாளர் தொல்.
திருமாவளவன் அவர்கள் அண்மையில் சுவிஸிற்கு வருகை
தந்திருந்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு மறுநாள்
காலையில் அவர் தாயகம் திரும்பிச்செல்லும் வழியில் சூரிச்
விமானநிலையத்தில் நிலவரம் இதழுக்காக அவரை சந்தித்தேன்.
குறுகிய நேரத்தில் அவர் வழங்கிய சிறப்பு செவ்வியை இங்கே
தருகிறோம்.
( இரா.துரைரத்தினம் )

கேள்வி: -
தமிழக அரசியலில் எப்போது நுழைந்தீர்கள், ஈழத்தமிழர் விவகாரத்தில் அதிகஈடுபாடு கொள்ளவைத்த காரணம் என்ன?
பதில்:-
1990களில்தான் விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பை உருவாக்கி அரசியல் கட்சியாக செயற்பட்டு வருகிறோம். 1980களிலிருந்து ஈழத்தமிழர் விவகாரத்தில் ஈடுபாடு கொண்டு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறேன். தமிழீழம் விடுதலைபெற வேண்டும் என விரும்புகிற பல்வேறு அமைப்புக்களில் விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பும் ஒன்று . உலகத்தில் பரந்து வாழும் தமிழர்களுக்கு ஒரு தனிநாடு வேண்டும் அதை விடுதலைப்புலிகளால்தான் வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு தொடர்ந்து எமது தார்மீக ஆதரவை வழங்கிவருகிறோம்.
கேள்வி :_நீங்கள் இப்போது ஆளும் தி.மு.க கூட்டணியில் இருக்கிறீhகள் அதில் இணைந்தபோது தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி சொன்னார் சேரவேண்டிய இடத்தில் நீங்கள் சேர்ந்திருப்பதாக இதன் உள்ளார்ந்த அர்த்தம் என்ன?
பதில்:-
இனம் இனத்தோடு சேர்ந்திருப்பதாக கலைஞர் சொன்னார். தமிழ் இனத்தின் மீது தி.மு.கவுக்கு மிகுந்த ஈடுபாடு இருக்கிறது. விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பும் தமிழ் இன விடுதலையில் அக்கறையோடு செயற்படுகிறது. அதனால்தான் அவர் இனம் இனத்தோடு சேர்ந்திருப்பதாக கூறினார் என நினைக்கிறேன்.
உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.கவுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அதிலிருந்து விலகி தி.மு.கவில் சேர்ந்தோம். தங்களுடைய வேட்பாளர்களை விலக்கி எங்களுக்கு இடங்களை கலைஞர் ஒதுக்கி தந்தார். இப்போது கடலூர் விழுப்புரம் மாவட்டங்களில் கணிசமான வெற்றி பெற்று நகரசபை தலைவர் துணைத்தலைவர் உட்பட பலபதவிகளை பெற முடிந்தது. எனவே கலைஞரின் அரவணைப்பு எங்களை வெகுவாக ஊக்கப்படுத்தியிருக்கிறது.
கேள்வி :-
ஈழத்தமிழர் விவகாரத்தில் முதலமைச்சர் கருணாநிதி அனுதாபம் காட்டினாலும் உரியமுறையில் அழுத்தம் கொடுக்காது ஒரு நளுவல் போக்கை கடைப்பிடிக்கிறார் மத்திய அரசின் நிலைப்பாடுதான் என் நிலைப்பாடு என சொல்லி நளுவிக்கொள்வதாக சில விமர்சனங்கள் வருகின்றனவே?
பதில்:-
கலைஞர் அவர்கள் வெளிப்படையாகவும் அழுத்தமாகவும் தமிழீழத்தை ஆதரிக்க வேண்டும், இந்திய அரசை வற்புறுத்த வேண்டும் என தொடர்ந்து சொல்லிவருகிறோம். காங்கிரஷ் உள்ளிட்ட தோழமைக்கட்சிகளுடன் தான் தி.மு.க ஆட்சி அமைத்திருக்கிறது. இந்த நிலையில் ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்வது இடையூறு இல்லாது ஆட்சியை நடத்துவது என்ற அடிப்படையில் இக்கருத்தை கலைஞர் சொல்லியிருக்கலாம். நாங்கள் தோழமையுடன் கலைஞருக்கு வலியுறுத்தி வருகிறோம். உங்கள் வெளிப்படையான ஆதரவு தெரிவிக்கப்பட்டால் மட்டுமே தமிழீழ சிக்கலுக்கு விரைந்து தீர்வு காணமுடியும் என்றும் திராவிட முன்னேற்ற கழகம் தமிழீழத்தை வெளிப்படையாக ஆதரிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தி.மு.கவின் நிலைப்பாட்டைத்தான் மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என நாங்கள் வற்புறுத்தி வருகிறோம்.
கேள்வி:-
ஈழத்தமிழர் விவகாரத்தில் எத்தகைய அளுத்தத்தை திமுக மத்திய அரசுக்கு கொடுக்க வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கீர்கள்?
பதில்:-
இந்திய அரசு தமிழீழத்திற்கு ஆதரவாக செயற்படக்கூடிய வகையிலே தமிழீழத்தை வென்றெடுப்பதற்கு உறுதுணையாக நிற்கக்கூடியவகையிலே தி.மு.கஅரசு வற்புறுதத வேண்டும் என விரும்புகிறோம். ஏனென்றால் இந்திய அரசு சிங்களவர்களுக்கு ராடார் போன்ற கருவிகளை கொடுத்து உதவிவருகிறது. அதிவேக விமானங்களை இயக்குவதற்கான பயிற்சிகளை வழங்கிவருகிறது. இவ்வாறான உதவிகளை சிங்களவர்களுக்கு செய்வதன் மூலம் சிங்களவர்கள் நிமிர்ந்து நின்று தமிழ் இனத்தை அழித்து வருகிறார்கள். தமிழாகளை அடக்கி ஒடுக்கி ஆட்சி நடத்த நினைக்கிறார்கள். ஆகவே தமிழர்களுக்கு விரோதமாக இந்திய அரசு செயற்படக்கூடாது. தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு இந்திய அரசு உறுதுணையாக நிற்கவேண்டும் என தி.மு.க இந்திய மத்திய அரசை வற்புறுத்த வேண்டும்.
கேள்வி:-
சென்னையில் ஈழத்தமிழர் ஆதரவு அமைப்புக்கள் நடத்துகின்ற போராட்டங்களை எந்த அளவிற்கு மத்திய அரசு கவனத்தில் எடுத்துக்கொள்கிறது?
பதில் :-
தமிழகத்தில் பெரும்பாலும் அனைத்துக்கட்சிகளும் வெளிப்படையாக தமிழீழ விடுதலைப்போராட்டத்தை ஆதரித்து கவனஈர்ப்பு போராட்டங்களை நடத்திவருகிறன. இந்திய அரசு இவற்றை உன்னிப்பாக கவனித்து வந்தாலும் அவற்றை பொருட்படுத்துவதாக தெரியவில்லை. சிங்கள அதிபர் ராஜபக்ச இந்தியாவுக்கு வந்தபோது அவரை வரவேற்கக்கூடாது திருப்பி அனுப்ப வேண்டும் என போராட்டங்களை நடத்தினோம். ஆனால் இந்திய அரசு அதை பொருட்படுத்தவில்லை என்பது தமிழகத்தில் உள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும் பெரும் கவலைதான். இந்தியாவில் உள்ள தமிழ் மக்களை இந்திய அரசு மதிக்கவில்லை அவர்களின் உணர்வுகளை மதிக்கவில்லை என வேதனைப்படுகிறோம். இவ்வாறு தமிழக மக்களின் உணர்வுகளை இந்திய மத்திய அரசு மதிக்க தவறினால்…………….தொடர்ந்தும் மக்கள் பொறுமை காப்பார்கள் என மத்திய அரசு நினைக்க கூடாது.
வாகரைப்படுகொலை நடந்த போது இந்திய அரசு இனியும் மௌனம் காப்பது சரியல்ல என கலைஞர் தெரிவித்திருந்தார். தமிழீழம் தவிர்க்க முடியாத தேவை என்பதையும் கலைஞர் தெரிவித்திருக்கிறார். கலைஞர் நினைத்தால் இந்திய அரசின் போக்கை மாற்றி ஈழத்தமிழர்களுக்கு விடிவை ஏற்படுத்த முடியும். இதற்காக கலைஞரை தொடர்ந்து வலியுறுத்;தி வருகிறோம்.
கேள்வி:-
ஈழத்தமிழர் விடயத்திலும் விடுதலைப்புலிகள் விடயத்திலும் எதிர்புணர்வுகளை காட்டிவந்த ஜெயலலிதா தற்போது அமைதியாக இருக்கிறார். ஏதாவது மனமாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறதா அல்லது அவர் பதவியில் இல்லாத காரணத்தால் மௌனமாக இருக்கிறாரா ?
பதில்:-
மனமாற்றங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. நாங்கள் அ.தி.மு.க கூட்டணியில் இருந்த போது செஞ்சோலை படுகொலைலையை கண்டித்து அறிக்கை விட வேண்டும் என கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஜெயலலிதா அக்கொலையை கண்டித்து அறிக்கை விட்டார். கோவையில் சிங்கள காவல்துறையினருக்கான பயிற்சியை கண்டித்து விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பு சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தபோது எங்களுடன் சேர்ந்து அதிமுக உறுப்பினர்கள் 60பேரும் வெளிநடப்பு செய்தார்கள். இவை எல்லாம் அதிமுகவின் நிலைப்பாட்டில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றங்கள்.
கேள்வி :-
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் மாவீரர் தினஉரையில் ஸ்ரீலங்கா அரசு தமிழ் மக்களுக்கு தமிழீழ தனியரசு என்ற இலக்கை நோக்கி செல்வதற்கான பாதையை மட்டுமே திறந்து விட்டிருப்பதாகவும் தமிழ் மக்கள் சுதந்திர தனியரசு அமைப்பதற்கு நீதியின் வழியில் செயற்படும் நாடுகளும் சர்வதேச அமைப்புக்களும் சுதந்திர தமிழீழ தனியரசை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் விடுத்திருந்தார். இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன தமிழக மக்கள் சுதந்திர தமிழீழ தனியரசு பற்றி என்ன கருத்துக்கொண்டிருக்கிறார்கள்?
புதில்:-
ஒற்றையாட்சியின் கீழ் ஈழத்தமிழர்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்படும் என்பது ஏமாற்றுவேலை. அதை ஒரு போதும் தமிழ் மக்கள் ஏற்க மாட்டார்கள.; சர்வதேச சமூகத்தின் நன்மதிப்பை பெறுவதற்காக தமிழீழ விடுதலைப்புலிகள் மீது குத்தப்பட்ட பயங்கரவாத முத்திரையை துடைப்பதற்காக தமிழீழ தேசிய தலைவர் சமாதான பேச்சுவார்த்தை போர் நிறுத்தம் என்பனவற்றிற்கு உடன்பட்டார்கள்.சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து தமிழீழத்தை அங்கீகரிக்கும் என்ற நம்பிக்கையில் இந்த உடன்பாட்டிற்கு அவர் ஒத்துக்கொண்டார்கள். சமாதானத்திற்கு முதல் அடித்தளத்தை அமைத்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டது விடுதலைப்புலிகள்தான். ஆனால் சர்வதேச சமூகம் சிங்களவர்கள் பரப்புகிற அவதூறுகளை பொய் உரைகளை நம்பிக்கொண்டு விடுதலைப்புலிகள் மீது தடை விதிக்கும் போக்கு தொடர்கிறது. இவ்வாறான சூழ்நிலையில்தான் இனி பேச்சுவார்த்தையில் பயனில்லை. ஆறு ஆண்டுகள் கடத்தியது வீணாகிவிட்டது ஆகவே பேச்சுவார்த்தைக்கு காலத்தை ஒதுக்குவது வீணான வேலை என்ற அடிப்படையில் இனி பேச்சுவார்த்தை என்ற பழைய பாதையை பின்பற்ற போவதில்லை. தமிழீழ தனியரசை அமைப்பதே ஒரே இலக்கு எனவே நீதியின் படி நடக்கிற சர்வதேச நாடுகளே தமிழீழத்தை அங்கீகரியுங்கள் என்றும்
புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழ் மக்களே தொடர்ந்தும் எங்களுக்கு ஆதரவு தாருங்கள் என்றும் தமிழ் நாட்டு தமிழர்களே தொடர்ந்து எங்களை ஊக்கப்படுத்துங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
தமிழீழ தனியரசை அமைப்பதற்கான பிரகடனமாகவும் அந்த உரை அமைந்திருக்கிறது.

கேள்வி:-
தலைவரின் உரைபற்றி தமிழகத்தில் இருந்து வெளிவரும் பிராமணர்களின் ஊடகங்கள் என வர்ணிக்கப்படும் இந்து போன்ற நாளிதழ்கள் என்ன கருத்தை தெரிவித்திருக்கிறார்கள். ஏனைய தமிழக ஊடகங்கள் என்ன கருத்தை கொண்டிருக்கின்றன.
பதில்:-
இந்து துக்ளக் போன்ற ஊடகங்கள் எந்த காலத்திலும் தமிழீழத்தை அங்கீகரித்ததில்லை. விடுதலைப்புலிகளை விடுதலைப்போராளிகளாக பார்த்ததும் இல்லை. இன்றைக்கும் அதே மனநிலையில்தான் இருக்கிறார்கள். உலகநாடுகள் ஒன்று சேர்ந்து தமிழீழத்தை அங்கீகரித்தாலும் இவர்கள் அங்கீகரிக்க மாட்டார்கள். ஆகவே இவர்களிடம் எதையும் எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் எத்தனையோ தமிழ் ஊடகங்கள் இன்று தமிழீழத்தை ஆதரித்து எழுதிவருகின்றன. அவ்வாறான ஒரு ஆதரவு தமிழ் நாட்டில் உள்ள ஊடகங்களில் இருக்கிறது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.
கேள்வி:-
தமிழ் நாட்டில் ஈழத்தமிழருக்கோ தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கோ ஆதரவு இல்லை என அண்மையில் இந்து பத்திரிகை ஆசிரியர் ராம் பி.பி.சிக்கு வழங்கிய நேர்காணலில் கூறியிருக்கிறாரே?
பதில்:-
சிங்களவர்களின் ஊதுகுழலாக சிலர் தமிழ் நாட்டில் இருக்கிறார்கள். இது அவர்களின் வழக்கமான பொய்யுரை. இதைப்பற்றி நாம் பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இவர்களுக்கு தமிழ் நாட்டில் செல்வாக்கே இல்லை. இவர்கள் என்ன பொய்யை கூறுகிறார்கள் என பார்ப்பதற்காக சிலர் இவர்களின் பத்திரிகைகளை வாங்கி படிக்கிறார்கள் அவ்வளவுதான்.
கேள்வி :-
ஈழத்தமிழர்களின் விவகாரம் தொடர்பாக மத்தியஅரசின்
போக்கிற்கு டெல்லியில் இருக்கும் சில கொள்கை வகுப்பாளர்களும் தமிழர்களுக்கு எதிரான எதிர்ப்பு உணர்வு கொண்டவர்களும் தான் காரணம் என கூறப்படுகிறதே?
பதில் :-
இதில் எந்த சந்தேகமும் இல்லை. அதிகாரிகளைக் கொண்டு ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை அணுகுவது என்பது இந்திய அரசு மேற்கொண்டிருக்கிற தவறான நிலைப்பாடு . அதிகாரிகளான சிவசங்கர் மேனன், நாராணயன் போன்றவர்கள் அடிப்படையிலேயே தமிழீழ விரோத போக்குடையவர்களாக இருக்கிறார்கள் என்பது நாடறிந்த உண்மை. அவர்கள் தவறான வழிகாட்டுதல்களை தொடர்ந்து வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். தமிழீழம் கூடாது என்கிற கருத்தை நிலைநிறுத்த பார்க்கிறார்கள். இதன் விளைவாகத்தான் இந்திய அரசு சிங்களவர்களுக்கு ஆதரவாக உறுதுணையாக செயற்படுகிறது. ஆனால் தமிழக மக்களுடைய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஒரு மாற்று சிந்தனையை இந்திய அரசுக்கு ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையோடு செயற்பட்டு வருகிறோம்;.
கேள்வி:-
இந்திய விஜயம் தனக்கு வெற்றியை அளித்திருப்பதாக மகிந்த ராஜபக்ச கூறியிருக்கிறாரே, தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாது இந்திய அரசு சில உதவிகளை இலங்கைக்கு வழங்க சம்மதித்திருக்கிறதே?
பதில் :-
அவருடைய பார்வையில் வெற்றிதான். ஏனெனில் தமிழ் நாட்டு மக்கள் போர்க்கோலம் பூண்டு எதிர்ப்புக்களை தெரிவித்தும் ராஜபக்சவை திருப்பி அனுப்புங்கள் என்று கூக்குரல் போட்டும் டெல்லியில் வைகோவும் தமிழகத்திலே விடுதலைச்சிறுத்தைகள் பாட்டாளிமக்கள் கட்சி பழநெடுமாறனின் தமிழர் தேசிய ஒருங்கிணைப்பு குழு என பல்வேறு அமைப்புக்கள் போராட்டங்களை நடத்தியும் இந்திய ஆட்சியாளர்கள் ராஜபக்சவை வரவேற்று சிறப்பு செய்தது மணிசங்கர் ஐயர் போன்றவர்கள் திருமணவைபவத்திற்கு அவர்களை அழைத்தது இவை எல்லாம் ராஜபக்சவுக்கு தென்பைக்கொடுத்திருக்கிறது. ஈழத்தில் தமிழர்களை படுகொலை செய்தாலும் தங்களை இந்தியா வரவேற்கும் என்ற நம்பிக்கை ராஜபக்சவுக்கு இருக்கிறது. எனவே ராஜபக்ச இந்திய விஜயம் தனக்கு வெற்றி என கொண்டாடாமல் வேறு என்ன செய்வார். ஆக இந்திய ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கு எதிரான சிந்தனையை கொண்டிருக்கிறார்கள் என்பதை ராஜபக்ச உணர்ந்திருக்கிறார்.
கேள்வி:-
நாராயணன் போன்ற இந்திய அரசின் வெளியுறவு கொள்கை ஆலோசகர்கள் கொள்கை வகுப்பாளர்கள் ஈழத்தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருப்பதற்கான காரணம் என்ன?
பதில்:-
தமிழீழ தனியரசு உருவானால் தமிழ்நாட்டு தமிழ் மக்கள் மத்தியில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தும் இந்திய இறையாண்மைக்கு இடையூறாக அமையும் என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கிறது. சிவசங்கர் மேனன் நாராயணன் போன்றவர்கள் திராவிட எதிர்ப்புணர்வு கொண்டவர்கள். திராவிட தமிழர்கள் பலமடைந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தை அடிப்படையில் கொண்டிருக்கிறார்கள். தமிழீழம் மலரக்கூடாது என்கிற எண்ணம் இந்திய ஆட்சியாளர்களிடம் அதிகாரிகளிடம் ஆழமாக வேரூன்றி இருக்கிறது.
கேள்வி:-
தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு ஆதரவாக தனித்தனியாக போராட்டங்களை நடத்துவதை விட அனைத்துக்கட்சிகளையும் இணைத்து பலமான சக்தியாக இருந்துகொண்டு போராட்டங்களை முன்னெடுத்தால் என்ன?
பதில்:-
எல்லா கட்சிகளும் சேர்ந்துதான் போராடவேண்டும் என்ற அவசியம் இல்லை. தனித்தனியே ஒவ்வொரு கட்சியும் கண்டனங்களையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தலாம். ஆனால் திமுக சொன்னால் இந்திய மத்திய அரசு ஏற்றுக்கொள்ள கூடிய சூழல் இருக்கிறது. கலைஞர் நினைத்தால் மத்திய அரசின் நிலைப்பாட்டை மாற்ற முடியும். கலைஞரைப்பொறுத்தவரை தமிழீழத்திற்கு எதிரானவர் அல்ல. அவரது கட்சியை சேர்ந்தவர்களும் தமிழீழத்திற்கு ஆதரவாகத்தான் செயற்பட்டு வருகிறார்கள். கலைஞரின் மகள் கனிமொழி தலைமையில் தமிழீழ ஆதரவு போராட்டம் தமிழகத்தில் நடைபெற்றிருக்கிறது.


கேள்வி:-
தமிழகத்தில் இருக்கும் ஈழத்தமிழ் அகதிகளின் நிலை என்ன?
பதில் :-
அகதிகளின் நிலை மிக வேதனைக்குரியது. அதை நேரில் பார்த்தால்தான் தெரியும். அவர்கள் பல நெருக்கடிகளுக்கும் வசதியீனங்களுக்கும் அவலங்களுக்கும் உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். 1983லிருந்து தொடர்ச்சியாக ஈழத்தமிழ் அகதிகள் தமிழகத்திற்கு வந்து தங்கியிருக்கிறார்கள். இப்போதும் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை சந்திப்பதோ அவர்களுக்காக குரல் கொடுப்பதோ இதுவரையில் தமிழகத்தில் நடக்காமல் இருந்தது. முதன்முறையாக விடுதலைச்சிறுத்தைகள் அமைப்புத்தான் அகதிமுகாம்களுக்கு சென்று அவர்களது நிலையை கண்டறிந்து ஒரு அறிக்கையை தமிழக அரசிற்கு வழங்கினோம். இதன் பின்னர் முதலமைச்சர் இரு அமைச்சர்களை அனுப்பி அறிக்கைகளை பெற்றார். இந்த அறிக்கைகளின் அடிப்படையில் அகதிகளுக்கு இதுவரை காலமும் கொடுக்கப்பட்டு வந்த உதவித்தொகையை அதிகரிப்பதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் வசிக்கின்ற முகாம்களில் மின்சார வசதி இல்லை. குடிநீர்வசதி சரியாக இல்லை. இவற்றை சீர்செய்ய வேண்டும் என அறிக்கையில் கேட்டிருந்தோம். அகதிகள் அங்கே வேலை வாய்ப்பு பெறுவதில் சிக்கல் இருக்கிறது. ஒரு முகாமிலிருந்து இன்னொரு முகாமுக்கு உறவினர்களை பார்க்க போவதற்கு கூட அனுமதி மறுக்கப்படுகிறது. தனித்தனியாக வௌ;வேறு முகாமில் இருப்பவர்கள் ஒன்றாக சேர்ந்திருப்பதில் சிக்கல் இருக்கிறது. சிலரை சிறப்பு முகாம் என்ற பெயரில் அடைத்து விடுகிறார்கள். அவர்கள் பிணையில் கூட வெளிவரமுடியாத நிலை இருக்கிறது. ஆக ஈழத்தமிழ் அகதிகள் விடயத்தில் ஒரு கடும் போக்கை இந்தியா கடைப்பிடித்து வருகிறது. இதற்கு காரணம் அகதிகளை எப்படி நடத்துவது என்ற ஐ.நா ஒப்பந்தத்தில் இந்தியா இதுவரை கையொப்பம் இடவில்லை. எனவே ஐ.நா.வின் அகதிகள் தொடர்பான ஆவணத்தில் இந்தியா கையொப்பம் இடவேண்டும் அதன் அடிப்படையில் ஈழத்தமிழ் அகதிகளுக்கு இந்திய அரசு உதவ வேண்டும் என்பது விடுதலைச்சிறுத்தைகளின் கோரிக்கையாக இருக்கிறது.
கேள்வி:-
உலகமெல்லாம் பரந்து வாழுகின்ற தமிழர்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் சொல்லவிரும்புகின்ற செய்தி என்ன?
பதில் :-
சர்வதேச சமூகம் தமிழீழ விடுதலைப்போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும். சிங்கள இனவெறியர்களின் பொய்யுரைகளை அவதூறுகளை நம்பகூடாது. விடுதலைப்புலிகள் சர்வதேச சட்டவிதிகளுக்கு ஒரு போதும் இடையூறாக இருந்ததில்லை. அவர்கள் பொதுமக்களுக்கு ஒரு போதும் தீங்கு விளைவித்ததில்லை. தங்களுடைய இனத்தின் விடுதலைக்காக போராடுகின்ற விடுதலை அமைப்பு என்பதை சர்வதேச சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழினத்தை அழிக்கும் சிங்கள படைகளோடுதான் விடுதலைப்புலிகள் மோதுகிறார்கள். எனவே விடுதலைப்புலிகள் பயங்கரவாத அமைப்பு என்ற எண்ணத்தை சர்வதேச நாடுகள் கைவிட வேண்டும். பயங்கரவாத அமைப்புக்கள் வேறு. விடுதலைப்போராட்ட அமைப்புக்கள் வேறு என்பதையும் சர்வதேசம் சரியாக எடை போட வேண்டும்.
உலகமெல்லாம் பரந்து வாழுகின்ற தமிழர்கள் விடுதலைப்போராட்டத்திற்கு உறுதுணையாக இருக்கிறார்கள். இந்த ஒற்றை ஆதரவு மட்டும்தான் இன்று விடுதலைப்புலிகளுக்கு கிடைத்து வருகிற பெரிய பலம். சிங்கள அரசுக்கும் சிங்களவர்களுக்கும் பல நாடுகள் பல்வேறு உதவிகளையும் செய்து வருகின்றன. ஆனால் எந்த நாடும் எந்த அரசும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இல்லை. சிங்களவர்களுக்கு ஆயுத உதவிகளை மட்டுமல்ல பொருளாதார உதவிகளையும் பல நாடுகள் செய்கின்றன. எனவே ஆதரவு என விடுதலைப்புலிகளுக்கு இருக்கின்ற ஒரே ஒரு தளம் புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழர்களிடமிருந்து கிடைக்கின்ற உதவிதான். ஆகவே தமிழீழ தனியரசை அமைப்பது ஒன்றுதான் எமது இலட்சியம் என்று தமிழீழ தேசியத்தலைவர் பிரகடனப்படுத்தியிருக்கின்ற நிலையில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தங்களது பேராதரவை விடுதலைப்புலிகளுக்கு வழங்க வேண்டும்.
அதிகாரிகளைக் கொண்டு ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை அணுகுவது என்பது இந்திய அரசு மேற்கொண்டிருக்கிற தவறான நிலைப்பாடு . அதிகாரிகளான சிவசங்கர் மேனன், நாராணயன் போன்றவர்கள் அடிப்படையிலேயே தமிழீழ விரோத போக்குடையவர்களாக இருக்கிறார்கள் தமிழீழம் கூடாது என்கிற கருத்தை நிலைநிறுத்த பார்க்கிறார்கள். இதன் விளைவாகத்தான் இந்திய அரசு சிங்களவர்களுக்கு ஆதரவாக உறுதுணையாக செயற்படுகிறது
உலகமெல்லாம் பரந்து வாழுகின்ற தமிழர்கள் விடுதலைப்போராட்டத்திற்கு வழங்கிவருகின்ற இந்த ஒற்றை ஆதரவு மட்டும்தான் இன்று விடுதலைப்புலிகளுக்கு கிடைத்து வருகிற பெரிய பலம்.
(நிலவரம் - சுவிஸ்)
படப்பிடிப்பு து.கீர்த்திகன்

நிழலாடும் நினைவுகள் 4

6:50 AM, Posted by sathiri, One Comment

சுவிசில் இருந்து வெளியாகும் நிலவரம் பத்திரிகைக்காக எழுதியது

இது ஈழத்தில் இந்தியபடையின் இருண்ட காலத்தில் ஒரு போராளியின் உண்மை கதைகதையின் காலம் 1988ம் ஆண்டு சித்திரை மாதம்யாழ்குடாவின் சண்டிலிப்பாய் கிராமம் ஒருநாள் மாலை நேரம் திடீரென துப்பாக்கிவெடிச்சத்தங்கள் கேட்கிறது இந்த சத்தங்கள் அந்த கிராமத்திற்கு ஏன் ஈழத்தின் எந்த கிராமத்திற்கும் புதியதல்ல சத்தம் கேட்டசில நிமிடங்கள் மக்கள் பரபரப்பாவார்கள் ஏதாவது ஒருமரணசெய்தி வரும் அது போராளியாகவும் இரக்கலாம் பொதுமக்களாகவும் இருக்கலாம்.சில நிமிடங்களில் மக்கள் வழைமை போல தங்கள்வேலைகளை பார்க்கபோய்விடுவார்கள் இது தினமும் நடக்கும் நிகழ்ச்சிகள் என்பதால் எல்லோருக்கும் பழகிபோய்விட்டது.

அன்றும் அப்படித்தான் சத்தம் கேட்டதும் மக்கள் ஒருவரையொருவர் பார்த்து "யாரோ மாட்டுபட்டிட்டாங்கள் போலை வெடிவிழுந்தது ஆமிக்கா பெடியளுக்கா எண்டு தெரியேல்லையெண்டு " என்று விட்டு தங்கள் வேலைகளில் கவனமானார்கள்.ஆனால் அந்த கிராமத்தில் இந்தியபடை காலத்தின் இக்கட்டான சூழலிலும் போராளிகளிற்கு ஆதரவளித்து அரவணைத்த சில வீடுகளில் ஒரு வீட்டில் அந்த தாய் மட்டும் சத்தம் கேட்டதுமுதல் நிம்மதியில்லாமல் வீட்டு படைலையை எட்டி பார்ப்பதும் வீட்டிற்குள் போவதுமாக இருந்தார்.

அவர் மனதில் ஒரு பதை பதைப்பு இண்டைக்கு பெடியள் வாற நாள் வெடிச்சத்தம் வேறை கேட்டது யார் வந்தாங்களோ அவங்களிற்கு ஏதும் நடந்துதோ கடவுளே அவங்களுக்கு ஒண்டும் நடந்திருக்க கூடாது என்று மனதில் நினைத்தபடி மகளை பார்த்து சொன்னார் பிள்ளை ரதி ஒருக்கா றோட்டு வரைக்கும் போய் பார் பிள்ளை என்று மகளை சொன்னவர் பின்னர் வேண்டாம் பிறகு உன்னை தேடி நான் வர ஏலாது நானே போய் பாக்கிறன் என்றவர் வீட்டை விட்டு ஓழுங்கையால் வந்து பிரதான வீதியை எட்டிப்பார்த்தார் வீதியில் சன நடமாட்டம் இருக்கவில்லை ஏதாவது செய்தி கேட்பம் எண்டா வீதியிலையும் யாரையும் காணவில்லையென நினைத்தபடி விட்டை நோக்கி நடந்தார்.

சில நிமிடங்களின் பின்னர் வெள்ளை கைத்துப்பாக்கியை ஒருகையில் இறுக்கி பிடித்தபடி அவனது சேட்டை களற்றி அதில் கைக்குண்டை சுற்றி இடுப்பில் கட்டியபடி தாண்டி தாண்டி மூச்சிரைக்க ஓடிவந்தான். அவனது உடல் எங்கும் கீறல் காயங்கள் அதிலிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. அவனை கண்டதும் அந்த தாயார் பதறியபடி தம்பி என்னடா அப்பவும் சத்தம் கேட்கேக்கை நான் நினைச்சனான் நீங்களா தான் இருக்குமெண்டு உனக்கு வெடிபட்டிட்டுதே என்றபடி அவனை அணைத்து பிடித்தபடி கேட்கவும் வெள்ளைக்கு மூச்சிரைத்ததில் பேச்சு வரவில்லை அப்படியே நிலத்தில் அமர்ந்தபடி கையால் தனக்கு ஒன்றுமில்லை என்று சைகை காட்டியவன் த...தண்ணி என்று தட்டுதடுமாறியபடி கேட்டான்.

அதற்கிடையில் மகள் ரதி தண்ணீரை கொண்டோடிவந்து கொடுக்கவும் அதை வாங்கி மடக்கு மடக்கென்று குடித்தவன் மிகுதி தண்ணீரை தலையில் ஊற்றிவிட்டு கொஞ்சம் அமைதியடைந்தவன் . நடந்ததை சொன்னான் அம்மா நானும் பிறேமும்(பிறேம் மானிப்பாயை சேர்ந்த போராளி இவனிற்று திக்குவாய் எனவே இவனை எல்லோரும் கொன்னை பிறேம் என்றுதான் அழைப்பார்கள்)அளவெட்டிக்கு போய் தும்பனை சந்திச்சிட்டு வந்து கொண்டிருந்னாங்கள் தொட்டிலடியிலை மெயின்றோட்டை கடக்கேக்கை ஆமிகாரன் திடீரெண்டு வந்திட்டாங்கள் எங்களை அவங்கள் மறிக்க நாங்கள் சைக்கிளை போட்டிட்டு ஒரு வீட்டு வேலியாலை பாஞ்சிட்டம். அவங்களும் சுட தொடங்கிட்டாங்கள்.

நல்ல வேளை வெடி பிடிக்கேல்லை பிறேம் வேறை பக்கத்தாலை ஓடிட்டான் அவனுக்கும் ஒண்டும் நடந்திருக்காத எண்டுதான் நினைக்கிறன். என்ரை கஸ்ரகாலம் நான் பாஞ்ச வேலி முள்முருக்கை வேலி அதுதான் மேலெல்லாம் கீறி போட்டிது என்று அந்த வேதனையும் சிரித்தபடி சொன்னான் .அவனின் பெயர் வெள்ளை என்று எல்லோரும் அழைத்ததே அவனது நிறத்தால்தான். நல்ல வெள்ளை உயரமான உறுதியான உடல். காலிலையும் என்னவோ குத்தி போட்டுது என்றபடி காலை திருப்பி பார்த்தான் இரத்தம் கசிந்து கொண்டிருந்தது.

பொறுங்கோ அண்ணை நான் பாக்கிறன் என்றபடி ரதி அவனது காலை பார்தாள் கட்டை ஏதோ குத்தியிருக்கு பொறுங்கோ தண்ணி கொண்டவாறன் காலை கழுவிட்டு பார்ப்பம் என்றபடி தண்ணீரால் காலை சுத்தம் செய்து பார்த்தாள். ஒரு தடியொன்று ஆழமாக குத்தியிருந்தது அதை மெதுவாக எடுத்துவிட்டு அந்த காயத்திற்கு கைவசம் அவர்களிடம் இருந்த கைமருந்தாக கோப்பிதூளை வைத்து கட்டிவிட்டு சரி மேலெல்லாம் கீறியிருக்கு மேலை கழுவிட்டு வாங்கோ நான் தேத்தண்ணி போடுறன் என்றவாறு ரதி அடுப்படி பக்கம் போய்விட ஒரு சேட்டையும் சாரத்தையும் கொடுத்து அந்த தாயார் சொன்னார் தம்பி உன்ரை சாரமும் கிழிஞ்சிருக்கு இந்தா இதை மாத்து இந்த உடுப்பகளை போட இந்த வீட்டிலை இனியார் இருக்கினம் என்று அவள் தனது கணவரின் உடைகளை கொடுத்தார்.

காரணம் அந்த தாயாரின் கணவனையும் ஏற்கனவே இந்திய இராணுவம் வீதியில் வைத்து சுட்டுகொன்றுவிட்டிருந்தது.༢r />??ுளித்துவிட்டு உடைகளை மாற்றி கொண்டு தனது கைத்துப்பாக்கியை இடுப்பில் செருகிகொண்டு கண்ணாடியின்முன் நின்று பார்த்த வெள்ளை சிரித்தபடி சொன்னான் அம்மா சேட்டு சரியான பெரிசா இருக்கு ஏதோ காச்சல் காரர் மாதிரியிருக்கு எண்டாலும் பரவாயில்லை இதுக்கை பிஸ்ரல் என்ன ? ஏ.கே யையே மறைச்சு கொண்டு போகலாம் என்றவும்.எல்லோரும் சிரிக்கவும் அந்த தாயாரும் சிரித்தபடி சொன்னார் அடுத்த முறை உனக்கு அளவான சேட்டு தைச்சு வைக்கிறன் என்றபடி மகளை பார்த்து சொன்னார் பிள்ளை வெள்ளையின்ரை அளவை எடுத்து வை நான் பிறகு துணி வாங்கி தைக்கிறன் என்றார்.

உங்களுக்கு எதுக்கம்மா கரைச்சல் நான் வசதி கிடைச்சா அடுத்தமுறை துணி வாங்கி கொண்டு வாறன் இல்லாட்டி யாரிட்டையாவது குடுத்து விடுறன் தைச்சு வையுங்கோ என்றபடி தேனீரை குடித்து விட்டு சரி நான் போட்டு வாறன் சிலநேரம் பிறேம் எங்கையாவது ஓடி ஒழிச்சு இங்கை வந்தா சொல்லுங்கோ நான் ஏழாலைக்கு போறன் அங்கை வரச்சொல்லுங்கோ என்றபடி காலில் கட்டை குத்திய வலியை தாங்கியபடி தாண்டி தாண்டி நடக்க தொடங்கினான் வெள்ளை.அதை பார்த்த ரதி அவனிடம் அண்ணை இப்பிடி தாண்டி கொண்டு என்ணெண்டு ஏழாலைக்கு போகபோறீங்கள் வேணுமெண்டா என்ரை சைக்கிளை கொண்டு போங்கோ என்றவும் வேண்டாம் தங்கச்சி இடையிலை எங்கையாவது ஆமிமறிச்சால் நான் சைக்கிளை போட்டிட்டுதான் ஒடவேணும் பிறகு சைக்கிளை வைச்சு உங்களை அடையாளம் பிடிச்சாங்கள் எண்டால் பிறகு உங்களிற்கு சைக்கிளும் இல்லை உங்களையும் கொண்டுபோடுவாங்கள் உங்களுக்குதான் கரைச்சல் என்றபடி அந்த ஒழுங்கையை கடந்து மறைந்தான்.

சிலநாட்கள் கழித்து பிறேம் கையில் ஒரு பையுடன் அந்த வீட்டிற்கு வந்தான் அதில் இரண்டு துணிகள் அதை கொடுத்து அம்மா வெள்ளை இதை உங்களிட்டை குடுத்து சேட்டு தைச்சு வைக்க சொன்னவன் எங்களிற்கு ஒரு முக்கியமான சில செய்திகள் வன்னியிலை இருந்து வந்திருக்கு அந்த அலுவலா நிக்கிறதாலை வெள்ளை இண்டைக்கு வரேல்லை வாறகிழைமை வருவம் தைச்சு வையுங்கோ என்று என்று விட்டு போய்விட்டான். சில நாட்கள் கழித்து வெள்ளையும் பிறேமும்இன்னொரு போராளியுமாக அங்கு வந்தனர். அவர்களிடம் ஒரு துணிப்பையில் நிறைய துண்டு பிரசுரங்கள் இருந்தது. வந்தவர்கள் அன்று அவசரமாகவே காணப்பட்டார்கள்.தம்பியவை சாப்பிட்டயளோ வழைமை போல அந்ததாயின் விசாரிப்பு.

அம்மா சாப்பிட்டம் தே தண்ணி தாங்கோ அதோடை கன வேலை இருக்கு வன்னியிலை தலைவரிட்டை இருந்து யாழ்ப்பாண மக்களிற்கு சில செய்தியள் பிரசுரமா அடிச்சு அனுப்பியிருக்கினம்.இந்த இக்கட்டான நிமையிலை எங்கடை திட்டங்கள் மற்றும் இந்த சிக்கலான சூழ்நிலையிலை மக்கள் எப்பிடியான செயல்பாட்டை முன்னெடுக்கவேணும் என்டு இதிலை இருக்கு படிச்சு பாருங்கோ என்று சில பிரசுரங்களை அந்த தாயிடம் நீட்டினான் . நீங்கள் படிச்சிட்டு உங்களிட்டை வாறவையிட்டையும் இதுகளை குடுங்கோ என்றான் வெள்ளை. சரி தம்பி என்று அதை பெற்று கொண்டவர் இந்தாப்பு இரண்டு பேருக்கும் சேட்டு தைச்சாச்சு போட்டு பாருங்கோ எண்று அவர் குடுத்த சேட்டினை வாங்கி போட்டு பார்த்து கொண்ட வெள்ளையும் பிறெமும் சரியம்மா நல்ல அளவாயிருக்கு நாங்கள் இந்த பிரசுரங்களை எல்லா ஊருக்கும் கொண்டு போய் குடுக்க வேணும் இப்ப நாங்கள் உடுவிலுக்கு போக வேணும்.

அதாலை அடுத்த தரம் வரேக்கை ஆறுதலாய் கதைப்பம் என்றபடி வெள்ளையும் மற்றவர்களும் பறப்பட தயாரானார்கள். அதில் பிறேமும் மூன்றாவதாய் வந்த போராளியும் மானிப்பாய் பகுதியை சேர்ந்தவர்கள் எனவே அவர்களிற்கு அந்த பகுதி மக்கள் நல்ல பரிச்சயமானவர்கள். எனவே அவர்களில் யாராவது ஒரவர் முன்னே சென்றால் தான் இராணுவ நடமாட்டத்தை பொது மக்கள் அவர்களிற்கு தெரிவிப்பார்கள்.எனவே மூன்றாவது போராளி முன்னே செல்ல நடுவில் வெள்ளை தனது சைக்கிளில் துண்டு பிரசுரங்களுடனும் பின்னே பிறேமும் போவது என தீர்மானித்து மூவரும் தங்கள் கைத்துப்பாக்கிகளை ஒரு முறை தாயார் இயங்கு நிலையில் இருக்கிறதா என சரி பார்த்து விட்டு அங்கிருந்து விடை பெற்று கொண்டு சைக்கிள்களை மிதிக்கின்றனர்.

பிரதான வீதிகள் எங்கும் இந்திய இராணுவம் பரவியிருந்ததால் உடுவில் பகுதிக்கு உட்பாதை ஒழுங்கைகள் ஊடாக செல்வதுதான் பாது காப்பு எனவே அவர்கள் கல்வளை ஊடாக அந்திரான் சங்குவேலி வயல்பாதைகளினுடாக செல்வது என தீர்மானித்து போகிற பாதைகளில் எதிர்படுகின்ற மக்களிடம் இராணுவநடமாட்டம் இருக்கின்றதா என விசாரித்தபடியே போய் கொண்டிருந்தனர்.சங்கு வேலி வயற்பகுதிக்கு வந்ததும் டச்சு வீதியில் சில வினாடிகள் சைக்கிள்களை நிறுத்தி வயல் வெளியை நோட்டம் விட்டனர் ஏனெனில் அந்தவீதி சண்டிலிப்பாய் உடுவில் மற்றும் கந்தரோடை என்று ஒரு முக்கோண வடிவில் அமைந்திருந்த கிராமங்களை இணைக்கின்ற வீதி

இந்த மூன்று இடங்களிலும் இந்திய இராணுவத்தின் பெரிய முகாம்கள் அமைந்திருப்பதால் திடீரென எந்த நேரமும் இராணுவம் வரலாம்.இராணுவத்தின் நடமாட்டம் இருப்பதற்கான அறிகுறி எதவுமில்லை வயல்களில் பலர் வேலை செய்து கொண்டும் தண்ணீர் பாச்சி கொண்டும் நின்றனர்.அப்போ எதிரே சைக்கிளில் வந்து கொண்டிருந்த ஒருவரிடம் கேட்டார்கள் அண்ணை அங்கலை ஆமி நிக்கிற சிலமன் இருக்கோ??வந்தவர் சொன்னார் நான் சண்டிலிப்பாய் பக்கமா இருந்து வாறன் தம்பியவை அந்த பக்கம் இல்லை என்றபடி போய் விட மூவரும் மிக அவதானமாக சில மீற்றர்கள் இடைவெளி விட்டு உடுவில் பக்கமாக சைக்கிளை மிதிக்கின்றனர். சங்குவேலி வயல்வெளி முடிந்து ஊர்மனைகளை அண்மித்து கொண்டிருந்த வேளை எதிரே மண்வெட்டியுடன் வந்து கொண்டிருந்த ஒரு வயதானவர் இந்த போராளிகளை அடையாளம் கண்டு கண்களால் சைகை செய்கிறார்.

முன்னே சென்று கொண்டிருந்த போராளிக்கு இராணுவம் நிற்கிறது என்று புரிந்து விட்டது சைக்கிள் வேகத்தை குறைத்தபடி கையால் பின்னிற்கு வந்துகொண்டிருந்த வெள்ளைக்கு சைகை காட்டியபடி இராணுவம் எங்க நிற்கிறது என்று கண்களால் துளாவ "ஸ்ரொப் " என்றொரு சத்தம் கேட்டது அவனிற்கு சில மீற்றர் தூரத்தில் வேலி ஒன்றினுள் பூவரச மரங்களினுள் உருமறைப்பு செய்துகொண்டிருந்த ஒரு இராணுவத்தின் துப்பாக்கி அவனை நோக்கி குறிபார்த்த படி இருந்ததை கவனித்து விட்டான்.டேய் ஆமி பக்கத்திலையடா பாயுங்கோடா என கத்தியபடி அவன் தோட்டங்களினுள் பாயவும் பிறேம் பின்னால் தூரத்தில் வந்தபடியால் அவன் சைக்கிளை திருப்பிகொண்டு சண்டிலிப்பாய் பக்கமாக ஓடிவிட வெள்ளை சைக்கிளை போட்டு விட்டு அதில் இருந்த பிரசுரங்களையும் எடுத்து கொண்டு ஓட முயற்சித்தான்

ஆனால் பிரசுரங்கள் இருந்த துணிப்பை சைக்கிளில் மாட்டிவிட அவன் அதை இழுத்து கொண்டிருக்க இராணுவத்தின் துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்தது . அந்த குண்டுகள் வெள்ளையின் தொடைபகுதியை துளைத்து செல்ல அவன் காலை தாண்டியபடி தோட்டங்களினுடாக ஓட தொடங்கினான். வெள்ளைக்கு சூடு பட்டுவிட்டதை கவனித்த மற்றபோராளி அவனை எப்படியாவது காப்பாற்றி விடலாம் என நினைத்து திரும்ப வெள்ளையை நோக்கி வர தொடங்கவும் அம்பதுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் தேடியபடி தோட்டங்களினுள் இறங்கி கொண்டிருந்தனர். இனி அந்த போராளியலும் ஓடமுடியாது அவர்கள் கண்டுவிடுவார்கள் எனவே அங்கு தோட்டத்திற்கு பசளைக்காக தாழ்ப்பதற்கு குவித்து வைக்கப்பட்டிருந்த பூவரசம் குளைகளின் உள்ளே புகுந்து மறைந்து கொண்டான்.

இந்திய இராணுவத்தினர் கிந்தியில் கதைப்பது அவனிற்கு தெளிவாக கேட்டது அருகி்ல் வந்து விட்டார்கள் இனி தப்பமுடியாது என நினைத்தபடி தயாராய் இருந்த கைத்துப்பாக்கியை தனது நெற்றியின் அருகே வைத்து பிடித்தபடி அசையாமல் படுத்திருந்தான். அப்போ (இதர்கய் இதர்கய் பாக்கராவோ) இந்தா இருக்கிறான் ஓடிவா ஓடிவா .என்று ஒருவன் கிந்தியில் கத்துவது தெளிவாய் கேட்டது. அதை தொடர்ந்து ஒரு துப்பாக்கி வெடிக்கும் சத்தம் அது வெள்ளையின் கைத்துப்பாக்கி வெடித்த சத்தம் தான். அந்த போராளி ஒரு கணம் கண்களை மூடிகொண்டான் என்ன நடந்திருக்கும் என்று அவனால் ஊகிக்க முடிந்தது. ஆம் இராணுவத்தினர் வெள்ளையை கண்டு கொண்டதும் வெள்ளை தனது துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தன்னுயிரை போக்கி கொண்டான். இந்திய ஆதிக்க இராணுவத்தின் நித்திரையை நிம்மதியை கலைத்து கொண்டிருந்த ஒரு வீரன் எங்கள் மண்ணிற்காகவும் எங்கள் வாழ்விற்காகவும். எங்கள் மனங்களில் நீங்காத நினைவாகி போனான். தொடரும்.............

ஈழப்போராட்டத்தில் எனது (பொய்)சாட்சியம் இறுதிப்பாகம்

12:17 PM, Posted by sathiri, 4 Comments

இந்திய இராணுவத்தின் உதவியுடன் உருவாக்க பட்ட தமிழ் தேசிய இராணுவத்திற்காக வீதிகளில் திரிந்த கண்ணிற்கு தெரிந்தவர்கள் மட்டுமென்றில்லை வீடு வீடாகவும் புகுந்து இளைஞர்கள் அனைவரும் வலுகட்டாயமாக பிடித்து இழுத்த கொண்டு செல்லபட்டு கட்டாய பயிற்சிகள் வழங்கபட்டனர் மறுத்தவர்களிற்கு கட்டிவைத்து கடுமையான தண்டனைகள் மட்டுமல்ல சுட்டும் கொல்லபட்டனர்.

பாடசாலை வசல்களில் நின்றே பாடசாலை முடிந்ததும் அப்படியே பாடசாலை சீருடைகளுடனேயே மாணவர்களை அள்ளிசென்றனர். வெளியே போன பிள்ளைகள் வீடுவரவில்லெயென்று தேடியபடி இந்திய இராணுவ முகாம்களிலும் இந்த ஈ.பி யின் முகாம் வாசல்களிலும் கண்ணீருடன் காத்து நின்றபெற்றோர்களும் மிரட்டி விரட்டபட்டனர்.தங்கள் பிள்ளைகளை பாது காக்க அந்த காலகட்டங்களில் பெற்றோர்கள் பட்ட தயரங்களை இந்த கட்டுரையில் எழுத்தகளால் என்னால் விழக்கிவிட முடியாது.அது மட்டுமல்ல எந்த வீட்டிலாவது வயதிற்கு வந்த இளம் பெண்களை வைத்திருந்தவர்கள் பாடு இதைவிட மேசமானது அந்த பெண்களை தங்களை திருமணம் செய்ய சொல்லி மிரட்டுவார்கள் மறுத்தால் மறுநாள் அவள் கடத்தபடுவாள் எங்காவது அவர்கள் தங்கள் மிருகதனத்தை தீர்த்துவிட்டு மிச்சமாய் அவளது உயிரற்ற உடலமட்டும் மிஞ்சும்.

புலிகளிற்கு உதவியவர்கள் என்று சொல்லி தங்கள் சொந்த பகையாளிகளையெல்லாம் சுட்டு தள்ளினார்கள் புலிக்கு தேனீர் கொடுத்தவன் சாப்பாடு கொடுத்தவன் அந்த குடும்பத்தில் யாராவது புலிகள் இயக்கத்தில் இருந்தால் அவனது குடும்பம் என்று தேடி தேடி மனிதவேட்டையாடினர். எனது ஊரான மானிப்பாயில் மண்டையன் குழு என்று ஒரு ஈ.பி கும்பல் முகாம் இருந்தது இதற்கு பொறுப்பாய் இருந்தவன் தான் பின்னர் மட்டகளப்பில் கொல்லபட்ட ராசிக் என்பவன்.

இந்த குழுவிற்கு மண்டையன் குழு என்று சிறப்பு பெயர் வந்ததற்கான காரணம் என்னவெனில் இவர்கள் யாரையாவது கைது செய்தால் சுட்டு கொல்ல மாட்டார்கள் அந்த நபரின் தலையை மட்டும் வெட்டி முண்டத்தை எங்காவது போட்டுவிட்டு தலையை மற்றவர்கள் பார்வைக்கு படும்படியாக சந்திகளில் மதில்களில் வைத்துவிட்டு போவார்கள்.இந்த இயக்கத்தைதான் புஸ்பராசா அவர்கள் ஈழவிடுதலை இயக்கங்களிலேயே மிகவும் மனிதாபிமானம் நிறைந்த ஒரேயொரு இயக்கம் என்று புகளாரம் பாடியிருக்கிறார்.

இப்படியான இவர்களின் கொடுமைகளில் கொலைகளில் சித்திரவதைகளில் இருந்து தப்பிக்க இளவயது ஆண்களும் பெண்களுமாய் இரகசியமாய் புலிகள் இருந்த காட்டுபகுதிகளிற்கு சென்று அவர்களுடன் இணைந்து கொள்ள தொடங்கினர். இந்திய அதிகாரிகள் போட்டகணக்கு பிழைக்க தொடங்கியது.இந்த காலகட்டத்தில் தான் பிரான்சில் வசித்த புஸ்பராசா இந்திய அதிகாரிகளின் விசேட அழைப்பின் பெயரில் பிரான்சில் ஈ.பி அமைப்பிற்கு வேலை செய்த உமாகாந்தனையும் அழைத்து கொண்டு இலங்கை சென்றார்.

அங்கு இந்திய இராணுவ உலங்குவானூர்திகளிலும் வடக்கு கிழக்கு எங்கும் 50க்கும் மேற்பட்ட தேசிய விடுதலை இராணுவத்தினரின் ஆயுத பாதுகாப்பு வழங்க மேலதிகமாக முன்னும் பின்னும் இந்திய இராணுவத்தின் இராணுவ வாகன தொடரணிகளின் பாதகாப்புடன் வலம்வந்து யாழ் அசோகா விடுதியிலும் கொழும்பில் நட்சத்திர விடதிகளிலும் தங்கியிருந்த இவரிற்கு தங்கள் பிள்ளைகளை இழந்தபிள்ளைகிற்காய் கதறிய இருக்கின்ற பிள்ளைகளை காப்பாற்ற துடித்த தாய்தந்தைகளின் அவலங்கள் புரியவில்லையென்று சொல்முடியாது.

காரணம் அசோகாவிடுதியில் முன்னால் இருந்த முகாமில் சித்திரைவதைபட்ட இளைஞர்களின் கதறல்கள் தன்னை கலவரபடுத்தியதென்றும் அவர்களை பார்க்க தினமும் அந்த முகாமின் முன்னால் வந்து அழுதபடிநின்ற பிள்ளைகளின் பெத்தவர்களை பார்க்க கவலையாய் இருந்ததென்றும் ஒரு ஒப்பிற்கு சப்பில்லாமல் ஒரு வசனத்தை எழுதி அவற்றிற்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாதது போல தப்பிக்க நினைக்திருக்கிறார்.

உற்ற நண்பர்களான பத்மநாபாவிடமோ வரதராஜபெருமாளிடமோ ஏன் உறுதுணையாக நின்ற இந்திய இராணுவ அதிகாரிகளிடமோ கூறி இவற்றை ஏன் அவரால் தடுக்கமுடியாமல் போனது . வேண்டாம் அதற்கான முயற்சிகளையாவது செய்தாரா?? என்றால் இல்லையென்பதே பதில்.இருக்கும்வரை பணம் பதவி சுகம் என்று அனுபவித்துவிட்டு இறுதியில் மரண படுக்கையில் இவைகளிற்காக இவர் வருந்துகிறேன் என்று இவர் கவலை தெரிவித்ததால் என்ன பயன்??. இந்த தொடரை எழுத தொடங்கும் போதே பலர் என்னிடம் ஒரு கேள்வியை கேட்டனர் அது இறந்து போன ஒரு மனிதனை பற்றி எழுதுவது அவ்வளவு நாகரீகம் அல்ல என்றனர். இருக்கலாம் ஆனால் இந்த தொடரை தொடர்ந்து படித்தவர்வர்களிற்கு புரிந்திருக்கும் இது அந்த இறந்து போன மனிதனின் சொந்த வாழ்க்கையை பற்றிய விமர்சனமோ அல்லது விசமகருத்துகளையோ நான் இங்கு எழுதியிருக்கவில்லை பொதுவாழ்வு என்றும் தன்னினத்திற்கான விடுதலை போராட்டம் புறப்பட்டு தான் தடுமாறியது மட்டுமன்றி தன்னுடன் சேர்ந்தவர்களையும் தடுமாறவைத்து தன்னினத்தையும் தத்தளிக்கவைத்தவரின் தன்னிலைவிளக்க புத்தகம் எல்லாம் எம்மினத்தின் வரலாற்று புத்தகமாக ஆகிவிடாது.

ஈழவிடுதலை போராட்டத்தை ஈடுவைத்து வாழ்ந்தவர்கள் இறந்து போனாலும் மன்னிக்க முடியாதவர்களே. இதை எழுதுகின்ற நானும் படிக்கிற நீங்களும் ஒருநாள் இறந்து போகிறவர்களே எனவே மரணம் ஒன்று மட்டும் எல்லா மனிதனையும் புனிதன் ஆக்கிவிடாது என்று கூறி இந்த தொடரை முடிவுக்கு கொண்டு வரகின்ற வேளை இந்த தொடரை எழுத எனக்கு எவ்வித நிபந்தனைகளையோ கட்டுபாடுகளையோ விதிக்காமல் சுதந்திரமாய் எழுதவிட்ட ஒரு பேப்பரின் பொறுப்பாசிரியர் கோபிக்கும்.

இந்த தொடருக்காக ஈழவிடுதலையின் ஆயுத போராட்டத்தின் ஆரம்பகால தகவல்களை தந்துதவிய தமிழ் மாணவர் பேரவையின் அமைப்பாளரான திரு பொன்.சத்தியசீலன் அவர்களிற்கும்.மற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத ஆரம்பகால போராளிகள்சிலரிற்கும். எனது கட்டுரைகளிற்கு வரும் விமர்சனங்கள் பாராட்டுகள் திட்டுக்கள் என்று எல்லாவற்றையுமே என்னுடன் சரிசமமாய் பகிர்ந்துகொள்ளும் ஒரு பேப்பர்காரன்கள் ஒரு பேப்பர்காரிகள் இந்த கட்டுரையை எழுத தூண்டுதலாய் அமைந்த யாழ்கொம் இணையதளத்திற்கும் எல்லாவற்றிற்கும் மேலாக வாசகர்களாகிய உங்கள் அனைவரிற்கும் நன்றிகூறி விடை பெறமுன்னர்

ஈழவிடுதலையின் ஆயுத போராட்டத்தின் ஆரம்பகாலத்தில் பங்குபற்றிய பலர் இன்று புலம்பெயர்ந்து பல நாடுகளில் வாழ்ந்து வருகின்றார்கள் அவர்கள் தாங்கள் விடுதலை போராட்டத்தை ஏதோஒரு சந்தர்ப்பத்தில் ஏதோ ஒரு சில காரணங்களால் இடையில் விட்டு விட்டு வந்துவிட்டோம் என்கிற ஒரு தாழ்வு மனப்பான்மையில் ஒரு தவிப்பில் இருப்பதை அறிய முடிகிறது அவர்கள் அதை விடுத்து தங்கள் அனுபவங்களையும் நிகழ்வுகளையும் உண்மை பதிவுகளாக்க வேண்டும் அதுதான் அவர்கள் அடுத்த எமது சந்ததிக்காக விட்டு செல்லும் வரலாறு ஆகும். அதே போல மாணவர் பேரவை அமைப்பின் அமைப்பாளர் திரு பொன். சத்தியசீலன் அவர்களும் இதேபோன்ற ஒரு முயற்சியில் இருப்பதாக அறிந்தேன் அவரது முயற்சி விரைவில் பதிவாக வெளிவரும் என்கிற ஆவலுடன் எதிர்பார்த்து நன்றி வணக்கம்.

ஈழபோராட்டத்தில் எனது (பொய்)சாட்சியம் பாகம் 11

8:28 AM, Posted by sathiri, No Comment

ஈழ போராட்டத்தில்.....பாகம் 11


ஈழபோராட்டத்தில் இறங்கிய போராட்ட இயக்கங்கள் இந்தியா தவிர்ந்த வேறு பிற நாடுகளிலும் பயிற்சிகள் எடுத்திருந்தன என்று கடந்த பகுதியில் பார்த்திருந்தோம். அதில் முக்கியமாக பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் இராணுவ அமைப்பான பி எல் ஓ விடமும் நிக்கரகுவா வின் விடுதலைஇயக்கங்களிடமும் பயிற்சிகளையும் எடுத்திருந்தனர். இதில் ஈரோஸ்.புளொட்.ஈபிஆர்எல்எவ். ஆகிய இயக்கங்களே அடங்கும் .அதைவிட இலங்கை அரசிற்கு ஆயுத உதவி மற்றும் இலங்கை இராணுவத்திற்கு பயிற்சிகள் வழங்கிய இஸ்ரவேலின் உளவு அமைப்பான மொசாட் இலங்கை இராணுவத்திற்கு மட்டுமல்ல தமிழ் இயக்கமான புளொட் அமைப்பிற்கும் பயிற்சிகளை வழங்கியது.


காரணம் இஸ்வேலின் இலங்கையுடனான நட்பு முழுக்க முழுக்க இராணுவ நலன் சார்ந்ததாகவே அன்றிலிருந்து இன்றுவரை இருந்து வருகிறது.இலங்கையில் பிரச்சனை இருக்கும் வரைதான் தாங்கள் தங்களது இராணுவ தளபாடங்களை இலங்கைக்கு விற்பனை செய்வது மட்டுமல்ல அவற்றை பரீட்சிக்கும் ஒரு பரீட்சை களமாகவும் இலங்கையை அது வைத்திருந்தது அதே போல தென்கிழக்காசியாவிலேயே இஸ்ரவெலிடம் இருந்து இலங்கை அரசே அதிகளவு ஆயுததளவாடங்களை வாங்கிய நாடும் ஆகும்.எனவே தான் மொசாட் அமைப்பு தமிழ் இயக்கங்களிற்கும் பயிற்சிகளை வழங்கியது இதன் விபரங்களை மொசாட்டின் ஒய்வுபெற்ற அதிகாரி ஒருவர் தன்னுடைய புத்தகம் ஒன்றில் எழுதியிமிருந்தார். புளொட் அமைப்பில் பாலஸ்தீன பி்.எல்.ஓ விடம் பயிற்சி பெற்றதாக கூறிக்கொண்ட பலர் உண்மையிலேயெ மொசாட்டிடம்தான் பயிற்சி எடுத்திருந்தனர்.பயிற்சி எடுத்தவர்களிற்கு தாங்கள் உண்மையில் யாரிடம் பயிற்சி எடுக்கிறோம் என்று உண்மையில் தெரிந்திருந்திருந்ததா? என்பது தெரியவில்லை.

ரெலோவிற்கு இந்திய இராணுவமே பயிற்சிகளை தொடர்ந்தது. புலிகள் அமைப்பு பின்னர் தமிழ் நாட்டிலும் தமிழீழத்தின் பகுதிகளிலும் பயிற்சி பாசறைகளை நிறுவி தாங்களே பயிற்சிகளை வழங்க தொடங்கினார்கள் வேறு எந்த வெளிநாட்டிடமும் பயிற்சி உதவி என்று போகவில்லை. காரணம் இங்கு ஒரு சம்பவத்தை நினைவு படுத்த விரும்புகிறேன் 80 களில் ஆயுதபோராட்டம் முனைப்பு பெற்றவேளையில் அனேகமான எல்லா இயக்கங்களும் பாடசாலைகளிற்கு வந்து அங்கு மாணவர்கள் மத்தியில் போராட்டம் பற்றிய அவசியத்தையும் விழிப்புணர்வையும் ஊட்டுவதற்காக மாணவர்களை அழைத்து வகுப்புகள் வைப்பார்கள்.

அப்படியே தங்கள்: அமைப்பில் இணைய விரும்புபவர்களையும் இணைத்து கொள்வார்கள்.அப்படி ஒரு நாள் நான் படித்த கல்லூரியில் ஈ.பி.ஆர்.எல்.எவ்வினர் ஒரு வகுப்பை வைத்தனர் நானும் போயிந்தேன் அதில் அவர்கள் கியுபா விடுதலை போராட்டம்பற்றி அழகாக விழங்கபடுத்தி அதை போல நாமும் போராடவேண்டும் என்று கூறி கியூபா விடுதலை போராட்டம்பற்றி தமிழில் சிறிய ஒரு புத்தகம் ஒன்றையும் அனைவரிற்கும் தந்துவிட்டு போனார்கள். அடுத்ததாக புலிகள் அமைப்பின் சார்பில் திலீபன் ஒரு வகுப்பை வைத்தார்.

அதில் முன்னர் ஈ.பி யினரின் வகுப்பில் கலந்து கொண்ட அனைவருமே திலீபன் நடாத்திய வகுப்பிற்கும் சென்றிருந்தோம்.அதில் திலீபன் இலங்கையரசின் அடக்குமுறைகள் படுகொலைகள் முக்கியமாக மாணவர்மீதான தரப்டுத்துதல் பற்றிய உள்நோக்கம் என்பனவற்றை விபரித்து விட்டு யாரிற்காவது ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் கேள்விகேட்கலாம் என்றார். அப்போது ஒரு மாணவன் எழுந்து திலீபனிடம் அண்ணா முதலில் கூட்டம் வைத்த ஈ.பி யினர் கியூபா விடுதலை போராட்டத்தை பற்றி விழங்கபடுத்தி அழகாக உதாரணமும் காட்டி அந்த நாட்டு மக்களை போலவே நாங்களும் போராட வேண்டும் என்று சொல்லி இதோ இந்த புத்தகத்தையும் தந்தார்கள் ஆனால் நீங்கள் எந்தநாட்டு விடுதலை போராட்டத்தையும் உதாரணமாக சொல்லவில்லையே என் உங்களிற்கு தெரியாதா??என்று கொஞ்சம் நக்கலாகவே கேட்டார்.

அதற்கு திலீபன் சிரித்தபடியே சொன்னார் தம்பி உதாரணத்தை நானும் சொல்லலாம் வியட்னாம் கியூபா பாலஸ்தீனம் என்று வேறுநாட்டு போராட்டங்களை பற்றி சொல்வது கொஞ்சம் கவர்ச்சியாகவும் இருக்கும் எனக்கும் இதெல்லாம் தெரியும் என்று காட்டி உங்களிடம் ஒரு மதிப்பை உயர்த்ததான் இவை உதவுமே தவிர உண்மையான எங்கள் போராட்டத்திற்கு இவை பெரிதாய் உதவாது எங்கள் போராட்டத்திற்கான உதாரணங்களை அனுபவங்களை எங்கள் போராட்டத்திலிருந்தேதான் பெறவேண்டும் உதாரணமாய் கியூபா கெரில்லா யுத்தத்திற்கு அந்த நாட்டின் இயற்கை அமைப்பு மலையும் காடுகளும் போராளிகளிற்கு உதவின அதைபடித்துவிட்டு காடுகளோ மலைகளோ இல்லாத எங்கள் யாழ் குடாநாட்டில் எப்படி கெரில்லா யுத்தத்தை முன்னெடுப்பது?? என்றுதலையை போட்டு குழப்பவேண்டாம்

எங்கள் குடாநாட்டின் ஒழுங்கை அமைப்புகள் தான் எங்கள் கெரில்லா யுத்தத்தின் காப்பரண்கள் விரும்பினால் அறிவை வளர்த்து கொள்ள மற்றைய விடுதலை போராட்டம்பற்றிய புத்தகங்களையும் படியுங்கள் என்றார். இந்திய படையுடனான புலிகளின் யுத்தத்தின் போதும் ஏன் இப்பொழுதும் நினைத்து பார்க்கிறேன் திலீபன் அன்று சொன்னது எவ்வளவு நிதர்சனமான வார்த்தைகள்.இப்படி வேறுநாடுகளில் பயிற்சிகள் பெற்றும் வேறுநாட்ட போராட்டங்களை பற்றியே பக்கம் பக்கமாக பேசியும் எழுதியுமே மற்றைய இயக்கங்கள் காலத்தை கடத்தி காணாமல் போயும் விட்டன.இதில் ஈ.பி.ஆர்.எல்.எவ். இயக்கமும் அதன் செயற்பாடுகளை நியாயபடுத்தும் புஸ்பராசாவும் கூட விதிவிலக்கல.

இதில் இந்தியா ஈழபோராட்ட அமைப்புகளிற்கு பயிற்சிகள் வழங்கினாலும் இந்த அமைப்புகள் ஒன்றாய் இணைந்துவிடாதபடி மிக கவனமாக பார்த்து கொண்டார்கள் ஏனெனில் இயக்கங்கள் ஒன்றிணைந்தால் தங்கள் கட்டுபாடுகளை மீறி இவர்கள் ஈழத்தை அமைத்து விடுவார்கள் என்கிற பயத்தினால் இடைக்கிடை அந்த அமைப்புகளிற்கிடையே பிரச்னைகளை உருவாக்குவதிலும் ஏன் அந்த இயக்கங்களின் உள்ளேயே கூட பிரச்சனைகளை உருவாக்கி விட்டுகொண்டும் தான் இருந்தனர்.இந்த விடயத்தில் அவர்கள் வெற்றியும் பெற்றனர்.இயக்க உட்படுகொலைகளிற்கு றோவினரின் பினனணி இருந்தது என்று புஸ்பராசாவே ஒத்துகொள்கிறார்.

அதே நேரம் இந்த போராட்ட அமைப்புகளிற்கும் தமிழ் நாட்டு தமிழர்களிற்கும் அதிகளவு நெருக்கத்தையும் இந்தியபுலனாய்வு துறை விரும்பவில்லை அதற்குள்ளும் அவ்வப்போது ஏதாவது சதிசெய்துகொண்டேதான் இருந்தனர். ஆனாலும் இந்த விடயத்தில் றோ அதிகாரிகளால் பெரிய வெற்றியை பெறமுடியவில்லையென்றே சொல்லலாம்.தமிழ்நாட்டின் அரசியல் விழையாட்டுக்களை தவிர்த்து பார்த்தால் தமிழ்நாட்டு தமிழரின் ஆதரவும் அக்கறையும் ஈழத்தமிழரிற்கு எப்பொழுதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது.தற்பொழுது அது புத்துயிற் பெற்று இன்னும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது இதுவும் சில இந்திய கொள்கை வகுப்பாளர்களிற்கும் சில புலனாய்வு அதிகாரிகளிற்கும் அவ்வளவு மகிழ்ச்சியை கொடுக்காது எனவே தமிழ் நாட்டு தமிழர்களின் உணர்வுஎழுச்சியும் ஈழத்தமிழரின் வெற்றியுமே இவர்களின் மனங்களில் மாற்றத்தை கொண்டுவரும்

.இதை விடுத்து இந்திய படை காலத்தை பார்த்தால் ஈழத்தில் இந்திய படைகாலத்தில் கூட இந்திய அரசு தங்கள் ஒட்டுகுழுவாக ஒரு குழுவை வைத்திருக்காமல் அங்கும் பல குழுக்களையே வைத்திருந்தனர் காரணம் ஒரேயொரு குழுவை வைந்திருந்து அது சில நேரம் தங்கள் மக்களை தாங்களே எப்படி துன்புறுத்தி படுகொலைகளை செய்வது என்று மனம் மாறியோ அல்லது வேறு விடயங்களால் இந்திய அதிகாரத்துடன் முரண்பட்டு பிரிந்து போய் விட்டாலோ அது இந்திய அதிகாரத்திற்கு பேரிழப்பாகிவிடும் எனவே தான் ஒன்று கைவிட்டு போனாலும் இன்னொன்று தங்கள் தாளத்திற்கு ஆடும் என்பதால் பல குழுக்களை இயக்கி அதில் எந்தகுழு தங்களிற்கு அதிக விசுவாசமாய் இருக்கிறதோ அதன் விசுவாசத்திற்கேற்ப அதற்கு சலுகைகளை வழங்கினர்.

அப்படி அதிகவிசுவாசம் காட்டியகுழுதான் புஸ்பராசா சார்ந்திருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ். இயக்கமாகும். அவர்களின் கீழ் ஒரு தமிழ் தேசிய இராணுவம் என்று ஒரு படையணியை உருவாக்கி ஒரு கண்துடைப்பு வாக்கெடுப்பையும் நடாத்தி வடக்குகிழக்கு மகாணத்தை கடதாசியில் சில கையெழுத்துகளால் இணைத்து தங்கள் நூலில் ஆடும் வரதராஜபெருமாளை முதலமைச்சரும் ஆக்கினார்கள்.இன்று இந்திய அரசால் உருவாக்கபட்டஅந்த வடக்கு கிழக்கு கடதாசி இணைப்பைகூட தமிழருடன் செய்து கொள்ளும் எல்லா ஒப்பந்தங்களையும் கிழித்தே பழக்கபட்ட சிங்கள இனவாதம் அதையும் கிழித்து குப்பையில் போட்டுவிட்டு கூத்தாடுகிறது. அதைபார்த்து மண்டையை சொறிந்தபடியே மகிந்தராஜபக்சவிற்கு செங்கம்பள வரவேற்பு குடுத்து மகிழ்கிறது இந்திய மத்தியஅரசு.இந்த இந்திய இராணுவத்தால் உருவாக்கபட்ட தமிழ் தேசிய இராணுத்தின் பின்னால் தமிழ் மக்களின் சொல்லமுடியாத வேதனைகள் இழப்புக்கள் அழுகைகள் அவலங்கள் என்று ஏராளம் ஏராளம்.அடுத்த பாகத்தில் அவற்றையும் பார்த்து கொண்டு இந்த தொடரை முடிவிற்கு கொண்டுவரலாம் என எண்ணியுள்ளேன்.