<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-28994032</id><updated>2012-02-15T22:42:26.581-08:00</updated><title type='text'>அவலங்கள்</title><subtitle type='html'>விழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://sathirir.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28994032/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://sathirir.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28994032/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>சாத்திரி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_Sem5kfmy6G0/SXSlTz3ZpoI/AAAAAAAAAPc/qpZk13LLF-0/S220/Photo+103.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>292</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-28994032.post-5371777039879308718</id><published>2012-01-25T14:15:00.000-08:00</published><updated>2012-01-25T14:16:18.201-08:00</updated><title type='text'>சொல்லமுடியாத கதை</title><content type='html'>அவனைச்சுற்றி நின்று  அனைவரும் கை தட்டி வாழ்த்து சொல்லிக்கொண்டிருந்தனர்.  அப்பொழுது யாரோ அவனை தள்ளிவிட்டது போல இருந்தது . திடுக்கிட்டு விழித்தான்   விமானம் சிங்கப்பூரின் சாங்கிவிமான நிலையத்தில்  தரையிற்ங்கிக்கொண்டிருந்தது. தங்கள் பயணத்தை நல்லபடியாக முடித்தபயணிகள்  விமானிக்கு பாராட்டு தெரிவிப்பதற்காக கைதட்டிக்கொண்டிருந்தனர் என்பதது  அப்பொழுதான் அவனிற்கு தெரிந்தது&lt;br /&gt;&lt;br /&gt;                 0000000000000000&lt;br /&gt;&lt;br /&gt;நானும் விதவைதான்  எனக்கு யுத்தத்தின் வலி தெரியும் எனவே சமாதானம் வேண்டும்  என்றபடி  சமாதான விதவைத் தேவதையாக  வாக்கு கேட்டு சந்திரிகா ஆட்சியில்  அமர்ந்து பேச்சு வார்தைகளும் தொடங்கி விட்டிருந்த காலகட்டம்.சந்திரிக்கா  தேர்தலில் நிற்கும் பொழுதே  புலிகளிற்கும்  அவரிற்கும் சில இரகசிய பேச்சு  வார்த்தைகள் நடந்து சில உறுதி மொழிகளும் பரிமாறப்பட்டிருந்தது.இவை  சந்திரிக்காவின்  சிறுவயது தோழரும் அவரின் குடும்ப நண்பருமான குமாரசாமி  வினோதன் ஊடாக நடைபெற்று முடிந்திருந்தது&lt;br /&gt;&lt;br /&gt;                    000000000000000&lt;br /&gt;&lt;br /&gt;தாய்லாந்தின்  தலைநகரிற்கு வெளியே  ஒரு கிராமத்தில் தங்கியிருந்த அவனிற்கு  இலங்கைக்கு போகும்படி  உத்தரவு கிடைத்தது.  தன்னிமிருந்த  கடவுச்சீட்டுக்களையெல்லாம் எடுத்து  வரிசையாய் அடுக்கி  பிரித்துப்பார்த்தவன். அதில் இரண்டை தெரிவுசெய்து எடுத்து  இந்தமுறை  சிங்கப்பூர் கிறீன்காட்  இலங்கை பாஸ் போட்டிலையே  போவம்.அது நல்லது எண்டு  முடிவு செய்தவன். வேறொரு கடவுச்சீட்டில்  தாய்லாந்திலிருந்து வெளியேறியவன்.  சிங்கப்பூரில்  சிறீலங்கா கடவுச்சீட்டில்  உள் நுளைந்தான்.  அன்றிரவே   மீண்டும் சிங்கப்பூரிலிருந்து  கொழும்பு செல்லவேண்டும்.  இலங்கையில்  சிலரிற்கு பரிசு கொடுப்பதற்காக  சில வாசனை  திரவியங்களை (பெர்பியூம்)  வாங்கினான்.  உலகத்திலை எத்தினை விதமான  நல்ல வாசனைத்திரவியங்கள்   விதவிதமாய் இருந்தாலும் எங்கடையளிற்கும் சிங்களவனுக்கும் சாளியை விட்டால்  விட்டால் வேறையொண்டும் தெரியாது  எண்டு நினைத்தபடி சாளி பெர்பியூம் நலைந்து  லோக்கல்  றே பன் கூலிங்கிளாஸ்  நாலைந்து.  லஞ்சம் எல்லாம் வாங்கியாச்சு  என்று நினைத்தவன். காய்..லா   என்று லா போட்டபடி .அவளும் வந்து சேர    அவர்களின்   பொரும்பாலும் ஆங்கிலமும் கொஞ்சம் தமிழும் கலந்தஉரையாடல்  தொடங்கியது. அவளுடன் சேர்ந்து  சாப்பிடலாம்   வா  தாய்லாந்திலை  நாசிகொறியிங்கும். மீ கொறியிங்கும்  சாப்பிட்டு  நாக்கு செத்துப்போச்சு   சிரங்கூன் பக்கம் போய் அன்னபூரணாவிலை  தோசை சாப்பிடுவம் என்று  புறப்பட்டார்கள். சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதே அவளிடம்  தன்னுடைய   கடவுச்சீட்டை கொடுத்தவன்.   வழமையாய் சொல்லுற விசயம்தான்  கொழும்பிலை  இருந்து  வேறை  யாருடையதாவது போன்வந்தால் உடைனை  உன்னட்டை இருக்கிற   யெர்மன் நம்பருக்கு  தெரிவிச்சுவிடு  அவ்வளவுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong class="bbc"&gt;எப்படா இந்த தொழிலை விடப்போறாய் .. டா&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong class="bbc"&gt;மை  கோட்..இது   தொழிலில்லை லா.. இது வேறை...லா. &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong class="bbc"&gt;இதையேதான்  எப்பவும் சொல்லுறாய்.லா. &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong class="bbc"&gt;இதையேதான் நீயும் திரும்ப திரும்ப கேட்கிறாய் சரி  சண்டையை விட்டிட்டு வேறை ஏதாவது பேசலாமா.லா&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong class="bbc"&gt;ஓ கே இன்றைக்கு  என்ன புறோக்கிறாம். &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong class="bbc"&gt;பெரிசா ஒண்ணுமில்லை நான் இரவே கொழும்பு  போறேன். லா&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong class="bbc"&gt;ஓ தோசை தின்னத்தான் கூப்பிட்டியாடா??&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோபிக்காத லா. சீக்கிரமே  திரும்ப வந்திடுவன்.வந்து பெரிய  விருந்தே  வைக்கிறன்  என்று சொல்லி கண்ணடித்தான்&lt;br /&gt;சாங்கி விமான நிலையத்தில்  அவளின் உதட்டில் ஒரு முத்தம் வைத்து விட்டு  உள்  நுளைந்தவன்.  யாராவது  வியாபாரிகளை  எதிர்பார்த்து  சுற்று முற்றும்  பாக்கும் போதே கொழும்பா போறீங்கள் என்றபடி ஓடி வந்தவர்கள். ஓவர்ஸ்ரேயா காசு  வேணுமா என்றார்கள்.  அப்படி வந்தவர்களில் ஒரு முஸ்லிம் வியாபாரியின்  பொதியை வாங்கியவன்  ஓவர் ஸ்ரே யெல்லாம் இல்லை  உங்க ஆளிட்டை  என்னை  கொழும்பிலை கொண்டு போய் இறக்கிவிடச்சொல்லி போனிலை செல்லிடுங்க. என்றான்.  உங்க பேர்  என்ன என்றவரிடம்  கடவுசீட்டில்  இருந்த பெயரை ஞாபகப்படுத்தி  சொல்லிவிட்டு  உள் நுளைந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;                   0000000000000000&lt;br /&gt;&lt;br /&gt;கொழும்பு விமான நிலையத்தில் வெளியே வந்தவன்  அங்கு சிங்கப்பூர்  பொதிகளிற்காக தயாராக நின்ற  முஸ்லிம் வியாபாரியிடம். பொதிகளை கொடுத்தவன்.   தன்னை ஏதாவது நல்லதொரு லொட்ஜில் இறக்கிவிடச்சொன்னதும். அவரும் தனக்கு  தெரிந்த ஒரு லொட்ஜ் இருப்பதாக  சொல்லி ஜம்பட்டா வீதியில் இருந்த  முஸ்லிம்  ஒருவருக்கு சொந்தமான  லொட்ஜில்  இறக்கிவிட்டிருந்தார்.  கொழும்பு   போய்க்கொண்டிருக்கும் பொழுதே  தான் வந்துவிட்ட செய்தியை சிலரிற்கு  கைத்தொலைபேசி மூலமாக தெரிவித்துவிட்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றிரவு ஜிந்துப் பிட்டியில்  இருந்த வேணிபாரில் ஒரு சந்திப்பு.  அங்கு  சந்தித்தவர்களுடன் தண்ணியடித்துவிட்டு அங்கேயே  கோழி புரியாணியும்  சாப்பிட்டுவிட்டு  நல்ல போதையில் ஆட்டோவில் ஏறிவந்து   லொட்ஜ்  றூம்  கட்டிலில் அப்படியே  விழுந்தவன்  கண் அயர்ந்து போகும் போதே யாரோ கதவில்   பலமாக தட்டினார்கள்.எவண்டா இந்த நேரத்திலையெண்டு நினைத்தபடி கதவைதிறக்கவும்   தயாராய் சாதாரண உடையில் நின்றிருந்த இருவர் பாய்ந்து அவனை கட்டிலில்  தள்ளி கையில் விலங்கை போட்டவர்கள்.  அவனின் உடுப்பு பையை ஒருவன் துளாவ  மற்றையவன்  அவனின் கைத் தொலைபேசியை  நோண்டினான். அவனிற்கு  விடயம்   ஓரளவிற்கு புரிந்தது.  ஆனால் எப்படி என்று புரியவில்லை. எது  எப்பிடியானாலும்  ஆங்கிலத்லேயே கதைப்தாக  முடிவெடுத்தவன்.   ஆங்கிலத்தில்  நீங்கள் யார் என்ன வேணும் என கத்தினான். கள்ள நாயே என்றபடி ஒரு உதைதான்  விழுந்தது. அதற்குமேல் எதுவும் பேசாதவர்கள். அவனது கடவுச் சீட்டையும் அவனது  பையையும் எடுத்துக்கொண்டு வெளியில் வந்து அங்கு நின்ற ரொயோட்டா டொல்பின்  ரக வானில் உள்ளே தள்ளினார்கள். உள்ளே இன்னொருத்தனும் ஒரு பெண்ணும்   இருந்தார்கள்.&lt;br /&gt;உள்ளையிருந்த பெண்  நாம்பன் மாட்டுக்கு பல்லை பிடிச்சு பாக்கிற மாதிரி  அவனின்ரை நாடியை  ஒரு கையாலை பிடிச்சு வலம் இடமாக  திருப்பி பாத்திட்டு  சிங்களத்தில்  இவனை தெரியேல்லையெண்டவள். அவனிடம்.&lt;br /&gt;&lt;br /&gt;டேய். பு....மகனே  நீ புலிதானே&lt;br /&gt;&lt;br /&gt;எக்ஸ்சியூஸ் மீ ஜ டின்ட் அண்டஸ்ராண்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழிலை கதையடா  வேசைமேனே எண்டபடி அவளின் பங்கிற்கு  அவனின் கதைப் பொத்தி  ஒரு அறை விட்டாள்&lt;br /&gt;&lt;br /&gt;அவனின் சேட் ஒன்றை எடுத்து ஒருத்தன் அவனது கண்ணை கட்டினான். வான் ஒரு   இருபது நிமிசமாய்  ஓடிக்கொண்டிருந்தது. இப்பிடித்தான் அவன் பாத்த ஒரு  இங்கிலிஸ் படத்திலை கீறோவை  கண்ணை  கட்டி கொண்டு போவார்கள். கீறோ போகிற  வழியை  அக்கம் பக்கத்திலை கேக்கிற  சத்தத்தை வைச்சு அடையாளம் பிடிப்பார்.  பிறகு அதே மாதிரி ரஜனியும் ஒரு படத்திலை நடிச்சிருந்தார்.  இவனும் அது  மாதிரி  வெளியிலை என்ன சத்தம் கேக்குதெண்டு  காதை குடுத்துப் பாத்தான்.  ஆனால் சிங்களவன் புத்திசாலி  வானிலை சிங்கள பாட்டை சத்தமாய்  போட்டிருந்தான். அதலை ஒண்டும் கேக்கேல்லை.கடைசியிலை றெயின் ஒண்டு கோணடிச்ச  சத்தம் மட்டும் கேட்டது. அது ஏதோ அவனிற்கு கடைசியா ஊதின சங்கு மாதிரியே  இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வான் ஒரு இடத்தில் நிண்டது  அவனை இறக்கி போனவர்கள் கண்கட்டை அவித்து  விட்டதும்  சுத்திவர பார்த்தான். அது போலிஸ் நிலையம் அல்ல. சாதாரண ஒரு வீடு  போல இருந்தது.ஆனால் புலனாய்வு பிரிவின் இரகசிய  சித்திரவதைக்கூடம் என்று  மட்டும் புரிந்தது. அவனை கதிரையில் இருத்தியதும்.  அவள் தான் விசாரணை  தொடங்கினாள். இதா பார் ஒழுங்கா உண்மையை  ஒத்துக் கொண்டா நீ உயிரோடை  போகலாம்.கணணியில்  கிராபிக் செய்த ஒரு  படத்தையும் அதே படத்தை கையால்  ஓவியமாய் கீறியிருந்த படத்தையும் காட்டியபடிசெல்றா இந்த பெடிச்சியை  உனக்கு  எப்படி தெரியும்.நீ புலிதானே .அவளின்  வட்டார வழக்கு பேச்சிலிருந்து  அவள்  மட்டக்கிளப்பு அல்லது அம்பாறை  எண்டு புரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நோ சிஸ்ரர்  எண்டவனிற்கு பேந்தும் பார்   இங்கிலிசு எண்டு இன்னொரு அறை  விழுந்தது. "சொறி "வளந்தது படிச்சது எல்லாமே சிங்கப்பூர்.  வேணுண்ணா  என்னோடை  டொக்கிமென்ன்ஸ் செக் பண்ணி பாருக்க . எனக்கு தமிழ்  இப்பிடித்தான்  வரும்.என்றான்.&lt;br /&gt;அவளின் விசாரண நடந்து கொண்டிருந்தபோதே அங்கிருந்த மேசையில் அவனது பொருட்களை  பரப்பி வைத்து அவனிடமிருந்த விசிட்டிங் காட்டுகள். அவனது சிங்கப்பூர்   ஆவணங்களை மற்றையவன் பரிசோதித்துக்கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி சரிவராது  எங்கடை வழைமையான விசாரணையை  தொடங்க வேண்டியதுதான் என்று அவள்  சிங்களத்தில் சொன்னதும்.  இருவர்  வந்து  அவனது உடுப்புக்களை கழற்றி  நிருவாணமாக்கி அங்கிருந்த இரண்டு தூண்களிற்கிடையில் அவனது கைகளையும்  காலையும்  அகட்டி  கட்டினார்கள்.டவின்சியின் மான் பவர்(man power) ஓவியத்தை  போன்ற  நிலையில் தொங்கிக் கொண்டிருந்தவனை&lt;br /&gt;ஒருவன்  வளைந்து கொடுக்கும் ஒரு வித பிளாஸ்ரிக் குளாயால் அவனது பின் பக்கம்  முழுதும்  முடிந்தவரை  ஓங்கி அடித்துக்கொண்டிருந்தான்.அவன் ஏற்கனவே  தண்ணியடித்திருந்ததால்  வாங்கிய அடி  நிருவாணமாக்கப்பட்ட கூச்சம்    தூண்களில்.  தொங்கிய வலி அவ்வளவாக தெரிந்திருக்கவில்லை.ஆனால் அவன் வாய்  மட்டும் ஆங்கிலத்தில்  கெட்ட வார்த்தைகளை  சொல்லிக்கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பொழுது ஒருத்தன் சாராய போத்தலுடனும் சாப்பாட்டு பார்சல்களுடனும். உள்ளே  நுளைந்தான் . வாங்கோ காசிம் நானா. என்று வரவேற்றார்கள். இவனை தொங்கவிட்டு  அவர்கள் தண்ணியடிக்கத் தொடங்கியிருந்தார்கள்.  அவர்களின் சிங்களத்திலான  உரையாடல்களில்.  அவளின் பெயர் ராணி.இன்னொருத்தன். உடுகொலஇவன்தான் அந்தக்  குழுவின் பொறுப்பாளர்.. மற்றையவன்.பெர்ணான்டோ. அடுத்தவன் றஜித். என்பது  மட்டும் அவனிற்கு புரிந்தது. கையில் சாராய கிளாசுடன் வந்த ராணி அவனின்  வாயில் வைத்து பருக்கினாள்.. அவனிற்கும் அது தேவையாக இருந்தது.  பின்னர்  தன்து கைகளை கீழே கொண்டு சென்றவள். அவனது உறுப்பை  விரலால்  தட்டியபடி நீ  எப்பவுமே இப்பிடித்தான் கிறீன் சேவ் செய்வியா என்றவும். மற்யைவவர்கள்    கிறீன் சேவ்  இல்லை கிளீன் சேவ்..ராணி தன்னுடைய வேலையை தொடங்கிட்டாள் என   சொல்லி சிரித்தனர்.&lt;br /&gt;மீண்டும் மேசைக்கு போனவள்  ஒரு கிளாஸ் சாராயத்தை ஒரு மடக்கில்  குடித்துவிட்டு திரும்ப வந்தது  இனி உனக்கு தமிழ் தானாய் வரும் என்றபடி  ஒற்றைக் கையை கீழே கொண்டு போனாள். இப்பொழுது அவளது உள்ளங்கையில் அவனது    இரண்டு விதைகளும். உள்ளடங்கியிருந்ததுமெதுவாக கையை இறுக்கி பிசைய  தொடங்கினாள்.  வலி உச்சத்தில் ஏறிக்கொண்டிருக்க அவன் கால்கள் நெம்பி  பெருவிரல்கள்  தூணைத்தொட்டது. வானத்திலிருந்த நட்சத்திரங்கள் இறங்கிவந்து  அவனது தலையை சுற்றி வட்டமிட கண்கள் இருண்டது. மீண்டும் கண்விழித்தபொழுது   அவர்கள் உணவருந்தியபடி இருந்தார்கள்.  ஆனாலும் அசையாமல் அவர்கள் பேசுவதை  கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;தவறான ஆளை பிடிச்சிட்மோ. ??&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் அப்படி சொல்லுறாய்???&lt;br /&gt;&lt;br /&gt;அனிட்டை இருந்த விசிட்டிங் காட்டுகள் எல்லாம்  பெரிய பிஸ்னெஸ் ஆட்கள்.  அரசியல் வாதிகள். போலிஸ் அதிகாரிகள்  பெயர்கள் இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;சும்மா எங்கையாவது பொறுக்கியெடுத்து  சேர்த்து வைச்சிருந்திருப்பான்.  எதுக்கும்  நாளைக்கு அந்த இலக்கங்களிற்கு  தொடர்பு கொண்டு கேட்டு முடிவு  செய்வம்.&lt;br /&gt;&lt;br /&gt;எதுக்கும்  சலாவுதீன்  வரட்டும். அவனுக்குத்தான் யாப்பாணியளை தெரியும்.   ..இல்லாட்டி குணாளனிற்கு கட்டாயம்  தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;குணாளன்  இப்ப  சி.பி.சி.ஜ.டி. நிலாப்தீனோடையல்லோ??. அவங்களிட்டை  குடுக்கக்கூடாது நாங்களே கண்டுபிடிக்கவேணும்.&lt;br /&gt;&lt;br /&gt;சிலநேரம்  இவனின்ரை தொடர்புகள் பெரிய இடமெண்டால்  எங்களிற்கும் பிரச்சனை   இவனை அந்தப் பெண்ணோடை சிலர் பாத்திருக்கிறதா சொலலியிருக்கிறாங்கள்.  எதற்கும் நாளைக்கு அந்த லொச்சிற்கு நேரடியா அவனையும் கொண்டு போய்  விசாரிக்கலாம்.  காசிம் நானா நீங்கள் இவனை படமெடுத்து  மட்டக்களப்பிற்கு  போய் விசாரிட்டு வாங்கோ.&lt;br /&gt;&lt;br /&gt;என்று பேசிக் கொண்டிருக்கும் போதே  அவனது இருமல் அவர்கள் பார்வையை   திருப்பியது&lt;br /&gt;தொங்கிய தலையை நிமிர்த்தி பிளீஸ் வோட்டர். வோட்டர்.. இவனுக்கு  எப்பிடியடிச்சாலும் தமிழ் வருதில்லையென்றபடி ராணி திரும்பவும் சாராயத்தை   போத்தலோடு  எடுத்துப்போய் அவன் தலையை நிமிர்த்தி ஆட்டுக்கு  தவிட்டுத்  தண்ணி பருக்குவது போல பருக்கினாள். அவனிற்கு அதற்கு மேலும் முடியாமல்  குமட்டிக்கொண்டுவரவே  ஊவேக்......&lt;br /&gt;வேணிபார் கோழிப்புரியாணி  கூழாக பாய்ந்ததில் பாதி ராணியையும் நனைத்துவிட  கோபமடைந்த ராணியின் உள்ளங்கைகளில் மீண்டும் அவனது விதைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;                   0000000000000000000000&lt;br /&gt;&lt;br /&gt;அதிகாலையளவில் கண் விழித்திருந்தான்.அவன் மயங்கியிருந்தானா அல்லது  நித்திரையாகிப் போயிருந்தானா?என்பது நினைவில் இல்லை. அவன் எடுத்திருந்த  சத்தியின் நாத்தம்  அந்த அறையெங்கும் பரவியிருந்தது. தாகம் தொண்டையை  அடைத்தது. அப்பொழுதுதான் அவனிற்கு  உடல்வலியனைத்தும் தெரிந்தது. தலையில்  பெரியதொரு   பாறாங்கல்லை கட்டிவிட்டது போல   பாரமாயிருந்ததோடு தலை  வெடித்துவிடுகிற அளவிற்கு தலைவேறு வலியெடுத்தது. மூத்திரம் பெய்யவேண்டும்   போல் முட்டியிருந்தது இருந்தது ஆனாலும்  முடியவில்லை அவனது விதைகள்  இரண்டும்  வீங்கி நாவல் நிறமாய் மாறிவிட்டிருந்தது.மெதுவாய் முக்கியபடி  சொட்டுச் சொட்டாய் பெய்து முடித்தவனிற்கு  கொஞ்சம் ஆறுதலாயிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அந்த இடத்திலேயே  பெய்ததால் மீண்டும் அடிவிழலாம் என  அவன்  எதிர்பார்த்தான். அடுத்து என்ன  செய்வார்கள்.  கொலைசெய்து எங்காவது வீசி  விடுவார்களா? அல்லது நான் யாரென்பதை கண்டு பிடித்து சிறையில் வாழ்க்கை  கழியப்போகின்றதா? நேற்று அவனை சந்தித்தவர்கள் அவனை தேடியிருப்பார்களா?   சிங்கப்பூரிற்கு செய்தி போயிருக்குமா? இப்படி ஆயிரம் கேள்விகளை  திரும்ப  திரும்ப  அவன் மனதில் கேட்டுக்கொண்டிருக்கும் போதே விடிந்துகொண்டிருந்தது.&lt;br /&gt;காலை கதவைத்திறந்த ஒருத்தன் நாற்றத்தில் முகத்தை சுழித்தபடி மீண்டும் கதவை  சாத்தினான். சில நிமிட நேரத்தில் மீண்டும் கதவு திறந்தது அவனுடன்  இன்னொருத்தன் கையில் வாளித் தண்ணீரும் துணியோடும் நின்றிருந்தான். வந்தவன்    சே இவங்கள் என்ன மனிசரா மிருகங்களா  இரவு முழுக்க  தொங்கவிட்டிருக்கிறாங்கள் என சிங்களத்தில் திட்டிய படியே அவனது கட்டுக்களை  அவிழ்த்து கிழே இறக்கவும் அவன் நிற்க முடியாமல்  கீழே விழுந்து  படுத்துக்கொள்ள. அவனை தூக்கியபடி சிங்களம்  தெரியுமா? என்றான்.  அவன்  பேசாமல் இருக்க  யு ஸ்பீக் சிங்களம் என்றான். அவன் இல்லையென தலையாட்டி  விட்டு தண்ணிகுடிக்கவேணும் என சைகை மட்டும் செய்தான். அவனை கதிரையில்  இருத்தி ஒரு போத்தலில் தண்ணியை கொண்டு வந்து கொடுத்தவன்.  அந்த இடத்தை  துப்பரவு செய்து கொண்டிருந்தவனை  ரவி இவனை கொண்டுபோய் குளிக்கவிடு என்றான்.&lt;br /&gt;அவனை குளிப்பதற்கு கூட்டிப்போன ரவி&lt;br /&gt;&lt;br /&gt;நான் வடமராச்சி பிடிச்சு அஞ்சுமாதமாகிது டீ..ஓ .போட்டிட்டு இஞ்சை வேலைக்கு  வைச்சிருக்கிறாங்கள்.  வெளிநாடு போக வந்தனான் சந்தேகத்திலைதான்  பிடிச்சவங்கள். நீங்கள் ஊரிலை எந்த இடம்?&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கப்பூர்&lt;br /&gt;&lt;br /&gt;ஊரிலை சிங்கப்பூரா?? அது எங்கையிருக்கு?&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கப்பூரிலை இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாய்க்கொழுப்புக்குத்தான் பிடிச்சிருப்பாங்கள். போய் குளி.&lt;br /&gt;&lt;br /&gt;குளித்து முடித்து வந்தவன் அந்த சிங்கள அதிகாரியிடம் வலிக்குளிசை கேட்டு  வாங்கி போட்டுக்கொண்டான் அவன்   பால்த்தேனீரும் வாங்கி கொடுத்திருந்தான்.&lt;br /&gt;              0000000000000&lt;br /&gt;முதல்நாள் அவனைப் பிடித்த குழுவினருடன் மேலும் இருவர்  வந்திருந்தனர்.  புதிதாய்வந்தவர்களில் ஒருவன்  என்ன மச்சான்  எப்பிடி இரிக்கிறாய். என்னை   ஞாபகம் இரிக்கா  என்றான்.   அவன்    இல்லையென்று  தலைமட்டுமஆட்டினான் நான்  நம்பத் திறீயிலை   செல்வா வீட்டிலையெல்லாம் இரிந்தனான் என்னை தெரியாதா??  மீண்டும் அவனது  கேள்விக்கு  இவனது தலையசைப்பு மட்டுமே பதிலானது.  அவனும்  உடுகொல மட்டும் வெளியேறினார்கள்.  சிறிது நேரத்தில் உள்ளே வந்த உடுகொல   சலாவுதீனிற்கு  தெரியாதாம் என்றான்.  புதிதாய் வந்த மற்றையவன் அவனை சுவரோடு  நிற்க வைத்து கையில் ஒரு சிலேற்றில் சில இலக்கங்களை எழுதிக்கொடுத்து  பிடிக்கச் சொல்லி  பல கோணங்களில் படம் எடுத்தான்.  காசிம் நானா நீங்கள்  படங்களை பிறின்ட் போட்டு மட்டக்களப்பிற்கு போய் விசாரிச்சு விபரங்களை  கொண்டுவாங்கோ என்று உத்தரவிட்ட உடுகொல  ராணி நாங்கள் இவனை அந்த லொட்சிற்கு  அழைத்து போகலாமென்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் கண்கள் கட்டப்பட்டது .இப்பொழுது அவர்கள் பயணித்தது போலீஸ் ஜீப்  ஆனால்  அனைவரும் சாதாண உடையில்  தான் இருந்தனர்  கட்டியிருந்த அவனது கண்களை   அவிழ்த்தனர். போலீஸ் ஜீப் கிறீன் வீதியிலிருந்த  பாரிஸ் லொட்ஜின் முன்னால்   நின்றது. இது இலங்கையின் பிரபல பயண முகவரான  பாரிஸ் தவம் என்பவரிற்கு  சொந்தமானது. போலீஸ் ஜீப்பை பார்த்துமே  அனைவரும் அறைகளிற்குள்  பதுங்கிக்கொண்டனர். காரணம் அங்கிருந்தவர்கள்  அனைவருமே வெளிநாடு போவதற்காக   ஏஜென்சிகளிடம் காசுகட்டிவிட்டு  காத்திருந்தவர்கள். கைவிலங்கிட்ட அவனை  இறக்கியவர்கள்.   லொட்ச் மனேச்சரிடம் போய் விபரத்தை சொல்லி உடுகொல  தன்  கையிலிருந்த அந்த பெண்ணின் படத்தையும்  அவனையும் காட்டி இவர்களை  இங்கு  தங்கிருந்தாரகளா? என்றான்.  பழைய மனேச்சர்  காசை சுருட்டிக்கொண்டு  ஓடிவிட்டதால் தான் புது ஆள்  வேலைக்கு சேர்ந்து கொஞ்சக்காலம்தான்.  அங்கை  இருக்கிற பழைய ஆட்களை கேட்கச் சொல்லி சொன்னார்.&lt;br /&gt;அப்பொழுது அங்கு வந்த றூம் போய்(லொட்சினை  கூட்டிதுப்பரவாக்கி  அங்குள்ளவர்களின்  தேவைகளை கவனிப்பவன்.)அவனிடமும்  அதே கேள்வியை  கேட்டதும்  அவனை  ஆழமாக பார்த்தவன் இல்லையென்று தலையாட்டிவிட்டு லொட்சில் இருந்த  மற்றையவர்களை   கதவைதட்டி வெளியே வரும்படி சொல்லிக்கொண்டே போனான்.  வெளியே  வந்த பலரும் அவனைத் தெரியாதென்றே சொன்னவர்கள் பெண்ணின் ஓவியத்தை பார்த்து  தலையை  சொறிந்தனர். ஒருத்தி மட்டும் அவனை  அங்கு கண்டதாகவும். ஆனால் அந்த  பெண்ணை தெரியாது என்றும் சொன்னாள். அவனைத் தெரியும் என்றதுமே ..இரடி  வெளியாலை வந்ததும்  முதல்வேலையா வந்து உனக்கு காதைப்பொத்தி போடுறன் எண்டு  மனதில் நினைத்துக்கொண்டான்.   அங்கிருந்து புறப்படும் பொழுது றூம் போயை   பார்த்து கண்களால் நன்றி சொன்னவன். செய்தி சிங்கப்பூரிற்கு போய்விடும்  என்கிற நம்பிக்கை அவனிற்கு பிறந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் அருகிலிருந்த பியூட்டி லொட்ச்.மற்றும் விவேகானந்தர் லொட்ச்  ஆகியவற்றிலும் விசாரித்தார்கள். ஆனால்  பெரும்பாலானவர்கள் தெரியாதென்றும்   சிலர். பார்த்மாதிரி இருக்கு என்றும் பதில் சொன்னதால்.அவர்களிடம் ஏதோ  வெறுப்பணர்வு தோன்றியிருந்தது  இப்பொழுது அவனது கண்கள் கட்டப்படவில்லை   ஜீப் மருதானை காவல் நிலையத்திற்கருகில் இருந்த காவல்த்துறையினரின்  குடியிருப்பில் நுளைந்தது.   அந்த அறையில் நுளைந்தபொழுதுதான்  அவன்  அங்குதான் முதல்நாள் இரவு தங்கவைக்கப்பட்டிருத்தான்   என்று  அவனிற்கு  புரிந்தது. இப்பொழுது அவனிற்கு பசி வயிற்றை விறாண்டியது. மீண்டும்  தலைவலிக்கத்தொங்கியிருந்தது.அப்பொழுது  உடுகொலவின் கைத்தொலைபேசியடிக்க  அதை  எடுத்தவன்  வெளியே போனான். சில நிமிட நேரத்தின் பின்னர் உள்ளே வந்தவன்.  மற்றயவர்களையும் வெளியே அழைத்தான். சிங்கப்பூரிற்கு தொலைபேசி போயிருக்குமோ  என்று அவன் நினைத்துக்கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;                  00000000000000&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் உள்ளே வந்தவர்கள் உடுகொல அவனிடம்&lt;br /&gt;&lt;br /&gt;வினோதனை உனக்கெப்படி தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் என்னுடைய  றிலேசன் அங்கிள் முறை.&lt;br /&gt;&lt;br /&gt;ஓ அப்பிடியா?&lt;br /&gt;&lt;br /&gt;அவனது முகம் மாறியது உன்னை  தேடி எல்லா போலிஸ் ஸ்ரேசனிற்கும்  போன்  போயிருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;ஓ  றியலி  ??&lt;br /&gt;&lt;br /&gt;என்ன சாப்பிடுகிறாய்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறியாணி.&lt;br /&gt;&lt;br /&gt;                 00000000000000000&lt;br /&gt;&lt;br /&gt;அன்றிரவு  பொறளை  இராணுவ மற்றும் காவல்த்துறை   குடியிருப்பின் ஒரு  தொடர்மாடி குடியிருப்பில்    அவனது ஒற்றைக்கை மட்டும் ஜன்னலுடன் சேர்த்து  விலங்கிடப்பட்டிருந்தது.  குளித்து முடித்து சுடிதார் அணிந்து வந்த ராணி  அவன் முன்னால் ஒரு முறை  சுழன்றவாறு நான் எப்பிடி இருக்கிறேன் என்றாள்..  ஊகூம்..பெரிய நதியா எண்டு நினைப்பு.கோயில் தேரிற்கு  சீலையால்  போர்த்தது  போல இருக்கு என்று சொல்லாமென நினைத்தாலும் சுப்பர் என்றான். கதவைத் தட்டிய   ஒரு போலிஸ்காரன்  சாராயம் பியர் சோடா இரண்டு பிரியாணி பாசலை கொடுத்து  விட்டு பவ்வியமாக விடைபெற்றான்.கைவிலங்கை  கழற்றியவள் விலங்கின் இரண்டு  பக்கத்தையும்காப்புப் போல் ஒரு கையிலேயே பூட்டினாள். இன்றிரவு நீ என்னுடைய  பாதுகாப்பில்தான் இருக்கப் போகிறாய். ஒத்துளைத்தால் உனக்கு நல்லது   இல்லாட்டில் நேற்றை இடத்தில்  தொங்கவேண்டிவரும் என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னவேணும் பியரா சாராயமா ?&lt;br /&gt;&lt;br /&gt;fist பாத்றூம் next பசி சைகையுடன் சேர்த்தே சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டையும் நோட்டம்விட்டான்  யாரும் தப்பிஓடிவிடாதபடி யன்னல் வெளியே  இரும்புக்கம்பிகளால்  ஒட்டப்பட்டிருந்தது.துணியெல்லாவற்றையும் கழற்றிவிட்டு  போக சொன்னாள். கழிவறைக்கு போனவன்  அப்படியே  குளிர்ந்த நீரில்  குளித்துவிட்டு  அங்கிருந்த புளிச்ச நாத்மெடுத்த துவாயால்  முன் பக்கம்  மட்டும் மறைத்தபடி வந்தவனை  ஏற இறங்க பார்த்த ராணி  அவன் துவாயை   பறித்துவிட்டு மீண்டும்   கைகளை பின்பக்கமாக  விலங்கிட்டு கதிரையில்  தள்ளினாள்.தொலைக்காட்சியில் நீலப்படம் ஓடிக்கொண்டிருந்தது. இப்பொழுது அவனது  விதைகள் அவளது உள்ளங்கைகளில் ஆனால் நசிக்கவில்லை .அவனின் காலகளை அகற்றி  முழங்காலில் குனிந்தாள். உன்னை அவள்  இவ்வளவு நசிச்சும் உனக்கு உனக்கு  புத்திவரேல்லை. கீழே பார்த்து  திட்டினான்..  அசையாதை அசையாதை .கொச்சிக்கடை  அந்தோனியாரே  வெள்ளவத்தை பிள்ளையாரே  நேத்திக்கடன் வைத்தான்.  இரண்டு  பேருமே கைவிட்டு விட்டனர். விலங்கிட்டிருந்த கைகளை சில வினாடிகள் இறுக்கப்  பொத்திப் பிடித்தான் கைகளை  விலங்கு அழுத்தியது மீண்டும் கைகள்  லேசானது.அவளது பெருத்த உடம்பிற்கான  காரணம் இப்பொழுது அவனிற்கு புரிந்தது  .ம்.பரவாயில்லையே என எழுந்தவள் பியரை உடைத்து  சில மடக்குகள்  குடித்துவிட்டு  அவனது ஒரு கை  விலங்கை அகற்றி  அவனது கையில் பியரை  கொடுத்தாள். விலங்கின் திறப்பை ஒவ்வொருதடைவையும். பாதுகாப்பாக அங்கிருந்த  அறையில் கொண்டுபோய் வைத்து கதவை பூட்டிவிடுவாள். அவளின் செய்கைகள்  அனைத்தும் நன்கு பயிற்றுவிக்கப்பட்டதொரு புலனாய்வு அதிகாரியாகவே   காணப்பட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;                 00000000000000&lt;br /&gt;&lt;br /&gt;நேரம் நள்ளிரவைத் தாண்டிக்கொண்டிருந்தது  வீதி விளக்கின் வெளிச்சம்  மெல்லிதாய் அறையை நிறைத்திருந்தது. அந்த படுக்கையறையின்   கட்டிலில் அவனின்  இடக்கை கட்டிலோடு மேற்பக்கமாக விலங்கிட்ட நிலையில் கலந்து முடித்த    இருவரிற்கும்   மூச்சுவாங்கியபடியிருக்க.  அவளின் பருத்த உடல்பாதி அவன்  மீது படர்ந்திருந்தது.  அவன் கன்னத்து குழியினை விரலாம் மெதுவாய்   வருடியவள் .எனக்கு உன்னிலை பிடிச்சதே இந்தக் குளிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;நீ புலியில்லை எண்டு  விசாரணயள்ளை தெரியிது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்ப விடவேண்டியதுதானே ??&lt;br /&gt;&lt;br /&gt;காசிம் நானா மட்டக்கிளப்பாலை விசாரண  முடிச்சு வந்ததும்  அங்கையும்  உன்னை  தெரியாதெண்டு சொல்லியிருந்தா  உன்னை  கோட்டிலை கொண்டுபோய்  ஒரு ஜச்சிற்கு   முன்னாலை  லோக்கல் பொலிசிட்டை  குடுத்திடுவம் பிறகு உன்ரை சொந்தக்காரங்கள்  யாராவது வந்து கையெழுத்து போட்டு கூட்டிக்கொண்டு போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எதுக்கு என்னை  அரஸ்ற் பண்ணீங்க??&lt;br /&gt;&lt;br /&gt;பட்டிலங்தையிலை வெடிச்சு செத்த பெட்டையோடை கடைசியா ஒருத்தன்  இரண்டுநாள்   பாரிஸ் லொட்ச்சிலை  தங்கியிருக்கிறான்.அவள் மட்டக்கிளப்பு மாமங்கம். அததான்  காசிம் அங்கை போயிரக்கிறார் . அவனின்ரை பொலிஸ் பதிவு ஜடென்டி காட்டிலை  திருக்குமார் எண்டு பெயர் இருக்கு  அந்த ஜடென்டி படத்தை  எடுத்து  எல்லா  லொட்ச்  கோட்டல்கள் பொலிஸ் ஸ்ரேசன்கள் எல்லாம் அனுப்பி வைச்சனாங்கள்.  அப்பதான்  ஒரு லொச்சிலை அதே மாதிரி ஒருத்தன் தங்கியிருக்கிறதா தகவல்  வந்திச்சி.  அதுதான் நீ...&lt;br /&gt;&lt;br /&gt;இது லொட்ச் காக்காவின்ரை வேலையா என மனதிற்குள் நினைத்தவன். ..பட்டிலந்தை..  லேடி..    திருக்குமார் ..வெடிச்சது எதுவுமே   புரியல்லை.என்னை பாத்தா அவன்  மாதிரி இருக்கா??&lt;br /&gt;&lt;br /&gt;உனக்கு எதுவுமே விளங்க வேண்டாம் வேண்டாம் அதுதான் நல்லது .&lt;br /&gt;&lt;br /&gt;ஒண்ணு கேட்டா கோவிச்சசுக்க மாட்டீங்களே  நீங்க சி ஜ டியா.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப அப்பிடித்தான் ஆனால்  மின்னை  அப்பிடியில்லை&lt;br /&gt;&lt;br /&gt;அப்பிடின்னா??&lt;br /&gt;&lt;br /&gt;அவள் கைகள் அவனது மார்பை வருடியபடியே   ..நானும் சிங்களவனிற்கு  எதிராதுவக்கு தூக்கினவள்தான். எங்கடை ஊரிலை ஈ;பி.ஆர்.எல்.எவ்வுக்கு போன  முதல்  பெடிச்சி நான்தான்.  இயக்கத்திலையே ஒருத்தரை காதலிச்சிருந்தனான்   புலியள்  ஈ.பி யை  தடைசெஞ்சாப்பிறகு   என்னையும் அவரையும் விசாரிச்சிட்டு  விட்டிட்டாங்கள். நாங்கள் கலியாணம் செய்து  எனக்கு பிள்ளையும் பிறக்க  அவர்  கட்டாறுக்கு போயிற்றார்.  எல்லாம் நல்லபடியாய்தான் போய்கொண்டிருந்தது.   என்ரை அவரும்  லீவிலை ஊருக்கு வந்திருந்தார் அந்த நேரம் இந்தியனாமிக்கும்   புலியளிற்கும் சண்டை நடந்துகொண்டிருந்தது. இந்தியாவிலை  நிண்ட பழைய இவற்ரை  சினேதங்கள்  ஈ.பி பெடியளும் ஊருக்கை  இந்தியனாமியோடை திரிஞ்சவங்கள்.  இவர்  வந்து நிண்டதை கேள்விப்பட்டு அடிக்கடி வந்திட்டு போவாங்கள். நாங்களும்  வராதையெண்டு சொல்லோது.  ஒருநாள்   இரவு இதே மாதிரித்தான் நானும் அவரும்  படுத்திருந்த நேரம் எங்கடை சொந்தக்கார பெடியன் ஒருத்தன்  புலியிலை  இருந்தவன். தீசன் எண்டு பேர்  கதவிலை தட்டி என்ரை பேரை சொல்லி கூப்பிட்டான்  அவசரமா துணியை சுத்திக்கொண்டு   நான்தான் போய் கதைவை திறந்தன் இவரோடை  கதைக்கவேணும் வரச்சொல்லுங்கோ எண்ட அவரும் பின்னாலை வந்திட்டார்.  என்னவெண்டாலும் இங்கை கதை  அவர் வெளியிலை வரமாட்டார் எண்டு நான்   அம்பிடிக்க . ஜயோ அக்கா ஒரு பிரச்சனையுமில்லை  கதைக்கத்தான் எண்டு அவனும்  அடம்பிடிக்க  சொந்தக்கார பெடியன்தானே  ஒண்டும்  செய்யமாட்டானெண்டு  அவரை  வெளியாலை விட்டாலும் நானும்  கொஞ்சம் பின்னாலை போனன்  படலையடிக்கு போனதும்  வெடிச்சத்தம் கேட்டிச்சு. மண்டை வெடி அவர் அதிலையே........ என்று சொல்லும்  போது ராணியின் குரல்  தளுதளுத்தது நின்று போய் அவனது மார்பில் சூடான   சிலகண்ணீர் துளிகள்  விழுந்ததை அவன் உணர்ந்தான். சில நிமிட அமைதியை   அவனே  கலைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் என்னாச்சு.??&lt;br /&gt;&lt;br /&gt;அதோடை என்ரை விதியும் மாறிப்போச்சு. என்ரை மனிசனை   சுட்டவனை  கொல்லாமல்  விடுறெல்லையெண்டு முடிவெடுத்தன்.  என்ரை புள்ளையை அம்மாட்டை குடுத்திட்டு   ஆமியோடை போய் சேந்திட்டன்.அவனை மட்டுமே தேடினன் ஒம்பது மாதத்துக்கு பிறகு    அவனை போட்டாப் பிறகுதான் என்ரை மனசு கொஞ்சம் ஆறிச்சிது.&lt;br /&gt;&lt;br /&gt;ஓ அவனும் குளோசா?? பிறகெதுக்கு இப்பிடி  நீங்க தொடந்தும்....இழுத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு எங்கையாவது போய் என்ரை பிளையோடை வாழலாமெண்டுதான் நினைச்சனான். ஆனா  புலியை பத்தி உனக்கு தெரியாது  அது எங்கை போனாலும் விடாது. ஏதாவது அரபு  நாட்டுக்கு போகலாமெண்டு நினைச்சன் அதக்கு என்னட்டை வசதியும் இருக்கேல்லை.    வெளிநாடு போனாலும்  உன்னை மாதிரி நான் படிச்ச ஆளும் இல்லை ஏதாவது  வீட்டு  வேலையள்தான் செய்யவேணும். அதோடை முதல்லை  வெறும் மெசேச்குடுக்கிற ஆளாய்  இருந்த என்னை  சி.ஜ.டி யிலை சேர்த்து பயிற்சியளும் தந்து   குவாட்டஸ்  சம்பளம் எல்லாம் தாறாங்கள்.&lt;br /&gt;என்னவோ  ஒண்ணும் புரியல்லை ஆனா உங்களோடை ஸ்ரோறி பீலிங்கா   இருக்கு சொறி.   எனக்கு  நீங்க  அடிச்ச அடி ஒரே வலியா இருக்கு இன்னும் கொஞ்சம் விஸ்கி  பிளீஸ் ..அப்பதான் தூங்கலாம்.&lt;br /&gt;இப்ப எனக்கும் கவலையாத்தான் இருக்கு ஆனால்  ஒண்டுமே செய்யேலாது  என்றவள்.  அவன் மீதிருந்த நிரம்பிய ஆணுறையை உருவியெடுத்தவாறே  துணியால் தன்னை  சுற்றிக்கொண்டு அயையை விட்டு வெளியேறினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;                   000000000000000&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கிளாஸ் நிரப்பி சாராயத்தை  ஊற்றிவந்து அவனிடம் நீட்டியவள் அவன்  குடித்து முடியும்வரை காத்திருந்து  கிளாசை வாங்கியபடி  உனக்கு இன்னொரு  விடயத்தையும் சொல்லவேணும்  நாளைக்கு உன்னை ஜட்சிற்கு முன்னாலை விடுதலை  செய்யேக்கை  நான் இப்பிடி நடந்ததா நீ வாயே திறக்கக்கூடாது அதுதான் உனக்கு  நல்லது . அப்பிடி ஏதாவது நடந்தால் நீ எப்பிடியும் எங்களோடை கண்காணிப்லைதான்  இருப்பாய் பிறகு கடல்லையோ  களனி ஆத்திலையோ மிதக்கவேண்டிவரும்.  என்றவள்   அவன்மீது போர்வையை  போர்த்திவிட்டு  "சரி படு  நான் இஞ்சை வெளியிலைதான்  படுத்திருப்பன்"  என்படி விலங்கு சரியாய்  பூட்டியிருக்கா என்று பார்த்து  உறுதி செய்தவள் கதைவை பூட்டிவிட்டு போய்விட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;                   000000000000&lt;br /&gt;&lt;br /&gt;காசிம்மின் மட்டக்கிளப்பு  அறிக்கை  N.I.B அறிக்கை எல்லாம் வந்தது  அவனை   மருதானை நீதவான்  முன்னிலையில் புறக்கோட்டை பொலிசாரிடம்  C.I.D  யினர்  கையளித்தனர். அங்கேயே தயாராய் நின்ற வக்கீல் கையெழுத்திட்டு அவனை  விடுதலை  செய்தார்.  அங்கு வந்த ராணி அவனிடம் தனது கைத்தொலைபேசி இலக்கத்தை கொடுத்து  உனக்கு எங்கை என்ன  உதவி தேவையோ  தராளமாய் எனக்கு போனடி தனது இலக்கத்தை  கெடுத்துவிட்டு போனார்.அதன் பின்னர் அவனும் பாகிஸ்தானிற்கு தேங்காய்  ஏற்றுமதி வியாபாரத்தினை  அவனது  பங்காளி  சுமானந்த தேரரோடு  தங்குதடையில்லாமல் தொடர்ந்ததோடு  அடிக்கடி பொரளை  ராணியின் குவாட்டசிற்கு  பியரோடும். ஓல்ட் அரக்கோடும் போய்வருவதுமாய்  அவர்களது நட்பு தொடர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;                     00000000000000&lt;br /&gt;&lt;br /&gt;01.31.1996 திங்கள் அதிகாலை  மீன்கள் பதனிடும் தொழிற்சாலையொன்றின்   வாகனத்தரிப்பிடத்தில்  வரிசையாய் நிறுத்தப்பட்டிருந்த  ஒரு லொறி ஒன்றினுள்  அவன் தனியாக ஜட்டிமட்டும் அணிந்தபடி வியர்வையும் புளுதியுமாய் சிறிய   மின்விளக்கு வெளிச்சத்தில்  அதிகளவு சத்தம் எழுப்பாமல் கவனமாய்  ஆனால்பரபரப்பாய் இயங்கிக்கொண்டிருந்தவன். நேரத்தை பார்தான் அதிகாலை  இரண்டை  தொட்டுக்கொண்டிருந்தது  அவனிற்கு பக்கத்தில்  மசாயிர் அவனிற்கு  உதவிக்கொண்டிருந்தான்.  சரிமச்சான் எல்லாம் முடிஞ்சுது  இனி பின்னாலை  கருவாட்டு கூடையளை அடுக்கினால்சரி என்றபடி வேகமாக இன்னொரு லொறியிலிருந்த  கருவாட்டு கூடைகளை  அந்த லொறிக்கு மாற்றிஅடுக்கி முடித்தவர்கள் அங்கு  தொட்டியில் நிரம்பியிருந்த  தண்ணீரில் உடலை கழுவி உடுப்பை மாற்றிபடியே   அவன் மசாயிரிடம்..&lt;br /&gt;மச்சான் நேரமாகுது  நீ லொறியை எடு நான்  காரிலை முன்னாலை போறன். என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;மச்சான் உன்னை நம்பித்தான் இரிக்கிரன் ஒண்டும் பிசவாது தானே&lt;br /&gt;&lt;br /&gt;டேய் நான்   அ..அ வின்ரை ஆள் ஒண்டும் பிசவாது லொறியைஎடு எண்டவன் காரிற்கு  போய் அதற்குள்ளிருந்த  jony walker போத்தலை திறந்து சில முறடுகள் விழுங்கி  தொண்டையை கனைத்துவிட்டு பார்த்பொழுது. மசாயிர்  தலையில் தொப்பியை போட்டபடி  அவனது ஜீன்சில் இருந்த கைக்குட்டையை  எடுத்து நிலத்தில்  விரித்து  முழந்தாளிட்டு தொழுதுகொண்டிருந்தான். இவன் வேறை  நேரம்காலம்  தெரியாதவன்.என்று சலித்துக்கொண்டான்.&lt;br /&gt;தொழுது முடிந்த மசாயிரிடம் டேய் உன்ரை அல்லா பகிடி வெற்றி தெரியாதவர்.  கவனம். எல்லாம் பிழைக்கபோகுது .&lt;br /&gt;&lt;br /&gt;அதில்லடா மனசாட்சியெண்டு இரிக்கல்லே  அதுதான் என்படி மசாயிர்  லொறியில் ஏறி  அதை இயக்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களது வாகனங்கள் கொழும்பு நகரினுள் நுளையும்  முக்கிய சோதனை சாவடியை  நெருங்க  காவலரணில் இருந்த இரண்டு இராணுவ சிப்பாய்களில் ஒருத்தன்  ரோச்  லைற் வெளிச்சத்தை காட்டி  முன்னால் வந்த காரை மறித்தான். அவனும் அவர்களும்  சிங்களத்தில் உரையாக்கொண்டிருக்கும்போதே  லொறி  அவர்களைத்தாண்டிப்போய்க்கொண்டிருந்ததுகாரிற்குள் மக்கால்வாசியளவில் இருந்த    போத்தலை எடுத்து அவர்களிடம் கொடுத்துவிட்டு  மீண்டும் மசாயிருடன்  இணைந்துகொண்டான்.  புறக்கோட்டை பகுதியில்  காலை சந்தைக்காக  லொறிகள்  பொருட்களுடன்  வந்து  நிறுத்தப்பட்டுக்கொண்டிருந்தது. மசாயிரும்  அந்த  லொறிகளிற்கிடையில்  ஒரு இடத்தில் நிறுத்தினான்.  அந்த லொறியை ஒருவனிடம்  கையளித்து விடுவதோடு இவர்களது வேலை முடிந்துவிடும். காரை நிறுத்தியவன் ஒரு  தொ.பே இலக்கத்தை அழுத்தினான். அங்கேயே  மேம்பாலத்திற்கு அருகில் சாறத்தால்  போர்த்துக்கொண்டு படுத்திருந்த ஒருவன்  கரைநோக்கி வந்தான்.  சில  சங்கேத  மொழிகள் பரிமாறப்பட்டு இருவருமே சரியான ஆட்கள்தான் என உறுதி செய்து  கொண்டபின்னர் அவன் லொறிக்கு  புதியவனை அழைத்து போனாவன்.  மாசாயிர் கீழே  இயங்கிக் கொள்ள  இருவரும் லொறிக்குள் ஏறினார்கள். இங்கை சீற்றுக்கு  பக்கத்திலைதான் சுவிச்  வைச்சிருக்கிறன்.பிழைக்காது. அப்பிடி சிலநேரம்  ஏதாவது பிழைச்சாலும் பின்பக்கமாய் ஒரு அடிகுடுத்தா போதும். என்றவனிடம் .  அவன் ம்..என்று மட்டும் பதில் கொடுத்தான்.  விடைபெய முன்னர் அவனது பெயரை  கேட்கலாமா என  யோசித்தாலும் அது அவனது வேலையல்ல என நினைத்தபடி  அங்கிருந்து  வெளியேறினான். கார்  கொழும்பிற்கு வெளியே பேலியகொடை பாலத்தை தாண்டி ஓடி  கந்தானை பகுதியில் ஒதுக்குப் புறமாக ஒரு தென்னந்தோப்பில் நின்றது.  கைக்கடிகாரத்தில் அலாரம் வைத்துவிட்டு இருவரும் நித்திரையாகிப் போனார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;                 00000000000000&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களது காரை யாரோ உலுப்புவது போல் இருக்கவே திடுக்கிட்டு விழித்தார்கள்.  எருமை மாடு ஒன்று  காரில் சொறிதேய்த்தபடி நின்றது. அவன் எருமை மாடு என்று  திட்டிவிட்டு நேரத்தை பார்தான் ஆறரை மணியாகியிருந்தது. சே இன்னம்  கொஞ்சநேரம் நித்திரை கொண்டிருக்கலாம்.  என்றவன் காரை இயக்கி  பிரதான வீதி  நோக்கி ஓடிக்கொண்டிருக்க  மசாயிர்  திரும்பவும் சுருண்டு  படுத்துக்கொண்டான். கந்தானை சந்திக்கு வந்தவர்கள்  அங்கிருந்த முஸ்லிம்  சாப்பாட்டுக்கடையில்  போய் முகம் கழுவி காலைக்கடன்களை  முடித்துவிட்டு   ரீயும்  மாலுபணிசும் சாப்பிட்டார்கள்.  கார் இப்பொழுது  கட்டுநாயக்கா விமான  நிலையத்தை நோக்கி போய்க்கொண்டிருந்தது  மசாயிர் காரை ஒடிக்கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மசாயிர் இதுவரைக்கும் என்னோடை இருந்து செய்த உதவிக்கு  தாங்ஸ்சடா மச்சான்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன இப்பிடி சொல்லிட்ட  நீ எனக்கு எவ்வளோ  உதவி செஞ்சிரிக்காய். நானும்  இன்னும்  மூண்டு நாளிலை  டுபாய் போயிடுவன்.&lt;br /&gt;நீ போறவரைக்கும்  காரை வைச்சிரு  இன்னும் பத்துநாளைக்கு காசு கட்டியிருக்கு  நீ போற அண்டைக்கு கொண்டு போய்விடு.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டுநாயக்கா விமான நிலையத்தின் இறுதி சோதனைச்சாவடி..&lt;br /&gt;சரி மச்சான் இதிலை நான் இறங்கிறன். தேவையில்லாமல் கொழும்பிற்கு உள்ளை  போகாதை கவனம். ஏதும் அவசரமெண்டால் மட்டும் சிங்கப்பூர் நம்பருக்கு போனடி   இல்லாட்டி டுபாய் போனதும் போனடி&lt;br /&gt;சரிமச்சான் சந்திப்பம் ..மசாயிரிடமிருந்து விடைபெற்றவன்.காரில் தயாராய்  வைத்திருந்த பொதியை எடுத்து அதிலிருந்த ஆவணங்களை கையில் எடுத்துக்கொண்டு  விமான நிலையத்தில் நுளைந்தவன்  வழைமையான  சோதனைகளை  முடித்துவிட்டு   விமானத்தில் ஏறுவதற்காக  பயணிகள் தங்கியிருக்கும் கூடத்தில்  தங்கியிருந்தபொழுது  அவன் எதிர்பார்த்திருந்த  ராணியின் அழைப்பு வந்தது.  விமான நிலைய அறிவித்தல் ஏதும் செய்துவிடக்கூடாது என்று  நினைத்தபடியே&lt;br /&gt;கைத்தொலைபேசியை காதில் வைத்து கலோ..என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;டேய்  நீ சொன்ன இடத்துக்கு வந்திட்டன்  ஏதோ அவசரமா வரச்சொன்னாய்  என்ன ஏது  எண்டும் சொல்லேல்லை  எங்கை நிற்கிறாய்.&lt;br /&gt;&lt;br /&gt;நேரத்தை பார்த்தான்..ஓ வந்திட்டீங்களா. நான் இங்கை பக்கத்திலைதான் சதாம்  ஸறீற்றிலை  நிக்கிறன் ஒரே ராபிக் பத்து நிமிசத்திலை வந்துடறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன  விசயம் எண்டாவது சொல்லன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதை நேரிலை சொல்லுறன்அங்கை  நீங்கள்  1st Floor போய் mony exchange    பண்ணிற இடத்திலை நில்லுங்கோ. வந்ததும் சொல்லுறன்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி கெதியாய் வா.&lt;br /&gt;&lt;br /&gt;1st Floor லையே நில்லுங்க  பிறகு உங்களை தேடஏலாது&lt;br /&gt;&lt;br /&gt;சரி சரி அங்கையே நிக்கிறன். எத்தினையோ பேரை நான்  ஓடவைக்கிறன் நீ என்னை  ஓடவைக்கிறாய் எல்லாம்  என்ரை விதி  ..&lt;br /&gt;&lt;br /&gt;தொலைபேசியை அவன் முழுதுமாக நிறுத்தினான். சிங்கப்பூர் விமானத்திற்கான  பயணிகளை   தயாராகும்படி அறிவித்தார்கள். விமானத்தில் ஏறி அமர்ந்துகொண்டான்.   விமானம் ஓடுபாதையில் உருளத்தொங்கியது நேரத்தினை  பார்த்தான்.  கொழும்புநகரம் ஒருமுறை  அதிர்ந்து அமைதியானது.ஒரு தவறை இன்:னொரு தவறால்  சரிசெய்திருந்தான். அது சரியா தவறா என்பதைப்பற்றியெல்லாம் அவனிற்கு  கவலையில்லை. அதைப்பற்றியெல்லாம் அவன் யோசிப்பதும் இல்லை.விமானம் மேலே  கிளம்பியதும் போர்வையால் மூடியபடி நித்திரையாகிப்போனவனிற்கு  கனவில்  ராணியினால்  விதை நசிக்கப்பட்டவர்களும் கொலை செய்யப்பட்டவர்களும்  அவனைச்சுற்றி நின்று கைதட்டி ஆரவாரம் செய்தனர்.&lt;br /&gt;&lt;span style="font-size: 18px;"&gt;கதையின் முதலாவது பந்தியை  மீண்டும்  ஒருமுறை படிக்கவும். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;               00000000000000000000000000000&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(165, 42, 42);"&gt;கதை உண்மை சம்பத்தை தழுவியது&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong class="bbc"&gt;  பிற்குறிப்புக்கள்&lt;/strong&gt;. 90 களில்  தென்னிலங்கையில்  சந்தேகத்தின் பெயரால் கைது செய்யப்படுபவர்கள்  ராணியை  அடையாளம் கண்பதற்கோ அல்லது விசாரணை  செய்யவதற்கோ ஒரதடைவையாவது  சந்திரப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong class="bbc"&gt;சலாவுதீன்.&lt;/strong&gt; புலிகள் இயக்கத்தில் நீண்டகாலம்  இருந்தவன். மட்டக்கிளப்பை சேர்ந்தவன்  யாழ்ப்பாணத்தில் புலிகள் முகாம்களில்   இருந்தவன். புலிகள் இயக்கத்தில் ஜிகாத் அமைப்பு ஊடுருவி விட்டது  என்று  அறிந்ததும்.  புலிகள் அமைப்பிலிருந்த அனைத்து முஸ்லிம்களும் கைது  செய்யப்பட்டு களையெடக்கப்பட்டபொழுது தப்பிவந்தஒருவன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong class="bbc"&gt;குணாளன் .&lt;/strong&gt; புலிகள் அமைப்பில்  இருந்தவன்  வடமராச்சி கரவெட்டியை சேர்ந்தவன்.  இந்திய இராணுவ காலத்தில் இந்திய  இராணுவத்திற்கு பெரும் தலையிடியாய் இருந்தவன். பின்னர் புலிகள் அமைப்புடன்  முரண்பட்டு  இலங்கை  புலனாய்வு பிரிவுடன் இணைந்திருந்தான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28994032-5371777039879308718?l=sathirir.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sathirir.blogspot.com/feeds/5371777039879308718/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28994032&amp;postID=5371777039879308718' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28994032/posts/default/5371777039879308718'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28994032/posts/default/5371777039879308718'/><link rel='alternate' type='text/html' href='http://sathirir.blogspot.com/2012/01/blog-post_25.html' title='சொல்லமுடியாத கதை'/><author><name>சாத்திரி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_Sem5kfmy6G0/SXSlTz3ZpoI/AAAAAAAAAPc/qpZk13LLF-0/S220/Photo+103.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28994032.post-1383373749561267833</id><published>2012-01-15T04:50:00.000-08:00</published><updated>2012-01-15T04:51:31.383-08:00</updated><title type='text'>நாட்களைக் கடத்தும் தமிழீழ அரசு (நா.க.த.அ)</title><content type='html'>&lt;strong class="bbc"&gt;&lt;span style="font-size: 18px;"&gt;நாட்களைக் கடத்தும்  தமிழீழ அரசு (நா.க.த.அ)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;சாத்திரி (ஒரு பேப்பர்)&lt;br /&gt;&lt;br /&gt;புலிகள் அமைப்பானது ஆயுதங்களை  மௌனிப்பதாக விடுத்த அறிக்கையினை அடுத்து   அந்த அமைப்பும் செயலிழந்து போனதன் பின்னர். உலகத் தமிழர்கள் அனைவருமே  மிகுந்த எதிர் பார்ப்போடும் . நம்பிக்கைகளோடும் எதிர்பார்த்திருந்த நாடு  கடந்த தமிழீழ அரசு தோற்றம் பெற்று இரண்டு ஆண்டுகள் கழிந்ததோடு மட்டுமல்லாது  .அதன் மூன்று பாராளுமன்ற  அமர்வுகளும் நடைபெற்று முடிந்துவிட்டன. இலங்கைத்  தீவில் ஆயுதப் போர் முடிவிற்கு வந்ததுமே  தமிழர்களின்  உரிமைக்காக குரல்  கொடுக்கவும், சாத்வீக வழியிலான  போராட்டங்களை நடாத்தி தமிழர்களின் உரிமைகளை  வென்றெடுக்க  ஒரு அமைப்பு அவசியமானது அது நாடுகடந்த தமிழீழ அரசே  என  வலியுறுத்தி அந்த அமைப்பு உருவாகுவதற்கு மட்டுமல்லாது. அதன்  நோக்கங்கள்   அதன் தேவைகள் என்ன  என்பதோடு அதன் அவசியத்தையும்  புலம்பெயர்ந்து வாழும்  தழிழர்களிடம்  கொண்டு சென்று சேர்ப்பதற்கு ஒரு பேப்பர் குழுவினரோடு  இணைந்தும், தனியாகவும். பரப்புரைகளையும் பல வேலைத்திட்டங்களையும்  முன்னெடுத்திருந்தேன்.  அதன் ஆரம்ப காலகட்டத்தில் விடுதலைப்புலிகள்  அமைப்பின்  அனைத்துலகத் தொடர்பகம் நாடுகடந்த  அரசை  பகிரங்கமாக  எதிர்த்தவேளைகளில். நாடுகடந்த அரசிற்கு ஆதரவாக அதன் பிரச்சாரப் பத்திரிகை  போன்று  ஒரு பேப்பர் செயற்பட்டது என்பதையும் இங்கு சுட்டிக்காட்டவேண்டும்.   ஆனால் நாடுகடந்த அரசின்  தேர்தல்கள் நடைபெற்று  அதன் முதலாவது பாராளுமன்ற   அமர்வும்  நடந்து முடிந்த பின்னர்.  மக்களால் தெரிவு செய்யப்பட்ட  பிரதிநிதிகளின் செயற்பாடுகளில் உள்ள குறைகளையும். இன்று ஈழத்தமிழினம் உள்ள  நிலையில்  இந்த உறுப்பினர்களின்  செயற்பாட்டு வேகம்  போதவில்லையென்பதையும்.  ஒரு பேப்பர் சுட்டிக்காட்டத் தவறியதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதே நேரம்  நாடுகடந்த அரசால் தாயகத்தில் உள்ளவர்களிற்கு பெரிதாக ஒன்றும்  செய்யமுடியாது  என்பதனை அனைவராலும் ஏற்றுக்கொள்ளமுடியும். ஆனால் சர்வதேச  நாடுகளில்  அதனால் எத்தனையோ பணிகளை செய்யமுடியும். இலங்கையரசின்  போர்குற்றங்களை வெளிக்கொண்டு வரலாம். இறுதி யுத்தத்தில்  பாதிக்கப்பட்டவர்களின் வாக்கு மூலங்களை வைத்து இலங்கையரசின் மீது வழக்குகள்  தொடுக்கலாம்.  வழக்கு என்றதும் தான் ஞாபகத்திற்கு வருகின்றது.  இலங்கையரசு  மீது வழக்கு தொடர்வது பற்றி உருத்திரகுமார் மற்றும் மதியுரைஞர் குழுவினைச்  சேரந்த  சிறிஸ்கந்தராசா (சிறீயண்ணா, சுவீடன்) ஆகியோரோடு  உரையாடிக்கொண்டிருந்தபொழுது  நான் சொன்ன விடயம்.  அதிகாரத்திலிருக்கும்  ராஜபக்சமீது வழக்கு தொடர முடியாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் ராஜபக்சவிற்கு  கொஞ்சமும் குறையாத இனப்டுகொலையை செய்த சந்திரிக்கா மீதாவது  ஒரு வழக்கை  பதிவு செய்யுங்கள்.  அதற்கான ஆதாரங்கள் உள்ளன குறைந்தபட்சம் பதவியில்  இல்லாத ஒருவரையாவது  சர்வதேச குற்றவியல் நீதிமன்னறத்தில் நிறுத்துவன் மூலம்   தற்சமயம் பதவியில் இருப்பவர்களாவது  தங்கள் பார்வையை மாற்ற சந்தர்ப்பம்  உண்டுடென்று கூறியிருந்தேன். பார்க்கலாம் என்கிற பதில்தான் கிடைத்தது.  இன்றுவரை  பார்த்துக்கொண்டுதான்  இருக்கிறோம்.  அடுத்தடுத்து அறிக்கைகள்  மட்டுமே வெளியாகின. கொசாவோவிலும். தென் சூடானிலும்  தூதரகம் திறப்பதாக கூட  செய்திகள் வெளியாகின.  தூதரகம் திறக்கத் தேவையில்லை  ஒரு அறையை  வாடைகைக்கு   எடுத்து அலுவலகமாக்கியிருக்கலாம். ஏன் ஒரு கொட்டிலையாவது போட்டு கொடியை   ஏத்தியிருந்தாலும். அதன் படத்தை அண்ணாந்து பார்த்தாவது  ஆசுவாசப்பட்டிருப்போமே. அதை விடுவோம், நா.க.த. அரசின்  மூன்றாவவது  பாராழுமன்ற அமர்வின்  கூட்டத் தொடர் அண்மையில் நடைபெற்றது. அதன் முதலாவது  நாள் அமர்வில்  இலங்கையரசை  கிடுகிடுக்க, கலங்கடிக்க  அதிரடியான     தீர்மானங்களாவது   ஏதாவது நிறைவேறும் என  அதன்   நேரலை ஒளிபரப்பை ஆவலுடன்  இணையத்தில் பார்த்துக்கொண்டிருந்த பல உசார் மடையர்களில் நானுமொருவன். ஆனால்  கூட்டத்தின் இறுதியில் எல்லாருக்கும்  பசிக்கிறது  எட்டுமணிக்குத்தான்  சாப்பாடு வரும் என்கிற  தீர்மானத்துடன் முதலாம்நாள் அமர்வுகள்  முடிவடைந்திருந்தது.  நானும் கொட்டாவி விட்டபடி போய்சாப்பிட்டு விட்டு  படுத்துவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த மாவீரர் தினத்தில் கூட நா.க. த. அரசு ஒரு தவறான முடிவெடுத்திருந்தது;  அதாவது  இறுதி யுத்தத்தில்  வன்னியில்  தலைவருடன் இருந்து தப்பி  வந்தவர்கள் என்பவர்களுடன் கூட்டுச் சேர்ந்து  ஜரோப்பா எங்கும்  மாவீரர்தின  நிகழ்வுகளை இரண்டாக்கியிருந்தனர்.   இரண்டு வருடத்தில் இவர்களின் சாதனை  என்று இதனைத்தான் சொல்லலாம். புதியதாய் வந்தவர்கள் பற்றியும் அதனை  பின்நின்று இயக்கும் வினாயகம், சுபன் போன்றவர்கள் பற்றியும் போதுமான  விபரங்கள் நா.க.த. அரசின்  பிரதமரிற்கு எம்மால் வழங்கப்பட்டிருந்தது   என்பதனையும் குறிப்பிட வேண்டும்.&lt;br /&gt;கடைசியாய் வந்த செய்தி இலங்கைக்கு குண்டு போட்ட உருத்திரகுமார். உள்ளே போய்  செய்தியை படித்தால். ஆபிரிக்க நாடுகளில் எமது உறவை  வளர்த்துள்ளோம்.தென்னாபிரிக்காவில் உள்ள பல நாடுகளுடன் தமது தூதரகங்களை  திறந்து தமது நட்புறவை பேணும் நிலையில் இவை  முனைந்துள்ளனவாம்.தென்னாபிரிக்காவின் ஆழும் தேசிய காங்கிரசின் 100 வது  ஆண்டு கொண்டாட்டத்திற்கே  நாடுகடந்த அரசு  அழைக்கப்படவில்லை என்பது சோகமான  விடையம். ஆனால்  அதே கொண்டாட்டத்திற்கு உலகத்தமிழர் பேரவைக்கும் தமிழ்  தேசிய கூட்டமைப்பிற்கும்  அழைப்பிதழ் போனது மட்டுமல்லாமல் அவர்களும் கலந்து  கொண்டுள்ளார்கள். இது தொடர்பாக  நாடு கடந்த தமிழீழ அரசு பிரதிநிதிகளுடன்  தொடர்பு கொண்டு கேட்ட பொழுது தனிப்படட்ட காரணங்களிற்காக  தென்னாபிரிக்கா  போகவில்லையாம்.  உள்நாட்டு பாதுகாப்பென்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பு  வெளிநாட்டு பாதுகாப்பென்றால் உலகத்தமிழர் பேரவை இமானுவேல் அடிகளார்.     இரண்டு அமைப்பில் உள்ளவர்களிற்கும் பாதுகாப்பு பிரச்சனை உள்ளதுதான்.  அண்மையில் கூட இந்தியாவிற்கு முறையாக விசா பெற்று சென்றிருந்த இமானுவேல்  அடிகளார்  இந்தியாவிற்குள்   நுளைய முடியாமல் திருப்பியனுப்பப்பட்டு  அவமானப்படுத்தப்பட்டிருந்தார். இப்படி  பல அச்சுறுத்தல்களிற்கு   மத்தியில்தான் இந்த அமைப்புக்கள்  தங்களாலான பணிகளை முன்னெடுக்கின்றனர்.    ஆனால் உருத்திர குமார் அவர்கள் பாதுகாப்பை காரணம் காட்டி அமெரிக்காவிற்குள்   மட்டுமே மாறி மாறி பயணம் மேற்கொள்வதால் உலகம் முழுவதும்  நாடுகடந்த  தமிழீழ அரசினை  பலப்படுத்தி  அதனை  சரியான பாதையில் இட்டுச்செல்ல முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அது மட்டுமல்லாது  நாடுகடந்த தமிழீழ  அரசின்  உறுப்பினர்கள் என்பவர்கள்   ஒவ்வாரு தேர்தலின் போதும்  மக்காளால் மாற்றப்படுவார்கள் மாற்றப்படவேண்டும்.   அதன் பிரதமர் கூட மாற்றப்படுவார். ஆனால் நாடுகடந்த தமிழீழ அரசு என்பது  நிலையாக இருக்கும்.இருக்கவேண்டும். எனவே நாடுகடந்த தமிழீழ அரசு  உறுப்பினர்கள் மீதான எமது விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் உடனடியாகவே   அது நா. க. த. அரசின் மீதான எதிர்ப்பு அல்லது   அதன்மீதான காழ்ப்பை  நாம்  காட்டுகின்றோம் என நினைப்பது தவறு. வுpமர்சனங்களை  ஏற்றுக்கொண்டு   நா.க.த.அசின்  பிரதிநிதிகள்.  தங்களை  திருத்திக்கொண்டு  சரியான பாதையில்  அந்த அமைப்பினை வழிநடாத்தவேண்டும்.  இல்லையேல் காலப்போக்கில்  இதுவும்  தனிநபர் துதிபாடும் அமைப்பாக மாறுவதோடு  இறுதியில் தலைவனும் நானே தொண்டனும்  நானே என்கிற இந்தியவின்  சுப்பிரமணிய  சுவாமியின்  கட்சி மற்றும்  இலங்கையில் ஆனந்தசங்கரியின் கட்சி போன்றதொரு  நிலைக்கே நாடுகடந்த தமிழீழ  அரசும் தள்ளப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக  நாடுகடந்த தமிழீழ அரசின்  ஆரோக்கியமான  செயற்பாடுகளை  தட்டிக்கொடுப்பதோடு மட்டுமல்லாமல். அதன் தவறான பக்கங்களை   தட்டிக்கேட்பதற்கும் ஒரு பேப்பர்  குழுமம்  தயங்காது என்பததை  தெரிவித்துக்கொளகிறேன்;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28994032-1383373749561267833?l=sathirir.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sathirir.blogspot.com/feeds/1383373749561267833/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28994032&amp;postID=1383373749561267833' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28994032/posts/default/1383373749561267833'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28994032/posts/default/1383373749561267833'/><link rel='alternate' type='text/html' href='http://sathirir.blogspot.com/2012/01/blog-post_15.html' title='நாட்களைக் கடத்தும் தமிழீழ அரசு (நா.க.த.அ)'/><author><name>சாத்திரி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_Sem5kfmy6G0/SXSlTz3ZpoI/AAAAAAAAAPc/qpZk13LLF-0/S220/Photo+103.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28994032.post-6706098070655900585</id><published>2012-01-14T13:06:00.000-08:00</published><updated>2012-01-14T13:07:11.237-08:00</updated><title type='text'>சாத்தானின் குழந்தை.</title><content type='html'>&lt;strong class="bbc"&gt;&lt;span style="font-size: 18px;"&gt;சாத்தானின் குழந்தை.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபத்தியேழாம் ஆண்டு . தை மாதம். யாழ்குடாநாடு  எங்கும் இரவும் பகலும்  இடைவிடாத  புயலுடன் கூடிய பெருமழை.மழை வெள்ளத்தில்  மிதந்துகொண்டிருந்த கிராமங்களில் ஒன்றுதான் மானிப்பாய் கிராமமும். அன்று  பத்தாம் திகதி அதிகாலை  நான்கு மணி நாற்பத்தியொரு நிமிடம். இருபது  வினாடிகள். வானைக்கிழித்ததொரு பெரு மின்னல் தோன்றி  மானிப்பாய்  வைத்தியசாலையின்  பின்னே மண்ணைத்தொட்டது. அங்கு காணியொன்றில் மழையில்  நனைந்தபடி தலையை தொங்கப் போட்டுகொண்டுக்கொண்டிருந்த  மாடு ஒன்று  ம்மா...........என்ற சத்தத்துடன் கருகி இறந்து போனதோடு மின்கம்பிகளும்  அறுந்து விழ எங்கும் கும்மிருட்டு.ஒருசில வினாடிகளில் பெருத்த  இடியோசை   ஆழ்ந்தஉறக்கத்திலிருந்த அனைவரையுமே திடுக்கிட்டு எழவைக்க . மானிப்பாய்  வைத்தியசாலையின் பத்தாம் இலக்க  அறையில்.  பத்தாம் இலக்க கட்டிலில்.  இருந்து அம்மா...என்றொரு பெரும்  அலறல். பின்னர்  க்குவா....குவா...குவா....என்ற  குழந்தையின் அழுகை . ஆம் அவன்  பிறந்துவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;கையில் ரோச்லைற் வெளிச்சத்துடன் அவசரமாய் ஓடிய தாதி குழந்தையின் மீது  வெளிச்சத்தை பாச்சினாள். என்ன அதிசயம் அதன் தலையின் பின்னால் ஒளி வட்டம்  மினுமினுத்தது. அவள் வீல்.....என்று அலறியபடி மயங்கிச்சாய ஓடிவந்த  மற்றையவர்கள்.மயங்கியவளை ஒரு வீல் கதிரையில் வைத்து  தள்ளிக்கொண்டு போக   அங்கேயே  தங்கியிருந்த குழந்தையின் தந்தையும்   ஓடிவந்து பார்தார் ரோச்லைற்  வெளிச்சத்தில் ஒளிவட்டம் மின்னியது. அவசரமாய் தொப்புள் கொடியை  அறுதெறிந்துவிட்டு குழந்தையை ஒரு துணியில் சுருட்டிக்கொண்டு   சண்டிலிப்பாயில் அமைந்திருந்த நாகபூசணி அம்மன் ஆலயத்தை நோக்கி ஓடியவர்  கோயில் வீதியில் குடியிருந்த சடாமுடிச்சாமியரின் கதவில் அவசரமாய் தட்டவே  சோம்பல் முறித்தபடி நித்திரையால் எழுந்து வந்த சாமியாரின் காலடியில்  குழந்தையை கிடத்தி விட்டு சாமி நீங்கள்தான் எங்களை காப்பாத்தவேணும் இந்த  குழந்தை பிறந்ததும் அதுகின்ரை தலையிலை ஒளிவட்டம் தெரிஞ்சது அதுதான்  பயத்திலை உங்களிட்டை தூக்கிக் கொண்டு ஓடியந்தனான்.என்று மூச்சிரைக்க கூறி  முடித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தையை குளிந்து பார்த்த சாமியார் திடுக்கிட்டவராய் ஆ..இது சாத்தானின்  குழந்தை என்றார்.. ஜயோ சாமியார் இது என்ரை குழந்தை நாலாவது நாயாய்  அலையவைக்கப் போகுது .அழுதார் அந்த தந்தை.&lt;br /&gt;இன்று பத்தாம் திகதி குழந்தை பத்தாம் இலக்க  வார்ட்டில் பத்தாம் இலக்க  கட்டிலிலா பிறந்தது&lt;br /&gt;&lt;br /&gt;ஓம் சாமியார்.&lt;br /&gt;&lt;br /&gt;சாமியார் கள்களை மூடினார்  அம்மா தாயே நாகபூசணி  எந்த குழந்தை  பிறக்கக்கூடாதென்று இத்தனை நாளாய் கடும் தவம் செய்தனோ  அந்த சாத்தானின்  குழந்தை பிறந்து விட்டது. இனி நீதான் இந்த உலகத்தை காப்பாற்றவேண்டும்.  பலபேரின் நிம்மதியை கெடுக்கப்போகிறானே என்று  மனதில் துதித்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரைப் பார்த்து ஓன்றும் பயப்படாதே அம்மா துணையிருப்பார் .இந்தக் குழந்தை  சாத்தானின்  குழந்தையாக இருந்தாலும் வினை தீர்க்கும்  வேல் முருகனின் பெயரை  இவனிற்கு சூட்டுகிறேன். அந்த பெயரால் அனைவரும் இவனை அழைக்கும் பொழுது   இவனது தீய குணங்கள் மாறி இவனிற்கு கடவுள் அருள் கிடைக்கும்.என்று கூறியவர்  குழந்தையின் காதில்  ஸ்ரீ கொளரி பாலகன் என்று மூன்றுமூறை  சொன்னதும்  குழந்தை வீரிட்டு அழத்தொடங்கியது.  சிறிது விபூதியை   எடுத்து  குழந்தையின்  நெற்றியில் தடவிவிட்டு எல்லாம் நன்றாக நடக்கும் போய்வாருங்கள் என  வழியனுப்பிவைத்துவிட்டு. இந்தக் குழந்தையின் பத்தாவது வயதின் எனக்கல்லவா  ஆபத்து என்றபடி கவலையுடன்  கடவுளை தியானிக்கத் தொடங்கினார் சாமியார்.&lt;br /&gt;&lt;br /&gt;வைத்தியசாலையில் காலை மயக்கத்திலிருந்து விழித்த குழந்தையின் தாயார்  காலடியில் அவரிற்கு முதல்நாளிரவு  வைத்தியசாலையில் உணவு கொடுத்த அலுமினியத்  தட்டு  கிடந்ததை கவனித்தார். அந்த தட்டைத்தான் ரோச்லைற் வெளிச்சத்தில்  எல்லோரும் ஒளிவட்டம் எண்டு தவறாய் நினைச்சிட்டினம் என்பது அவரிற்கு  புரிந்தது.  உடைனையே அவசரமாய் அந்த அலுமினிய தட்டை களவெடுத்துக்கொண்டு   வீட்டிற்கு போய்விட்டார்.  களவெடுத்த அலுமினியத் தட்டிலேயே  குழந்தை உணவு  உண்டு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக  நோஞ்சானாய் வளர்ந்தது.&lt;br /&gt;                   0000000000000000&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது அந்தக் குழந்தைக்கு வயது பத்து  அந்த வருடம் அதே நாகபூசணி அம்மன்  கோயில் திருவிழா கோலாகலமாய் நடந்து கொண்டிருந்தவேளை  கச்சான் கடலை  வாங்குவதற்காக கோயிலிற்கு போனவன் கோயில் வீதியில் அந்த சாமியாரை  கண்டுவிட்டான். உடனேயே சாமியார் முன்னால்  போய் நின்றவன்.&lt;br /&gt;&lt;br /&gt;  சாமீ.............எனக்கொரு உண்மை தெரிஞ்சகணும் சாமீ........என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனை குனிந்து பார்த்த சாமியார்  யாராப்பா நீ உனக்கென்ன உண்மை  தெரியவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சாமீ..நீங்கள் நல்லவரா கெட்டவரா??&lt;br /&gt;&lt;br /&gt;  கோயில் கோபுரத்தை நிமிர்ந்து பார்த்தவர்  பின்னர் அவனை பார்த்து இரண்டு  கைகளையும் விரித்து உதட்டை பிதுக்கியபடி  தெரியலையேப்பா என்றார். ( இந்தக்  காலகட்டங்களில்  சிவாஜியின் முதல் மரியாதை படம் மற்றும் கமலின் நாயகன் படம்  வெளியாகியிருக்கவில்லை என்பதனை அறியத்தருகின்றேன்.)&lt;br /&gt;&lt;br /&gt;அப்ப எதுக்கு சாமி எனக்கு அப்பிடியொரு பேரை வைச்சனி சாமி??&lt;br /&gt;&lt;br /&gt;என்ன பெயரப்பா ??&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீ கொளரி பாலகன் ..அதற்கு அர்த்தம் என்ன சாமீ&lt;br /&gt;&lt;br /&gt;அதுவா  திருகைலாய மலையில் வீற்றிருக்கும் பெருமானின்  திருவாட்டி கொளரி  அம்மையின்  அழகுமகன் முருகன் என்று அர்த்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்லவேளை  இந்த அர்தத்தையே  எனக்கு பெயரா வைக்கமல் விட்டியே  .கந்தன்  கடம்பன்.வேலன்  இப்பிடி அவருக்கு எத்தினை பேர் இருக்கு. ஆனால் எதுகய்யா  இப்பிடி ஒரு பெயர்.உனக்குத் தெரியுமா ஒவ்வொருதடைவையும்  வகுப்பிலை  வாத்தியார் டாப்பு கூப்பிடேக்குள்ளை  என்ரை பெயரை கூப்பிடும்போது அவர்    பாட்டுபாடுறார் என்று  நினைச்சு நான்  நித்திரையாய் போயிடுறன் சாமி.என்றபடி  அவன் கீழே குனிய.  அய்யோ அம்மா தாயே காப்பாற்று  சாத்தனின் குழந்தை பத்து  வயதாகிவிட்டது காப்பாத்து என்றபடி அவர் கோயில் உள்ளே ஓடிக்கொண்டிருக்க அவன்  எறிந்த  கல்லு சாமியாரின் பின்மண்டையில் பட்டுத்தெறிக்க சாமியார்  மயங்கி  விழுந்தார்.&lt;br /&gt;                   00000000000000&lt;br /&gt;திரும்பிப் பார்க்காமல் அவன்  ஓடினான்..ஓடினான்..ஓடினான்..(பராசக்க்தி படம்  வெளிவந்துவிட்டிருந்தது) பத்துவருடங்களாக ஓடி யெர்மன்  எல்வைவரை ஓடி  ஒற்றைகள் கிழிக்கப்பட்ட பாஸ்போட்டுடன்  பிராங்போட் விமான நிலையத்தில்  நின்றான். அதை வாங்கிப் போன ஒரு யேர்மன் காரன் சிறிது நேரத்தில் திரும்ப  வந்து சிரி கொரி பலகான் என்று கூப்பிட்டான். அதை அவன் கவனிக்கமல் அங்கு  நடந்து போய்கொண்டிருந்த விமானப் பணிப்பெண்களின் பின்னழகில் மயங்கி நிற்க   அந்த யெர்மன் காரன் வந்து அவனை கையில் பிடித்து சிரி கொரி பலகான் கம் என்று  அழைத்துப் போனான்.அன்றே அந்த சாமியார் சொன்து போல் பலரது நிம்மதியை   கெடுத்தபடியேதான் இருக்கின்றான். சாத்தானின் குழந்தை..சாத்திரி என்கிற  பெயரில் &lt;img src="http://www.yarl.com/forum3/public/style_emoticons/default/laugh.png" class="bbc_emoticon" alt=":lol:" /&gt; &lt;img src="http://www.yarl.com/forum3/public/style_emoticons/default/laugh.png" class="bbc_emoticon" alt=":lol:" /&gt; &lt;img src="http://www.yarl.com/forum3/public/style_emoticons/default/laugh.png" class="bbc_emoticon" alt=":lol:" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;பி.கு...நான் ஒரு கட்டுரை எழுதியதற்காக ஒருவர் என்னை நீ  சாத்தான் என்று முன்பொருதரம் திட்டியிருந்தார்.  இன்று கொஞ்சம் நேரம்  கிடைத்து உண்மையில் அப்பிடி இருந்தால் எப்பிடியிருக்கும் எண்டு கற்பனையா  நினைச்சு பார்த்தன் அதோடை  அந்த பெயர் தான் எனதுமுழுப்பெயர்.  அந்த  சாமியாரேதான் அதனை எனக்கு வைத்திருந்தார்.&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28994032-6706098070655900585?l=sathirir.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sathirir.blogspot.com/feeds/6706098070655900585/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28994032&amp;postID=6706098070655900585' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28994032/posts/default/6706098070655900585'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28994032/posts/default/6706098070655900585'/><link rel='alternate' type='text/html' href='http://sathirir.blogspot.com/2012/01/blog-post.html' title='சாத்தானின் குழந்தை.'/><author><name>சாத்திரி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_Sem5kfmy6G0/SXSlTz3ZpoI/AAAAAAAAAPc/qpZk13LLF-0/S220/Photo+103.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28994032.post-861013388568814311</id><published>2011-12-27T00:05:00.001-08:00</published><updated>2011-12-27T00:05:43.073-08:00</updated><title type='text'>இலவ(ஈழ)ம் காத்தவர்கள்</title><content type='html'>&lt;strong class="bbc"&gt;இலவ(ஈழ)ம் காத்தவர்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span rel="lightbox"&gt;&lt;img src="http://i157.photobucket.com/albums/t74/sathiri/ship.jpg" alt="Posted Image" class="bbc_img" /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(178, 34, 34);"&gt;முற் குறிப்பு . இந்தக் கதையை   புலிகள் அமைப்பின் தீவிர விசுவாசிகளோ  கலாச்சாரத்தினை கண்களாக   மதிப்பவர்களோ  தவிர்துவிடுவது நன்று&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சீறா லியோனின்  லுங்கி விமான நிலையம்..நையீரியாவிலிருந்து வந்த விமானம்  தரைதட்டுகின்றது. றோகன்.  சோம்பல் முறித்தபடி பக்கத்தேயிருந்த  தாய்லாந்து  அழகி நுயும் மை பார்த்து  வந்துவிட்டோம். உனக்கு  இந்தத் தடைவை புதுவிதமான  அனுபவங்களாக இருக்கப்போகின்றது. எந்தச் சந்தர்ப்பத்திலும்.   சோர்வோ  கோபமோ  அடைந்து விடாதே எனக்காக எல்லாத்தையும் அனுசரித்துநடந்துகொள்  என்றான்.மெல்லிதாக புன்னகைத்தவள்  றோகனின்  தோளில் சாய்ந்தபடி  உனக்கொன்று  தெரியுமா  நான் எத்தனையோ ஆண்களுடன் உறவு வைத்திருக்கிறேன  எத்தனை பேர்  என்கிற கணக்குக்கூடத் தெரியாது ஆனால்   உன்னை மட்டும்தான் நம்பி இப்படி  தனியாக நாடு விட்டு வந்திருக்கிறேன். உனக்காக  நான் மரணம்வரை வரவும்தயார்.  என்றவளின் கன்னங்களை  மெதுவாக தடவிய றோகான்.  என்னுடைய ஒவ்வொரு பயணமுமே  மரணம் வரையிலானதுதான் என்றவன் . சிரித்தபடியே இதுவும் மரணம் வரையிலான  பயணம்தான் நியும். நான்  ஒவ்வொரு தடைவையும் மரணத்தின் கதவை  எனது திறமையால்  திறக்கும் பொழுது அதிஸ்ரமும்  உன்னைப்போல ஒரு அழகான பெண்ணும் கூடவே  நிற்பதால் தப்பித்துக் கொள்கிறேன். ..&lt;br /&gt;&lt;br /&gt;விமானம் நின்று பயணிகள் எழுந்து தங்கள் பொருட்களை   அவசர அவசரமாக  எடுத்துக்கொண்டு இறங்கத் தயாரானார்கள். பலமணிநேரம் விமானத்தில் பொறுமையாக  பயணிப்பவர்களால் விமானத்தை நிறுத்தி சரியாக கதவு திறக்கப்படும் வரை  ஒருசிலநிமிடங்கள் பொறுக்கமுடியவதில்லை எவ்வளவு அவசரம் ஏதோ பலமில்லியன்  வியாபரம் பேசப்போகிறவர்களைப்போல ஓடுகிறார்கள் என மனதில் நினைத்தபடி   பொறுமையாக இருந்து ஆறுதலாக  தனது உடைகளை சரி செய்துவிட்டு நியும்மின் கைகளை   கோர்த்துக்கொண்டு விமானத்திலிருந்து இறங்கிப்போய்  குடிவரவுப்பகுதியில்  அதிகாரியிடம் தன்னுடையதும்  நியும்மினதும் கடவுச்சீட்டை நீட்டினான்.  அவனுடைய மலேசியக் கடவுச் சீட்டையும் அவளுடைய  தாய்லாந்து கடவுச் சீட்டையும்   அதிகாரி புரட்டிக்கொண்டிருக்க  நியும்மை  இழுத்து அவள் உதட்டில்   இச்..வைத்துக்கொண்டிருக்கும் பொழுதே கடவுச் சீட்டில்  ஓங்கி இறப்பர்  முத்திரை குத்தும் சத்தம் கேட்டது.  கடவுச் சீட்டுகளை வாங்கிக் கொண்டு   பொதிகளை எடுத்தபடி வெளியே வந்தான். அங்கு வாசலில் பெயர் மட்டைகளை கைகளில்  தாங்கிப் பிடித்தபடி நின்றவர்களை நோட்டம் விட்டான்&lt;br /&gt;ஒருவன்  மட்டையில் பன்னிச் செல்வம்  எழுதி தூக்கிப் பிடித்தபடி  நின்றிருந்தான். அதைப்பார்த்தும்  கழுக்கென சிரித்தவன் அவனை நோக்கிப் போய்  அவனிடம் அறிமுகம் செய்து விட்டு  அவனது பெயர் எழுதியிருந்த மட்டையை வாங்கி   தனது பொக்கற்றினுள் இருந்த பேனாவை  எடுத்துபன்னீர்செல்வம்எனமாற்றிஎழுதிஅவனிடம்கொடுத்துவிட்டு   அவனைப்பின்தொடந்து  விடுதிக்குபோவதற்காக அவன் கொண்டுவந்திருந்த வாகனத்தில்  ஏறி அமர்ந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தடைவை நீண்டபயணமாகிவிட்டது தாய்லாந்து  தென்னாபிரிக்கா.நைஜீரியா  என்று சுற்றியடித்து  இறுதி இடத்திற்கு வந்து விட்ட பயணக்களைப்பு. பொதிகளை   அறையில் போட்டுவிட்டு நல்ல வெத வெதப்பான  நீரில் குளித்துவிட்டு வந்த  றோகான் துடைத்த  துவாய் துண்டை இடுப்பில் அணிந்தபடியே   தனது சிறிய  பிறீவ்கேசை திறந்து சில ஆவணங்களையும் வேறொரு கடவுச்சீட்டையும் எடுத்து  மேசையில் வைத்துவிட்டு  அன்றிரவு நடக்கவிருக்கும் சந்திப்பை மனதில் ஒத்திகை  பார்த்தபடி இருந்தபொழுது குளிக்கப் போயிருந்த நியும்.மழையில் நனைந்த  செவ்வரளிப்பூவைப்போல  நீர் சொட்டச் சொட்ட இடையில் குறுக்கே கட்டியிருந்த  துவாயுடன் இன்னொரு துவாயால் தலையை துவட்டியபடி வெளியே வந்தவளை அப்படியே   அகல விரிந்த கண்களால்  அடியிலிருந்து முடிவரை  அங்கமங்கமாக  அசைபோட்டு   பார்த்தபடி கண்ணதாசன் அனுபவித்துத்தான் கவிதை எழுதியிருக்கிறான் என்று  மனதில் நினைத்தான்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;என்ன  இப்பொழுதுதான் புதிதாய் புசிப்பது போலவே  பார்க்கின்றாயே ...&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;உனக்கொன்று சொல்லட்டுமா  என்வாழ்வில் எத்தனையோ  பெண்களில்  புகுந்திருக்கின்றேன்.  மறுதடைவை  அவர்கள் புது முதுகைக்கூட தொட்டதில்லை  ஆனால்  நீ மட்டும்தான் எனக்கு புதிது புதிதாய் பிறந்தவள் போல் தெரிகின்றாய்  அதன்  மர்மம்தான் எனக்கு  மனதில் தோன்றவில்லை.&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;அதுவா அவர்களைப்போல அன்னியமாய் உடலோடுமட்டும்  உறவாடுவதில்லை உளஅன்போடு உறவாடுவது காரணமாயிருக்கலாம்.&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;என்னவோ போ உன்னை அப்படியே தின்னவேணும்போல் உள்ளது.&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;பார்த்தாயா  ஆபிரிக்கா வந்ததுமே  நீ நரமாமிச  பட்சணியாகிவிட்டாயோ?&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;இல்லை நான் சைவப்புலி  உன்னை கொல்லாமலேயே  உண்ணப்போகின்றேன்.&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;இங்கேயும் புலிதானா??&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;நான் எங்கேயும் புலிதான். புலி வேட்டைக்குத்தயாராகி  விட்டது&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்று பற்களை வெளியே காட்டி உர்..என்று உறுமியபடி  கைகள் இரண்டையும்   புலியின் கால்களைப்போல  முன்னே நீட்டி விரல்களை பிராண்டுவது போல் அவளது  மார்புகளை நோக்கி  நகர்ந்தவனை அவள் செல்லமாய் தள்ளிவிட .அவனோ அவளை   கட்டிலில் இழுத்து  சரித்து அவள்மீது படர்ந்து அவன் இயங்க அவளோ  அகம்மயங்க   புறம்கயங்க ஈருடலும்ஓருயிராய்முயங்கியமுடிவில் மான் புலியை  வேட்டையாடி  விட்டது என்றபடி அவனின் மூச்சு மேலும் கீழுமாய்  முட்டிமோத  அவள் அவனிற்கு   முத்தங்கள் இட்டுக்கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;முத்தமாரி பெய்துவிட்டெளுந்தவள் இரண்டு சிகரற்றுக்களை  எடுத்து இரண்டையும்  ஒரேதடைவை உதட்டில் புகுத்தி பற்றவைத்தவள்  ஒன்றை  அவனின் உதட்டில்  பொருத்திவிட்டு  ஜன்னல் ஓரமாக வந்துநின்று  புகையை உள்ளிழுத்து ஊதியவள்   இரவு நிகழ்வுகள் எல்லாம் ஏற்பாடாகிவிட்டதா என்றாள்.நீ சிறிது  ஓய்வெடுத்துக்கொள் நான் மீண்டும்  குளித்துவிட்டு  வெளியே போய்  வாடைகைக்கார் ஒன்றை எடுத்துக்கொண்டு  தகவலும் அனுப்பிவிட்டு வருகிறேன்  என்றவன் அவசரமாய் குளித்து உடைமாற்றிக்கொண்டு  தயாராய் வைத்திருந்த  கடவுச்சீட்டை எடுத்தக்கொண்டு வெளியேறியவன்  விலை உயர்ந்த  வாடைகைக்கார்  என்றினை   எடுத்துவிட்டு நேரத்தை பார்த்தான்  . இப்பொழுது நேரம்  சரியானதாயிருந்தது இப்பொழுது அவன் காத்திருப்பான்  போனடிக்கலாமென  நினைத்தவன் அங்கிருந்த வீதியோர தொலைபேசிக் கூண்டு ஒன்றில் புகுந்து  ஒரு  கிறெடிட்காட்டை  செருகிவிட்டு இலக்கங்களை அழுத்தினான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தோனிசியாவின் யலாங்பாரு பகுதியில் வீதியோரத்தில் இருந்த  ஒரு  தொலைபேசிக்கூண்டின் மணி அடித்தது  அதனருகே தயாராய் நின்றிருந்த  றிசி  தொலைபேசியை எடுத்ததும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;என்ன பயணம் எல்லாம் நல்லபடியாய் முடிஞ்சதா என்றவும்.&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;ஓம் அதெல்லாம் நல்லபடி முடிஞ்சுது  இரவு சந்திப்பு  முடிஞ்சதும் காலைமை உன்னுடைய நேரம் ஆறுமணிக்கெல்லாம்  இதே நம்பருக்கு  திரும்ப அடிக்கிறன்.&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;இந்த முறை நீ சந்திக்கிறவன்தான் பெரிய ஆள்  இப்பதான்   முதன் முதலாய் நாங்கள் அவனை சந்திக்கிறம்.   அவனோடை கதைக்கிற  ஒவ்வொரு  வசனமும்  கவனமாய் கதைக்கவேணும் அதுக்காகத்தான்  உன்னை  அனுப்பியிருக்கு   கொஞ்சம் கதை பிழைச்சு அவங்களுக்கு சந்தேகம் வந்தாலும்  உன்னை அங்கையே  புதைச்சிடுவாங்கள் கவனம்.&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;அதெல்லாம் பிரச்சனையில்லை மச்சான் நான் கதைச்சே  கவித்திடுவன்.&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;அது தெரியும் ஆனால் இந்தமுறை கட்டாயம் பெரிய சாமான் ஒரு  இரண்டு  மூண்டாவது எடுக்கிறதுக்கு றைபண்ணு   அதுக்காக எவ்வளவு  றிஸ்க்எடுக்கவும் தயாரெண்டு சொல்லு&lt;br /&gt;&lt;br /&gt;கட்டாயம் முயற்சி செய்யிறன். &lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;இவனாலை ஏலும் எண்டுதான் நினைக்கிறன்  பாக்கலாம்.&lt;br /&gt;நட்சத்திர நாய்களும்  மணந்து கொண்டு திரியிறாங்கள்  உடைஞ்ச நாட்டிலை இப்ப  அவங்களே தரகரா மாறியிருக்கிறாங்கள். எண்டு அறிஞ்சனான்  எதுக்கும் கவனம்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;நானும் அறிஞ்சனான்  நான் பாத்துக்கொள்ளுறன்.&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;சரி நியும்  எப்பிடி இருக்கிறாள் ஒண்டும்  பயப்பிடேல்லைத்தானே கடைசி நேரத்திலை ஒண்டும் சொதப்பிப் போடாமல்  பாத்துக்கொள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் பிரச்சனையில்லை அவளுக்கென்ன ஊர் சுத்துற சந்தேசம். தனக்கு  பிரான்சும்  இங்கிலாந்தும் பாக்கவேணுமாம்   ஒரே நச்சரிப்பு அவ்வளவுதான்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;சரி நாளைக்கு நல்ல செய்தியோடை திரும்ப தொடர்பிலை வா&lt;br /&gt;தெலைபேசி துண்டிக்கப் படுகின்றது.&lt;/em&gt;&lt;br /&gt;000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000&lt;br /&gt;றோகன் வெள்ளை நிற  நீளக்காற்சட்டையும்  வெள்ளை நிற  மேற்சட்யையும்  அணிந்தவன் அதற்கு சிகப்புநிற கழுத்து கோவணத்தினை எடுத்து அணிந்து சரி  பார்த்தவன்  தயாராய் வைத்திருந்த சிகப்பு நிற  மேலாடை(கோட்) அணிந்தபடி   எப்படி இருக்கிறேன் என நியும்மை பார்த்துக் கேட்டான்.  களுக்கென  சிரித்தவள்.  இதென்ன  நிறக்கலவை   ஆனாலும் பரவாயில்லையன்றாள்.   அவள்  ஒரு  விமானப் பணிப்பெண்ணைப்போல  கறுப்பு நிறத்தில் குட்டை பாவாடை  சட்டையோடு  தயாராகியிருந்தவள் நான் எப்படி இருக்கிறேன் என்றாள்.  உண்மையை  சொல்லட்டுமா?? மீண்டும் ஒருதடைவை அப்படியே ..உன்னை ஆனால் ஆடைகள்  கசங்கிவிடும்.  வேண்டாம் போகலாம்  என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;இருவரும்  விடுதியை விட்டு வெளியே வந்ததும்  அங்கு  ராக்சியில் நின்றிருந்த  ஒருவன்  தன்னுடைய ராக்சியை  பின்தொடருமாறு சைகை செய்தான். றோகன் தன்னுடைய  வாடைகைக்காரில் அவனைப்பின்தொடர அது கடற்கரையோரமாக இருந்த பெரிய ஆடம்பர  பங்களா ஒன்றின் முன்னால் போய் நின்றதும்.  ராக்சியை ஓட்டிவந்தவன் இதுதான்  இடமென சைகையிலேயே காட்டிவிட்டு  தொடர்ந்து  போய்க்கொண்டிருந்தான். றோகானின்  கார் பங்களாவினுள் நுழைய முற்படும்பொழுது  வாசலில் நின்ற காவற்காறன்  மறித்து அவர்களை இறங்க சொல்லி பணிவாய் கேட்டுக்கொண்டான்.  நான் மெமேயை  (முகமட்) சந்திக்க வநதிருப்பதாக  சொல்லி சட்டைப்பையிலிருந்த ஒரு கடதாசியை  எடுத்து  காவற்காரனிடம் நீட்டவே.  அதை வாங்கியவன்  நீங்கள் மெமேயை சந்திக்க  வந்திருப்பது எனக்கு தெரியும் ஆனால் சிறிது நேரம் பொறுங்கள் என்றவன்  இன்னொருத்தனை  அழைத்து  அந்தக்கடதாசியை கொடுத்தனுப்பினான்.&lt;br /&gt;&lt;br /&gt;கடதாசியுடன் போயிருந்தவன்  இன்னொரு பெண்ணுடன் திரும்பவும் வந்து  அவர்களை   பரிசோதித்துவிட்டு உள்ளே அனுப்பச்சொன்னதும்.   வந்த பெண் நியும்மையும்  காவற்காரன்   றோகனையும்  காலில் இருந்து தலைவரை தடவிப்பார்த்து ஆயுதம்  எதுவும் இல்லையென்று உறுதிசெய்தபின்னர்.  அவர்களது கைப்பையையும்   பரிசோதித்து விட்டு  அந்த பிரமாண்டமான சொகுசு பங்களாவினுள்  அழைத்துச்சென்றனர்.   உள்ளே போகும் போதே றோகன் அந்த பங்களாவின் சுற்றாடலை   நோட்டம் விட்டான்   விறைப்பான காவலர்கள்  சுற்றிவந்துகொண்டிருந்தனர்  கைகளில் ஆயுதங்கள் எதுவும் இல்லை அவற்றை அவங்கள்  மறைத்து  வைத்திருந்திருக்கலாம்.  பங்களாவின் நடுவில்  பிரமாண்டமான  நீச்சல்தடாகம்   எவளையும் காணவில்லை. காவலர்கள்  அவர்கள்இருவரிடமும்  ஒரு அறையை  காண்பித்து   அதற்குள் தங்கியிருக்குமாறும் மொமே வந்ததும் அழைப்பதாக பவ்வியமாககூறி  விடைபெற்றனர். அறைக்குள்  பலவகையான  குடிபானங்கள் சிற்றுண்டி என்பன  அழகாக  அடுக்கிவைக்கப்பட்டு மொமேயினது   நல்வரவு  இவை உங்களிற்கானவை   என ஒரு  வரவேற்பு அட்டையும் வைக்கப்பட்டிருந்தது..அறையில் நுளைந்ததுமே  அதன் ஜன்னலை  திறந்து அந்த பங்களாவின் பிற்பகுதியை  கவனித்தான்  பங்களாவின் பிற்பகுதி  கடற்கரை   கடலில் இருந்து பெரியதாய் கால்வாய் வெட்டி பங்களாவரை  வள்ளங்கள்  வந்து போக வசதி செய்யப்பட்டிருந்தததோடு ஒரு ஆடம்பர வள்ளமும் நின்றிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜன்னலை சாத்திவிட்டு அங்கிருந்து பெரிய கண்ணாடியில் தன்னை  ஒருதடைவை  பார்த்தவன்  ரையை சரி செய்தபடி  என்ன நியும்  எதுவும் பேசாமல்  இருக்கின்றாய் பயமாக இருக்கிறதா?? என்றான். பயமா எனக்கா  நீ அருகில்  இருக்கும் பொழுது   என்னையே எனக்கு ஞாபம் இருக்காது  பயம் என்னுள்   எப்படிவரும் இந்த புது சப்பாத்து வலிக்கிறது என்றபடி தன்னுடைய குதிக்கால்   சப்பாத்துக்களை  காலால்  தட்டி கழற்றிவிட்டு அமர்ந்துகொண்டாள்  நியும்.சிறிது நேரத்தில்  அவர்களது அறை கதவு தட்டப்பட்டது..ஒருத்தன் பணிவாக   மோமே வந்துவிட்டார் நீங்கள் மட்டும் வாருங்கள் என  றோகனை  அழைத்தான்.எப்படி மெமேக்கு வணக்கம் சொல்வதென மனதில்  ஒத்திகை பார்தபடியே   அறையை விட்டு  வரவேற்பறைக்குள்  நுழைந்தான்   நன்கு உடற்பயிற்சி செய்து  முறுக்கேற்றி உடல்  அதனை  காண்பிற்பதற்காகவே அரைக்கை பனியன்  ஜீன்ஸ் அணிந்த   சாராசரி உயரத்துடன் ஒருவன்  அமர்ந்திருந்தான்  அவன்தான் மெமேயாக  இருக்குமோ என றோகன்  நினைத்தமாத்திரமே  எழுந்த அவன்  வணக்கம் வாருங்கள்   இந்த மொமே உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறான்.என்படி றோகனின்  கைகளை  குலுக்கும் பொழுதே எனக்கும்தான்   உங்களை சந்தித்தில் மகிழ்ச்சி என்படி  மெமேயின் தோளோடு தோள் மற்றி அணைத்து  அறிமுகத்தை முடித்துக்கொண்ட பின்னர்   அங்கு அமர்ந்து பேசத் தொடங்கினார்கள்  அவர்கள் இருவரைத்தவிர வேறு யாரும்  அங்கு இல்லை.மெமேயே  பேசத் தொடங்கினான்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;உங்கள் பொருட்களின் பட்டியல்கள் எனக்கு கிடைத்தது  அதில்  நீங்கள்  திரும்ப திரும்ப கேட்கின்ற  இலகு ஏவுகணைகள்  மட்டும்  பெற்றுக்கொள்ள முடியாது அது தவிர்ந்த அனைத்தும்  ஒழுங்கு செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மொமே நீங்கள் முயற்சித்தால் முடியாதது என்று இல்லை அந்த நம்பிக்கை  எமக்குள்ளது&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்  எதிரெதிரான வல்லரசு நாடுகளே    எழுதப்படாத  ஒரு ஒப்பந்தத்தில்  ஒன்று பட்டுநிற்கின்றனர் .எந்த போராட்டக்  குழுக்களோ அல்லது ஆயுத குழுக்களின் கைகளில்  ஆகாய எதிர்ப்பு ஏவுகணைகளை   கொடுப்பதில்லையென்பதுதான் அது&lt;br /&gt;ஆனால்  யுத்தம் நடைபெறும் இடங்களில் அவர்களின் இரகசிய முகவர்களேதான் அதனை  பயன்படுத்துவார்கள். உதாரணத்திற்கு வியட்நாமில்  பாவிக்கபட்ட ஏவுகணைகளை   இரஸ்யா கே.ஜி.பி முகவர்களும்  ஆப்கானில் சி.ஜ.ஏ முகவர்களுமே கையாண்டனர்  கியுபாவிலும் அதுவே நடந்தது.  இங்கெல்லாம்  யுத்தம் முடிவிற்கு வந்ததுமே  முதல் வேலையாக அவர்கள் ஏவுகணைகளை திருப்ப பெற்றுக்கொண்டு விட்டனர்.&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;ஏன்??&lt;br /&gt;&lt;br /&gt;அவை தீவிரவாத குழுக்களின் கிடைத்து  தங்கள் பயணிகளின் விமானங்களின் மீது  பயன்படுத்தப்படலாம் என்கிற அச்சம் காரணமாக இருக்கலாம். பயணிகள் விமனம் மீது  இலகுவாக  அவற்றை கொண்டு தாக்கலாம்.&lt;br /&gt;உங்களிடமிருந்து  முன்னர்  நாங்கள் பெற்றுக்கொண்டிருக்கிறோமே??&lt;br /&gt;&lt;br /&gt;அவை சாம்  பழைய  தயாரிப்புக்கள்தானே  உடைந்த இரஸ்சியாவில் எம்மால்  முடிந்தது  அவ்வளவுதான். அதனால்  நவீன குண்டு வீச்சு விமானங்களை ஒன்றும்   செய்திருக்க முடியாதே உங்களால்.  அங்கேயும் நீங்கள்   தவறிளைத்திருக்கிறீர்கள்.  ஒரு பயணிகள் விமானத்தை விழுத்திய செய்தி&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;அது ஏதே தவறாக நடந்துவிட்டது&lt;br /&gt;&lt;br /&gt;அதேதான்  அதுதான் தவறு  இனிமேலும் அதற்கு முயற்சிக்காதீர்கள் அப்படி  முயற்சித்தால் நீங்கள்  உளவமைப்பு முகர்களிடம் மாட்டிவிடும் அபாயம் உள்ளது.   அடுத்த விடயங்களிற்கு வருவோம்.  இந்தத் தடைவை  பணத்தைவிட பொருட்களாகவே  எதிர் பார்க்கிறோம். என்னதான்  தென்அமெரிக்கா  கெக்கெயின்  கிடைத்தாலும்  ஆசியா கெறோயினிற்கும்   கஞ்சாவிற்கும் உள்ள மதிப்பே தனியானது.  அதோடு ஒரு  உதவியும் வேண்டும்  எங்கள் பொருட்கள் சிலவற்றை வடஅமெரிக்க கரையொன்றில்   நீங்கள் இறக்கிவிடவேண்டும்  அவ்வளவுதான்  நீங்கள் சரி சொன்னால் மிகுதி சரி&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;பொருட்கள்  சரி ஆனால் உங்கள் பொருட்களை  இறக்குவது நான்  முடிவெடுக்க முடியாது  அதனை கேட்டுத்தான் சொல்லவேண்டும். ஆபிரிக்காவின்   பாதாள அரசனால் அங்கு போக முடியாதா?&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;நான் என்னதான் பாதாள அரசனாயிருந்தாலும்  உங்கள் கடல்  வலையமைப்பு என்பது  பிரமாண்டமானது .  உலக நாடுகளிற்கே தலைவலியை   கொடுக்கின்றது  அந்தளவிற்கு இன்னமும்  என்னால் முடியவில்லை  அது எப்படி  உங்களால் சாத்தியம்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம்  எங்கள் தவைனின்  திறமை அதற்கென தேர்ந்தெடுத்து  திறமையானவர்களை  நியமித்திருக்கிறார்.&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;இப்பொழுது எங்கள் பேரம் முடிந்துவிட்டது  சாவகாசமாக  பேசலாமா?  உங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளில் நீங்களே உற்பத்தி செய்யலாமே ஏன்  வேறு நாடுகளில் இருந்து கடத்தவேண்டும்.&lt;br /&gt;எங்களது தேசம்  உன்னதமான தேசமாக உருவாக்குகின்றோம்.  அங்கு போதைப்பொருட்கள்  கிடையாது  விலைமாந்தர் கிடையாது பிச்சையெடுப்பவர் கிடையாது  அனாதைகள்  கிடையாது&lt;br /&gt;&lt;br /&gt;மெமே சத்தமாய் சிரித்தபடி..   என்ன சொல்கிறாய்  உங்கள் தேசம் உருவானால்   அதில் முதலில் பாதிக்கப்படபோவது நீதான்.&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;அது எனக்கும்  தெரியும்  எனது தேசம் உருவாகின்ற அந்தப்  பொழுதே நான் தற்கொலை செய்து கொள்வேன் அங்கு என்போன்றவர்கள வாழமாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி எதற்கு இப்படி .. மிகுதி முடிவை பின்னர் சொல் இனி நாங்கள்  வாழ்க்கையை   அனுபவிக்கலாம். அடுத்த பகுதியில்  ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது   உங்கள் நண்பியையும்  அழைத்து வாருங்கள் போகலாம்.&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அறையில்  விருந்து ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது  தேவைக்கு  அதிகமானதாகவே உணவும் குடிவகைகளும்  அடுக்கிவைக்கப்பட்டிருந்தது நியும்  முடன்  உள்ளே நுளைந்த றோகனிடம்  என்ன  குடிக்கிறாய் சம்பெயினா??கொக்ரெயிலா?  என்றான்  மெமே   சம்பெயின் என்றதும்.  சம்பெயினோடு  உனக்கு  ஒரு அழகையும்  சேர்த்து தருகிறேன்.  இதோ அந்த அழகி மக்கும்பா  இவள்  உனக்காக  என்று  ஒருத்தியை நோக்கி கையை   காட்டிய மொமே. கறுப்பழகிகளை    உரித்துப்பார்த்திருக்கின்றாயா  என்றான்.அதெல்லாம் சர்வதேச ரீதியிலேயே  உரித்திருக்கிறேன். ஆனால் இவள்  பேரழகியாக தெரிகின்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேடையில் வலம்வரும் மொடல் அழகியை போல ஒருத்தி சம்பெயினை கையில் ஏந்தியபடி   றோகனை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.  அவளைப்பார்த்தால் பிறந்து வளர்ந்தவள்  பேல தெரியவில்லை  அங்கங்கள் எல்லாம் அளந்து  செய்து அச்சில்  வார்த்தெடுக்கப் பட்டவள் போல இருந்தாள்.இதோ என்னுடைய பரிசு என்று நியும்மை   மொமேக்கு அறிமுகம் செய்த றோகன்.  நீ எப்படி ?? .எனக்கு ஆசிய  அழகி இதுதான்  முதற்தடைவை நன்றிகள் என்றான் மெமே .மதுக்கிண்ணங்கள் ஒன்றோடென்று உரசிக்  கொண்டன. ஒருவன் சிறிய பொட்டலம் ஒன்றினை  கொண்டுவந்து  அங்கிருந்த கண்ணாடி  மேசையில்  பிரித்து பரப்பி  பின்னர் அதனை மெல்லிய நீள் கோடாக்கிவிட்டு   கொக்ரெயில் கிண்ணத்திலிருந்த ஒரு ஸ்றோ(குளாய்) வை எடுத்து  அதை இரண்டாக  வெட்டி ஒன்றை  றோகனிடமும் மற்றையதை  மொமேயிடமும் நீட்டிவிட்டு போனான்.  நேராக உறுஞ்சிய இரு குளாய்களும்   ஒரு புள்ளியில் வந்து முட்டி நின்று  கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு அழகிய சுருட்டு பெட்டி ஒன்றினை  திறந்து  றோகனிடம் நீட்டிய  மொமே  இவை  கியூப விசேட சுருட்டுகள்  ஒன்றை பிடித்துப்பார்  என்றதும் சிந்துபோயிருந்த  கண்களுடன் ஒரு சுருட்டை எடுத்து மூக்கின் குறுக்கே வைத்து கண்களை மூடி  ஆழமாய்   அதன் வாசனையை உள்ளேயிழுத்தான். அவனின் தந்தையின் மார்பில்  தவழ்ந்தது போலவே ஒரு உணர்வு&lt;br /&gt;         00000000000000000000000000000000000000000000000000000000000000000&lt;br /&gt;&lt;br /&gt;குகநாதன்  அதிகம் படிக்காதவர் யாழ்ப்பாணம் தாவடியில்  சாதாரண வியாபாரி  ஊரில் வியாபாரம் செய்து கொண்டிருந்தவர்  வாழ்க்கையில் எதையாவது  சாதிக்கலாமென நினைத்து   சுடுட்டு கட்டுகளோடு இரயிலேறியவர்.  தலவாக்கலையில்  சுருட்டுக்கடை  முதலாளியாகியிருந்தார்.  லயத்தில் வாழ்ந்த  வேலம்மாள்  காதலியாகி  மனைவியானாள். ஒரு ஆண் குழந்தை பிறந்தது  றோகன் என பெயர்  வைத்தார் தான் அதிகம் படிக்கவில்லை  மகனை  பெரிய படிப்பு படிக்கவைத்து  சாதாரண  யாழ்ப்பாணத்து மக்களின் மனங்களில் உறைந்து போன  வைத்தியர் அல்லது  பொறியிலாளர்  அதுதான் அவரது கனவு. அவரது கனவும் மகனும்  வளர்ந்தது.   தொண்டமானிக்கு எலக்சன் வேலை செய்து தொண்டமானும் வெற்றி பெற்றுவிட  அவரிடம்  மகனிற்கு கொழும்பின் றோயல் கல்லூரியில்  இடமும் வாங்கி  விடுதியிலும்  சேர்த்துவிட்டிருந்தார்.றோகனும் உயர்தரம் படித்துக்கொண்டிருந்த ஜீலை 23 ம்  நாள்  அவனைச்சுற்றி என்னவோ எல்லாம் நடந்து கொண்டிருந்தது.  தமிழில்  ஓலச்சத்தங்களும்  சிங்களத்தில்  பிடி .வெட்டு .கொலை செய் எக்கிற சத்தம்  மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது   சிலர் சிங்களத்தில்  கெஞ்சிக்  கொண்டிருந்தார்கள். போலிசும்  இராணுவமும்   அவனது விடுதிக்கு முன்னால்  காவல் நின்றனர்.   றோகனிற்கு  ஒன்றுமே புரியவில்லை.   அவனுடன் கூட இருந்த  சிங்கள மாணவர்கள் அவனை  வெளியே போகவேண்டாம்  என தடுத்தனர். சின்ன  வயதிலிருந்தே சிங்களத்தில் மட்டுமே பேசிப்பழகிய   றோகனிற்கு அப்பொழுதுதான்  தான் ஒரு தமிழன் என்று  உறைத்தது.அப்பா அம்மாவை பார்க்கவேண்டும் என  தவித்தான்  ஒரு கிழைமை  கழித்து சிங்கள நண்பன் ஒருவனுடன் ஊருக்கு  போயிருந்தான்  அவனது வீடும் தந்தையின் கடையும் இருந்த இடத்தில்  சூடு  அடங்கியிருக்காத சாம்பல் மட்டுமே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தாயை ஒரு அகதி முகாமில் தேடி கண்டு பிடித்தபொழுது  ஓடிவந்து  கட்டிப்பிடித்து அழுதவர்  அப்பவிட்டை  சுருட்டு கடன்வாங்கிற  றோகித்தான்   கத்தியாலை குத்தி கடையோடை சேர்த்து கெழுத்தினவன் என்று சொல்லி புரண்டு  அழுதார். அதுதான் சாம்பலின்  சூடு அடங்கவில்லையென அவனிற்கு புரிந்தது.    அடுத்தது என்ன  எல்லாமே சூனியமாக  தெரிந்தது.  தோட்டக்காட்டாளை  கலியாணம்   செய்திட்டான்  என்கிற காரணத்திற்காக   ஒட்டு உறவு வைத்திராத  தந்தையின்    குடும்பத்திலிருந்து ஒரு சகோதரியை   மட்டும்  அவர் ஊர் கோயில்   திருவிழாவில்  போய் பார்த்துவிட்டு  முருங்கைக்காயும் மாம்பழமும்  கொண்டுவருவார். &lt;br /&gt;&lt;br /&gt;உன்ரை மாமி நல்லவா  இந்தா உனக்கு உடுப்பு வாங்கி தந்திருக்கிறாரெண்டு  றோகனிற்கு  அதை போட்டுவிட்டு கட்டிப்பிடித்துக்கொள்வார். அவர் சொன்ன  தகவல்களை மட்டுமே வைத்துக்கொண்டு  யாழ்ப்பாணம்  பயணமானார்கள்.&lt;br /&gt;அவனது மாமி உண்மையிலேயே நல்லவர்தான்  இளவயதில் சாதி மாறி ஒருத்தரை  காதலித்திருந்தாராம் அவர் காதலித்தவரை  அவரது உறவுகள் வெட்டி கொலை செய்து  தாவடிசுடலையில்  போட்டிருந்தார்களாம்.  அதையறிந்த மாமிக்கு மன பிறள்வு  ஏற்படவே அவரை சுதுமலை அண்ணாமலை பரியாரியின்ரை  இடத்திலை கொண்டு போய்  விட்டிட்டனமாம்.  அதை கேள்விப்பட்டு  றொகனின் தந்தைதான்  அவரிற்கு  வைத்தியம் பார்த்தது மட்டுமில்லாமல் மாதா மாதம் செலவிற்கு  பணமும்  அனுப்பியிருக்கிறார்  அவர் இப்பொழுது  சுதுமலை சிம்மையா பாரதி  பாடசாலையில்  ஒரு ஆசிரியை  பிறகு திருமணமே செய்து கொள்ளவில்லையென்தை  நேரில் தேடி கண்டு  பிடித்தபொழுது  றோகன் அறிந்து கொண்டான். இவனின் கொச்சைத்தமிழ் ஊரில்  இவனிற்கு சிங்களவன் என்கிற பட்டத்தை வாங்கிக் கொடுத்தது அவனை தொடர்ந்து  படிப்பதற்காக  இந்தியா அனுப்பிவிட்டிருந்தனர். மிகுதி படிப்பினை  இந்தியாவில் படித்து முடித்தவன்  மும்பையில் கப்பல் தெழில்நுட்பம்  படித்தவன்  அப்பொழுதே புலிகளின் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டான். மிகுதி  படிப்பினை அயர்லாந்தில்  பூர்த்தி செய்ததும்  அப்படியே புலிகளுடன் இணைந்து  கொண்டான். இவனது  பலமொழியறிவு பேச்சு திறைமை இன்று பேரம்  பேசுபவனாகியிருக்கிறான்.&lt;br /&gt;                 00000000000000000000000&lt;br /&gt;என்ன சுருட்டை உருட்டி உருட்டிப்பார்த்துக்கொண்டிருக்கிறாய் என்றபடி  மக்கும்பா  சுருட்டின் நுனியை வெட்டி அதில் நெருப்பை  மூட்டிவிட்டாள்.அன்றிரவு அளவுக்கதிகமாக போதையேறிவிட்டதனால்   ஏதோ  ஒப்பிற்காக கொஞ்சம் சாப்பிட்ட றோகன் கறுப்பழகியை அழைத்துக்கொண்டு அறைக்குள்   நுளைந்ததும் பேரங்கள் நல்லபடியாய்  முடிந்த விடயத்தை றிசிக்கு  தெரியப்படுத்தவேண்டும்  தூங்கிவிடக்கூடாது  என்று நினைத்தவன்  தன்னுடைய  கைக்கடிகாரத்தில்  ஒரு இருபது நிமிடங்கள்  கழித்து  அலாரம் வைக்கலாமா என  யோசித்தான். சே இப்படியொரு  பேரழகியுடன் வெறும் இருபது நிமிடங்களா  இன்னொரு  இருபது நிமிடங்கள் என்று நாற்பது நிமிடங்கள் கழித்து அலாரத்தை  வைத்தான்.அலாரம் அடிக்கமுதலேயே  அவன் வியர்த்து களைத்து ஓய்ந்து போனவன்   எழுந்து உடைகளை அள்ளி அணிந்து கொண்டான்  கொஞ்சம் போதையும் இறங்கியதுபோல  இருந்தது.சிறிது நேரத்தில வருகிறேன் என்று அவளிடம் சொல்லிவிட்டு   வெளியேறியவன். மீண்டும் விடுதிக்கு வந்து   போனடிக்க வேண்டிய நேரம் வருமவரை  காத்திருந்து. இலக்கங்களை அழுத்தினான்   இந்தோனேசியா  யலாங்பாரு  வீதியோரத்து  தொலைபேசி கூண்டு  மணி அடித்தது. றிசி தொலைபேசியை எடுத்தான்.&lt;br /&gt;என்னமாதிரி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;எல்லாம் நல்படியா முடிஞ்சுது ஆனால் ஒரு புது டீலை  போடுறான்.  அது சரியெண்டால்  மிச்சம் சரி&lt;br /&gt;&lt;br /&gt;என்னது புது டீல்&lt;br /&gt;&lt;br /&gt;ஆபிரிக்கா நாடு ஒண்டிலை உள்ள அவனது பொருட்களை  வட அமெரிக்கா  கரை ஒன்றில்  இறக்கிவிடவேணுமாம்.&lt;br /&gt;அது முடியாதெண்டால்&lt;br /&gt;அதைத்தான் அவன் முதலாவதாக எங்களிட்டை  எதிர்பார்க்கிறான். சரியெண்டால்  எல்லாம் சுலபமாகும். உடைஞ்ச கிழக்கு நாட்டிலை பாதியும் மிச்சம் வழைமையான  கறுப்பு நாட்டிலையும் போய் ஏத்தவேண்டியதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி பெரியது கிடைச்சதா??&lt;br /&gt;&lt;br /&gt;அதைப்பற்றி கதைக்கவேண்டாம் எண்டிட்டான். முடியாதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி நான் முடிவு சொல்ல முடியாது  அங்கை கேட்டு சொல்லுறன்  ஒரு  பதினைஞ்சு  நிமிசம் கழிச்சு  திரும்ப எடு&lt;br /&gt;மீண்டும்  தொடர்பை ஏற்படுத்தியவன்&lt;br /&gt;என்னவாம்&lt;br /&gt;&lt;br /&gt;டீல் ஓகேயாம். ஏத்தி இறக்கிற  இடம் விபரங்களை அனுப்பிவிடு&lt;br /&gt;&lt;br /&gt;சரி மச்சான்  அதோடை இந்தமுறை நானும்  ஒருக்கா  ஊருக்கு போயிட்டு வரலாமெண்டு  நினைக்கிறன். அம்மாவை பாத்து கனகாலமாகுது நான் எங்கை எப்பிடி இருக்கிறன்  எண்டு  கலைப்பட்டுக்கொண்டிருப்பா நான் வாறன் எண்டு அங்கை அறிவிச்சுவிடு&lt;br /&gt;&lt;br /&gt;சரி நியும்மை பத்திரமா திருப்பி அனுப்பிட்டு   நீ  வழமையான தீவுக்கு  போய்  நில்.  அங்கை  வண்டிவாற நேரம் நான் உனக்கு செய்தியனுப்பிறன்.&lt;br /&gt;&lt;br /&gt;மிச்சம் குடுக்க வேண்டியது எங்கையாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மொறிசியசில்  ஒரு பாங்கிலை போட்டால் சரி அந்த விபரமும் அனுப்பி விடுறன்.  சரி மச்சான் சந்திப்பம் ..&lt;/em&gt;       &lt;br /&gt;&lt;br /&gt;  புலிகளின் இரண்டு கப்பல்கள்  முல்லைத்தீவு கடலில்  சிலநாட்கள்  நங்கூரமிட்டுவிட்டு  திரும்பவும் சர்வதேச கடலில்  இறங்கிப்  போய்க்கொண்டிருந்தன.&lt;br /&gt;றோகனிற்கு என்னென்ன சாப்பாடுகள் பிடிக்குமோ அத்தனையும் அவனிற்கு  தாயாரும்  மாமியும்  செய்து அவனை திக்குமுக்காடவைத்துக்கொண்டிருந்தனர்.  வன்னியில்  ஓயாதஅலை 3 சுழன்றடித்துக்கொண்டிருந்தது           &lt;br /&gt;                 00000000000000000000000000&lt;br /&gt;2001 ம் ஆண்டின் இறுதியில் புலிகள் அமைப்பின்  அதிகார நிருவாக மாற்றங்கள்   நடந்தேறியது  அதில் றோகனின் நண்பர்கள் பலரும்   விலக்கப்பட்டு   தனிவாழ்க்கைக்கு திரும்பி விட்டிருந்தனர். றொகனையும் பேரம் பேசலில் இருந்து  திரும்பவும்  கப்பலிற்கேமாற்றிவிட்டிருந்தார்கள்.  பேரம் பேசும்  காலங்களில் அவனது  போதை பழக்கம் மற்றும் அவனிற்கு பிடித்திருந்த  ஆஸ்மா  என்பவற்றால் அவனால் தாக்குப் பிடிக்கமுடியவில்லை  அவனையும்  வெளியேறுமாறு   2003 ல் உத்தரவுவந்தது,ஏதாவது நாட்டில்  அகதி தஞ்சம் கோரலாமென நினைத்தவன்  அதற்கு முன்னர்  நியும் அடிக்கடி நச்சரிக்கும் பிரான்சை  சுற்றி  காட்டிவிடலாமென நினைத்து  அவளை அழைத்துவந்து  மூன்று வாரங்கள் பாரிஸ்  நகரெங்கும் சுற்றி காட்டினான். அந்த மூன்று வாரங்கள் அத்தனையையும் மறந்து  மகிழ்ச்சியாக கழித்தவன் மீண்டும்  நியும்மை  தாய்லாந்திற்கு  திருப்பியனுப்பிவிட்டு அவனிற்கு பிடித்த சுவிஸ் நாட்டில் அகதியாக தஞ்சம்  புகுந்தான்.அப்பொழுதுதான் அவன் வாழ்க்கையில் சூனியத்தை உணர்ந்தான் ஒரு முறை  தற்கொலை செய்து கொள்ளலாமா எனவும்  யோசித்திருந்தான் ஆனால் இதுவரை நான்  அம்மாவிற்கு என்று எதுவுமே செய்ததில்லை  நாடு நாடு என்று ஓடியே நாட்கள்  போய்விட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் இறந்துவிட்டால் அவரின் இறுதிக்காலங்கள் கவலையிலேயே  கழிந்துவிடும்  எனவே இனி முடிந்தளவு  அவரை நல்லபடியாக பார்க்கவேண்டும் என நினைத்து தற்கொலை  முடிவைமாற்றிவிட்டடிருந்தான்.  சுவிஸ் அகதிமுகாம் வாழ்க்கை  வைத்திய  ஆலேசனைகள் அவனை போதைப்பழக்கத்திலிருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே  கொண்டுவந்திருந்தது. காலமும் மனதைமாற்றியது .தமிழர்கள் அதிகமற்ற  ஒரு அழகிய  கிராமத்தில் அவனிற்கு வீடும் கிடைத்தது உருண்டோடிய வருடங்களில்  நாட்டு  நிலைமைகளை செய்திகளில் மட்டுமே படித்துக்கொண்டிருந்தான். தாயாரைத்தவிர வேறு  எந்த தொடர்புகளையும்  அவன் வைத்திருக்கவில்லை  அதன் காரணம் ஒன்று அவன்  விரும்பவில்லை அடுத்தது சுவிஸ் பொலிஸ் அவன் யாரென்று  எப்படியாவது மணந்து  பிடித்துவிடுவார்களோ என்கிற பயம்.   அப்படியான தொரு காலத்தில்  2005 ம்  ஆண்டு ஒருநாள் பிரான்சில் இருந்து ஒலிபரப்பாகும் வனொலியை  கேட்டுக்கொண்டிருந்தபொழுது அதில் கலந்துகொண்டிருந்த ஒரு குரல்  அவனிற்கு  பழக்கமானது  வானொலி  நிலையத்திற்கு போனடித்து அவனது இலக்கத்தை வாங்கி  அதனை  அழுத்தியவன்.&lt;br /&gt;&lt;br /&gt;கலோ என்கிற சத்தத்திற்கு&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;றோயர்  றோயர் றிசி என்றான்.&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;றிசிக்கு ஒரே ஆச்சரியம்எப்பிடி மச்சான் இருக்கிறாய்   எப்பிடி என்ரை நம்பரை கண்டு பிடிச்சனி??&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;நீதான் கையையும்  வாயையும் வைச்சுக் கொண்டு சும்மாயிருக்க  மாட்டியே  கண்டு பிடிக்கிறது பெரியகஸ்ரமோ??&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;சரி சுவிஸ் நம்பர் விழுது  ஆனால் நீ எங்கை நிக்கிறாய்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;சுவிசிலைதான் இருக்கிறன்  மூண்டு வருசமாய்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;ஓ ஏன் உன்னையும் கழட்டி விட்டிட்டாங்களா?&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;ஓம் மச்சான்  இப்பதான் வீடு தந்து ஒரு வேலையும்  கிடைச்சிருக்கு&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;நியுமோடை தொடர்பு இருக்கோ இப்பவும்.&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;ஓமடா கதைக்கிறனான்   எனக்கொரு  மகனும் இருக்கிறான்.&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;ஓ  உன்னோடையா இருக்கிறாள் .&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;இல்லை கடைசியா  எல்லாம் விட்டிட்டு வரேக்கை அவளை   பாரிசிற்கு கூட்டியந்து ஒரு மூண்டு கிழைமை நிண்டனாங்கள்.   பிறகு  அங்கை   அனுப்பிட்டு  அவளையும்  அந்த தொழிலை கைவிட்டிட்டு   கடைசியாய் என்னட்டை  கையிலை இருந்த காசை அனுப்பி அவளின்ரை  கிராமத்திலை ஒரு கடைபோட்டு   குடுத்தனான். ஒருநாள்  போனடிச்சு தான்  சுகமில்லாமல் இருக்கிறதாய்  சொன்னாள்.  எனக்கு விருப்பம் இல்லை ஆனால் நானும் இல்லை  தனக்கெண்டும்  ஒருத்தரும் இல்லை அதாலை  தனக்கொரு பிள்ளையாவது வேண்டும் எண்டு அழுது அடம்  பிடிச்சாள்.  பிறகு என்னத்தை சொல்லுறது.&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;என்ன செய்யப் போறாய்  கூப்பிடுற  யோசனை ஏதும் இருக்குதோ??&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;நானும் அவளளோடை எல்லாம் முடிஞ்சுது  எண்டுதான் நினைச்சனான்  ஆனால்  நான்தான் நல்லதொரு மகனாய்  இருக்கேல்லை ஆனால்  நல்லதொரு அப்பாவாய்  இருக்க முயற்சிக்கிறன். இங்கை பதியேக்கை  கலியாணம் செய்யேல்லையெண்டு   சொல்லிட்டன். அதாலை நான் அங்கைபோய் அவளை  எழுதிட்டுதான் கூட்டியரலாம்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;நல்லது  அதை செய்யவேண்டியதுதானே&lt;br /&gt;&lt;br /&gt;இப்பதான் வீடு தந்திருக்கிறாங்கள் இன்னமும் விசா கைக்கு வரேல்லையடா  அதை  தந்தால்தான் நான் எதுவும் செய்யலாம் அது கையிலை கிடைச்சதும்  அதுதான் முதல்  வேலை அம்மாட்டையும்  சொல்லிட்டன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மகனுக்கு என்ன பெயர்&lt;br /&gt;&lt;br /&gt;நான் தான் வைச்சனான்  திலீபன்.&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக  அவர்களது உரையாடல் பழைய நினைவுகளை மீட்டியதாகவே அதிகாலைவரை  தொடந்து கொண்டேபோனது...&lt;br /&gt;&lt;br /&gt;2008 ம் ஆண்டு  தாயகத்தின் நிலைமை மேசமானதாய்  மாறிக்கொண்டேயிருந்தது பழைய  வெளிநாட்டு  கட்டமைப்பினரை உதவுமாறு  தொடர்புகளை தேடியெடுத்து திரும்ப  திரும்ப அழைப்பு விடுத்தக்கொண்டிருந்தார்கள். அப்படியானதொரு காலத்தில்   மீண்டும் றோகனிடமிருந்து  றிசிக்கு ஒரு அழைப்பு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;என்னமச்சான்  நிலைமை மேசமாய் போகுது&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;ஓமடா பாத்துக்கொண்டுதான் இருக்கிறன்  என்ன செய்யிறது&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;என்னை எப்பிடியோ தேடிப்பிடிச்சு  எஸ்.ஓ  தொடர்பெடுத்தது&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;என்னவாம்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;வண்டியொண்டு  சமானோடை வெளிக்கிடுதாம் வரட்டாம்.&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;என்ன செய்யப் போறாய்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;போறதெண்டு முடிவெடுத்திருக்கிறன்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;உனக்கென்ன விசரோ??&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;இருக்கலாம் மச்சான் ஆனால் இப்ப நடக்கிறது விடுதலைப்  போராட்டம் இல்லை. வாழ்வா சாவா எண்டிறது  இப்ப போகமல் இருந்திட்டு  பிறகு  கவலைபட்டு  பிரயோசனம்  இல்லை.&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;எனக்கென்னவோ புத்திசாலித்தனமாய் தெரியேல்லை&lt;br /&gt;&lt;br /&gt;உன்னட்டையிருந்து இப்பிடியொரு பதிலை நான் எதிர் பார்க்கேல்லையடா எத்தனைதரம்   முடியாதெண்டு தெரிஞ்சே முட்டி மோதியிருக்கிறம்.  விதியை  மாத்தியிருக்கிறம்.&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;இது விதியில்லை பல நாடுகளின்ரை மதி.  சதியெண்டும்   சொல்லாம்.கொஞ்சம் கஸ்ரம். இந்தனோசியாவிலை  ஸ்ரிபன் பிடிபட்டதோடையே    சர்வதேச வலையமைப்பு  நட்சத்திர நாயளிட்டையும் பக்கத்து நாயளிட்டையும்   போயிட்டுது.  இனி என்ன செய்தாலும் கஸ்ரமடா. வடிவா கவனிச்சு பார்   குறிப்பிட்ட இடத்தை  தாண்டினதுமே அடிக்கிறாங்கள். தொடந்து ..ஒண்டு  இரண்டில்லை  ஒன்பது  அடிபட்டிட்டுது  இனியும் நம்பிக்கை இருக்கா உனக்கு&lt;br /&gt;&lt;br /&gt;இருக்கடா மாத்தலாம் பாதையை மாத்தலாமெண்டு இருக்கிறன்  அதுக்குத்தான் என்னை  கேட்டிருக்கினம். ஏன் உன்னை கூப்பிடேல்லையா&lt;br /&gt;என்னை கேட்டவைதான்  ஆனா  யோசிச்சுபார்  எட்டுவருசம் எந்த தொடர்பும் இல்லை  திரும்ப  ஆரம்பத்திலையிருந்து தொடங்க முடியாது   அது உதவாது  அதாலை  மாட்டன்எண்டிட்டன்.&lt;br /&gt;&lt;br /&gt;நீ ஒரு சுயநலவாதியடா  இப்ப குடும்பம்  பிள்ளையை  விட்டிட்டு போக உனக்கு  மனசில்லை&lt;br /&gt;அப்பிடி நீ நினைச்சாலும் பரவாயில்லையடா ஆனால்  எனக்கென்னவோ  அவன்  பிடிபட்டதுமே  எல்லா கப்பல்லையும் அவனை வைச்சே ஏதாவது ஜி.பி.எஸ்   பொருத்தியிருப்பாங்களோ எண்டு நினைக்கிறன் காரணம் அவன் பிடிபட்ட ஒருமாதம்   அவன் எங்கையெண்ட விபரமே தெரியாமல் இருந்தது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் போறதெண்டு முடிவெடுத்திட்டன்  ஆனால் ஒரு உதவி உன்னட்டை கேக்கிறன்&lt;br /&gt;&lt;br /&gt;என்னது&lt;br /&gt;&lt;br /&gt;நான் சிலநேரம் திரும்பி வராமல் போனால்  என்ரை மகனின்ரை  பிறந்தநாளுக்கு  மட்டும்   ஒரு உடுப்பு பாசல் பண்ணிவிடு மச்சான் .அப்பாவின்ரை இழப்பெண்டால்  எனக்கு என்னவெண்டு தெரியும் அதை அவனும் அனுபவிக்கவேண்டாம். அவனின்ரை  பிறந்தநாள் வருசம்  பிறந்த முதலாம் திகதிதான்  விலாசம் அனுப்பி விடுறன்.&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;அப்பிடியெல்லாம் நடக்காது போயிட்டுவாடா.&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;துருக்கி நாட்டில் இருந்து போய் வருகிறேன்என்று றோகனின் ஒரு  எஸ் எம் எஸ்    றிசிக்கு வந்திருந்தது &lt;br /&gt;  ஒரு மாதம் கழித்து 20 ந்திகதி மார்கழி மாதம் 2008 ம் ஆண்டுவேலையில்  நின்றிருந்த அவனிற்கு ஒரு தொபேசி அழைப்பு ..செய்தி பாத்தியா.&lt;br /&gt;இல்லை என்ன  நடந்தது&lt;br /&gt;செய்தியை பார்&lt;br /&gt;&lt;br /&gt;அவசரமாக வேலைடயிடத்து கணணியில் செய்திகளை தேடுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்று அதிகாலை 2.00 மணியளவில் முல்லைத்தீவுக் கடற்பரப்பில் புலிகளின்  ஆயுதக்கப்பல் ஒன்று மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்தரப்புச்  செய்திகள் தெரிவிக்கின்றன. அச்செய்தியில் மேலும் முல்லைத்தீவு கடற்பரப்பில்  சந்தேகத்திற்கு இடமான கப்பலொன்றை அவதானித்த ரோந்துப் பணியில்  ஈடுபட்டிருந்த கடற்படையினர் கப்பலில் உள்ளவர்களை தமது அடயாளங்களை  உறுதிப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்த போது கப்பலில் இருந்து படையினைரை  நோக்கி தாக்குதல் நாடாத்தப்பட்டதாகவும் கடற்படையினர் எதிர்தாக்குதல்  நாடாத்தியபோது அக்கப்பலில் இருந்து பாரிய வெடிச்சத்ங்களுடனான தீச்சுவாலை  வெளிவந்ததாகவும் தெரிவிக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன் அக்கப்பல் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதுடன் அக்கப்பலுக்கு உதவிக்கு  வந்த புலிகளின் நான்கு படகுகளும் அழிக்கப்பட்டுள்ளதாக அச்செய்தி மேலும்  தெரிவிக்கின்றது.&lt;br /&gt;                000000000000&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று வருடங்கள் உருண்டோடி விட்டிருந்த வருடக் கடைசியின் ஒரு  காலையில்  றிசியின் கைத்தொலைபேசி யில் ஒரு செய்தி வந்திருந்தது திறந்து பார்த்தான்  நன்றிகள்  சகோதரா இந்தவருடமும் உங்கள் பரிசுப் பொதி கிடைத்தது  மகனிற்கு   மகிழ்ச்சி  நன்றாக படிக்கிறான்  அப்பா எப்போ வருவார் எனக் கேட்டான்.  வளர்ந்து விட்டான்  இனி அவனது தந்தைபற்றிய  விடயத்தை  அவனிற்கு சொல்லாமென  நினைக்கிறேன் உங்கள் ஆலோசனை தேவை.. செய்தியை படித்த றிசி பதிலொன்றினை   எழுதி  அனுப்பிவிட்டிருந்தான் அது ' இப்பொழு எதுவும் சொல்லவேண்டாம்  அவன்  படிப்பை  குழப்பிவிடுவான் இன்னும் சில வருடங்கள்  போகட்டும். அதுவரை அவனது  பிறந்தநாளிற்கு பரிசுகள் வந்தபடி இருக்கும்  நன்றிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong class="bbc"&gt;யாவும் உண்மை &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கதையை  இலகுவாக புரிந்து கொள்ள சில குறிப்புக்கள்.&lt;br /&gt;&lt;strong class="bbc"&gt;நட்சத்திர நாடு..&lt;/strong&gt; அமெரிக்கா&lt;br /&gt;&lt;strong class="bbc"&gt;நட்சத்திர நாய்கள்&lt;/strong&gt; .அமெரிக்கா  சி.ஜ.ஏ  உளவமைப்பு  மற்றும் அவர்களிற்காக  பணத்திற்கு வேலை செய்பவர்கள்&lt;br /&gt;&lt;strong class="bbc"&gt;உடைந்த கிழக்கு நாடு.&lt;/strong&gt; உக்ரேய்ன்.&lt;br /&gt;&lt;strong class="bbc"&gt;கீழ் கறுப்பு நாடு&lt;/strong&gt; ..எரித்தியா&lt;br /&gt;&lt;strong class="bbc"&gt;எஸ்.ஓ&lt;/strong&gt; . புலிகளின் கடற்படை தளபதி சூசை&lt;br /&gt;&lt;strong class="bbc"&gt;நட்சத்திர  நாய்களின் பக்கத்து  நாய்கள்&lt;/strong&gt;.   கனடா உளவமைப்பு&lt;br /&gt;&lt;strong class="bbc"&gt;வழைமையான தீவு&lt;/strong&gt; .சீசெல்ஸ்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28994032-861013388568814311?l=sathirir.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sathirir.blogspot.com/feeds/861013388568814311/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28994032&amp;postID=861013388568814311' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28994032/posts/default/861013388568814311'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28994032/posts/default/861013388568814311'/><link rel='alternate' type='text/html' href='http://sathirir.blogspot.com/2011/12/blog-post_27.html' title='இலவ(ஈழ)ம் காத்தவர்கள்'/><author><name>சாத்திரி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_Sem5kfmy6G0/SXSlTz3ZpoI/AAAAAAAAAPc/qpZk13LLF-0/S220/Photo+103.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28994032.post-2289180796189077024</id><published>2011-12-25T08:50:00.000-08:00</published><updated>2011-12-25T08:51:34.988-08:00</updated><title type='text'>அனைத்துலகச் செயலகம் vs தலைமைச்செயலகம்.</title><content type='html'>&lt;strong class="bbc"&gt;அனைத்துலகச் செயலகம் vs  தலைமைச்செயலகம்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாத்திரி ஒரு பேப்பரிற்காக&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வருடம் மாவீரர் தினம் ஜரோப்பாவிலை பெரும்பாலான நாடுகளிலை  அனைத்துலகம்  தலைமைச்செயலகம் இரண்டு பிரிவாக இரண்டுமே வேறு வேறு அமைப்பின்  செயலகங்கள்:  என்பதைப்போல  போட்டி  போட்டு ஒரு மாதிரி நடந்தேறிவிட்டது.  யாராக  இருந்தாலும்ஒரே இடத்தில்  ஒற்றுமையாக மாவீரர்களை நினைவு கூரவேண்டும் என்பதே   பலரினதும்  ஒரு பேப்பர் குழுமத்தினரதும் அங்கலாய்ப்பாக இருந்தது ஒரு  பேப்பர் குழுமமும்  அதனைத்தான் வலியுறுத்தியிருந்தோம்.  ஆனால்  சம்பந்தப்  பட்டவர்கள் அடம்பிடித்ததனால்  யாருடைய நிகழ்வெள்றாலும் பரவாயில்லை  மாவீரர்களை நினைவு கூரவேண்டியது எமது கடைமையென்று  ஏற்பாடு  செய்யப்பட்டிருந்த அனைத்து இடங்களிலும் கலந்து கொண்டிருந்தனர்.மாவீரர்  தினத்தன்று பெரும் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கலாமென  பொதுவானதொரு அச்சம்  இருந்திருந்ததும் உண்மை ஆனால் சிறு சிறு அசம்பாவிதங்கள்  மட்டுமே சில  நாடுகளில் நடந்ததோடு  மாவீரர் வாரம் முடிவடைந்தது .&lt;br /&gt;&lt;br /&gt;அந்தளவிற்காவது இரு குழுவினரும்  மாவீரர்களை  மதித்தது மகிழ்ச்சியே .&lt;br /&gt;ஆனால் நாங்கள் தூய்மையானவர்கள்.கணக்குவழக்கு சரியாக காட்டுவோம் என்றபடி  புதிதாகப் புறப்பட்ட தலைமைச்செயலகத்தினர்  நடாத்திய நிகழ்வுகளை விட   வழைமைபோல  வருடாவருடம் கடைகளும் கொத்துறொட்டியும் போட்டபடி  .மாவீரர்களிற்காக விற்ற பூக்களையே மீண்டும் எடுத்து மறுபடி விற்று காசு  பார்த்த அனைத்துலகச் செயலக்தின் நிகழ்வுகளிலேயே மக்கள் அதிகளவு கலந்து  கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. அதற்கு காரணம்.  தலைமைச்செயலகத்தினரிடம் ஒரு பேப்பர் எழுப்பியிருந்த சந்தேகங்களே பலரது  மனங்களிலும் இருந்திருக்கின்றது. அதே நேரம்  இவர்கள் பிரிந்து   நின்றுஅடிபட்டாலும்  நாம் மாவீரர்களை பிரிக்கக்கூடாது  என்கிற  காரணத்திற்காகவும். புதிதாக வந்தவர்கள் அப்படி என்னதான் செய்கிறார்  பார்க்கலாமென விடுப்புப் பார்ப்பதற்கெனவும்.கடந்தகாலத்தில் அனைத்துலகச்  செலயக்கதினரிர் நிதி மோசடிகாளால் பாதிக்கப் பட்டவர்களுமே    தலைமைச்செயலகத்தின் நிகழ்வுலுகளில் கலந்து கொண்டிருந்தனர்.&lt;br /&gt;மாவீரர் தினம் முடிவடைந்ததும் தலைமைச்செயலகம்  நட்டக் கணக்கு  காட்டினார்கள். இலண்டனில் இவர்கள் காட்டிய நட்டமோ இருபத்தி மூவாயிரம்  பவுண்சுகள்.இதனை  யார்?? எப்படி ??ஈடுகட்டப் போகிறார்கள் என்பது பற்றிய  எந்த விபரமும் கிடையாது.அனைத்துலகச் செயலகத்திடம் கணக்கு என்கிற வார்த்தையே  அவர்களது அகராதியில் கிடையாது.  அதையாரும் கேட்கவும் முடியாது. கேட்டாலும்  வராது. ஆனால் அவர்கள் சாதாரணமாக ஒரு பதிலை சொல்லியிருந்தனர் அது  பார்த்தீர்களா  புதிதாய்  நிகழ்வு செய்தவர்களே நட்டக்கணக்கு  காட்டுகிறார்கள். நாங்கள் இதைத்தானே வருடாவருடம்  சொல்லுறம் எங்களிற்கும்  நட்டம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கணக்கு வழக்கு விடையங்களை விட்டுவிடுவோம். காரணம் மாவீரர்கள் வருடாவருடம்  நினைவுகூரப்படவேண்டும். மக்களின் பங்களிப்பும் தொடர்ந்து இருக்கவேண்டும்.  இந்த இரு அமைப்பும்  மாவீரர்  தினத்தை கொண்டாடுவதற்காக எப்படி  மோதிக்கொண்டார்களோ...வானொலி  தொலைக்காட்சி இணையங்களில் எப்படி மாறி மாறி  குற்றச்சாட்டுக்களை  வைத்தார்களோ அதே போல இனிவரும் காலங்களில்    இலங்கையரசின் போர் குற்றங்களை   வெளிக்கொண்டு வருவதிலும் போட்டி  போட்டுக்கொண்டு செயல்ப்படவேண்டும்.  சம்பந்தப் பட்டவர்கள் மீது வழக்கு  தொடரவேண்டும்.  சர்வதேச நீதி மன்றத்தில் அவர்களை நிறுத்தவேண்டும்.  யுத்தத்தில்  பாதிப்படைந்த மக்களிற்கு  உதவிகள் புரிந்தது  போதாது என்று  ஒருவரையொருவர் குற்றம் சாட்டியபடியே  அந்த மக்களிற்கான உதவிகளை  செய்யவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மக்களிற்கு கிடைத்த உதவிகளில்  போர் குற்றம் தொடர்பான விடையங்களில் ஒருகுழு  விட்ட தவறை மற்றைய குழு இணையங்களிலும் .பத்திரிகைகளிலும்  பகிரங்கமாக  சுட்டிக்காட்டி விவாதிக்கவேண்டும்.அதற்கும் ஒரு படி மேலே போய்  இரண்டு  தரப்பிலுமே   அடுத்த போர் வெடிக்கும்  தமிழீழமே தீர்வு என  இணையங்களில்  ஈழத்திற்கான  இணையப் புரட்சி செய்யும் இளைஞர்கள்  போரினால் பாதிப்படைந்து   இன்று தங்கள் சமூகத்தாலும் சொந்த உறவுகளாலும்    கைவிடப்பட்டு  எந்த  உதவிகளுமற்று ஏதிலிகளாகி வாழ்க்கையின் விரக்தியின் விளிம்பில்  பலநூறு  முன்னைநாள் பெண் போராளிகள்  இருக்கின்றார்கள். இவர்களது வாழ்வின்   ஆதாரங்களாக  மாறி அவர்களின் வாழ்விற்கும் ஒரு அர்த்தத்தினை கொடுக்கலாம்.   அது முடியாதவர்கள் அவர்களின் வாழ்வாதாரத்திற்காவது ஏதாவது வழிவகைகளை   செய்யது கொடுக்கலாம்.&lt;br /&gt;இவற்றையெல்லாம்  விட்டுவிட்டு  மீண்மு; மீண்டும் மாவீரர் தின்தை  கொண்டாடவும். மாவீரர்களின் நினைவுநாளை கொண்டாடவும்.  கோடை தொடங்கியதும்   விழையாட்டு போட்டியை  நடாத்தமட்டுமே இவர்கள்  போட்டிபோட்டு  அடிபட்டுக்கொண்டும். விற்ற பூவையே  விற்றபடி நட்டக்கணக்கை   காட்டிக்கொண்டேயிருப்பார்களாயின் இவர்களை   ஒரு தலைவர் பிரபாகரன் என்ன   ஆயிரம்  பிரபாகரன்கள் வந்தாலும் இவர்களை திருத்தமுடியாது.&lt;br /&gt;அதே நேரம்  நாடு கடந்த அரசு  என்பது வெறும்  நாட்கள் கடத்தும் அரசாக  மாறிக்கொண்டிருக்கின்றது.  நாட்கள்  கடத்தும் அரசு பற்றிய  பதிவொன்றுடன்  அடுத்த பேப்பரில் சந்திக்கின்றென் நன்றி வணக்கம்  சாத்திரி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28994032-2289180796189077024?l=sathirir.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sathirir.blogspot.com/feeds/2289180796189077024/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28994032&amp;postID=2289180796189077024' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28994032/posts/default/2289180796189077024'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28994032/posts/default/2289180796189077024'/><link rel='alternate' type='text/html' href='http://sathirir.blogspot.com/2011/12/vs.html' title='அனைத்துலகச் செயலகம் vs தலைமைச்செயலகம்.'/><author><name>சாத்திரி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_Sem5kfmy6G0/SXSlTz3ZpoI/AAAAAAAAAPc/qpZk13LLF-0/S220/Photo+103.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28994032.post-741232000148385826</id><published>2011-12-12T14:43:00.000-08:00</published><updated>2011-12-12T15:42:03.363-08:00</updated><title type='text'>பேச்சு மட்டும்தான்  தான் தேசியம் மிச்சமெல்லாம்.....</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;கடந்த இரண்டு நாள்களிற்கு முன்னர் தமிழ் பாராளுமன்ற&amp;nbsp; உறுப்பினர் சிறிதரனின் பின்னணியில் அவரது&amp;nbsp; சகோதரரால் நடாத்தப்படும்&amp;nbsp; லங்காசிறீ. தமிழ்வின் மற்றும் மனிதன் இணையத்தளங்கள் பற்றியதொரு சர்ச்சை&amp;nbsp; கிளம்பியிருந்தது. கூடவே இன்னொரு பெரும்&amp;nbsp; சர்ச்சை கிளம்பியிருக்கின்றது&amp;nbsp; அது என்னவெனில்&amp;nbsp; லங்கா சிறி இணையத்தினரால் நடாத்தப்படும் hi 2 world&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; தமிழ் அரட்டை சேவை பற்றியது. அந்த&amp;nbsp; காணொளி அரட்டையூடாக பலநூறு&amp;nbsp; தமிழர்கள் தமிழிச்சிகள்&amp;nbsp; ஆடைகளை கழற்றி ஆபாச அரட்டையடித்துள்ளதோடு தங்கள் நிர்வாண படங்களையும் பரிமாறியுள்ளது தெரியவந்துள்ளது.&amp;nbsp; அதைப்பற்றி அறியலாமென நினைத்து&amp;nbsp; அரட்டையில்&amp;nbsp; அரட்டையடிக்கும் ஒரு இளைஞரை இனம் கண்டு தொடர்புகொண்டபொழுது&amp;nbsp; அவர் அண்ணை&amp;nbsp; என்னட்டை மட்டும் 56 தமிழ் பெட்டையளின்ரை&amp;nbsp; நிர்வாணப்படம் இருக்குதென்று பெருமையாக சொன்து மட்டுமில்லாமல். அவற்றை&amp;nbsp; அனுப்பியும் வைத்திருந்தார்.&amp;nbsp; அவற்றை பார்தால் இளம் பெண்கள் மட்டுமில்லாமல் திருமணமான வயதான பெண்களின் படங்களும்&amp;nbsp; இருந்தது. பலரது திறந்த மார்பில் தாலிதொங்கிக்கொண்டிருந்தது. இப்படி ஒருவரிடம் மட்டுமே 50ற்கு&amp;nbsp; மேற்பட்ட படங்கள் என்றால்&amp;nbsp; இதுவரை மொத்தமாக&amp;nbsp; அங்கு அரட்டை அடிப்பவர்களிடம் எத்தனை&amp;nbsp; படங்கள் பரிமாறப்பட்டிருக்கும்.நினைத்துப் பாருங்கள்.. தனிப்பட ஒருவன் ஒருத்தி&amp;nbsp; அரட்டையடிப்பதும். ஆடையை&amp;nbsp; கழற்றுவதும்&amp;nbsp; அவரவர் தனிப்பட்ட விடயம். ஆனால். யாழ்ப்பாணத்தில் கலாச்சாரம்&amp;nbsp; கெடுகின்றது என்று&amp;nbsp; புலம்பும்&amp;nbsp; தமிழ்வின்&amp;nbsp; லங்காசிறி இணையமும். தமிழினத்தின் அடுத்த தலைவர்களில் ஒருவர் என சொல்லிக்கொள்ளும்&amp;nbsp; சிறிதரனின் பின்னணியில் இயங்கும்&amp;nbsp; இணையத்தளத்தில்&amp;nbsp; பெரும் கலாச்சார சீரழிவே நடைபெறுவதோடு அதற:;கு அவர்களும் உடைந்தையாக இருப்பதும் தான் கேள்விக்குள்ளாகின்றது&lt;br /&gt;&lt;br /&gt;அதே நேரம்&amp;nbsp; இங்கு அரட்டையடிப்பவர்களிற்கு தெரியாமலேயே&amp;nbsp; அவர்களிற்கு பின்னால் உள்ள பெரும் ஆபத்து என்னவென்றால்.&amp;nbsp; இப்படியான அரட்டை இணைய வழங்கிகளை&amp;nbsp; பெரும்பாலும்&amp;nbsp; 90 வீதம்&amp;nbsp; பாகிஸ்தானிலிருந்து&amp;nbsp; இயங்கும் நிறுவனங்களே&amp;nbsp; குறைந்த விலையில் வழங்குகின்றார்கள்.&amp;nbsp;&amp;nbsp; இவர்களின் உரிமங்கள் பதிவுகள் திருட்டு பெயர்களில் இருப்பதனால் சட்ட நடவடிக்கைகளும் எடுக்கமுடியாது.&amp;nbsp; இவர்கள் தங்கள் இணைய வளங்கியினுடாக பரிமாறப்படும்&amp;nbsp; நிர்வாண&amp;nbsp;&amp;nbsp; காணொளிகள் மற்றும் படங்களை பதிவுசெய்து&amp;nbsp; ஆபாச இணையத்தளங்களை நடத்தி பெரும் பணம்&amp;nbsp; சம்பாதிப்பதோடு மட்டுமல்லாமல்.&amp;nbsp; இந்தியா பாகிஸ்த்தான்.மலேசியா.சிங்கப்பூர் போன்ற&amp;nbsp; நாடுகளில் கைத்தொலைபேசி ஊடாகவும்&amp;nbsp; விற்பனை செய்கிறார்கள்.&amp;nbsp; அதாவது புலம்பெயர் தமிழர்களின் நிர்வாணப்படங்கள்&amp;nbsp; வியாபாரமாகின்றது. அந்த வகையில் நாம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;object class="BLOGGER-youtube-video" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0" data-thumbnail-src="http://i.ytimg.com/vi/9Fe-5D4YOyk/0.jpg" height="266" width="320"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/9Fe-5D4YOyk?version=3&amp;f=user_uploads&amp;c=google-webdrive-0&amp;app=youtube_gdata" /&gt;&lt;param name="bgcolor" value="#FFFFFF" /&gt;&lt;embed width="320" height="266"  src="http://www.youtube.com/v/9Fe-5D4YOyk?version=3&amp;f=user_uploads&amp;c=google-webdrive-0&amp;app=youtube_gdata" type="application/x-shockwave-flash"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தன்னுடைய மகனோ&amp;nbsp; மகளோ தனியறையில் கணணியில்&amp;nbsp; பாடம் சம்பந்தமாக அவர்களது நண்பர்களுடன் ஏதோ கதைக்கிறார்கள் என நினைக்கும் பெற்றோர்கள்.&amp;nbsp; சிலவேளைகளில் அவர்கள் எந்தெந்த தளங்களில்&amp;nbsp; உலாவுகிறார்கள்&amp;nbsp; கண்காணித்தாலும் பிள்ளை தமிழ் தளத்திலைதானே&amp;nbsp; உலாவுது&amp;nbsp; அதுகின்ரை&amp;nbsp; தமிழ் ஆர்வத்தை பாராட்டவேணும் என&amp;nbsp; நினைக்கும் பெற்றோர்கள்&amp;nbsp; தமிழ் தளத்தினுடாக பிள்ளை எங்கே போகின்றது என்பதையும் கண்காணிக்க வேண்டும். .அதே நேரம் கணவன் மனைவியை மனைவி கணவனை&amp;nbsp; கண்காணிக் வேண்டிய நிலைக்கு தள்ளிய&amp;nbsp; இது போன்ற&amp;nbsp; தமிழ் இணையத்தளங்கள் தேவைதான&amp;nbsp; என்பதனையும்&amp;nbsp; தமிழர்கள் தீர்மானிக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;object width="320" height="266" class="BLOG_video_class" id="BLOG_video-542d938cc6526763" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/get_player"&gt;&lt;param name="bgcolor" value="#FFFFFF"&gt;&lt;param name="allowfullscreen" value="true"&gt;&lt;param name="flashvars" value="flvurl=http://v19.nonxt5.googlevideo.com/videoplayback?id%3D542d938cc6526763%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1331666566%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3D5B9067FA5FA569D67EA00748B9FD08833CCBA8A0.78BDB2B48FC832A913B7403D397A63D4B879C0FF%26key%3Dck1&amp;amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3D542d938cc6526763%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3D6ErvLyXliZPsaBFb-orRRxhzlMU&amp;amp;autoplay=0&amp;amp;ps=blogger"&gt;&lt;embed src="http://www.youtube.com/get_player" type="application/x-shockwave-flash"width="320" height="266" bgcolor="#FFFFFF"flashvars="flvurl=http://v19.nonxt5.googlevideo.com/videoplayback?id%3D542d938cc6526763%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1331666566%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3D5B9067FA5FA569D67EA00748B9FD08833CCBA8A0.78BDB2B48FC832A913B7403D397A63D4B879C0FF%26key%3Dck1&amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3D542d938cc6526763%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3D6ErvLyXliZPsaBFb-orRRxhzlMU&amp;autoplay=0&amp;ps=blogger"allowFullScreen="true" /&gt;&lt;/object&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;அதே நேரம் இங்கு தங்கள் படத்தை பரிமாறிய&amp;nbsp; ஆணோ பெண்ணோ நாளை திருமணம் என வரும் பொழுது அரட்டையில் இரண்டு பேருமே பார்த்திருக்கலாம்.&amp;nbsp; அல்லது அவங்கடை அம்மா அப்பாவை திருமணம் செய்யப் போகின்றவர்கள் பார்த்திருக்கலாம். இதனால் எத்தனை குடும்பங்கள் பிரியப் போகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-znXSQ-PF8E0/TuaLqH98DaI/AAAAAAAAAoM/Ul5jQs-dg1w/s1600/lan.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-znXSQ-PF8E0/TuaLqH98DaI/AAAAAAAAAoM/Ul5jQs-dg1w/s1600/lan.png" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/--QNTcSJDl1Q/TuaLwQ6sZmI/AAAAAAAAAoU/3v4iX1j_fPs/s1600/lan1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/--QNTcSJDl1Q/TuaLwQ6sZmI/AAAAAAAAAoU/3v4iX1j_fPs/s1600/lan1.png" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யாராவது ஓடிவந்து ஆதாரம் கேட்பார்கள்&lt;br /&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-hvKUsAhjHsQ/TuaMcuuqWSI/AAAAAAAAAok/I8xNzgPL87I/s1600/lan2.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="220" src="http://3.bp.blogspot.com/-hvKUsAhjHsQ/TuaMcuuqWSI/AAAAAAAAAok/I8xNzgPL87I/s320/lan2.png" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28994032-741232000148385826?l=sathirir.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sathirir.blogspot.com/feeds/741232000148385826/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28994032&amp;postID=741232000148385826' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28994032/posts/default/741232000148385826'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28994032/posts/default/741232000148385826'/><link rel='alternate' type='text/html' href='http://sathirir.blogspot.com/2011/12/blog-post_12.html' title='பேச்சு மட்டும்தான்  தான் தேசியம் மிச்சமெல்லாம்.....'/><author><name>சாத்திரி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_Sem5kfmy6G0/SXSlTz3ZpoI/AAAAAAAAAPc/qpZk13LLF-0/S220/Photo+103.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-znXSQ-PF8E0/TuaLqH98DaI/AAAAAAAAAoM/Ul5jQs-dg1w/s72-c/lan.png' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28994032.post-6383114552955935465</id><published>2011-12-09T14:59:00.001-08:00</published><updated>2011-12-09T15:19:46.898-08:00</updated><title type='text'>கிணறு வெட்ட கிழம்பிய  பூதம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;i&gt;பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகிறோம் என்ற பெயரில் நடந்தேறும் நாடகம்!&lt;/i&gt;சாத்திரி (ஒரு பேப்பர்)&lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில்&amp;nbsp; சில இணையதளங்களில்&amp;nbsp; ஒரு செய்தி வெளியாகியிருந்தது&amp;nbsp; அதவாது இறுதிப் போரின்போது காயமடைந்த&amp;nbsp; பல போராளிகளை ஒரு பெண்&amp;nbsp; வெளிநாடு அழைத்து செல்வதாக கூறி அவர்களிடம்&amp;nbsp; பெருமளவு பணத்தினை வாங்கிவிட்டு அவர்களை ஆசிய நாடு&amp;nbsp; ஒன்றில்&amp;nbsp; கைவிட்டு விட்டு&amp;nbsp; தலைமறைவாகிவிட்டார் என்கிற செய்தி புகைப்படத்துடன் வெளியாகியிருந்தது. அந்தப் பெண்ணின் படத்தைப் பார்த்ததும்&amp;nbsp; இவரை எங்கேயோ&amp;nbsp; பார்த்தமாதிரி அல்லது&amp;nbsp; அவரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் என தோன்றவே அவரைப்பற்றிய&amp;nbsp; மேலதிக தேடல்களை&amp;nbsp;&amp;nbsp; தொடங்கிவிட்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;b&gt;&amp;nbsp; வன்னிரெக்&amp;nbsp; தயாபரன் மற்றும்&amp;nbsp; உதயகலா&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-4EWQNid00gg/TuKTzfT9--I/AAAAAAAAAnc/aZWs5mAMz-Q/s1600/uthaya.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/-4EWQNid00gg/TuKTzfT9--I/AAAAAAAAAnc/aZWs5mAMz-Q/s320/uthaya.jpg" width="212" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிணறு வெட்டப் பூதம் கிழம்பியது போல&amp;nbsp; தோண்டத் தோண்ட&amp;nbsp;&amp;nbsp; தமிழ் மாணவர் அமைப்பை நடாத்திய&amp;nbsp; ரிசி என்;கிற சிவானந்தன் ரிசாந்தன் அல்லது ரிசாந்தன் சிவராசா (இதில் எந்தப்பெயர் உண்மையானது என்பது தெரியவில்லை).&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;b&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; இவர்தான் ரிசி&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-w907BG9jfpo/TuKTZKsSv8I/AAAAAAAAAnU/0rL3n2dFJAM/s1600/rashi-itso.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/-w907BG9jfpo/TuKTZKsSv8I/AAAAAAAAAnU/0rL3n2dFJAM/s320/rashi-itso.jpg" width="223" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;பிரித்தானியத் தமிழர் பேரவையின்&amp;nbsp; முக்கிய உறுப்பினராக இருந்து அண்மையில் அவ்வமைப்பிலிருந்து விலகிய&amp;nbsp; ஸ்கந்தா&amp;nbsp; என்கிற சுப்பிரமணியம் ஸ்கந்ததேவா ஆகியோரின்&amp;nbsp; தொடர்புகள் தெரியவரத் தொடங்கியது.&amp;nbsp; ஆனால் தேடலின் இறுதியில் இந்த வலைப்பின்னலை பின்நின்று இயக்குபவர் ஸ்கந்தாவே என்றும் அறிய முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஊரை அடித்து உலையில் போடும் இந்தக்கும்பலைப்பற்றி இனி கொஞ்சம் விபரமாக பார்க்கலாம். &lt;br /&gt;உதயகலா என்கிற பெண்&amp;nbsp; வன்னிப் பெருநிலம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சமயம்&amp;nbsp; அவர்களால் நடாத்தப்பட்ட வன்னி ரெக் என்கிற தொழில் நுட்பக் கல்லூரியில் படித்துள்ளார். அங்கு அவர் படிக்கசென்ற காலங்களில்&amp;nbsp; அந்த பாடசாலையின் பொறுப்பாளராக இருந்த தயாபரன் அல்லது தயாபரராஜ் என்பவரிற்குமிடையில் காதல் தொடர்பு ஏற்பட்டிருந்தது. உதயகலா ஏற்கனவே ஒரு போராளியை&amp;nbsp; திருமணமுடித்திருந்தவர். விழுப்புண் அடைந்திருந்த அவரது&amp;nbsp; போராளிக்கணவர் தமிழ்நாட்டில் மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பட்டடிருந்தார். அங்கு அவர் புலிகளின் உறுப்பினர் என அடையாளம் காணப்பட்டு&amp;nbsp; சிறைவைக்கப்பட்டிருந்தார்.&amp;nbsp;&amp;nbsp; அதற்கு பின்னர் தயாபரனுடன் தொடர்பு ஏற்படவே வன்னி ரெக்கின்&amp;nbsp; நிதியிலிருந்து&amp;nbsp; பணத்தினை மோசடி செய்த தயாபரன் உதயகலாவிடம் கொடுத்துள்ளார். இவ்விடயம் விடுதலைப்புலிகளின் நிர்வாகத்துக்கு&amp;nbsp; தெரியவரவே தயாபரன் அவர்களால் இடைநிறுத்தப்பட்டு தண்டனையும்&amp;nbsp; கொடுத்திருந்தனர். அநே நேரம் இறுதியுத்தம் தொடங்கிவிடவே இவர்கள் இருவருமாக இராணுவத்திடம் சணைடைந்து பின்னர' விடுதலையானார்கள்.&amp;nbsp; கொழும்பில் தங்கியிருந்படி முகாம்களில் அடைபட்டிருந்த&amp;nbsp; மற்றும் காயமடைந்திருந்த போராளிகளை வெளியே எடுத்து விடுவதாக&amp;nbsp; அவர்களின் உறவினர்களிடம் பெருமளவு பணத்தினை பெற்று மோசடி செய்தவர்கள் அங்கிருந்து இந்தியாவிற்கு தப்பி சென்றுவிட்டனர். தப்பிச் சென்றவர்கள் தங்களை யாரும் தேடாதிருப்பதற்காக&amp;nbsp; தயாபரன் இறந்து விட்டாரென&amp;nbsp; ஒரு செய்தியை&amp;nbsp; உதயகலா பரப்பினார். அதிலும்&amp;nbsp; பணம் சம்பாதிக்க நினைத்தவர்&amp;nbsp; சமாதான காலத்தில் வன்னிக்கு&amp;nbsp; சென்று வன்னி ரெக்கில்&amp;nbsp; தயாபரனை&amp;nbsp; சந்தித்த அனைவரது விபரங்களையும் திரட்டி அவர்களிடம் தொடர்புகொண்டு&amp;nbsp; தயாபரன் இறந்து விட்டார்&amp;nbsp; எனவே அவரது மரணச்சடங்கிற்கு பணம் வேண்டுமென கேட்டபொழுது பலர் அனுப்பியிருந்தனர். ஆனால் ஒருவர் சந்தேகப்பட்டு&amp;nbsp; அவர் இறந்ததற்கான ஆதாரம் கேட்டபொழுது&amp;nbsp; தயாபரன் கண்ணை மூடியபடி படுத்திருந்த ஒரு படத்தினை அனுப்பிருந்தார்...&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;b&gt;&amp;nbsp;&amp;nbsp; தயாபரன் இறந்தது போன்றதொரு படம் &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-DlCqIl2D5CI/TuKUjTCRgRI/AAAAAAAAAnk/JTib8wYCpXs/s1600/Thayapararajh_dead2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/-DlCqIl2D5CI/TuKUjTCRgRI/AAAAAAAAAnk/JTib8wYCpXs/s320/Thayapararajh_dead2.jpg" width="240" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது இப்படியிருக்க,&amp;nbsp; 2008ம் ஆண்டில் ரிசி என்கிற ரிசாந்தன்&amp;nbsp; இலண்டனிற்குள் மாணவர் விசாவில் நுளைகிறார். மாணவர் விசாவில் நுளைந்த ரிசியை வைத்து&amp;nbsp; ஸ்கந்தா (ITSO)&amp;nbsp; அனைத்துலக தமிழ் மாணவர் அமைப்பு என்கிற தொரு அமைப்பினை&amp;nbsp; ரிசியியையும் தனது மகளையும் இணைந்து&amp;nbsp; பதிவு செய்கிறார். (பதிவிலக்கம்: 6993075 பதிவு செய்த திகதி: 20.08.2009)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-uJPR9V5c3Ms/TuKU9acOdYI/AAAAAAAAAns/URorzqhFNVs/s1600/blREX%252BGJ0017-44349_3-05806546_Seite_1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/-uJPR9V5c3Ms/TuKU9acOdYI/AAAAAAAAAns/URorzqhFNVs/s320/blREX%252BGJ0017-44349_3-05806546_Seite_1.jpg" width="233" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;. இந்த அமைப்பு&amp;nbsp; உதவி அமைப்பு என&amp;nbsp; வெளியில் சொல்லப்பட்டாலும்&amp;nbsp;&amp;nbsp; அது வியாபார நிறுவனமாகவே பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.&amp;nbsp; அதாவது இந்த அமைப்பிற்கு கிடைக்கும் நிதியை அதன் நிர்வாக இயக்குனர்கள் பகிர்ந்து கொள்ளலாம்.&amp;nbsp; அது மட்டுமல்லாது&amp;nbsp; ஸ்கந்தாவே&amp;nbsp; ரிசியை&amp;nbsp; இங்கிலாந்தின்&amp;nbsp; தமிழ்&amp;nbsp; இளையோரமைப்பு.&amp;nbsp; தமிழ் ஊடகங்கள்.. பிரித்தானிய தமிழர் பேரவை. மற்றும் தமிழ்&amp;nbsp; வியாபாரிகள் பிரபலங்கள் என அனைவரிடமும் அறிமுகம் செய்து வைத்தார். &lt;br /&gt;இதையடுத்து&amp;nbsp; ரிசி&amp;nbsp; தாயகத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களிற்கான உதவி. வடகிழக்கு&amp;nbsp; பல்கலைக்கழக&amp;nbsp; மாணவர்களிற்கான உதவி என&amp;nbsp; தமிழ் இணையத்தளங்கள்,&amp;nbsp; ஊடகங்கள், facebook என&amp;nbsp; விளம்பரம் செய்யத் தொடங்கினார். ஸ்கந்தா - ரிசி கூட்டணி எதிர்பார்தத்தை போலவே பலர் மனமிரங்கி பணம் கொடுக்கத் தொங்கினார்கள். இவர்களிற்கு ஊரில் இருந்து&amp;nbsp; உதயகலா .கஸ்தூரி என்கிற&amp;nbsp; இருபெண்களே&amp;nbsp; பாதிக்கப்பட்டவர்களின் படங்களை&amp;nbsp; அனுப்பிவைத்துக்கொண்டிருந்தனர். இவர்கள் பாதிக்கப் பட்டவர்களின் படங்களை வைத்து&amp;nbsp; பணம் சம்பாதிக்கிறார்கள் என அறிந்த கஸ்தூரி இவர்களை விட்டு விலகிவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள்&amp;nbsp; தங்கள் ஏமாற்று வியாபாரத்தினை&amp;nbsp; விருத்தி செய்ய நினைத்து&amp;nbsp; விடுதலைப்புலிகளின் காலத்தில் முல்லைத்தீவில் பெண்கள் பராமரிப்பு&amp;nbsp; இல்லமாக இருந்த பாரதி இல்லத்தினை&amp;nbsp; மீண்டும் தாங்கள் பொறுப்பெடுத்து பாரிஜாதம் என்கிற பெயரில் இயக்கவிருப்பதாக&amp;nbsp; பிரச்சாரம் செய்து பல வியாபாரிகளிடம் பெரும்&amp;nbsp; தொகை பணத்தினை&amp;nbsp; சுருட்டியிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மறுபுறம் உதயகலாவை வைத்து&amp;nbsp; முன்னைநாள் போராளிகள்&amp;nbsp; காயமடைந்தவர்கள்&amp;nbsp; எனப்பலரையும் வெளிநாடு அழைத்து செல்வதாக அவர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு&amp;nbsp;&amp;nbsp; அவர்களை&amp;nbsp; மலேசியாவிலும். தாய்லாந்திலும் கொண்டு சென்று கைவிட்டுள்ளார்கள். அதே நேரம் காயமடைந்த போராளிகளிற்கு நல்வாழ்வளிப்பதற்கு&amp;nbsp; வெளிநாடு அழைத்து வருகிறோம் என்று வெளிநாடுகளிலும்&amp;nbsp; பணம் சேகரித்துள்ளனர். ITSO&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; அமைப்பின் நடவடிக்கை இப்படியிருக்க,&amp;nbsp; இதே ஸ்கந்தா நம்பிக்கை ஒளி (RAY OF HOPE)&amp;nbsp;&amp;nbsp; என்கிற இன்னொரு அமைப்பையும் பதிவு செய்தார். இவ்வமைப்பிலும் ஒரு இயக்குனராக தனது மனைவியையும் இணைத்துக் கொண்டார். (பதிவிலக்கம் 7192725 பதிவுத் திகதி 17.03.2010)&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-iw4pMnx4org/TuKV9iYObgI/AAAAAAAAAn8/7SKa-z47JzM/s1600/blREX%252B0L0338-30846_6-06930929_Seite_1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/-iw4pMnx4org/TuKV9iYObgI/AAAAAAAAAn8/7SKa-z47JzM/s320/blREX%252B0L0338-30846_6-06930929_Seite_1.jpg" width="240" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதன் மூலமாக லண்டனில் வாழ்ந்த பல முன்னை நாள் போராளிகளை&amp;nbsp; தொடர்புகொண்டு&amp;nbsp; அவர்களின் ஊடாக&amp;nbsp; பாதிக்கப்பட்ட முன்னைநாள் போராளிகளிற்கென&amp;nbsp; நிதி சேகரிக்கத் தொடங்கினார். சிறையிலிருந்து விடுதலையான பல போராளிகளின் தேவைகளை நேரடியாகவே வீடியோ&amp;nbsp; காட்சிகளாக படமெடுத்து அதனை&amp;nbsp; வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் போட்டுக்காட்டி பணம் சேகரிக்கப் பட்டது. ஆனால் இந்த அமைப்பினை உருவாக்கி&amp;nbsp; அதற்காக தன்னலமற்று பல முன்னைநாள் போராளிகள்&amp;nbsp; உதவிசெய்திருந்தனர். ஆனால் காலப் போக்கில் ஸ்கந்தாவின் குளறுபடி சரியான&amp;nbsp; கணக்கு வழக்கு காட்டாமை என்பவற்றால்&amp;nbsp; பலரும் அதிலிருந்து விலகிப் போய்விட்டனர். ஸ்கந்தாவும்&amp;nbsp; அவருடன் சேர்ந்து சிலரும் தொடர்ந்தும்&amp;nbsp; இந்த நம்பிக்கையொளியை&amp;nbsp; தொடர்ந்தும் இயக்குகின்றனர். (மற்றயவர்களது விபரங்கள் என்னிடமிருந்தாலும் அவர்களது நலன் கருதி அவற்றை இணைக்கவில்லை) &lt;br /&gt;&lt;br /&gt;சிறிலங்கா அரசுடன் சேரந்தியங்கும் கே.பி.&amp;nbsp; வன்னியில் தொடக்கியிருக்கும்&amp;nbsp; 'அன்பு இல்லம்' என்னும் சிறுவர் இல்லத்திற்கும்&amp;nbsp; ஸ்கந்தா அவர்கள்&amp;nbsp; ஒரு தொகை நிதியுதவி செய்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. இவரது அண்மைக்கால நடவடிக்கையாக&amp;nbsp;&amp;nbsp; இறுதி யுத்தத்தின் போது தலைவருடன் நின்று தப்பிவந்தவர்கள் எனக்கூறிக்கொண்டு&amp;nbsp; தாங்களே தலைமைச்செயலகம்&amp;nbsp; எனவே நாங்களே&amp;nbsp; மாவீரர்நாள் செய்யும் உரிமையுள்ளவர்கள் என கூறிக்கொண்டு&amp;nbsp; புதிதாக இரண்டாவது மாவீரர் நாளை ஜரோப்பா எங்கும் அரங்கேற்றியவர்களிற்கு&amp;nbsp; பின்னாலிருந்து இயக்கியது மட்டுமல்ல அவர்களிற்கு&amp;nbsp; ஆதரவு கொடுக்கும்படி அனைவரையும் ஸ்கந்தா&amp;nbsp; வேண்டியிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;இனி ITSOஅமைப்புப்பற்றிய அண்மைய தகவல்கள். வருடாவருடம் Company House&amp;nbsp; க்கு அனுப்பப்படவேண்டிய கணக்குவிபரங்கள் அனுப்பப்படாமையால். இந்த நிறுவனத்தின் பதிவினை Company House இரத்துச் செய்துள்ளது. இதற்கான இறுதி அறிவுறுத்தல் கடந்தவருடம் டிசம்பர் மாதம் 14ம் திகதி வழங்கப்பட்டிருந்தது. நிறுவனத்தை கலைத்தவிட்டதான அறிவிப்பினை இவ்வருடம் மார்ச் மாதம் 29ம் திகதி அனுப்பப்பட்டது. ஒரு கணக்காளரான ஸ்கந்தா ஏன் இந்த அமைப்பின் கணக்கு அறிக்ககையை சமர்ப்பிக்கவில்லை என்பதை அவர்தான் விளக்க வேண்டும். இதுவிடயமாக அவரைத் தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. Company House&amp;nbsp; இனால் ITSO கலைக்கப்பட்டபோதிலும் இவ்வருடம் ஒகஸ்ட் மாதம் வரை இவ்வமைப்பு செயற்பட்டு வந்துள்ளதாகத் தெரியவருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக குழப்பமடைய வைக்கும் சிலகேள்விகள்.&amp;nbsp; இதுவரை இவர்கள் வழங்கிய உதவிகளிற்கான சரியான தரவுகளோ வரவு செலவு கணக்குகளோ எங்குமே காண்பிக்கப்படதாது ஏன்? உதவிதேவைப்படும் எத்தனையோ ஆயிரம் பேர் தாயகத்தில் காத்துக்கிடக்க ..பல உதவிகளையும் பெற்றுக்கொள்ளும் வசதியுள்ள&amp;nbsp; கே.பி அவர்களின் அன்பு இல்லத்திற்கு&amp;nbsp; நிதியுதவி செய்யவேண்டிதன் அவசியம் என்ன?&amp;nbsp; ரிசி&amp;nbsp;&amp;nbsp; தன்னை மற்றையவர்களிற்கு&amp;nbsp;&amp;nbsp; அறிமுகம்&amp;nbsp; செய்யும் பொழுது&amp;nbsp; தன்னைப்பற்றிய தகவல்களை&amp;nbsp; மாற்றி மாற்றிக் கொடுப்பது ஏன்? இத்தனை&amp;nbsp;&amp;nbsp; குழப்பங்களும்&amp;nbsp; மோசடிகளும் கொண்டதொரு வலைப்பின்னலை பின்னாலிருந்து இயக்கும் BOSS யாரென்று ஆராய்ந்தால் அவர்தான்&amp;nbsp; மொட்டை BOSS&amp;nbsp;&amp;nbsp; என்கிற&amp;nbsp; ஸ்கந்தா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-LJuYcOYk4wk/TuKWNHVqloI/AAAAAAAAAoE/stFgfsBy2Pg/s1600/sk.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-LJuYcOYk4wk/TuKWNHVqloI/AAAAAAAAAoE/stFgfsBy2Pg/s1600/sk.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28994032-6383114552955935465?l=sathirir.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sathirir.blogspot.com/feeds/6383114552955935465/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28994032&amp;postID=6383114552955935465' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28994032/posts/default/6383114552955935465'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28994032/posts/default/6383114552955935465'/><link rel='alternate' type='text/html' href='http://sathirir.blogspot.com/2011/12/blog-post_09.html' title='கிணறு வெட்ட கிழம்பிய  பூதம்'/><author><name>சாத்திரி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_Sem5kfmy6G0/SXSlTz3ZpoI/AAAAAAAAAPc/qpZk13LLF-0/S220/Photo+103.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-4EWQNid00gg/TuKTzfT9--I/AAAAAAAAAnc/aZWs5mAMz-Q/s72-c/uthaya.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28994032.post-6296058481875910597</id><published>2011-12-07T23:24:00.001-08:00</published><updated>2011-12-07T23:28:25.855-08:00</updated><title type='text'>புலி போராளி என்று சொல்லி</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;புலம்பெயர் தேசமெங்கும்  வினாயகம் தலைமையில்  புதியதாக மாவீரர் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. அந்தக் குழுவில் முக்கிய நபரான ,லண்டனில் வசிக்கும் மயூரன்.(தேள்வடிவத் தாக்குதல் புகழ் வன்னியன்) தன்னை ஒரு புலிப் போராளி என கூறி மலேசியாவில வாழும்  புலிகள் அமைப்பு ஆதரவாளரான ஒரு பெண்ணை   திருமணம் செய்வதாக சொல்லி ஏமாற்றி  அவரது அரைகுறை ஆபாச படங்களை  வாங்கி நண்பர்களிடம் பகிர்ந்துள்ளார். சிங்களவன் செய்தால் ஜயோ தமிழ் தேசியம் என  கத்துபவர்கள் ?இ,வர்களே அதை செய்யலாமா??&lt;a href="http://youtu.be/X3aFq9eBRCo"&gt;&lt;/a&gt;http://youtu.be/X3aFq9eBRCo&lt;br /&gt;&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/X3aFq9eBRCo" width="560"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;a href="http://youtu.be/X3aFq9eBRCo"&gt;http://youtu.be/X3aFq9eBRCo&lt;/a&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28994032-6296058481875910597?l=sathirir.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sathirir.blogspot.com/feeds/6296058481875910597/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28994032&amp;postID=6296058481875910597' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28994032/posts/default/6296058481875910597'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28994032/posts/default/6296058481875910597'/><link rel='alternate' type='text/html' href='http://sathirir.blogspot.com/2011/12/blog-post.html' title='புலி போராளி என்று சொல்லி'/><author><name>சாத்திரி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_Sem5kfmy6G0/SXSlTz3ZpoI/AAAAAAAAAPc/qpZk13LLF-0/S220/Photo+103.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/X3aFq9eBRCo/default.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28994032.post-1586297721092415248</id><published>2011-11-27T11:11:00.001-08:00</published><updated>2011-11-27T11:15:51.790-08:00</updated><title type='text'>தலைவணங்குகிறேன் அண்ணை</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;b&gt;இன்று என் வீட்டுத் தோட்டத்திலேயே மாவீரர்களிற்காக விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினேன்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-ZklkXTVjJzM/TtKLqM80GkI/AAAAAAAAAnM/uz6yVmtyiZE/s1600/PB270148.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://2.bp.blogspot.com/-ZklkXTVjJzM/TtKLqM80GkI/AAAAAAAAAnM/uz6yVmtyiZE/s320/PB270148.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மண்ணிற்காகவும் மாவீரர்களிற்காகவும்&amp;nbsp; மரணித்த தலைவனிற்றும் ஆயிரமாயிரம் மாவீர்களிற்கும்.மக்களிற்கும் அஞ்சலிகள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைய காலத்தில்&lt;br /&gt;அனைவரிற்கும் தம்பி&lt;br /&gt;அடுத்து வந்தவர்களிற்கெல்லாம்&lt;br /&gt;அண்ணன்.&lt;br /&gt;அன்பான  கணவன்&lt;br /&gt;அற்புதமான தந்தை&lt;br /&gt;அலையாய்  எழுந்த தமிழினத்திற்கு&lt;br /&gt;தலைவன்.&lt;br /&gt;தன்மானத்தை விற்றவர்களின்&lt;br /&gt;தலை வலி&lt;br /&gt;எதிரிக்கு எட்டாத சூரியன்&lt;br /&gt;சுற்றியிருந்த  சுயநலக்கூட்டத்திற்கு&lt;br /&gt;புகழ்பாடும் கடவுள்.&lt;br /&gt;தமிழினத்தின்&lt;br /&gt;குறியீடு&lt;br /&gt;தலைவணங்குகிறேன்&lt;br /&gt;அண்ணை          &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28994032-1586297721092415248?l=sathirir.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sathirir.blogspot.com/feeds/1586297721092415248/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28994032&amp;postID=1586297721092415248' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28994032/posts/default/1586297721092415248'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28994032/posts/default/1586297721092415248'/><link rel='alternate' type='text/html' href='http://sathirir.blogspot.com/2011/11/blog-post_27.html' title='தலைவணங்குகிறேன் அண்ணை'/><author><name>சாத்திரி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_Sem5kfmy6G0/SXSlTz3ZpoI/AAAAAAAAAPc/qpZk13LLF-0/S220/Photo+103.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-ZklkXTVjJzM/TtKLqM80GkI/AAAAAAAAAnM/uz6yVmtyiZE/s72-c/PB270148.JPG' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28994032.post-7168414491221440307</id><published>2011-11-20T11:51:00.001-08:00</published><updated>2011-11-20T12:06:15.097-08:00</updated><title type='text'>கடிகாரம் ஓடுமுன் ஓடு</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;ஊரிலை சின்னவயிசிலை பள்ளிக்கூடத்திலை பாரதிதாசனின்ரை தலைவாரிப் பூச்சூடி உன்னை பாடசாலைக்கு போவென்று சொன்னாள் உன் அன்னை எண்டொரு பாட்டுச் சொல்லித் தருவினம். அது உண்மையிலை பெண்குழந்தையளிற்கான பாட்டு அதையேன் பெடியளிற்கும் படிப்பிச்சவையெண்டு தெரியாது ??..ஆனால் அதிலை ஒரு வரி வரும் கடிகாரம் ஓடுமுன் ஓடு எண்டு. அதற்கான அர்த்தம் அண்டைக்கு எனக்கு உண்மையா விளங்கேல்லை ஆனால் வெளிநாடு வந்தால் பிறகுதான் அதன் உண்மையான அர்த்தம் புரிந்ததுஇங்கு தமிழாக்களின்ரை நிகழ்வுகளைத் தவிர மற்றையபடி எல்லாமே நேரம்..நேரம்.. நேரம்.. நேரத்தை பிடிக்க ஓடிக்கொண்டிருக்கின்றோம்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஊரிலையெண்டால் வீடுகளிலை வரவேற்பறையிலை மட்டும் ஒரு மணிக்கூடு இருக்கும்.அப்பிடி எங்கை வீட்டிலையும் ஊரிலை ஒரு பெரிய மணிக்கூடு ஒண்டு வரவேற்பறையிலை இருந்தது பாக்கிறதுக்கு ஒரு அலுமாரி மாதிரி இருக்கும். ஒரு ஆள்அளவு உயரம். மேலை மணிக்கூடு கீழை தோசைத்தட்டு மாதிரி ஒரு வட்டம் ஆடிக்கொண்டிருக்கும். ஒவ்வொரு நாளும் அதுக்கு சாவி குடுக்கவேணும் நான் சின்னவயசிலை ஒரு கதிரை வைச்சு ஓறித்தான் அதுக்கு சாவி குடுக்கிறனான். ஒவ்வொரு மணித்தியாலமும் அது அடிக்கிற சத்தம் கோயில் மணி அடிச்சமாதிரி இருக்கும். அதை முன்னேறி பாச்சல் நடவடிக்கை நேரம் சந்திரிக்கா அனுப்பின குரங்குகள் உடைச்சு போட்டுதுகள் எண்டு அம்மா கவலையோடை சொன்னா..இஞ்சை வெளிநாட்டிலை பாத்தமெண்டால் கழிவறையிலை குளியலறையிலை படுக்கையறையிலை வரவேற்பறையிலை எல்லா இடமும் மணிக்கூடுதான். பத்தாததுக்கு கைத்தொலைபேசியிலை கணணியிலை பாக்கிற ரிவியிலை எண்டு நேரம் ஓடிக்கொண்டிருக்கும் காத்தாலை அலாரச்சத்தத்தோடை எழும்பி கழிவறைக்கு போறத்திலையிருந்து பல்லுத்தீட்டிறது குளிக்கிறது (இதுகள் செய்யாதவைக்கு பிரச்சனையில்லை ) உடுப்பு போடுறது எண்டு தொடங்கி வேலைக்குப் போய் வந்துஇரவு ரி.வி பாக்கிறது. குடும்ப காரர் எண்டால் பிள்ளையளோடை குடும்பத்தோடை மினக்கெடுறது. ஏன் கணவன் மனைவி உறவு கூட எல்லாத்தையுமே நேரம் பாத்துப் பாத்துத்தான் செய்யவேண்டியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் இப்பிடித்தான் நான் தண்ணியடிச்சிட்டு நல்லாயிருக்கெண்டு பொரிச்ச மிளகாயை கனக்க அள்ளித் திண்டிட்டன் அடுத்தநாள் காத்தலை கழிவறைக்குள்ளை அஞ்சு நிமிசம் கூடுதலாயிருக்கவேண்டி வந்திட்டு பிறகு அந் அஞ்சு நிமிசத்தை குளிக்கேக்குள்ளை அவசர அவசரமாய் சவுக்காரம் போடாமல் குளிச்சு நிவர்த்தி பண்ணிட்டன். ஜரோப்பாவிலை ஒருநாள் ஞாயிறு மட்டும் அலாரசத்தம் இல்லாமல் நிம்மதியாய் விரும்பின நேரத்திற்கு எழும்பி விரும்பினதை செய்யலாம்.அனால் இந்த லண்டனிலை இருக்கிறவையள் போன பிறப்பிலை பாவம் செய்த பிறவியள். அதுகளிற்கு ஞாயிறும் நிம்மதியில்லை கிழைமையிலைஏழுநாளும் ஓட்டம்மதான். இப்பிடித்தான் ஒருக்கால் லண்டனிலை உள்ள என்ரை சினேகிதன் ஒருத்தனுக்கு பிறந்தநாள் அவனுக்கு வாழ்த்தும் சொல்லிட்டு. கொஞ்சம் ஊர்கதையளும் கதைப்பம் எண்டு இரவு போனடிச்சன் . போனை எடுத்தவன் மச்சான் ஓடிக்கொண்டிருக்கிறன் கொஞ்சம் பொறுத்து எடு எண்டான். கார் ஓடிக்கொண்டிருக்கிறான் எண்டு விளங்கிச்சிது. கொஞ்சத்தாலை திருப்ப அடிச்சன் அவனின்ரை மனிசி எடுத்து அவர்இப்பதான் வந்தவர் குளிக்கிறார் கொஞ்சத்தாலை அடியுங்கோ எண்டா. திரும்ப ஒரு அரை மணித்தியாலம் கழிச்சு எடுத்தன். அவன் போனை எடுத்து மச்சான் என்ன அலு....வ்......வ்.....வ்...வல் எண்டான். சாப்பிட்டுக்கொண்டிருந்தான். எண்டு விளங்கிச்சுது அவசரமில்லை ஆறுதலாய் அடிக்கிறன் எண்டிட்டு நான் நித்திரையாய் போயிட்டன்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு அடுத்தநாள் அவனுக்கு வாழ்த்தாவது எஸ். எம். எஸ் அனுப்புவம் எண்டு நினைச்சு உனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் எண்டதை முழுசா எழுத எனக்கு நேரமில்லை.வேலைக்கு போற நேரம் கார் சிவப்பு சிக்னல்லை நிக்கிற நேரமாய் பாத்து அவசரமாய் W...U... H....B.....DAY எண்டு வாழ்த்து சொல்லி ஒரு எஸ் எம்.எஸ் சை போட்டிட்டு வேலைக்குபோயிட்டன் . அதை அவன் வாசிச்சு விளங்கி T.K.S எண்டு பதிலும் போட்டிருந்தான்.இது இப்பிடி அண்டாட வாழ்க்கை போய்க்கொண்டிருக்க என்னை தினமும் நித்திரையாலை எழுப்பிற என்ரை அலார மணிக்கூடு ஒருநாள் பழுதாய் போயிட்டுது. பதினைஞ்சு வருசத்துக்கு முதல் பாரிசிலை ஒரு அறையிலை நாலு தனிக்கட்டையள் (பெடியள்) சேந்து கூட்டுக்குடும்பமாய் இருக்கேக்குள்ளை வாங்கினது. பிறகு ஒவ்வொருத்தராய் கலியணம் கட்டி தனிக்குடித்தனம் போய் அறையிலை இருந்த ஒவ்வொரு பொருளாய் பாகப் பிரிவினை செய்யேக்குள்ளை நான் இந்த அலார மணிக்கூட்டை தூக்கிக் கொண்டு வந்திட்டன். காரணம் இது நான் தான் தேடி வாங்கினனான். ஓடுற டிக்..டிக்.. சத்தம் கேக்காது மணிக்கூடு ஓடுற சத்தம் கேட்டால் எனக்கு நித்திரை வாராது எரிச்சலதான் வரும் ஆனால் அது அலாரம் அடிக்கிற சத்தம் அந்த ஏரியாவுக்கே கேட்கும்.பதினைஞ்சு வருசம் ஓடி ஓய்ந்து போன மணிக்கூட்டை திருத்தலாம் எண்டு நான் கடை தேடி அலைய மனிசி சொல்லிச்சிது உந்த பழசை கொண்டு அலையாதையுங்கே இப்பதானே விதம் விதமாய் புது எலெக்றோனிக் அலாம் மணிக்கூடுகள் வாங்கலாம். சத்தமும் வராது உதை குப்பையிலை எறியுங்கோ நான் புதுசு வாங்கியாறன் எண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;பழசுகளை எறியிறதெண்டால் உன்னையும் தான் எறியவேணும் எண்டு முணு முணுத்தபடி கவலையோடை அதை குப்பை வாளிக்குள்ளை போட்டிட்டு நான் மணிக்கூடு வாங்க வெளிக்கிட திரும்பவும் மனிசின்ரை சத்தம் ''எங்கை மணிக்கூடு வாங்கவே போறியள் நீங்கள் போனால் நிண்டு நிதானிச்சு வடிவாய் பாத்து ஒண்டையும் வாங்கமாட்டியள் கையிலை அம்பிட்டதை தூக்கிக் கொண்டு வந்துடுவியள் .பக்கத்திலை சீனா சாமான் கடையொண்டு இருக்கு நான் போய் நல்லதாய் பாத்து வாங்கியாறன்'' எண்டாள். எடியேய் நிண்டு நிதானிச்சு எல்லாத்தையும் செய்யிறதெண்டால் உன்னையுமல்லோ செய்திருக்கமாட்டன் எண்டு சத்தமாவே சொன்னன். மசினி முறைச்சு பாத்திட்டு போயிட்டுது..போய் சீனாக்கடையிலை எலெக்றோனிக் மணிக்கூடு ஒண்டை வாங்கியந்து தந்திட்டு இந்தாங்கோ எதுவும் உருப்படியாய் செய்யத் தெரியாது நேரத்தை யாவதுஒழுங்கா பிடிச்சு விடுங்கோ என்று,விட்டு போய்விட்டாள் எனக்கென்னவோ அது உள் குத்துமாதிரி தெரிஞ்சது. ஆனாலும் சரி எதையோ நான் ஒழுங்கா பிடிச்சு விடேல்லை போலை கிடக்கு எண்டு நினைச்சபடி பேசாமல் மணிக்கூட்டு பெட்டியை பிரிச்சன் . மணிக்கூடு பாவிப்பது எப்படி எண்டொரு விளக்கக் கடுதாசி இருந்திச்சிது. ஊரிலை முத்தத்திலை விழுகிற நிழலை வைச்சே எத்தனை மணி எண்டு சரியா சொல்லுற எங்களுக்கு இவங்கள் மணிக்கூடு எப்பிடி பாவிக்கிறதெண்டு சொல்லித்தாறாங்கள் எண்டு கொவத்திலை அதை எடுத்து முதல் வேலையா கிழிச்சு குப்பையிலை போட்டிட்டு வந்து மணிக்கூட்டை எடுத்து கறண்டை குடுத்தன். மணிக்கூடு 88 மணி88 நிமிசம் எண்டு காட்டிச்சிது. சீனாக்கடைக்காரன் மனிசியை பேய்க்காட்டிப் போட்டான் எண்டு விளங்கிச்சிது. மனிசிட்டை எடியேய் பாத்தியோ அப்பவும் சொன்னனான் சீனாக்கடைக்காரனிட்டை போகாதையெண்டு அவன் உன்னை சுத்திப்போட்டான் வந்துபார் மணிக்கூடு 88:88 எண்டு காட்டுது எண்டன் .ஜயோ அது எலெக்றோணிக் மணிக்கூடு அப்பிடித்தான் காட்டும் அதுக்குத்தான் நேரத்தை பிடிச்சு விடச்சொன்னனான் எண்டு பதில் வந்தது .&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரணமாய் உலகம் முழுக்க 24 மணித்தியாலமும் 60 நிமிசமும்தானே அதெப்பிடி சீனாக்காரனின்ரை மணிக்கூடு மட்டும் கூடுதலாய் 88.88 நிமிசம் காட்டும் .மணிக்கூடு எப்பிடி பாக்கிறதெண்ட செய்முறை கடிதாசியைவேறை கிழிச்செறிஞ்சு போட்டன் மணிக்கூட்டிலைவேறை நாலைஞ்சு பட்டின் கிடக்கு எப்பிடி நேரம் பிடிக்கிறதெண்டு புலம்பிக்கொண்டிருக்க அதுவரைக்கும் எங்கடை சண்டையை கண்டும் காணாதபடி கணணியிலை விழையாடிக்கொண்டிருந்த மகள் எழும்பி வந்து என்னட்டை மணிக்கூட்டை பிடுங்கி நேரத்தை பிடிச்சு விட்டிட்டு அப்பா காத்தாலை எத்தனை மணிக்கு அலாம் வேணுமெண்டாள். ஆறு மணிக்கெண்டன். அலார சத்தம் மியூசிக் வேணுமா இல்லை றேடியோ ஏதாவது வேணுமா எண்டாள்..ஓ அதெல்லாம் இருக்கா சரி காலங்காத்தாலை எழும்பேக்குள்ளை எங்களை சுத்தி என்ன நடக்கிதெண்டு அறியிறது நல்லது தானே அதாலை 24 மணி நேர செய்தி றேடியோவிலை விடு எண்டன்.எல்லாம் சரி செய்திட்டு இனி இரண்டு பேரும் சத்தம் போடக்கூடாது எண்டிட்டு போயிட்டாள்.அடுத்தநாள் காலை ஆறு மணிக்கு அலாரம் றேடியோ வேலை செய்தது..துருக்கியில் நிலநடுக்கம்.பலநூறுபேர் பலி ஆயிரக்கணக்கானோரை காணவில்லை. தாய்லாந்தில் மழைவெள்ளம். இதுவரை இருநூறுபேர் பலி. ஆப்கானிஸ்தானில் தற்கொலைக் குண்டு வெடிப்பு முப்பது பேர் பலி இருபது பேர் காயம் எண்டு தொடர .. இதென்ன காலங்காத்தாலை ஒரே இழவு எண்டு றேடியோ மணிக்கூட்டு வயரை இழுத்து பிடிங்கிப் போட்டு வேலைக்கு தயாரானேன்.கடைசியாய் ஒரு கேள்வி. சீனாக்காரனின்ரை எலெக்றோணிக் மணிக்கூடு ஏன் அடிக்கடி 88:88 நிமிசம் காட்டுதெண்டு யாருக்காவது தெரியுமோ&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28994032-7168414491221440307?l=sathirir.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sathirir.blogspot.com/feeds/7168414491221440307/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28994032&amp;postID=7168414491221440307' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28994032/posts/default/7168414491221440307'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28994032/posts/default/7168414491221440307'/><link rel='alternate' type='text/html' href='http://sathirir.blogspot.com/2011/11/blog-post.html' title='கடிகாரம் ஓடுமுன் ஓடு'/><author><name>சாத்திரி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_Sem5kfmy6G0/SXSlTz3ZpoI/AAAAAAAAAPc/qpZk13LLF-0/S220/Photo+103.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28994032.post-8874247442753173227</id><published>2011-11-11T01:47:00.000-08:00</published><updated>2011-11-11T01:50:19.243-08:00</updated><title type='text'>அமிர்தராஸ் பொற்கோயிலும் சுதுமலை அம்மன் கோயிலும்.2</title><content type='html'>கடந்த ஒரு பேப்பரி இந்தப் பதிவினை ஒரு நிஞாபகப்பதிவாகவே மேலோட்டமாக எழுதியிருந்தேன். அதனை படித்த பலரும் இந்திய இராணுவகாலத்தில் தெய்வேந்திர சர்மா தலைமையில் நடந்த hடுகொலைகளைகளை ஏன் எழுதவில்லையென்றும் இனி வருங்காலத்தில் யாரும் புத்தகங்களையோ பதிவுகளையோ தேடி எடுத்து மினக்கெட்டு படிக்கப்பது அரிழதாகவே இருக்கும் எனவே அவற்றை கணணி பதிவுகளாக்குவது அவசியம் இன்று இல்லாவிட்டாலும் எதிர்வரும் காலத்தில் எமது மக்கள் எதிர்கொண்ட அழிவுகளை எமது சந்ததி அறியவேண்டிய தேவை உள்ளதால் அவற்றை முடிச்தளவு கட்டாயம் எழுதும் படி கேட்டிருந்தனர் எனவேதான் அதன் தொடராக இந்தப் பதிவினை எழுதுகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய இராணுவம் சுதுமலையம்மன் கோயிலை பெரும் எதிர் பார்ப்புடன் முற்றுகையிட்டு அங்கு புலிகள் இல்லாத காரணத்தால் ஆத்திரமடைந்து போயிருந்தனர். ஆனால் புலிகள் நவாலி. சண்டிலிப்பாய் அளவெட்டி மூளாய் அராலி மற்றும் வடலியடைப்பு பகுதிகளில் சிறு சிறு குழுக்களாக பிரிந்து தாக்குதல்களை தொடுத்துக்கொண்டிருந்தார்கள். அது இந்திய இராணுவத்திற்கு பெரும் இழப்பையும் கொடுத்தது. கெரில்லாக்களிற்கு பொதுவாக காடுகளும் மலைகளுமே பதுங்கும் பாதுகாப்பரணாக விளங்குவது வழைமை. ஆனால் இவையிரண்டுமே இல்லாத யாழ்ப்பாணக்குடாநாட்டில் புலிகளிற்கு பாதுகாப்பாக விழங்கியது யாழ்ப்பாணத்தின் ஒழுங்கையமைப்புக்கள்தான்.. இந்திய இராணுவம் தங்கள் படை நடவடிக்கைக்கு ஏதுவாக இலங்கையரசின் சுற்றுலாத் துறையினரால் 80 ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வரைபடத்தைதே வைத்துக்கொண்டு தாக்குதல்களை வழிநடத்தினார்கள். அதில் யாழ் குடாவின் ஒழுங்கைகள் எதுவுமே வரையப்பட்டிருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகள் ஒழுங்கைகளால் வந்து தாக்கியது அவர்களிற்கு பெரும் தலையிடியை கொடுத்தது. மருதனாமடம் சந்தியிலிருந்து முன்னேறி உடுவில் அரிசி ஆலையில் முகாம் அமைத்திருந்த சர்மா புலிகளின் நடமாட்டத்தை அறிய ஜேர் பரமேஸ்வரன் என்கிற தமிழ் அதிகாரி ஒருவரின் கீழ் ஒரு பட்டாலியன் இராணுவத்தை தயார்ப்படுத்தி ஊர்பொதுமக்களிடம் விபரம் கேட்டறிந்து புலிகளை தேடித்தாக்கியழிக்கும்படி கட்டளையிட்டிருந்தார். அதன்படி பரமேஸ்வரனும் சண்டிலிப்பாய் பகுதியில் பெருமளவில் நின்றிருந்த புலிகளை தாக்குவதற்காக உடுவில் சண்டிலிப்பாய் டச்சுவீதி ஊடாக நகர்வை மேற்கொண்டார். அவரது வரைபத்தில் டச்சுவீதியில் மானிப்பாயிலிருந்து குறுக்காக கந்தரோடை செல்லும் இரண்டு சிறிய வீதிகள் இல்லை அவரது படைகள் சண்டிலிப்பாயை அண்மித்ததும் கந்தரோடையிலிருந்தும் மானிப்பாய் கட்டுடைப் பகுதியிலிருந்தும் புலிகள் இடையே புகுந்து தாக்கியதில் பரமேஸவரன் உட்பட நாற்பதிற்கு மேற்பட்ட இந்திய இராணுவம் இறந்து போனார்கள்.புலிகளின் முதலாவது ஊடறுப்பு தாக்குலாகவும்இதை எடுக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் கோபமடைந்த சர்மா பொதுமக்களை கேடயங்களாக்கியபடி முன்னேற்றத்தை தொடர்ந்தார். அதன்படி முன்னேறி முக்கிய இடங்களை அடைந்ததும் பிடித்து வந்தவர்களை ஓடச்சொல்லிவிட்டு பின்னாலிருந்து சுட்டுவிடுவார்கள். பெரும்பாலனவர்கள் இறந்து போக சிலர் மட்டும் தப்பியோடிய சம்பவங்கள் ஏராளம்.அது மட்டுமில்லாமல் புலிகளின் இலக்கு என்றோ அல்லது புலிகள் தாக்குதல்கள் நடத்தாமலேயே பல இடங்களில் பொதுமக்களை படுகொலை செய்தார்கள் அதில் சில.&lt;br /&gt;&lt;br /&gt;21.10.1987 யாழ் வைத்தியசாலைப் படுகொலைகள் சுமார் 60 பொதுமக்கள்.&lt;br /&gt;10.10.1987 பிரம்படி (கொக்குவில்)படுகொலைகள் சுமார் 40 பொதுமக்கள். இவர்களை ராங்கிகளாலும் ஏற்றிக் கொல்லப்பட்டார்கள்.&lt;br /&gt;10.10.1987 கொக்குவில் இந்துக்கல்லூரி படுகொலைகள் சுமார் 35 பொதுமக்கள்.&lt;br /&gt;26.10.1987 அளவெட்டி இந்து ஆச்சிரம படுகொலைகள் சுமார் 17 பொதுமக்கள்.&lt;br /&gt;27.10.87 சாவகச்சேரி படுகொலைகள் சுமார் 67 பொதுமக்கள்.&lt;br /&gt;19.01.1989 வல்வைமற்றும் ஊறணி வைத்தியசாலைப் படுகொலைகள்.சுமார் 65 பொதுமக்கள்&lt;br /&gt;மற்றும் கிழக்கு மாகாணத்தில் பெருமளவான முஸ்லீம்கள்&lt;br /&gt;இப்படி பல படுகொலைகளை நடாத்தி முடித்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலே நான் குறிப்பிட்டவையனைத்தும் முறைப்படி ஆவணப்படுத்தபட்டவைகளே .&lt;br /&gt;இவை இப்படி நடந்துகொண்டிருக்கமற்றப்பபக்கம் எங்கடை சனத்தின்ரை கூத்துக்கள்; தொடர்ச்சியான ஊரடங்குச்சட்டத்தால் கடைகள் எதுவும் திறக்காமல் பொதுமக்களிற்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது புலிகள் முதலில் சங்கக்கடைகளை உடைத்து உணவை எடுக்கவிட்டிருந்தனர். மானிப்பாய் சங்கக் கடையையு உடைத்து சாமாகளை அள்ளிக்ககொண்டு போனவர்வகள் அங்கை அடிக்கி வைச்சிருந்த வெறும் சாக்குகளையும் அள்ளிக்கொண்டு போனார்கள். கடைசியாய் வந்த இருவர் பொருள் ஏதும் இல்லாததால் ஒருத்தர் தராசை கழட்ட மற்றவன் படிக்கல்லை தூக்கிக் கொண்டுஓடினான். படிக்கல்லை தந்திட்டுபோடா எண்டு தராசை கழட்டினவர் கலைக்க படிக்கல்லு பாரம் தாங்காமல் அவன் போட்டிட்டு ஓடிப்போயிட்டான். தாராசோடை படிக்கல்லுகளும் கிடைச்ச சந்தோசத்திலை அவர் நடந்து போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே மாதிரி மானிப்பாயிலை பிரபல றோஸ் பிறாண்ட் ரொபி புளுட்டோ கொம்பனி இருந்தது அங்கை தார் பரல்கள் மாதிரி பெரிய பரல்களிலை சீனிப்பாணி அடுக்கி வைச்சிருந்தவங்கள் சனங்கள் பரல்களை உருட்டிக்கொண்டு போனார்கள். கட்டாயம் அவைக்கு சீனி வருத்தம் வந்திருக்கும்.. மிச்ச பரல்களை இந்தியனாமி காவலரணிலை பாதுகாப்பிற்கு அடுக்கி வைச்சிருந்தாங்கள். அதே மாதிரி சண்டிலிப்பாயிலை வடிசாராய நிலையம் ஒண்டு இருந்தது பனங்கள்ளை காச்சி வடிச்சு சாராயம் தயாரிப்பினம். பாதி பதப்படுத்தப் பட்ட கள்ளை தண்ணீர் ராங்குகள் மாதிரி உயரத்திலை கட்டியிருந்த பல ராங்குகளிலை சேமிச்சு வைச்சிருந்தவை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியனாமி அடிச்ச செல் ஒண்டு அங்கையிருந்த ராங்கிலை பட்டு அது உடைஞ்சு புளிச்ச கள்ளு ஒழுகிக் கொண்டிருந்தது அதை பலபேர் ஓடிப்போய் வாளி குடம் எண்டு அம்பிட்டதிலை ஏந்திக் கொண்டு ஓட எதுவுமே கிடைக்காதவை ராங்கிற்றக கீழை போய் அண்ணாந்து ஆவெண்டு வாயை திறந்து குடிச்சுக் கொண்டிருந்திச்சினம். அப்பிடி குடிச்ச சிலர் கோமாவாகி அங்கையே விழுந்து கிடக்க பிறகு அங்கை வந்த இந்தியனாமி போட்டுத் தள்ளிட்டு போயிட்டான். &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;br /&gt;மேலதிக சில குறிப்புக்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய இராணுவத்துடனான மோதல் பற்றி . பலர் கேட்டிருப்பதால் கொஞ்சம் விரிவாகவே எழுதுகிறேன். அதில் முதலாவது இராஜீவ் காந்தி கொல்லப் பட்டிருக்காவிட்டாலும் புலிகளின் தலைமை இந்தியா தருணம் கிடைத்த சந்தர்ப்பத்தில் தீர்துவிடுவதே கொள்கையாக இயங்கியது. பின்னர் இராஜீவ் கொலைநடந்து விட்டிருந்ததால் அது முக்கிய காரணமாக்கப் பட்டது. இந்தியாவுடனான மோதல்கள் தொடங்கியதற்கான காரணங்களை இங்கு தருகிறேன்.&lt;br /&gt;இலங்கை ஒப்பிரேசன் லிபரேசனை 87 தொடங்குகின்றது; அன்றைய காலத்தில் புலிகளிடம் போதிய ஆயுத ஆள்பலம் இல்லாததால் பின்வாங்கியிருந்தாலும் மில்லரின் தற்கொலை தாக்குதலில் கலங்கிபோனது இலங்கை மட்டுமல்ல இந்தியாவும்தான். இங்கு வடமராச்சியை விட்டு புலிகள்பின் வாங்கிய பொழுதே&lt;br /&gt;அதன் நரிவிழையாட்டு தொடங்குகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;1)புலிகளிடம் தொடர்புகொண்டு புலிகளிற்கு தேவையான நவீன ஆயுதங்களை தருவதாகவும் புலிகளின் தலைவரின் கடிதமாக அது உறுதிப்படுத்தப் பட்டிருக்கவேண்டும் என கேட்கின்றனர். அப்படி புலிகள் கொடுத்த பட்டியலை இலங்கையரசிடம் காட்டி புலிகளிற்கு இந்த ஆயுதங்களை கொடுக்கப் போகின்றோம் என மிரட்டுகின்றனர். ஆனால் புலிகளிற்கு ஆயுதம் கொடுக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;2)ஒப்பந்தத்தின் பின்னர் அவற்றை துரிதமாக நடைமுறைப்படுத்தும்படி 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து திலீபனின் உண்ணாவிரதம். அவனும் இறந்து போகிறான் எந்த முன்னேற்றமும் இல்லை&lt;br /&gt;&lt;br /&gt;3)ஆனால் புலிகள் தொடர்ந்தும் வடகிழக்கில் வேறு உறுப்பினர்களை தொடர்ந்தும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடாத்தியபடியே இருந்தனர். அப்பொழுதுதான் மட்டுவின் பூபதியம்மாள இறந்து போகிறார். அதனை டிக்சித்தின் கவனத்திற்கு புலிகள் கொண்டு சென்றபொழுது டிக்சித் சொன்னது கொஞ்சநாளில் தானாக செத்திருக்கவேண்டிய கிழவி கொஞ்சம் முதலேயே போயிட்டுது;&lt;br /&gt;&lt;br /&gt;4)குமரப்பா புலேந்திரன் உட்பட பதினொரு புலிகள் இயக்கத்தவர்கள் ஆயுதங்களோ சயனைற்றோ இன்றி ஒப்பந்தத்திற்கு மாறாக இலங்கையரசால் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தபொழுது இந்தியாவால் அதனை தடுத்து நிறுத்தி அவர்களை விடுவித்திருக்க முடிந்திருக்கும். அதனையும் கண்டும் காணாமல் விட்டுவிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;5)இதற்கு பின்னரும் புலிகளின் இந்தியாவுடன் மோதும் எண்ணத்துடன் இருக்கவில்லை. ஒக்ரோபர் 9 ந்திகதி டெல்லியும் கொழும்பிற்கும் நடந்த தகவல் பரிமாற்றத்தில் பிரபாகரனை கைது செய்வது என்று நடந்த உரையாடல் புலிகளினால் ஒட்டுக்கேட்கபட்டதோடு மட்டுமல்ல புலிகளோடு நெருக்கமாக இருந்த இந்திய இராணுவ அதிகாரி ஒருத்தரும் புலிகளிடம் இதனை உறுதிப்படுத்தியிருந்தார். அன்றிரவே 9 மணியளவில் பிறவுண் வீதியில் பிரபாகரன் தங்கிருந்ததாக கருதப்பட்ட வீட்டினுள் இந்திய அதிரடிப்படையினர் புகுந்து சுற்றிவளைத்து தேடினார்கள் அங்கு யாரும் இருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;6)10 ம் திகதி காலை மராட்டிய ரெஜிமெண்ட் யாழ்ப்பாணத்தின் பிரபல பிராந்திய பத்திரிகை நிலையங்களை குண்டு வைத்து தகர்த்ததோடு அதன் ஊழியர்களையும் கைது செய்து கோட்டையில் சிறை வைக்கின்றனர். அதே நேரம் வேறு புலிஉறுப்பினர்களும் கைது செய்யப் படுகின்றனர்.&lt;br /&gt;அன்றே இலங்கையில் புலிகளிற்கெதிரான நடவடிக்கைகளை இந்தியப் படை ஆரம்பித்துவிட்டதாக இந்திய வானொலி மலைச்செய்தியின் பின்னர் அதிகார பூர்வமாக அறிவிக்கின்றது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;7)நவம்பர் 12 ந்திகதி இரவு இலங்கையின் இந்திய கட்டளைத் தளபதிக்கே தெரியாமல் இந்திய உளவுப் பிரிவினர்.இந்தியாவின் குவாலியர் (மத்தியப் பிரதேசம்) இராணுவ அதிரடிப்படை முகாமிலிருந்து 70 பேரடங்கிய பாரா கொமாண்டோ படையணி ஒன்றை கொண்டுவந்து பிறவுண் வீதியும் திருநெல்வேலி வீதியும் இடத்திற்கு அருகில் உள்ள கொக்குவில் கிராம சபைக்கு அருகில் நற்ளிரவு 1 மணியளவில் தரையிறக்காப்பட்டு தயார் நிலையில் இருக்கின்றனர். அதன் பின்னர் அதிகாலையளவில் இன்னொரு&lt;br /&gt;படையணி சீக்கிய காலாட்படையின் 13 வது சிறப்பு டையினர் 30 பேர் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கருகில் இறக்கப்படுகின்றனர். இவர்களிற்கு றோ அதிகாரிகள் இட்ட கட்டளை பிரபாகனை முடிந்தால் கைது செய்யுங்கள் அல்லது சுட்டுக்கொன்று விடுங்கள் என்றதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இவை இப்படி நடந்து கொண்டிருக்க பிரபாகரன் இரக்கின்ற வீடு என இந்தியா குறிவைத்த வீட்டில் அவர் இருந்திருக்கவில்லை அங்கு அவர் இந்திய அதிகாரிகளை சந்திப்பதை மட்டுமே நடத்தியிருந்தார். ஆனால் அவர் உடுவில் பகுதியில் ஒரு வீட்டிலேயே தங்கிருந்தார். ஆனால் இந்திய இராணுவம் இறங்கிய பகுதியில் மாத்தையா மற்றும் அன்ரன் வாத்தி ஆகியோரது முகாம்கள் இருந்தது முதலாவது கெலி அதிகாலை 1 மணிக்கு இறங்கியதுமே அவர்கள் ஊசாராகி யாழ் பல்கலைகழக கட்டிடம் மற்றும் மரங்களில் நிலையெடுத்து விட்டிருந்தனர். அதிகாலை இரண்டாவது சீக்கிய காலாட்படையணி இறங்க தொடங்கியதும் தாக்குதலை நடத்தத் தொங்கியிருந்தனர். தரையிறங்கிய 30 பேரில் 29 பேர் இந்து போக ஒருவர் கைது செய்யப் பட்டார். மறுபுறம். தரையிறங்கிய 70 பேரில் 40 பேர் இறந்து போக யாழ் கோட்டையிலிருந்து இன்னொரு மீட்பு அணி வந்து மற்றையவர்களை மீட்டுக்கொண்டு போனார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பொழுது தான் நான் முன்னர் ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தது போல் 10 ம் திகதி பிரபாகரனும் மற்றையவர்களும் கைது செய்யப்படலாம் என்பது உறுதியாகி விட்டிருந்தது அதன் போதே பிரபாகரன் அனைவரையும் அழைத்து கேட்டிருந்தார் கைதாகி அவமானப்பட்டு சிறையில் அடிவாங்கி சாவதா?? அல்லது அகப்படாமல் சயனைற் அடிப்பதா??? அல்லது போராளிக்கேயுரிய போர்குணத்துடன் இறுதி வரை போராடிச்சாவதா??நான் போராடிச்சாவதென முடிவெடுத்துவிட்டேன். நீங்கள் உங்கள் முடிவுகளையும் சொல்லாம். மற்றையவர்கள் போய்விடலாம் எண்டார். அப்பொழுதுதான் சாகும்வரை போடுவதென முடிவெடுக்கப்பட்டது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28994032-8874247442753173227?l=sathirir.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sathirir.blogspot.com/feeds/8874247442753173227/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28994032&amp;postID=8874247442753173227' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28994032/posts/default/8874247442753173227'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28994032/posts/default/8874247442753173227'/><link rel='alternate' type='text/html' href='http://sathirir.blogspot.com/2011/11/2.html' title='அமிர்தராஸ் பொற்கோயிலும் சுதுமலை அம்மன் கோயிலும்.2'/><author><name>சாத்திரி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_Sem5kfmy6G0/SXSlTz3ZpoI/AAAAAAAAAPc/qpZk13LLF-0/S220/Photo+103.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28994032.post-2473672602606131799</id><published>2011-10-22T11:41:00.001-07:00</published><updated>2011-10-22T11:41:50.630-07:00</updated><title type='text'>அமிர்தராஸ் பொற்கோயிலும் சுதுமலை அம்மன் கோயிலும்.</title><content type='html'>அமிர்தராஸ் பொற்கோயிலும் சுதுமலை அம்மன் கோயிலும்.&lt;br /&gt;ஒரு பேப்பரிற்காக நினைவுப்பதிவு சாத்திரி&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைத்தீவில் தமிழர்களிற்கு தீர்வும் சமாதானமும் வாங்கித் தருவதாக சொல்லியபடி இந்திய இராணுவம் அமைதிப்படை என்கிற பெயரில் வந்திறங்கி தமிழர்களின் அமைதியை பறித்து அவலங்களை மட்டுமே கொடுத்து இருபத்தி முன்று ஆண்டுகள் .ஆகிவிட்டது 10.10 1987 ம் ஆண்டுஆண்டு யாழ் கோட்டையிலிருந்த இந்திய இராணுவத்தின் மராட்டிய பட்டாலியன் (First Battalion of Maharatta Light Infantry)யாழ் பிரந்திய பத்திரிகைளான ஈழமுரசு முரசொலி ஈழநாடு பத்திகை அலுவலகங்களை குண்டு வைத்து தகர்த்ததிலிருந்து யுத்தத்தை தொடங்கி விட்டிருந்தனர்.அதைனைத் தொடர்ந்து புலிகளும் வேறு தெரிவுகள் எதுவும் இன்றி இந்திய இராணுவத்துடன் மோதிப்பார்த்து விடுவது என்கிற முடிவை எடுத்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மோதல் தொடங்கி பதினைந்து நாட்களை கடந்து நீட்டுகொண்டு போனது. ஒரு 24 நாலு மணித்தியத்திலேயோ மிஞ்சி மிஞ்சிப் போனால் 48 மணித்தியாலத்தில் புலிகள் அனைவரையும் பிரபாகரன் உட்பட கைது செய்து ஆயுதங்களை பறித்துவிடலாமென நினைத்திருந்த இந்திய அரசியல் தலைமைகளிற்கும் அதிகாரிகளிற்கும் ஏமாற்றமாகி போனது மட்டுமல்ல அவர்களிற்கு புலிகளினுடனான யுத்தம் கௌரவப் பிரச்சனையாக மாறிவிட்டிருந்தது.அதே நேரம் இலங்கையிலிருந்த இந்தியப்படைகளின் கட்டளை யதிகாரி திபீந்தர் சிங்கிற்கு புலிகளை அழக்கும் நோக்கம் இருக்கவில்லை முடிந்தளவு அவர்களை கைது செய்து ஆயுதங்களை பறிமுதல் செய்யவே விரும்பியிருந்தார். இதனால் இவரிற்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த டிக்சித்திற்கும் முரண்பாடுகளும் தோன்றியிருந்தது. காரணம் டிக்சித்திற்கு புலிகளை விரைவாக அழித்து முடித்துவிடவேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமாதான காலத்தில் இந்திய இராணுவ அதிகாரிகள் புலிகளுடன் நல்லதொரு நட்போடு பழகியதாலும் தென்னிந்தி பட்டாலியன்கள் குறிப்பாக மெட்ராஸ் பட்டாலியன்களும் (தமிழ்நாட்டு இராணுவத்தினர்) முன்னணி நகர்வு படைகளில் இருப்பதால் தான் புலிகளை அழிப்தற்கு தாமதமாகின்றது என நினைத்த இந்திய உளவுத்துறையும் அரசியல் தலைமையும் இன்னொரு கட்டளை அதிகாரியை இலங்கைக்கு அனுப்பி மாற்றங்களை கொண்டுவர எண்ணினர் அதன்படி சீங்கியர்களின் காலிஸ்தான் போராட்டத்தில் இறுதியாக பொற்கோயில் தாக்குதலில் கட்டளையிடும் அதிகாரியாக திறைமையாக பணியாற்றிய தெய்வேந்திர சர்மாவை இலங்கைக்கு அனுப்பி வைத்திருந்தனர்.&lt;br /&gt;இவர் திபீங்தர் சிங்கின் கட்டளைகளிற்கு கீழ்படியாமல் தன்னிச்சையாகவே நடவடிக்கைகளை எடுக்கும் சுதந்திரம் அவரிற்கு கொடுக்கப்பட்டிருந்தது. நேரடியாக பலாலியில் வந்திறங்கிய தெய்வேந்திர சம்மா உடனடியாகவே முன்னணி படையணிகளில் மாற்றங்களை கொண்டுவந்தார். புலிகளுடன் நெருக்கமாக இருந்த அதிகாரிகளை மாற்றியவர். தென்னிந்திய பட்டாலியன்களை பின்நகர்த்திவிட்டு (முக்கியமாக தமிழ்நாட்டு இராணுவத்தினர்) வட இந்திய பட்டாலியன்களான சீக்கிய. மராட்டிய.குர்கா படையணிகளை முன்னணிக்கு நகர்த்தினார். அத்தோடு மட்டுமல்லாது அவர் ..காலாட் படையணிகளிற்கு இட்ட கட்டளை என்னென்ன பொருள்கள் அசைகின்றதோ அத்தனையையும் சுட்டுத்தள்ளியவாறு முன்னேறுங்கள் என்றதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதே நேரம் புலிகளின் மோசமான கண்ணி வெடித் தாக்குதலில் இருந்து தப்பிக்க முன்னேறும் இராணுவத்தினரிற்கு கனரக ராங்கி படையணியினர் பாதைகளின் தடைகளை அகற்றி கொடுக்குமாறும் எந்தத் தடைகள் வந்தாலும் தாங்கிளால் தகர்த்தபடி முன்னேறும்படி கட்டளையிட்டிருந்தார். சர்மாவின் கட்டளைகளின் படி இந்திய இராணும் தமிழர் பகுதிகளில் பல அழிவுகளை கொடுத்தபடியே முன்னேறியது. அசைந்த பெருள்களான நாய் பூனை ஆடு மாடு.மனிதர்களையெல்லாம் காலாட்படை சுட்டுத்தள்ள. அசையாது நின்ற கட்டிடங்கள் மரம் செடியெல்லாவற்றையும் ராங்கிகள் தகர்த்தபடி முன்னேறினர். யாழ்குடாவின் பிரதான சாலைகளை சில நாட்களிற்குள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்த இந்திய இராணுவத்தினரின் அடுத்த இலக்கு சுதுமலையம்மன் கோயில் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு காரணம் இலங்கை இந்திய ஓப்பந்தத்தின் பொழுது பிரபாகரன் முதன் முதலாக மக்கள் முன் தோன்றி உரையாற்றியது சுதுமலையம்மன் கோயிலில்தான். அதே நேரம்.இந்திய இராணுவ அதிகாரிகள் புலிகளை சந்திக்க வந்திறங்கியது இந்தியாவிலிருந்து பிரபாகரன் வந்திறங்கியது எல்லாமே சுதுமலையம்மன் கோயில் சுற்றாடலில்தான். அது மட்டுமல்ல அதே சுற்றாடலில் புலிகளின் இரண்டு பெரிய ஆயுத தொழிற்சாலைகளும் அப்பையா அண்ணை தலைமையில் இயங்கியது. இந்த விடையங்கள் இந்திய உளவுத்துறையினரிற்கு தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவேதான் காலிஸ்தான் அமைப்பினர் பொற்கோயிலை தலைமையிடமாக வைத்து அங்கு பெருமளவு ஆயுதங்களையும் குவித்து இந்திய இராணுவத்துடன் போரிட்டனரோ அதே போலவே புலிகளின் முக்கிய தலைவர்கள் சுதுமலையம்மன் கோயிலில் பெருமளவு ஆயுதங்களுடன் பதுங்கியிருக்கலாமென இந்திய இராணுவம் நினைத்தது. சர்மா தலைமையில் ஏழு முனைகளில் இந்திய இராணுவம் சுதுமலையம்மன் கோயிலை நோக்கி நகர்ந்தது. 21 ந் திகதி நற்றிரவு சுதுமலை மானிப்பாய் பகுதி முழுவதையும் சுற்றி வளைத்த இராணுவத்தினர் அனைவரது வீடுகளிலும் புகுந்து அங்கிருந்தவர்களை ஒரு அறைகளில் போட்டு பூட்டிவிட்டு அந்தப் பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தவர்கள் அம்மன் கோயிலிற்குள் தாக்குதலை நடத்தி புகுந்து கொள்ள காலை புலரும்வரை காத்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிகாலையானதும் மெல்ல நகர்ந்த டாங்கி படையணியினர் அம்மன் கோயிலை சுற்றி வழைத்து நிறுத்தப்பட்டனர். காலை 5.30 மணியளவில் டாங்கிகளின் குண்டுகள் அம்மன் கோயிலை நோக்கி சீறிப்பாய்ந்தது. கோயிலின் வடக்கு கோபுரம். மணிக்கூண்டு கோபுரம்.தெற்கு மதில் சுவர். எல்லாம் சிதறியது. கோயிலின் பின்னாலிருந்த நூற்றாண்டு கடந்து பரந்து விரிந்திருந்த ஆலமரத்தின் கிளைகளும் முறிந்து விழுந்தது. அதுவரை காலமும் சனி விதரத்திற்கு போடும் சோத்தையு ம் பலிபீடத்து புக்கையையும் கொத்தி சாப்பிட்டு விட் சந்தோசமாய் அந்த ஆலமரத்தில் கூடுகட்டி வாழ்ந்த காகங்கள் பலதும் செத்துவிழ மீதி காகங்களோ காலங்காத்தாலை எந்தச் சனியன்கள் எங்கடை கூட்டை பிரிச்சது எண்டு நினைத்தபடி கா கா எண்டு திட்டியபடியே பறந்து போனதே தவிர கோயிலிற்குள் இருந்து எந்த பதில் தாக்குதலும் வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சில நிமிட இடைவெளி விட்டு மீண்டும் ஒரு தாக்குதலை நடத்தியவர்கள் ஆச்சரியத்தோடு கோயிலின் உள்ளே நுளைந்து தேடினார்கள் யாரும் அங்கிருக்கவில்லை. சர்மாவுக்கு சரியான கோபம்.யாரடா இந்த கோயிலின்ரை பூசாரி தேடிப்பிடிச்சு இழுத்து வாங்கோ என்று கட்டளையிட்டார். அந்தக் கோயில் ஜயர் பக்கத்திலேயே தான் குடியிருந்தார். அவர் சின்ன வயதிலை போலியோ நோயாலை தாக்கப்பட்டு கால்கள் சூம்பிப் போய் சரியாக நடக்க முடியாதவர். அவரை தேடிப்பிடிந்து இரண்டு இராணுவத்தினர் தூக்கிக் கொண்டுவந்து சர்மாக்கு முன்னாலை போட்டார்கள். சர்மா ஜயரிட்டை எங்கை எல் டி டி ..எங்கை ஆயுதம்.. எண்டு ஆங்கிலத்திலை கத்த ஜயருக்கு ஒண்டும் விழங்கேல்லை உடைனை ஒரு தமிழ் ஆமி ஓடிவந்து எல் டி டி எங்கை ஆயுதம் எங்கை ஆயுதம் எண்டு கேட்டார். ஜயரும் எல் டி டியை. நீங்க ளும் அவைய அவையளும் இந்த கோயிலுக்கு முன்னாலை சந்திச்சு கதைக்கேக்குள்ளைதான் கடைசியாய் கண்டனான் என்றவர்&lt;br /&gt;&lt;br /&gt;ஆயுதம் அங்கையிருக்கு எண்டு அம்மனின்ரை கையிலை இருந்த வாளையும் முருகனின்ரை கையிலை இருந்த வேலையும் காட்டினார். அதோடை அவர் நிப்பாட்டியிருக்கலாம் ஆனால் பக்கத்திலை பிள்ளையார் இருக்கிறார் அவரிட்டை ஆயுதம் இல்லை கையிலை மோதகம்தான் இருக்கு எண்டதும் நக்கலா....என்றபடி ஜயருக்கு நாலைஞ்சு அடி போட்டு கலைச்சு விட்டிட்டாங்கள். இயக்கத்தையும் ஆயுதத்தையும் காட்டிக் குடுக்க நான் என்ன விசரனோ எண்டு புறு புறுத்தபடி ஜயர் போயிட்டார். இந்திய இராணுவமும் கோயில் வீதியிலை பலஇடத்திலை கிடங்கு தோண்டிப்பாத்திட்டு போய் விட்டார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28994032-2473672602606131799?l=sathirir.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sathirir.blogspot.com/feeds/2473672602606131799/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28994032&amp;postID=2473672602606131799' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28994032/posts/default/2473672602606131799'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28994032/posts/default/2473672602606131799'/><link rel='alternate' type='text/html' href='http://sathirir.blogspot.com/2011/10/blog-post.html' title='அமிர்தராஸ் பொற்கோயிலும் சுதுமலை அம்மன் கோயிலும்.'/><author><name>சாத்திரி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_Sem5kfmy6G0/SXSlTz3ZpoI/AAAAAAAAAPc/qpZk13LLF-0/S220/Photo+103.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28994032.post-4674389785726374841</id><published>2011-10-08T08:24:00.000-07:00</published><updated>2011-10-08T08:27:19.250-07:00</updated><title type='text'>கண்ணை கட்டி விட்டதைப்போல்.. கார்த்திகை 27</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-jw3OVF9teQs/TpBryMBAweI/AAAAAAAAAm0/I4uQan1gyUY/s1600/mv-vejle.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 146px; height: 200px;" src="http://3.bp.blogspot.com/-jw3OVF9teQs/TpBryMBAweI/AAAAAAAAAm0/I4uQan1gyUY/s200/mv-vejle.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5661143241567814114" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இந்தவார ஒரு பேப்பரிற்காக&lt;br /&gt;சாத்திரி&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணை கட்டி விட்டதைப்போல்.. கார்த்திகை 27&lt;br /&gt;இந்த வருட மாவீரர் நாள் பற்றிய கட்டுரை ஒன்றினை கடந்த பேப்பரிலும் உங்களுடன் பகிர்ந்திருந்தேன்.புலம் பெயர் தேசமெங்கும் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து நின்று இந்த வருட மாவீரர் நாள் ஏற்பாடுகள் நடைபெறுகின்றது. அனைவரும் கலந்து பேசி ஒரு ஒற்றுமையுடன் மாவீரர்களிற்கான அஞசலியை செலுத்துவதே நாம் அவர்களிற்கு செய்யும் மரியாதையும் ஆகும் என்றும். என்றொரு வேண்டு கோளும் விடுக்கப்பட்டிருந்தது. பல இடங்களில் பேச்சு வார்த்தைகள் நடந்தது ஆனால் ஆக்கபூர்வமான எந்த முடிவுகளும் எடுக்கப்படால் இரு குழுக்கள்தனித்தனியே இந்த வருட மாவீரர் நாள் ஏற்பாட்டினை செய்யத் தொடங்கியதோடு மட்டுமல்லாது. ஆளாறிற்கு தாங்களே உண்மையானவர்கள் மற்றையவர்கள் விலை போனவர்கள் இலங்கை இந்திய உளவாளிகள் என மாறி மாறி அறிக்கைப் போரும் தொடங்கி விட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் ஒரு பிரிவினர் புலிகள் அமைப்பில் இருந்து மே 2009 ம் ஆண்டிற்கு பின்னர் இறுதி யுத்தத்தின் போது இலங்கைப் படைகளிடம் சரணடைந்தும் வேறு விதங்களில் தப்பியோடி ஜரேப்பாவிற்குள் நுளைந்தவர்கள். இவர்களின் வாதமென்னவென்றால் கடந்த காலங்களில் புலிகளின் வெளிநாட்டு பிரிவினர் பல தவறுகளை விட்டுவிட்டார்கள் அதுதான் புலிகளின் அழிவிற்கும் புலிகள் மீதான தடைக்கும் காரணம். பெருமளவான நிதியினையும் இவர்கள் முடக்கி வைத்திருக்கிறார்கள்&lt;br /&gt;எனவே அந்த நிதி மற்றும் சொத்துக்களை தாங்கள் பொறுப்பெடுத்து விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்டத்தினை தாமே நகர்த்தப் போவதாகவும். இனி வருங்காலங்களில் தாமே புலம்பெயர் தேசங்களில் மாவீரர் நாள் உட்பட அனைத்து நிகழ்வுகளும் ஒழுங்கமைக்கப் போவதாக கூறுகிறார்கள்.. இவர்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கின்றது கடந்த காலங்களில் புலிகளின் அனைத்துலகச்செயலகத்தினரில் பலர் நிதி மோசடி. தங்கள் பதவி நிலைகளை தக்கவைப்பதற்காக மற்றைய உறுப்பினரை காட்டிக்கொடுத்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;மாவீரர் நாள் நிகழ்வுகளை வியாபாரமாக மாற்றியது என பலவிடையங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அவை எல்லாவற்றிலும் மாற்றம் வரவேண்டும் மாவீரர் நாள் புலம் பெயர் தேசங்களில் புனிதமாக நடைபெற வேண்டுமென மாவீரர் குடும்பங்கள் அங்கலாய்க்கின்றார்கள். ஆனால் புதிதாய் வந்திறங்கியவர்கள். பழைய நிருவாக சீர் கேடுகளை மாற்றியமைப்பவர்களாகத் தெரியவில்லை.&lt;br /&gt;அதற்கான காரணங்கள். புலிகள் அமைப்பானது ஆயுதங்களை மௌனிக்கிறோம் என பகிரங்கமாக அறிவித்து விட்ட பிறகு இனி வரும் காலங்களில் அனைத்து போராட்டங்களும் ஆயுதமற்ற வன்முறையற்ற அரசியல் மற்றும் சனநாயக ரீதியிலான மென்முறைப்போராட்டங்களே. இதனை யாரும் ஒழித்திருந்து பலபெயர்களில் செய்ய வேண்டிய தேவையில்லை. பகிரங்கமாவே செய்யலாம் கைகளில் புலிக்கொடி ஏந்தி தலைக்கு மேலே தலைவர் பிரபாகரனின் படத்தை உயர்த்திப் பிடித்தபடியே செய்யலாம் எவ்வித தடையும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் புதிதாக வந்தவர்களோ ஒவ்வொரு நாடுகளில் வேறு வேறு பெயர்களில் அதுவும் புலிகளின் அமைப்பில் இருந்த தளபதிகள் அல்லது பழைய உறுப்பினர்களின் பெயர்களான வினாயகம்.சங்கீதன்.அல்லது தயாபரன். ஜேம்ஸ். தும்பன்.கரிகாலன். தமிழரசன்.சுரேஸ். சீர்மாறன். என்கிற பெயர்களில் நடமாடுவதோடு. பல இரகசியக் கூட்டங்களை மட்டுமே இதுவரை ஜரோப்பிய நாடுகளில் நடத்தியுள்ளனர். தாங்களே இறுதிவரை தலைவருடன் முள்ளி வாய்காலில் நின்றதாக கூறிக்கொண்டு புதியதொரு கட்மைப்பினை கட்டியமைத்து போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தப் போவதாக கூறும் இவர்கள்.முதலில் பொதுக்கூட்டங்களை கூட்டி மக்கள் முன் தோன்றியோ .அல்லது ஊடகங்களான வானொலி தொலைக்காட்சிகளில் பங்கு பற்றியோ இறுதி யுத்தத்தின் போது நடந்த சம்பவங்கள் பற்றி புலம்பெயர் தேசத்து தமிழர்களிள் மனங்களில் தத்தளிக்கு பலநூறு கேள்விகளிற்கு பதில் கொடுத்து முதலில் அவர்களிற்கு தெளிவைக் கொடுக்கவேண்டும். அதன் பின்னர் அடுத்த கட்டத்திற்கு போராட்டத்தினை எப்படி நகர்த்துவது அல்லது நகர்த்தலாம் எக்கிற ஆலோசனைகள் பகிரங்கமாக கலந்துரையாடப்படல் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே நேரம் ஜரோப்பிய நாடுகளில் இவர்களது அகதி தஞ்சக் கோரிக்கைகள் இன்னமும் அனுமதிக்படாமலேயே சரியான ஆவணங்கள் கடவுச்சீட்டு இன்றி இவர்களால் எப்படி எல்லைப் பாதுகாப்பு கூடிய இங்கிலாந்து சுவிஸ்.நோர்வே . டென்மார்க் போனற நாடுகளிற்கொல்லாம் சுதந்திரமாக போய் இரகசியக் கூட்டங்கள் நடாத்த முடிகின்றது என்பதனையும் மக்களிற்கு புரியவைக்கவேண்டும்.விடுதலைப் புலிகள் தடைசெய்யப் பட்டுள்ள ஜரோப்பிய நாடுகளில். தாங்கள் அந்த அமைப்பின் அசல் பிரதிநிதிகள் என சொல்லித் திரியும் பொழுது இவர்களை இயங்கவிட்டு பார்த்துக்கொண்டிருக்கும் இந்த நாட்டு உளவுத்துறையினர் இவர்கள் விடயத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறார்கள் என நாம் எடுத்துக்கொள்லாமா?? அல்லது தீவிரவாத எதிர்ப்பு அணுகு முறையின்(counter insurgency) அடிப்படையில் அவர்களது ஆதரவும் உள்ளது என எடுத்துக்கொள்லாமா??அல்லது எல்லாமே இந்த நாட்டு உளவமைப்புக்களிற்கு தெரியாமல் நடக்கின்றது என சொல்ல வருகின்றார்களா?? இது பற்றிய விளக்கங்கள் கொடுக்கப்படும் வரை இவர்கள் மீதான சந்தேகங்கள் தொடரும்.அதுவரை இவர்கள் மீதான சந்தேகங்கங் தொடரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து மாவீரர் நாளிற்கு சிறப்பு விருந்தினராக யாரோ ஒரு கடைசிவாங்கு வெள்ளைக்கார எம்.பி ஒருத்தர் வரவளைக்கப் படுவார் . அவர் வந்ததுமே தான் ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவன் எனவே புலிக்கொடி தனக்கு சங்கடமாய் இருக்கு அதை எடுங்கோ என்பார்.எம்.பி யே சொல்லிட்டார் எண்டு ஒருத்தர் ஓடிப்போய் அதை கழட்டி சுருட்டி வைப்பார்.அவரிற்கும் மாவீரர்களிற்கும் சம்பந்தம் இருக்காதென்பது வேறு விடையம் ஆனால் அவர் மேடையில் மாவீரர் பற்றியே அல்லது மாவீரர் நாள் பற்றியோ பேசமாட்டார். பேசத் தொடங்கும் போது வணக்கம் என்று தமிழில் சொன்னதும் கைதட்டி விசில் பறக்கும். பிறகு அவர் தன்னுடைய மொழியில் ..தமிழர்கள் அன்பானவர்கள் .பண்பானவர்கள். பயிற்பானவர்கள்.நன்றாக உபசரிப்பார்கள். அவர்கள் சுடும் தோசை இருக்கிறதே சூப்பர்..தமிழர்களின் வடை இருக்கிறதே சூப்பரோ சூப்பர்.என்னை இங்கு அழைத்தற்கு நன்றி அடுத்த எலெக்சன் வருது என்னையும் கவனிச்சுக் கொள்ளுங்கோ என்று விட்டு கடைசியாய் தமிழில் நன்றி வணக்கம் என்று விட்டு போய் விடுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே மாவீரர் வணக்க நிகழ்வினை யார் ஒழுங்கு செய்தாலும். கொத்துறொட்டிக்கடை புடைவைக்கடை ஏசியன் சாமான் கடை என்று எதுவுமில்லாமல் வியாபார நோக்கமற்றும் ஜரோப்பாவின் யாரோ ஒரு கடைசி வாங்கு பாராளுமன்ற உறுப்பினர் வரவழைக்கப் பட்டு அவர் வடைக்கதை சொல்லாமலும்..இந்தியாவிலிருந்து உணர்ச்சிகர மேடைப் பேச்சாளர்கள்சிறப்பு விருந்தினராக அழைக்கப் பட்டு வீண் சச்சரவுகளையும் சண்டைகளையும் உருவாக்காமல் அனைத்தையும் தவிர்த்து .. பல்லாயிரம் போராளிகளின் குருதியில் நனைந்து மென் மேலும் சிவப்பாகிப் போன தமிழீழ தேசியக்கொடி மாவீரர் நாள் மண்டப வாயிலில் பட்டெளி வீசிப்பறக்க மாவீரர்களின் நினைவுகளை சுமந்து மண்டபத்தில் நுளையும் போது மாவீரன் எங்கள் தலைவனின் புன்னகை படங்கள் வரவேற்க ஆண்டு தோறும் வழைமை போல கார்த்திகை 27 மதியம் கடக்கும் நேரம் "தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தணப் பேழைகளே "என்கிற பாடல் ஒலிக்க மண்டபத்தில் மாவீரர்களது படங்கள் மீதும் அவர்களது நினைவிடங்களின் மீதும் மலர்களை அள்ளித் தூவி மனம் விட்டு அழுது அவர்களிற்கு அஞ்சலி செலுத்த நாங்கள் வரவேண்டும்.இது தவிர்ந்து எதோவெரு எம்.பிக்காகவோ. மேடைப் பேச்சிற்காகவோ கொத்து றொட்டிக்காவவோ நடாத்தப் படும் எந்தவொரு மாவீரர் நாளும் மாவீரரை மதிக்கும் நாள் அல்ல.....மக்களும் வரமாட்டார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28994032-4674389785726374841?l=sathirir.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sathirir.blogspot.com/feeds/4674389785726374841/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28994032&amp;postID=4674389785726374841' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28994032/posts/default/4674389785726374841'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28994032/posts/default/4674389785726374841'/><link rel='alternate' type='text/html' href='http://sathirir.blogspot.com/2011/10/27.html' title='கண்ணை கட்டி விட்டதைப்போல்.. கார்த்திகை 27'/><author><name>சாத்திரி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_Sem5kfmy6G0/SXSlTz3ZpoI/AAAAAAAAAPc/qpZk13LLF-0/S220/Photo+103.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-jw3OVF9teQs/TpBryMBAweI/AAAAAAAAAm0/I4uQan1gyUY/s72-c/mv-vejle.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28994032.post-3817927106175321642</id><published>2011-09-25T09:46:00.001-07:00</published><updated>2011-09-25T09:50:47.657-07:00</updated><title type='text'>மனங்கள் கனக்கின்றது மாவீரரே</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-yqxN6pa73JA/Tn9b1auPDiI/AAAAAAAAAmg/lc2Z--Ecb9U/s1600/ltte.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 112px; height: 200px;" src="http://2.bp.blogspot.com/-yqxN6pa73JA/Tn9b1auPDiI/AAAAAAAAAmg/lc2Z--Ecb9U/s200/ltte.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5656340630265073186" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மனங்கள் கனக்கின்றது மாவீரரே&lt;br /&gt;இந்தவார ஒரு பேப்பரிற்காக&lt;br /&gt;சாத்திரி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாவீரர் வாரம் நெருங்குகின்றது. இந்த வருடமும் கடந்த வருடத்தைப் போல தாயகத்தில் மாவீரர்களிற்கு அஞ்சலி செலுத்த முடியாத நிலையே ஏற்படும்.மாவீரர் நாள் வாரத்தில் இராணுவக் கெடுபிடிகள் அதிகரிக்கும். சில வேளை கிறீஸ் பூதங்கள் கூட இரவுகளில் அதிகளவில் வழுக்கித் திரியலாம். அஞ்சலி செலுத்துபவர்கள் அச்சுறுத்தப்படுவார்கள். எனவே அவர்களிற்கான அஞசலியை வெளிநாடுகளில் புலம் பெயர் தமிழர்களால்தான் சுதந்திரமாக செய்யமுடியும். ஆனால் அதற்கும் அண்மைக்காலங்களாக வருகின்ற செய்திகள் மனதை கலங்கடிப்பவையாகவே இருக்கின்றது. காரணம். இந்த முறை மாவீரர் நிகழ்வுகளை பிரிந்து நிற்கின்ற தமிழர் அமைப்புக்கள் தனித்தனியாக நடத்தப் போவதாக மட்டுமல்லாது மாவீரர் நாள் அறிக்கையும் தனித்தனியாக வெளியிடப் போவதாக தகவல்கள் ...&lt;br /&gt;&lt;br /&gt;இந்தமுறை கலக்கப் போறது யாராம் என்று என்னோடை கதைக்கும் போது ஒரு நண்பன்என்னிடம் கேட்டான். அவன் தமிழ் தொலைக்காட்சியளிலை நடக்கிற கலக்கப் போறது யாரு அசத்தப் போவது யாரு எண்டிற நகைச்சுவை நிகழ்ச்சியை பற்றித்தான் கேக்கிறானாக்கும் என நினைச்சு நானும் என்னட்டை தமிழ் தொலைக்காட்சி ஒண்டும் கிடையாது அதுகளை பாக்கிற நேரமும் கிடையாது . ஏதாவது தேவையெண்டால் கணணியிலை தேடிப் பாத்திடுவன். எண்டன் ஏடேய் அதை நான் சொல்லேல்லை இந்த முறை மாவீரர் நாள் உரையை பற்றி கேட்டன் ..ஏனெண்டால் ஆளாளிற்கு அறிக்கை விடப் போறம் எண்டு கதையள் அடிபடுது அதைத்தான் கேட்டனான் எண்டான்.. அப்படி கேட்டது அவனுடைய தவறு இல்லை ..உலகமே உற்று நோக்கிய பிரபாகரனின் மாவீரர் நாள் கொள் கொள்கை விளக்க உரையை "கலக்கப் போவது யார்?? "என்று கேட்கின்ற அளவிற்கு 2009 ம் ஆண்டு மே மாதத்திற்கு பின்னர் தாங்களே தாயகத்திலுள்ள தமிழரிற்கான போராட்டங்களை முன்னெடுப்பதாக கூறிக்கொண்டு பல பிரிவுகளாகி நிற்கும்புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் ஏற்படுத்தி வைத்திருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;1989 ம் ஆண்டு முதலாவது மாவீரர் நாள் உரையானது மாவீரர்களிற்கான அஞ்சலியுடன் தொடங்கி புலிகள் அமைப்பின் கொள்கை விளக்கங்கங்களோடு புலிகள் அமைப்பானது அன்றைய காலகட்டங்களில் தமிழ் மக்களிற்கும் சர்வதேசத்திற்கும் என்னென்ன செய்திகளை சொல்லவிரும்புகின்றனர் . தாயகத்து மற்றும் புலம் பெயர் தமிழ் மக்களிடம் என்னென்ன எதிர்பார்க்கின்றனர் அவர்களது கடைமைகள் என்ன. சர்வதேசத்திடம் என்னென்ன எதிர்பார்க்கின்றனர்.என்கிற விடயங்கள் அடங்கியதாக இருக்கும். புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அவர்களால் நேரடியாக வாசிக்கப் படும் அந்த உரையினை உலகநாடுகளே உன்னிப்பாக அவதானித்தபடி இருக்கும். உரையில் பிரபாகரன் எந்தெந்த விடயங்களை அழுத்திச் சொல்கிறார். எங்கு நின்று நிதானித்து சொல்கிறார். எங்கு ஏற்ற இறக்கங்கள் வருகின்றது என்று அனைத்துமே அலசி ஆராயப்படும்.காரணம் வருடத்தில் ஒரு முறைமட்டுமே பேசுபவர் பிரபாகரன் அதுவும் அந்த மாவீரர் நாள் உரை மூலமாகத்தான். மிகுதி அனைத்திற்குமே செயல்வடிவம்தான் அதனால்தான் அதற்கு அத்தனை மதிப்பு..&lt;br /&gt;&lt;br /&gt;2008 ம் ஆண்டுடன் மாவீர் நாள் கொள்கை விளக்கவுரை நின்று விட்டது. அதற்கு பின்னர் நடந்த சம்பவங்கள் அனைத்தும் உலகம் அறிந்ததுதான். ஆனால் எமக்காகவும் எமது மண்ணிற்காகவும் தங்கள் இன்னுயிர்களை ஆகுதியாக்கியவர்களின் நினைவிடங்களையும் கூட இலங்கை இராணுவம் சர்வதேச விதிகளையும் மீறி அழித்து தரைமட்டமாக்கப் பட்ட நிலையில். அங்கு வாழும் மக்களாலும் அவர்களிற்கான அஞ்சலியை செலுத்த முடியாத நிலையிலும். புலம் பெயர் தமிழர்கள் ஒன்று கூடி ஒற்றுமையாய் அந்த மாவீரர்களை நினைவு கூர்ந்து அவர்களின் கனவுகளை நினைவாக்க மனதில் உறுதியெடுத்து அவர்களிற்கான அஞ்சலிகளை செலுத்தவேண்டியது எமது கடைமையல்லவா??அதுதானே நாம் அவர்களிற்கு செய்யும் மரியாதையாகும்.&lt;br /&gt;அதே நேரம் புலம் பெயர் நாடுகளில் உள்ள அனைத்து அமைப்புக்களும் தங்கள் அமைப்பின் சார்பில் ஓவ்வொரு அஞசலி அறிக்கையை விடலாம்.ஆனால் அது மாவீரர் நாள் புலிகள் அமைப்பின் கொள்கை விளக்க உரையாக அமையாது. தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களால் வாசிக்கப்படாத எந்தவொரு உரையும் மாவீரர் நாளின் புலிகள் அமைப்பினது கொள்கை விளக்க உரையாக அமையாது.அதனை எந்தவொரு தமிழர் மட்டுமல்ல சர்வதேசமும் ஏற்றுக்கொள்ளாது. மற்றைய அனைத்து உரைகளுமே மாவீரர்களிற்கான அஞ்சலி உரையாகவே கணிக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பல பிரிவுகளாக பல்வேறு இடங்களில் பல்வேறு அறிக்கைகளுடன் மாவீரர் நாள் நடைபெறப் போகின்றது என்கிற செய்திகளிற்கிடையில் கடந்த ஞாயிறு 18.ந் திகதி பிரான்சில் பாரிஸ் நகரில் பிரான்சின் தமிழ் அமைப்பக்களில் முக்கியமான அமைப்புக்களும் மக்களும் இணைந்து மாவீரர் நாள் நிகழ்வுகள் பற்றிய கலந்துரையாடல் ஒன்றினை நடத்தியிருந்தார்கள். கலந்துரையாடலின் இறுதியில் அனைத்து அமைப்புக்களும் ஒற்றுமையாக ஒருமித்து மாவீரர் வாரத்தினை கடைப்பிடிப்பது. அனைவரும் இணைந்து மாவீரர்களிற்கான அஞ்சலி பிரசுரம் ஒன்றினை வெளியிடுவது. அதே நேரம் கடந்த காலங்களில் இடம் பெற்றதைப் போன்று நிகழ்வு மண்டபத்தில் வியாபாரக் கடைகள் போடுவதற்கு வியாபாரிகளை அனுமதிப்பதில்லை. சிறுவர்களிற்காக பிஸ்கற்றுக்களும் குடிபானம் மட்டும் வினியோகிப்பது என்கிற ஒருமனதான தீர்மானத்திற்கு வந்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இது மனதிற்கு ஆறுதலைத்தரும் செய்தியாக மட்டுமில்லாது மாவீரர்களின் தியாககங்கள் வீண் போகவில்லை என்கிற மகிழ்ச்சியையும் தருகின்றது. ஆனால் இங்கிலாந்து ஜெர்மனி சுவிஸ் ஆகிய நாடுகளில் இன்னமும் இழுபறி நிலைகள் உள்ளதாகவே தெரிகின்றது. அவர்களும் ஒன்றிணைந்து எமக்காக உயிர் நீத்த மாவீரர்களை மனதில் நிறுத்தி அவர்களிற்கான அஞ்சலிகளை செலுத்தி உலகத் தமிழர் அனைவரும் ஒன்றுபட்டு மாவீரர்களின் கனவுகளை நினைவாக்குவோமென இந்த வருட மாவீரர் வாரத்தில் உறுதியெடுக்கவேண்டும்.&lt;br /&gt;மாவீரர் வாரத்தை பிரிந்து நின்று வெறுமனே அனுட்டிப்பதில் பயனில்லை மாவீரர் கனவுகளுக்கு செயல் வடிவம் கொடுக்கும் திறனும் ஆற்றலும் புலம்பெயர் தமிழர்களின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எத்தனை துரோகங்களிலும் தடைகளிலும் அதை நிறைவேற்ற வேண்டிய கடப்பாட்டில் நாமிருக்கிறோம்.&lt;br /&gt;தமிழீழ விடுதலை என்பது வெறும் கனவல்ல என்று உலகமும் சிங்களமும் ஒருநாளில் அறிந்து கொள்ளட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தியாகங்களால் எம் மாவீரர்கள் விடுதலை பயணத்தை உச்சத்தில் வைத்தனர். எதையும் முடிக்கும் வல்லமை காட்டினர். தமிழரின் வீரம் பிறப்பிலென்று பறை சாற்றினர். காலங்காலமாய் எமது விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவுகளை எங்கள் மாவீரர்களே உடைத்து வெற்றி கொண்டனர். தியாகத்தின் எல்லையை தொட்டு நின்றனர்.அந்த வீரர்களின் தியாகத்துக்காய் இந்த வாரம் நாம் சிந்தும் கண்ணீரே நாம் அவர்களுக்கு செய்யும் மிகச் சிறிய நன்றிக்கடன் என கொள்வோம்&lt;br /&gt;நம் கோவில்களான கல்லறைகளை உடைத்து விடுவதால் எங்கள் மனங்களின் தொழுகைகளை நிறுத்த முடியாது சொந்த குருதி வடியும்போது சந்தோசம் வருமா எங்கிருந்தாவது? தமிழராக முன்பு மனிதனாக வேண்டும்.மனிதராவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கார்த்திகையில் வானம் கூட அழுது தொழும் எம் செல்வங்களை ..கார்த்திகைப் பூவும் பூத்து வணங்கிக்கொள்ளும் உலகத் தமிழர் ஒன்றிணைந்து நாமும் மாவீரர் புகள்பாடுவோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28994032-3817927106175321642?l=sathirir.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sathirir.blogspot.com/feeds/3817927106175321642/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28994032&amp;postID=3817927106175321642' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28994032/posts/default/3817927106175321642'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28994032/posts/default/3817927106175321642'/><link rel='alternate' type='text/html' href='http://sathirir.blogspot.com/2011/09/blog-post_25.html' title='மனங்கள் கனக்கின்றது மாவீரரே'/><author><name>சாத்திரி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_Sem5kfmy6G0/SXSlTz3ZpoI/AAAAAAAAAPc/qpZk13LLF-0/S220/Photo+103.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-yqxN6pa73JA/Tn9b1auPDiI/AAAAAAAAAmg/lc2Z--Ecb9U/s72-c/ltte.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28994032.post-4253325853110804343</id><published>2011-09-15T10:50:00.000-07:00</published><updated>2011-09-15T11:25:43.576-07:00</updated><title type='text'>பா வா ம் பி ற பா க ர ன்.</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-jAoCHgD8Cvg/TnI9gULp15I/AAAAAAAAAlA/POMsdtvWei4/s1600/LEADER070.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 137px;" src="http://3.bp.blogspot.com/-jAoCHgD8Cvg/TnI9gULp15I/AAAAAAAAAlA/POMsdtvWei4/s200/LEADER070.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5652648107686090642" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டு 15.03.1995 இடம் யாழ்குடாநாடு சங்கானைக்கிராமம்.அதிகாலை 5 மணி&lt;br /&gt;..................................................................................................................................&lt;br /&gt;தம்பிப்பிள்ளையர் கொட்டிலுக்கு முன்னால் இருந்த சாக்குக் கட்டிலில் சாரத்தாலை போத்தபடி இருமியபடி சுருண்டு படுத்திருந்தார்.கண்விழித்து பார்த்த நல்லம்மாவிற்கு விழங்கியது இண்டைக்கும் மனுசன் தொழிலுக்கு போகாது போலை கிடக்கு. இரண்டுநாள் எப்பிடியோ சமாளிச்சாச்சு இனி கஸ்ரம்தான் .நாசமாய்போற மனுசன் ஆசுப்பத்திரிக்கும் போகுதில்லை.இண்டைக்கு எப்பிடியும் கொண்டு போறதுதான். "மோகன் டேய் மோகன் எழும்படா. கொப்பர் இண்டைக்கும் தொழிலுக்கு போறமாதிரி இல்லை நீயாவது பெட்டியை கட்டிக்கொண்டு போட்டுவாடா. இல்லாட்டி இண்டைக்குபாடு பிச்சைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;சும்மா கிடவணை நான் உந்த பெட்டி கட்டமாட்டன் சொல்லிப்போட்டன் நான் பள்ளிக்கூடம் போகவேணும்.சும்மாகிட எனக்கு நித்திரை வருது. மோகன் காலை சொறிந்துவிட்டு திரும்பவும் சுருண்டுகொண்டான்.&lt;br /&gt;ஊகும்.வயித்துபாட்டுக்கே வழியைகாணேல்லை.இவர் படிச்சு கிழிச்சு பெரிய இஞ்சினியராகப்போறாராக்கும்.காஞ்ச வயித்தோடையே பள்ளிக்கு போப்போறாய்.மல்லன் மாதிரி வளந்ததுதான் மிச்சம் ஒரு சதத்துக்கு பிரயோசனம் இல்லை.இந்த மனுசன் உழைக்கிறதை குடிச்சுப்போடும்.ஏதோ என்ரை தம்பி தப்பித்தவறி வெளிநாட்டுக்கு போனதாலை அப்பப்ப அவன் போடுற பிச்சையை வைச்சு உங்களை கொண்டிழுக்கிறன்.அதுவும் இல்லாட்டி எப்பவே உங்களுக்கெல்லாம் சோத்திலை விசம்வைச்சிட்டு நானும் செத்திருப்பன். நல்லம்மா புறுபுறுத்தபடியே கேத்திலை எடுத்து தேய்க்கத் தொடங்கினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மோகனிற்கு நித்திரையை தொடர முடியவில்லை. உண்மைதான் ஜயா மூண்டுநாளாய் தொழிலுக்கு போகேல்லைத்தான்.அம்மா சின்ன சின்ன கூலி வேலையளிற்கு போறவா.மாமாவின்ரை உதவியோடை ஒரு மாதிரி அக்காவை கட்டிக்குடுத்தாச்சு.வீட்டிலை அடுத்தது நான்தான் பெரியாள்.பதினேழுவாயதாயிட்டுது.நாட்டு நிலைமையாலையும் ஒழுங்காயில்லாததாலை படிக்காததாலையும்.முதல்தரம் பத்தாம் வகுப்பு சோதினையை கோட்டை விட்டிட்டன்.இப்ப அடுத்த தரம் எடுக்கிறதுக்கு அப்பப்ப பள்ளிக்கூடம் போறன்.நானும் வேலை ஏதாவது செய்தால் குடும்பம் கொஞ்சம் நல்லா ஓடும்.தங்கச்சியவையாவது ஒழுங்காபடிப்பினம்.நானும் வெளிநாட்டுக்கு போயிட்டன் எண்டால் பிரச்சனை முடிஞ்சுது.சிந்தனைகளை முறித்துவிட்டு மெல்ல எழும்பி கேத்தில் கொதித்துக்கொண்டிருந்த அடுப்புக்கரையில் போய் குந்தினான்.&lt;br /&gt;&lt;br /&gt;மவராசன் எழும்பிட்டார்.இண்டைக்கு தேத்தண்ணியாவது இருக்கு நாளைக்கு சுடுதண்ணிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;சும்மா புறுபுறுக்காதையணை.நான் வேலைக்கு போறன்.ஆனால் ஜயா மாதிரி பெட்டியை கட்டி பிரயோசனம் இல்லை இப்ப மீன் விக்கிற விலையிலை 500 ருபாய்க்கு வாங்கியந்து வித்தால் 100 ருபாயும் லாபம் வராது.மிச்சம் நாறிப்போம்..மினக்கெட்டு சைக்கிள் உழக்கிறதுக்கும் பத்தாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஓ................அப்ப என்ன வைர யாவாரம் செய்யப்போறியளோ??இருக்கிறதைவிட்டிட்டு பறக்கிறதுக்கு ஆசைப்படாதை தம்பி.&lt;br /&gt;&lt;br /&gt;பறக்கிறதில்லை இதுவும் இருக்கிறதுதான்.நான் மண்ணெண்ணை வாங்கியந்து விக்கப்போறன்.கொஞ்சம் கயிற்றம்தான் ஆனா நல்ல லாபம் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்கு உந்த வன்னி கின்னியெல்லாம் கடந்தல்லோ போகவேணும் உந்த பாதையள் எல்லாம் உனக்கு தெரியுமே.&lt;br /&gt;&lt;br /&gt;அதெல்லாம் எனக்கு தெரியும் நீ எனக்கொரு ஜயாயிரம் ரூபாய் ஒழுங்குபண்ணித்தா.&lt;br /&gt;&lt;br /&gt;ஆத்தை படுற பாட்டிலை குத்தியன் மொன்னிக்கழுத கதையாய் கிடக்கு நானே கஞ்சிக்கு வழியில்லைணெ்டு இருக்க ஜயாரத்துக்கு எங்கை போறது&lt;br /&gt;&lt;br /&gt;ஏணேய் எனக்குத் தெரியும் நீ பதுக்கி வைச்சிருப்பாய் பயப்பிடாதை ஒரு கிழைமையிலை உன்ரை காசை திருப்பித் தந்திடுவன். தேதண்ணியை கெதியாய் பேடு.. ஜயாவை ஆசுப்பத்திரிக்கு கூட்டிக்கொண்டு போட்டு வாறன்.காசை றெடிபண்ணு.கரித்துண்டென்றை எடுத்து கடித்து பல்லில் தேய்த்தபடி கிணத்தடிப்பக்கமாய் போனான்.&lt;br /&gt;......................................................................................................................................................................................&lt;br /&gt;ஆண்டு 15.03.1995 இடம் யாழ்குடாநாடு ஆறுகால்மடம் கிராமம். காலை 8 மணி.&lt;br /&gt;&lt;br /&gt;ரகு பாடசாலைக்கு தயாராகியபடி தன்னுடைய 200 சி.சி மேர்டார்சைக்கிளை துடைத்துக்கொண்டிருந்தான். அப்பொழுது பாடசலை சீருடையில் ஒரு இளவயது பெண்ணை அழைத்தபடி அவளின் தந்தையார் ரகுவின் வீட்டின் அகன்ற இரும்புக் கதவில் தட்டினார் .அவர்களை கண்டதும் ஜயையோ...என்றபடி ரகு வீட்டின் உள்ளே ஓடிவிட்டான். ரகுவின் தந்தையார் தாமோதரம் பிள்ளை வெளியே வந்து பார்த்தால்.அவருக்கு தெரிந்தவர்தான் சுடலைக்கு பக்கத்தில் மரக்காலை வைத்திருக்கும் ரங்கன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன ரங்கன் இந்தப்பக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;ரங்கன் கோபத்தில் கொதித்தவனாய் சத்மாய் .இஞ்சை பாருங்கோ ஊருக்குள்ளை இருக்கிறவர் தெரிஞ்சவர் எண்ட ஒரு மரியாதையிலைதான் தான் வீடு தேடி வந்தனான்.உங்கடை மகனை கட்டுப்படுத்தி வையுங்கோ இல்லாட்டி பெரிய பிரச்னையிலை வந்து முடியும் சொல்லிப்போட்டன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தாமேதரம் பிள்ளையருக்கு தன்ரை மகன் ஏதோவம்பிலை மாட்டிப்போட்டான் எண்டது மட்டும் புரிந்தது."கோபத்திலை கத்தாமல் விளக்கமா சொல்லன் அவன் கடைசிப்பெடி வீட்டிலை செல்லமாய் வளந்திட்டான் ஏதாவது சின்ன குளப்படி பண்ணியிருப்பான் சொன்னத்தானே தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓ உங்களை மாதிரி காசுக்காருக்கு இதுகள் சின்னக்குளப்படிமாதிரித்தான் தெரியும்.மகளை பின்னுக்கும் முன்னுக்கும் கலைச்சு திரியிறானாம். அண்டைக்கு கடிதம்வேறை குடுத்தவனாம்.அதை இவள் கிழிச்செறிஞ்சு போட்டாளாம்.இவளை கடத்தப்போறனெண்டு வெருட்டியிருக்கிறானாம். அதாலை இவள் வேறை பயத்திலை பள்ளிக்கூடம் போகமாட்டணென்டு சொல்லிப்போட்டாள்.இண்டைக்குத்தான் எனக்கு விசயம் தெரியும். உங்கடை மகனை கண்டிச்சு வையுங்கோ. இல்லாட்டி அடுத்ததா நான் காவல்துறையிட்டை போகவேண்டிவரும். இனியும் என்ரை பெட்டைக்கு பின்னாலை திரிஞ்சதெண்டு கேள்விப்பட்டன் அதுக்கு பிறகு நான் மனிசனாயிருக்கமாட்டன்.மரம் அரியிற வாளாலை இரண்டா அரிஞ்சு தாட்டுப்போடுவன் சொல்லிப்போட்டன். என்று கோபமாய் பொரிந்து விட்டு மகளையும் அழைத்துக்கொண்டு ரங்கன் போய்விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தாமோதரத்தாருக்கு தலை சுத்துவதுபோலை இருந்தது அக்கம் பக்கத்திலை ஆரும் கேட்டிருப்பினமே எண்டு மெல்ல றோட்டுக்கு வந்து எட்டிப்பாத்தார். எப்பவுமே வேலை வெட்டியில்லாமல் மடத்திலை குந்தியிருக்கும் கூட்டம் இவரின்ரை வீட்டையே பாத்துக்கொண்டிருந்தது.அவமானம் மதம் பிடித்த பெரிய யானையைப்போல அவரைத்துரத்தத் தொங்கியது இரும்புக்கதவை இழுத்துப் பூட்டியவர். முன்னால் நின்றிருந்த மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்துவிட்டு அங்கு மல்லிகைச்செடிக்கு கொழுகொம்பாய் நட்டிருந்த பெரிய தடியை ஆட்டி இழுத்தெடுத்தபடி டேய்ரகு என்று கத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;குசினிக்குள் மீனாச்சிக்கு பின்னால் பம்மிக்கொண்டு நிண்ட ரகுவை இழுத்தெடுத்து விளாசத்தொடங்கினார்." டேய் நாயே பளார்....உனக்கு செல்லம் கூடிப்போச்சு.பளார் .....எல்லாருமே செல்லம் தந்து தந்துதான் உன்னை கெடுத்துப்போட்டினம்.பளார்.... இவளிட்டை சொன்னாலும்.கேக்கமாட்டாள். பளார்.... ..அப்பவே சொன்னனான் பத்தாம் வகுப்பு படிக்கிற பெடியனுக்கு மோட்டச்சைக்கிள் வேண்டாமெண்டு .பளார்.... .அதுவும் அதுகளுக்கு போய் லவ்லெட்டர் குடுத்திரக்கிறாய். பளார்.....அதுகளார்..நாங்களார்..பளார்..... மானம் மரியாதையெல்லாம் போட்டுது..பளார்..பளார்..பளார்....கம்பு தும்பாய்போயிருந்தது. அடித்த அடி விலக்குப்பிடித்த மீனாச்சி மேலையும் பாதிவிழுந்தது.குசினியில் பாத்திரங்கள் சிதறிய சத்தமும் ரகுவின் அலறலும் நாலைந்து வீடுகளிற்கு கேட்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தாமோதரத்தாருக்கு மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கியது ரகு பிறந்ததிலிருந்து ஒருநாளும் இப்படி அவனிற்கு அடித்தில்லை.எப்பவாவது காதிலை பிடிச்சு செல்லமாய் திருகியிருப்பார் அவ்வளவுதான்.அவனுடைய அம்மா மீனாச்சி சொல்லவே வேண்டாம்.ரகுவிற்கு மூக்கில் தூசிபோய் தும்மினாலே போதும் பதறிப்போய்விடுவார். ரகுவிற்கு மூத்தவர் அண்ணனும் அக்காவும் இங்கிலாந்தில் திருமணமாகி குடும்பமாய் வசிக்கிறார்கள்.இன்னொரு அண்ணன் கொலண்நாட்டில். பலவருட இடைவெளிக்கு பின்னர் பிறந்தவன்தான் ரகு.கடைக்குட்டி என்பதாலும். மூத்தவர்கள் வெளிநாட்டிற்கு போகும்போது இவன் சின்னவனாக இருந்ததாலும் எல்லோருக்கும் செல்லப்பிள்ளை.எனவேதான் அவன் கேட்டது எதற்கும் மறு பேச்சு கிடையாது உடைனையே கிடைத்துவிடும்.இப்பவும் தானக்கு திருமணம் தோவையெண்டு சொல்லியிருந்தால் வயதைக்கூட பாக்காமல்.சொந்தத்தில் யாரையாவது பாத்து கட்டிக்கொடுத்திருப்பார்கள் ஆனால் அவன் காதல் கடிதம் குடுத்தது அதுவும் மரக்காலைக்காரனின்ரை பெட்டைக்கு குடுத்ததுதான் தாமேதரத்தாருக்கு பிறசர் ஏத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரகு இன்னமும் குசினிக்குள் விக்கி விம்மிக்கொண்டிருந்தான். பாளாய்போன மனிசன் இந்தாளுக்கு விசர் கிசர் பிடிச்சிட்டுது போலை இப்பிடி என்ரை பிள்ளையை போட்டு அடிச்சுப்போட்டுது. என்ரை பிள்ளை வாட்டசாட்டமாய் வசதியாய் இருக்கிறானெண்டு அவள் பல்லைக்காட்டியிருப்பாள்.அதுவும் மோட்டச்சைக்கிள்ளை வேறை திரியிறான்.சும்மா விடுவாளைவையே. தகப்பன் காரன் கண்டதும் கதையை பிரட்டியிருப்பாளவை அவளவையளின்ரை பரம்பரையே ஆம்பிளையளை மயக்கிறதுதானே வேலை என்ரை கையிலை அம்பிடட்டும் அவளின்ரை.............................கிழிச்சு விடறன்.என்று திட்டியபடியே மீனாச்சி அவனது அடிகாயங்களை டெற்றோல் போட்டு பஞ்சினால் தடவிக்கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவன் படிச்சு பட்டம் வாங்கினது போதும் முதல்வேலையா இவனை லண்டனுக்கு அனுப்பிற அலுவலை பாததிட்டு வாறன்.இவனை வெளியிலை போக விடாதை மோட்டச்சைக்கிள் இருந்தால்தானே ஊர் சுத்துவான் எங்கை அதுகின்ரை திறப்பு..எண்டபடி மோட்டச்சைக்கிள் திறப்பை தேடியெடுத்து தனது பொக்கற்றுக்குள் போட்டபடி பக்கதிலை இருந்த கொமினிக்கேசனிற்கு போய் மூண்டு பிள்ளையளின்ரை நம்பரையும் குடுத்து அப்பா நிக்கிறார் அவசரமாம் எண்டு சொல்லி விடுங்கோ.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் கொலண்டில் இருந்த மகனின் தொலைபேசி அழைப்பு வந்தது.தாமேதரத்தார் மளமளவெண்டு தொடங்கியவர் மற்றயவையோடையும் கதைச்சு உடனடியாய் அவனை எடுக்கிற வழியை பாருங்கோ எண்டு ஒரே மூச்சிலை சொல்லி முடிச்சார்.&lt;br /&gt;அவனையும் கூப்பிட்டு அம்மாக்கு நானும் உங்களுக்கு அக்காவும் எப்பவோ ஸ்பொன்சருக்கு குடுக்கிறதுக்கு கதைச்சனாங்கள்.நீங்கள்தான் அவன் இந்த வருசம் ஓ எல் எடுக்கிறான் முடியட்டும் எண்டு இழுத்தனியள். சரி அண்ணை அக்காவோடை கதைச்சு உடனடியா அவனை கூப்பிடுற ஒழுங்கை செய்யிறன்.அதோடை உங்கடை ஸ்பொன்சர் அலுவல்களையும் பாக்கிறன் என்று கொலண்டில் இருக்கும் மகனின் பதிலோடு வீட்டிற்கு போன போது ரகுவை காணவில்லை.&lt;br /&gt;எங்கையடி போட்டான் அதுக்கிடையிலை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் மாட்டுக்கு அடிச்சமாதிரி அடிச்சுப்போட்டியள்.பாவம் கடையிலைபோய் சோடா குடிச்சிட்டு வாறனெண்டு காசு வாங்கிக்கொண்டு போனவன் இப்ப வந்திடுவான் மீனாச்சி ஆறுதல் சொன்னார்.ரகு திரும்ப வரவில்லை.தமோதரத்தாருக்கும் மீனாச்சிக்கும் பயம்பிடிக்கத்தொடங்கியது. சிலவேளை அந்தப் பெட்டையோடை ஏதும் லவ் இருந்திருக்குமோ?அதை கூட்டிக்கொண்டு......எங்கையாவது போய் தற்கொலை.................இப்படி பல சிந்தனைகள் ஓடியபடியே ஒரு நாள் போய்விட்டது.மறுநான் ரகுவின் நண்பர்கள் வீடுகளிலெல்லாம் போய் விசாரித்தனர். அதோடை மரக்காலை பக்கமும் போய் பார்த்தார்கள்.எந்த செய்தியும் கிடைக்கவில்லை.எதுக்கும் காவல் துறையிலை போய் புகார் குடுக்கலாமெண்டு யோசித்தாலும் தாமோதரத்தாருக்கு கெளரவ குறைச்சாயிருந்தது.சிலநேரம் இயக்கத்துக்கு போயிருக்கலாமெண்டு மீனாச்சிக்கு பயமாயும் இருந்தது.இரண்டு நாளாகிவிட்டது காவல்துறைக்கு போறதைத் தவிர வேறை வழியில்லை காவல் துறையில் போய் புகார் குடுத்திருந்தனர்.சிலநேரம் இயக்கத்திற்கு போயிருந்தால் பயிற்சிக்கு போனவர்களின் பெயர் விபரம் கோண்டாவில் அல்லது எழுது மட்டுவாள் முகாமில் இருக்கும் அங்கு போய் சரி பார்க்கச்சொல்லியனுப்பி விட்டிருந்தனர்.மீனாச்சி எல்லாக் கோயிலுக்கும் நேர்த்தி வைத்தபடி கோண்டாவில் முகாமில் போய் விசாரித்தார்கள்.ரகு இயக்கத்திற்கு போய்விட்டான்.................. &lt;br /&gt;0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000&lt;br /&gt;&lt;br /&gt;09.07.1995: ஆண்டு சனிக்கிழைமை.&lt;br /&gt;....................................................................................................................................................................................&lt;br /&gt;சந்திரிக்கா போட்ட மோசமான பொருளாதாரத்தடை மோகனை மண்ணெண்ணெய் வியாபாரத்தில் வேகமாக முன்னேற்றியிருந்தது சைக்கிளை விட்டு 90 சி.சி றீசைக்கிள் மோட்டார் சைக்கிளிற்கு மாறியிருந்தான். தானும் அடுத்ததொரு மண்ணெண்ணை மகேஸ்வரனாகவேண்டும் ஒரு கல்வீடு கட்டவேணும்.என்பதுதான் அவனுடைய கனவு. அப்படி மகேஸ்வரன் றேஞ்சிற்கு வந்தாலும் எலெக்சனிலை நிக்கிறேல்லையெண்டு முடிவெடுத்திருந்தான். ஊரில் பெற்றோல் எண்டாலே என்னவெண்டு சனத்திற்கு மறந்து போயிருந்தது எல்லாமே மண்ணெண்ணெய்தான்.பெற்றோலிற்கு மாற்றீடாக ஆராய்ச்சிகள் எல்லாம் நடந்தது சிலர் கசிப்பில் வாகனம் ஓட முயற்சிகளும் நடந்துகொண்டிருந்தது.மண்ணெண்ணெய்க்கும் செஞ்சிலுவை கப்பலையே காவலிருக்கவேண்டிய நிலைமை .இந்த நேரத்தில்தான் யாம்போத்தல் பஞ்சு விளக்கு பிரபல்யமானது.மற்றும்படி யாராவது சிரமப்பட்டு வன்னிக்குப்போய் வவுனியாவிற்கு உள்ளே போய் அல்லது தரகுகளிடம் காசு கொடுத்து மண்ணெண்ணையை கொண்டுவந்து விற்பார்கள்.அதைத்தான் மேகன் செய்துகொண்டிருந்தான்.அப்பொழுதுதான் அதுவரை கேள்விப்பட்டேயிருக்காத ஊர்களான ஊரியான் கொம்படி கிளாலி என்பன உலகத்திற்கே தெரியவந்தது.&lt;br /&gt;ஊர் நிலைமையும் மோசமாகிக்கொண்டிருந்தது அம்மான் ரத்வத்தை யாழ்ப்பாணத்தை பிடிச்சு புலியளை ஒழிக்கிறதெண்டு சபமெடுத்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;வழைமை போல இரண்டு பிளாஸ்ரிக் மண்ணெண்ணெய் கலன்களை கட்டிக்கொண்டு அவனது மோட்டச்சைக்கிளையும் மண்ணெண்ணையிலையே ஓடியபடி வீட்டிற்கு போய்க்கொண்டிருந்தான்..ஆமி முன்னேறி பாஞ்சதும் பிறகு புலிபாய்ஞ்சதும் நடக்கேக்குள்ளை வன்னியலை வந்துகொண்டிருந்த மோகன் பளைப்பக்கமாய் இரண்டுநாளாய் பதுங்கியிருந்திட்டு ஊருக்கு புறப்பட்டான் .அண்டைக்கும் வலிகாமம் பக்கம் அளவெட்டியிலை இருந்த ஆமி அடிச்ச செல்லுகள் பரவலாய் விழத்தொடங்கியிருந்தது.எந்தநேரமும் பெரிய சண்டைவரலாமெண்டு எதிர்பார்ப்பு இருந்தது ஆனால் புலியள் இருக்கினம்தானே பிறகென்ன கவலையெண்டு நினைச்சபடி மோகனின் மோட்டசைக்கிள் புகையை கக்கியபடி போய்க்கொண்டிருந்தது .திடீரெண்டு சங்கானை மெயின் வீதியிலையும் ஒரு கெலி அடிக்கத்தொங்கியது.மோகனிற்கு தனக்கு வெடி விழுந்தாலும் பரவாயில்லை மண்ணெண்ணை கானிலை விழக்கூடாதெண்ட பயம்.குறுக்கு பாதையாலை போகலாமெண்டு நவாலி றோட்டிலை மோட்டச்சைக்கிளை இறக்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பனங்கூடல் அதுக்கு பிறகு சின்ன வயல் வெட்டை அதைதாண்டிட்டால் முருகன் கோயில் சேச்சடி வரும் பிறகு அங்காலை குடிமனையள் போய்சேந்திடலாமென நினைச்சவன் அந்தப்பக்கமும் கெலிசத்தம் வந்தது.நாசமறுப்பார் இண்டைக்கு என்ரை மண்ணெண்ணைக்கு அழிவு வைக்கமால் விடமாட்டாங்கள் போலை கிடக்கு எண்டு. நினைத்தபடி பனங்கூடலுக்குள் பதுங்கினான்.&lt;br /&gt;அங்கு உருமறைப்பு செய்திருந்த இயக்காரரரின்ரை 50 கலிபர் ஒண்டு சடசடத்தது.கெலிக்கு வால்லை வெடிவிழுந்திருக்வேணும் புகைஞ்சபடி ஒரு பக்க செட்டை பிஞ்ச தும்பி மாதிரி சாய்வா பறந்தபடி காரைநகர் பக்கமாய் போனது .போக வெளிக்கிட்ட மேகனை இயக்கபெடியள் மறிச்சிட்டினம்.ஒரு கொஞ்ச நேரத்திலை திடீரெண்டு ஒரு புக்காரா இயக்கத்தின்ரை 50 கலிபர் சடசடத்ததுதான்.ஆனால் பெரிய வெடிச்சத்தங்கள் ஊரே அதிர்ந்தது.மேகன் காதைப்பொத்தியபடி குப்புற படுத்திருந்தான்.பலநுறுபேரின் அலறல் சத்தம் பொத்திய அவனது கைகளையும் ஊடுருவி காதில் புகுந்துகொண்டது. சேச்சுக்கு (சென் பீற்றஸ் தேவாலயம்)அடிச்சிட்டாங்கள்.மோகன் மண்ணெண்ணை கானை கழட்டி பத்திரமாய் காவேலையால் முடிவிட்டு காயம்பட்டவர்களை மோட்டார் சைக்கிளில் வைத்தியசாலைக்கு ஏத்தி இறக்கினான்.150 பேரிற்கு மேல் இறந்து போயிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s157.photobucket.com/albums/t74/sathiri/?action=view&amp;amp;current=navali-church-boming.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i157.photobucket.com/albums/t74/sathiri/navali-church-boming.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;22.07.1995:ம் ஆண்டு&lt;br /&gt;.............................................................................................................................................................................................&lt;br /&gt;முன்னேறி பாய்ச்சல்லை இடம்பெயர்ந்தவையள் திரும்பவும் வீடுகளிற்கு வந்துகொண்டிருந்தார்கள்.இயக்கமும் 100 கோடி ரூபாய் தேவையெண்டு தேசிய பாதுகாப்பு நிதியெண்டு ஒரு திட்டத்தை தொடங்கி வீடு வீடாய் காசு சேர்க்கத் தொடங்கியிருந்தவை வெளிநாட்டுக்காரருக்கு ஒரு லச்சம் அரக்காது.மோகனிட்டையும் 25ஆயிரம் கேட்டு மோகன் கெஞ்சி கூத்தாடி வீட்டு நிலைமை விளங்கப்படுத்தி 15ஆயிரமாய் குறைச்சிருந்தான். அந்தக் காசும் ஒரு கிழைமைக்குள்ளை குடுக்கவேணும் அதோடை இரவுக்கு பொன்னாலைக்கு பங்கரடிக்க வரச்சொல்லி இயக்கம் கேட்டிருந்தது கட்டாயம் போகவேணும் என நினைச்சபடியே மோகனும் சங்கானை சந்தியிலை வழைமை போல பின்னேரமாய் ஒரு மேசையை போட்டு மண்ணெண்ணை யாவாரத்தை ஆரம்பித்திருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சுந்தரத்தார் நல்ல வெறியிலை கொஞ்சம் தள்ளாடியபடி பிளாஸ்ரிக் கானோடை வந்தவர் டேய் எனக்கு 5 லிற்றர் ஊத்து எண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜயா ஆழுக்கு ஒரு லீற்றர்தான் இருக்கிறதை எல்லாருக்கும் பகிரவேணும்.அதுவும் முக்கியமா படிக்கிற பிள்ளையளிற்கு.உங்களுக்கெதுக்கு 5 லிற்றர்.&lt;br /&gt;&lt;br /&gt;காசை எடுத்து எறிஞ்சவர்"டேய் உனகென்ன காசுதானே வேணும் இந்தா.. ....ஊத்து நான் தோட்டம் செய்யப்போறன் ஊத்து.&lt;br /&gt;&lt;br /&gt;பிள்ளையளும் மனிசியும் பிரான்சிலை பேசாமல் நீங்களும் போய் சேருறதை விட்டிட்டு தோட்டம் செய்யப் போறாராம்.இந்தாங்கோ ஒரு லீற்றர்தான் விரும்பினால் வாங்குங்கோ இல்லாட்டி போங்கோ.&lt;br /&gt;&lt;br /&gt;முறைத்தபடி ஒரு லீற்றர் மண்ணெண்ணையுடன் ..உந்த அகதி நாயளிற்கு என்ன செய்யிறன் பாரெண்டு புசத்தியபடி போய்க்கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அகதிகளாய் இடம்பெயர்ந்து வந்திருந்தவர்கள் அவரின்ரை வீட்டு கிணத்திலை தண்ணி அள்ளினம் எண்ட கோபத்திலை கிணத்துக்கை மண்ணெண்ணையை ஊத்திப்போட்டாராமெண்டு காவல்துறை சுந்தரத்தாரை பிடிச்சுக்கொண்டு போட்டினமாம் எண்டு அடுத்தநாள் கேள்விப்பட்டான்.சனம் மண்ணெண்ணெய்க்கு படுற பாட்டிலை விசர் மனுசன் கிணத்துக்கை ஊத்திட்டுதாம்.நல்ல மிதி குடுக்கவேணும்.என்று மனதில் நினைத்தபடி. அடுத்தநாள் இயக்கத்திற்கு குடுக்கவேண்டி 15 ஆயிரத்தை எண்ணியெடுத்து கடதாசில் சுற்றி தலைமாட்டில் வைத்தபடிபடுத்துக்கொண்டான்.&lt;br /&gt;மறுநாள் காலை செல் சத்தங்களுடன் விடிந்தது சிறிது நேரத்திற்கு பின்னர் மக்களை அத்தியாவசிய பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு வெளியேறுமாறு இயக்கம் அறித்துக்கொண்டு திரிந்தார்கள்.ஆமி வந்தாலும் இயக்கம் திரும்பவும் பிடிக்கும்தானே என்கிற நினைப்பில் மோகனும் தன்னிடமிருந்த மண்ணெண்ணையை பத்திரமாக ஒரிடத்தில் ஒழித்து வைத்துவிட்டு இருந்த பணத்தையும் ஆளிற்கொரு மாற்றுத்துணிகளை மட்டும் எடுத்தபடி குடும்பமாக வெளியேறினார்கள். போற வழியிலையிலையே அரசியல் துறை அலுவலகத்திலை அவைக்கு குடுக்கவேண்டிய காசையும் குடுத்திட்டு போகவேணும் என மனதில் நினைத்தபடி "எணோய் நான் ஜயாவையும் கடைசியையும் ஏத்திக்கொண்டு போறன் நீ மற்றவளோடை கோப்பாய் பக்கமாய் வாந்துசேர் " என்றுவிட்டு ""முன்னேறிப் பாய்வதென்ன அம்மா நீ பின்னாடி ஓடுவதேன் சும்மா என்று சிட்டுவின் பாடலை முணு முணுத்தபடி தன்னுடைய 90 இயக்கினான்.தம்பிப் பிள்ளையரிற்கு இருமல் கூடிக்கொண்டே போனது. சூரியக்கதிரின் வெப்பமும் அதிகமாகிக்கொண்டே போனது.&lt;br /&gt;......................................................................................................................................................................................&lt;br /&gt;கோப்பாய் ..சாவகச்சேரி ..கிளாலி யெண்டு மல்லாவி வரை வந்து சேர்ந்தாயிற்று எங்கும் மக்கள் வெள்ளம் யார் எங்கே தங்குவதெண்டு தெரியவில்லை..வன்னியில் சொந்தங்கள் இருந்தவர்கள் பாடு ஓரளவு பரவாயில்லை .மற்றும்படி மரங்களின் கீழும் தரப்பாள்களும்.தடியில் கட்டிய சேலைகளும்தான் இருப்பிடமாகியது. தங்களின் நிலங்களையெல்லாம் மனிதர்கள் பிடித்துவிட்டார்கள் என்கிற கோபத்தில் பாம்புகளும் கலைத்து கலைத்து கொத்தியது. எங்காவது மிருகங்களை தேடியலைந்த நுளம்புகளிற்கு மனிதஇரத்தம் விருந்தாகி மலேரியாயும் வயிற்றுப்போக்கும்.தேசிய வியாதியாய்போனது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆறேழு லச்சம் சனத்தை திடீரெண்டு வெளியேறுங்கோ எண்டு சொல்லிப் போட்டாங்கள்.எங்கை போறது?? எங்கை தங்கிறது?? எத்தினை நாளைக்கு தங்கிறது எண்டு ஒரு இழவும் தெரியேல்லை. போற இடத்திலை சாப்பாடு தண்ணியாவது கிடைக்குமே எண்டும் தெரியாது. மூண்டு பேர் வெளிநாட்டிலை எண்டு சொல்லி மூண்டுலச்சம் காசு மட்டும் வாங்கிப் போட்டு இப்பிடி வீடு காணியெல்லாம் விட்டு அனாதையாய் நடக்கவைச்சிட்டாங்களே என்று புலம்பிய படியே .கொஞ்சம் .காசு.. நகை காணி உறுதி ..எல்லாத்தையும் ஒரு துவாயில் போட்டு சுருட்டி இடுப்போடு சேர்த்துக்கட்டியபடி மீனாச்சியும் தாமோதரத்தாருக்கு பின்னலை ஓடிக்கொண்டிருந்தாள்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோண்டாவிலில் இருந்து மகனைத்தேடத்தொடங்கிய மீனாச்சி வன்னிக்குள் வந்ததுதம் தேடலை தொடர்ந்துகொண்டேயிருந்தார். அவரின்ரை சொந்தக்கார பெடியனொருத்தன் இயக்கத்திலை அரசியல் பிரிவிலை பொறுப்பிலை இருந்தவன் .இயக்கப்பெயர் பொழிலன் அவனைத் தேடிப்பிடித்து விசயத்தை சொன்னவர். அவனை ஒருதரம் பாத்து கதைச்சால் மட்டும் போதும் எங்கையிருக்கிறாணெண்டு சொல்லு என்று அழுது புலம்பினார். மீனாச்சியின் அழப்பறை தாங்காமல் அவனும் எல்லா இடமும் தவகல் அனுப்பி ரகுவை கண்டு பிடித்தவன்... அம்மா ஆள் பயிற்சி முகாமிலை இருக்கு இப்ப ஒண்டும் செய்யேலாது பொறுத்தனீங்கள் இன்னும் ஒரு மாதம் பொறுங்கோ பயிற்சி முடிஞ்சு வந்ததும் பாக்கலாம்" மீனாச்சி கொஞ்சம் ஆறுதலடைந்தாலும் அடிக்கடி அரசில் பிரிவு முகாமிற்கு போய் பொழிலனை நச்சரித்தபடியேதான் இருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ரகுவிற்கு பயிற்சிக்கு போனதிற்கு பிறகுதான் ஏனடா வந்தம் எண்டிருந்திச்சிது. நேரத்துக்கு நேரம் வித விதமான சாப்பாடு கைநிறைய காசு மோட்டார் சைக்கிளில் சினேகிதங்களோடை ஜாலியாய் ஊர் சுத்தித் திரிந்தவனிற்கு ...பயிற்சி முகாமில் ஒவ்வொருநாளும் ஒரேசாப்பாடு கல்லு மண் கடிபடும் . அவிச்ச கடலைக்குள்ளை சிலநேரம் பூச்சி புளுவும் அம்பிடும் . கொட்டில்லை மணல்தரையிலை படுக்கை... சிலநேரம் பங்கர் .நுளம்பு இலவச இணைப்பு.எல்லாத்துக்கும் மேலை காலங்காத்தாலை பயிற்சி தொடங்கிறதுக்கு அடிக்கிய விசில் சத்தத்தை கேக்க உயிர் போறமாதிரி இருக்கும். தப்பியோடுவமா எண்டு சில நேரம் யோசிச்சிருக்கிறான். ஆனால் பயிற்சி முகாம் தொடங்கி ஒரு கிழைமையிலை தப்பியோடின ஒருத்தனை திரும்ப பிடிச்சுக்கொண்டுவந்து எல்லாருக்கும் முன்னாலை அடிச்ச அடியை பாத்த ரகுவுக்கு வயித்தை கலக்கியது. ஓடுற யோசினையை கைவிட்டவன் அதுமட்டுமல்ல நாள் செல்லச்செல்ல பயிற்சியும் பழகிப்போனது.ஒருமாதிரி பல்லைக்கடித்படி பயிற்சியை முடித்துவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;பயிற்சி முடிந்து வேயொரு முகாமிற்கு அனுப்பபட்டிருந்த ரகுவை பொழிலனே நேரடியாக தேடிவந்து அழைத்துப்போய் தன்னுடைய அரசியல் பிரிவு முகாமில் வைத்து மீனாச்சியிடம் ஒப்படைத்துவிட்டு&lt;br /&gt;அக்கா ஆளை கூட்டிக்கொண்டு போங்கோ நான் அவனின்ரை பொறுப்பாளரோடை கதைச்சு மூண்டுநாள் லீவு கேட்டு கூட்டியந்தனான்..தேடிவாறஅளவிலை வைக்காமல் மூண்டாம் நாள் ஆளை கொண்டுவந்து இஞ்சை விடவேணும் பிறகு எனக்கு பிரச்சனையை தரக்கூடாது... என்று பொழிலன் கண்டிப்பாக சொல்லியனுப்பி விட்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன தளுதளு வெண்டிருந்த என்ரை பிள்ளை இப்பிடி காஞ்சு கறுத்துப்போய் வருத்தக்காரன் மாதிரி வந்து நிக்கிது ..இதெல்லாம் உனக்குத் தேவையோடா என்று புலம்பியபடியே மீனாச்சி ரகுவை கட்டிப்பிடித்து அழுதபடியே அழைத்து போனார்.&lt;br /&gt;அந்தக் கஸ்ரமான சூழ்நிலையிலும் மீனாச்சி காசை விட்டெறிந்து ரகுவிற்கு பிடிச்சமாதிரி விதம் விதமாய் சமையல் சாப்பாடு தடல்புடலாய் நடந்தது .கண்மூடி முழித்தது போலை மூண்டுநாள் ஓடிவிட்டது. ரகு திரும்ப முகாமிற்கு போகவேணும்.&lt;br /&gt;தம்பி நான் அடிச்சுப்போட்டன் எண்டுதானே இயக்கத்துக்கு ஓடினனி.. இனி அடிக்கமாட்டனடா திரும்பி வாடா தளுதளுத்தார் தமோதரத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;எடேய் உன்ரை காம்ப் எங்கையிருக்கெண்டு காட்டு நான் வந்து உன்ரை பொறுப்பாளரோடை கதைச்சு கையிலை கால்லை விழுந்தாவது உன்னை கூட்டிக்கொண்டு வாறன் சொல்லடா என்றபடி ரகுவைக்கட்டிப்பிடித்து அழுதார் மீனாச்சி&lt;br /&gt;&lt;br /&gt;ரகுவுக்கும் அழுகையாய் வந்தது ""அங்கையெல்லாம் ஒருத்தரும் வரேலாது எங்கடை காம்ப் வன்னிவிளாங்குளத்திலை இருந்து உள்ளுக்கை காட்டுக்கை போகவேணும்.கொஞ்நாள் போகட்டும் நானே பொறுப்பாளரோடை கதைச்சிட்டு வாறன்.""&lt;br /&gt;அரசியல் முகாம்வரை தாமோதரத்தாரும் மீனாச்சியும் கொண்டுபோய் ரகுவை விட்டுவிட்டார்கள்.சில மாதங்கள் கடந்தது தாமோதரத்தாருக்கு இலண்டன் ஸ்பொன்சர் சரிவந்து அவர் மகளிடம் போய்விட்டார். மீனாச்சியோ ரகுவை விட்டு வரமாட்டன் எண்டு அடம் பிடித்து நிண்டதாலை அவரது ஸ்பொன்சர் இழுபட்டது. தாமோதரத்தார் லண்டன் போய் சேந்ததும் மீனாச்சி அதிரடி திட்டத்தில் குதித்தார் .பொழிலனின்ரை அரசியல் முகாமிற்கு போனவர் ரகுவை கொண்டுவாங்கோ இல்லாட்டி அன்னம் தண்ணி இல்லாமல் இதிலையே சாகப்போறனெண்டு முகாமுக்கு முன்னாலை குந்திவிட்டார்.&lt;br /&gt;மனிசி கொஞ்சநேரம் குந்தியிருந்திட்டு பேசாமல் போயிடும் எண்டுதான் பொழிலன் நினைத்தான்.ஆனால் மனிசி அங்கையே படுத்திட்டுது.ஒரு நாள் போயிட்டுது மனிசியை விடுப்புப் பாக்கிற சனமும் சமாதானப்படுத்தி வீட்டை கூட்டிக்கொண்டு போறதுக்கு சொந்தபந்தங்களும் முகாமுக்கு முன்னாலை குவியத் தொங்கிட்டினம். பொழிலனிற்கு தர்மசங்கமாய் போகவே ரகுவின்ரை முகாம் பொறுப்பாளரோடை வோக்கில் தொடர்புகொண்டு விசயத்தை சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;முகாம் பொறுப்பாளர் ரகுவை கூப்பிட்டு&lt;br /&gt;உன்ரை அம்மா பொழிலன்ரை காம்ப் வாசல்லை ஒரே பிரச்சனையாம் இந்தா அவாவோடை கதைச்சு சமாதானப்படுத்தி அனுப்பிவிடு இந்தா வோக்கியிலை கதைச்சுப்பார் இல்லாட்டி நேரை போய் கதைக்கப்போறியா ??நேரிலை போய்த்தான் கதைக்கவேணுமெண்டால் நானும் கூடவாறன். வோக்கியை நீட்டினான்.&lt;br /&gt;&lt;br /&gt;இல்லையண்ணை ................&lt;br /&gt;&lt;br /&gt;என்ன வோக்கிலை சொன்னால் கேக்கமாட்டாவே சரி வெளிக்கிடு நேரிலை போய் கதைச்சிட்டு வலருவம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவுகும் இல்லை.....&lt;br /&gt;&lt;br /&gt;அப்ப என்ன செய்யப்போறாய்.??&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா என்ன சொன்னாலும் கேக்கமாட்டா....................&lt;br /&gt;&lt;br /&gt;ம்........&lt;br /&gt;&lt;br /&gt;நான் முதல் வீட்டை போட்டு வரேக்குள்ளையே சொல்லித்தான் விட்டவா&lt;br /&gt;&lt;br /&gt;என்வெண்டு???&lt;br /&gt;&lt;br /&gt;ரகுவிற்கு நாக்கு வரண்டது மெண்டு விழுங்கியவனாய்.."கெதியாய் இயக்கதை விட்டிட்டு வரச்சொன்னவா.....&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்கு?????&lt;br /&gt;&lt;br /&gt;எழுதித் தந்திட்டு போகலாமெண்டு................................&lt;br /&gt;&lt;br /&gt;அங்கிருந்த மேசையில் ஓங்கி கையால் அடித்த பொறுப்பாளர்." என்னடா விழையாடுறீங்களா?? நினைச்ச உடனை வாறதுக்கும் விருப்பமில்லாட்டில் போறதுக்கும் நாங்கள் என்ன சத்திரமா நடத்திறம்.??ஒருதனை எடுத்து பயிற்சி குடுத்து வெளியாலை கொண்டு வாறதுக்கு எவ்வளவு கஸ்ரப் படுறம் ..எவ்வளவு செலவெண்டு தெரியுமோ??&lt;br /&gt;&lt;br /&gt;வேணுமெண்டால்கேக்கிற காசை அம்மாட்டை காசு வாங்கி தாறன்..நான் போப்போறன்.&lt;br /&gt;&lt;br /&gt;பொறுப்பாளரின் கை ரகுவின் கன்னத்தில் இறங்கியது." கழட்டடா குப்பியை நீ நினைச்சமாதிரியெல்லாம் போக ஏலாது .இனி நீ ஆயுதத்தை கையாலை தொடக்கூடாது நான் மேலிடத்திலை கதைச்சுப்போட்டுத்தான் முடிவு சொல்லுவன்.எனக்கு முன்னாலை நிக்காதை போ எண்டு கத்தினான்.&lt;br /&gt;&lt;br /&gt;ரகு குப்பியை கழட்டி பொறுப்பாளரிடம் குடுத்துவிட்டு கன்னத்தை தடவி அழுதபடி போனான். முகாமிலிருந்த மற்றையவர்கள் கிண்டலடிக்கத் தொடங்கினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ரகு இயக்கத்தை விட்டு போவதாக எழுதிக் குடுத்ததன் பின்னர் ஆறு மாதங்கள் தண்டனைக்காலமாக அறிவிக்கப்பட்டு பயிற்சி முகாமிற்கு அனுப்பப்பட்டான்.ஆறு மாத காலமும் பயிற்சி முகாமில் சமையல் செய்வது.முகாமை துப்பரவாக்குவதுதான் அவனது வேலை.அங்கையும் அவனிற்கு கிண்டல்கள் தெடரத்தான் செய்தது. ஆறுமாத காலத்தை முடித்து வீட்டிற்கு போய்விட்டான். மீனாச்சிக்கு இப்பதான் பெரியநிம்மதி. ஆனால் அடுத்த பிரச்சனை இயக்கத்தின்ரை பாஸ் முறையாலை இரண்டு பேரும் ஒரே நேரத்திலை வன்னியை விட்டு வெளியாலை பேகேலாத நிலைமை. என்ன செய்யலாமெண்டு மண்டையை போட்டுக் குளப்பிக்கொண்டிருந்வளிற்கு திடீரெண்டு வசந்தியின் நினைப்பு வந்தது.&lt;br /&gt;வசந்தி மீனாச்சியின்ரை பெறாமகள் முறை .யாழ்ப்பாணத்திலை காதலிச்சு ஒரு பெடியனோடை ஓப்போய் பிரச்சனையெல்லாம் நடந்தது.சாதி மாறி காதலிச்ச பிரச்சனையெண்டபடியாலை தமிழீழ காவல்துறை தலையிட்டு அவைதான் கலியாணமும் கட்டி வைச்சவை. அதுக்குப்பிறகு அவளோடை மீனாச்சி கதைக்கிறேல்லை.இடம் பெயந்து வந்து இப்ப இஞ்சைதான் பக்கதிலை எங்கையே கொட்டில் போட்டு இருக்கினமாம். கையிலை குழந்தோடை நிவாரணம் வாங்கிக் கொண்டு போகேக்குள்ளை அவளை மீனாச்சி பாத்திருக்கிறா.முதல்வேலையா வசந்தியை தேடிப்பிடிக்கவேணும்.&lt;br /&gt;வசந்தியை தேடிப்பிடிச்ச மீனாச்சி " எடியேய் உன்னை அண்டைக்கு றோட்டிலை கண்டனான் நீ சரியாய் கஸ்ரப் படுறியாம் எண்டு கேள்விப்பட்டன்.என்னதான் பிரச்சனையெண்டாலும் ஒருத்தருக்கு கஸ்ரம் எண்டால் சொந்த இரத்தம் துடிக்குமல்லோ. அதுதான் உன்னைத் தேடித்திரிஞ்சனான்.இந்தாடி பிடியடி" எண்டு பத்தாயிரம் ரூபாயை வசத்தியின் கைகளில் திணித்தார். வசந்தியும் கண்கலங்கினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தடுத்து சிலநாட்கள் வசந்தியை சந்தித்து கதைச்ச மீனச்சி ஒருநாள் மெதுவாய் விசயத்தை அவிழ்த்தார். " எடியே உன்னட்டை சொன்னால் என்ன... எனக்கும் இப்ப ஏலாது அடிக்கடி நெஞ்சுவலி வருகிது இஞ்சை எல்லா டாக்குத்தர் மாரிட்டையும் காட்டிப்போட்டன். கொழும்புக்கு போகச்சொல்லிப் போட்டாங்கள்.நான் தனியா என்னெண்டு போறது இவன் ரகுவையும் கூட்டிக்கொண்டு போனால்தானே எனக்கு உதவியாயிருக்கும். ஆனால் இவங்கள் குறுக்காலை போவார் ஒராழுக்கு அதுவும் எனக்கு மட்டும்தானாம் பாஸ் தருவாங்கள். அப்பதான் உன்ரை நினைப்பு வந்தது. நான் கேட்டால் நீ மாட்டன் எண்டே சொல்லப் போறாய். நீ பிணை நிண்டியெண்டால் நான் போய் வருதத்தை மாத்திப் போட்டு வந்திடுவன். அதுவும் நீ சும்மா பிணை நிக்கவேண்டாம். நீயும் பாவம்தானே பிள்ளைகுட்டிக்காரி உனக்கு 50 ஆயிரம் தாறன். ஒண்டும் அவசரமில்லை யோசிச்சு உன்ரை மனிசனிட்டையும் கேட்டு சொல்லு. ஆனால் கட்டாயம் திரும்வந்திடுவன் பயப்பிடத் தேவையில்லை. ஏதோ நான் வருத்தத்திலை வன்னிக்கை சாகிறதோ இல்லை கொழும்பு போறதோ எண்டிறது உன்ரை கையிலைதான் இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;வசந்தியும் யோசித்தாள் இருக்கிற கஸ்ரத்திற்கு ஜம்பதாயிரம் ரூபாய் கிடைச்சால் எவ்வளவு பெரிய உதவி அதே நேரம் வீட்டுக்காரர் எல்லாருமே வெறுத்து ஒதுக்கி இருக்கேக்குள்ளை மீனாச்சி பெரியம்மாதான் தேடிவந்து உதவினவா. வருத்தம் எண்டு தானே உதவி கேக்கிறா.பாவம் இந்த உதவிகூட செய்யாட்டில் மனிசரில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மீனாச்சியும்.வசந்தியும் புலிகளின் பாஸ் அலுவலகம் நோக்கி நடந்தனர்.&lt;br /&gt;.........................................................................................................................................................................&lt;br /&gt;12.01.1997 ம் ஆண்டு பாரிஸ்&lt;br /&gt;&lt;br /&gt;மோகன் கேஸ் எழுதிறவருக்கு முன்னாலை பயபக்தியாய் அமர்ந்திருந்தான்&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வெள்ளைப் பேப்பரையும் பேனையையும் எடுத்தவர்&lt;br /&gt;தம்பி உம்மடை முழுப்போர் குடும்ப விபரத்தை சொல்லும் என்றபடி எழுதத் தொடங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ரை பேர் தம்பிப் பிள்ளை மோகன் குடும்பத்திலை நான் இரண்டாவது மூத்த அக்க ஒராள் கட்டிட்டா அவாக்கு இரண்டு பிள்ளையள். எனக்குப்பின்னாலை இரண்டு தங்கச்சியள்&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா அம்மா??&lt;br /&gt;&lt;br /&gt;ஜயா இல்லை மோசம்போட்டார் ஒரு தங்கச்சி இயக்கத்துக்கு போட்டாள் அம்மாவும் கடைசியும்தான் வன்னிக்கை இருக்கினம்.&lt;br /&gt;&lt;br /&gt;கேஸ் எழுதிறவனின்ரை கண்ணிலை ஆயிரம் வாற் பிரகாசம் மின்னியது. பேப்பரில் எனது தந்தை இலங்கை இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார். என்று எழுதிஅதை சுத்தி பேனையாலை ஒரு வட்டம் போட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் என்ன எழுதுகிறார் என மெதுவாக எட்டிப்பார்த்த மேகன் எட உங்கடை ஜயாவும் ஆமி சுட்டு மோசம் போட்டாரே என்றான்&lt;br /&gt;&lt;br /&gt;தம்பி நான் என்ரை கேஸ் எழுதேல்லை உமக்குத்தான் கேஸ் எழுதிறன் உம்மடை அப்பாவைத்தான் ஆமி சுட்டுகொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜயோ அண்ணை என்ரை ஜயாவை ஆமி சுடேல்லை ஜயா ஒரே கசிப்படி அதோடை இடைக்கிடை அம்மாக்கும் அடி. ஒருநாள் நெஞ்சை பொத்திக்கொண்டு படுத்திருந்தார். பக்கத்திலை சங்கானை ஆஸ்பத்திரிக்கு நான் தான் கொண்டு போனனான். குளிசை தந்திச்சினம்அவை சொல்லிச்சினம் ஆளுக்கு கான்சர் போலை கிடக்கு அனேகமா ஈரல் பெரிஞ்சிருக்கவேணும் பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு போங்கோ எண்டிச்சினம். பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு போனம். கண்போம்.. ஆளுக்கு ஈரல் பொரிஞ்சுதான் போச்சுது கான்சர் உடைனை மகறகமவுக்கு கொண்டு போங்கோ எண்டாங்கள். மகறகம எங்கை கிடக்கெண்டு நாலு பேரிட்டை விசாரிச்சு இஞ்சை மாமாவுக்கும் போனடிச்சு காசு அனுப்பச்சொல்லிப்போட்டு காவலிருந்தம். மாவின்ரை காசு வாறத்துக்கு முதல் யாழ்ப்பாணத்துக்கு ஆமி வந்திட்டான்.நாங்களும் இடம் பெயர்ந்து வன்னிக்குள்ளை வந்திட்டம். மல்லாவிக்கை தான் முழுச்சனமும் அடைஞ்சுபோய் இருந்தனாங்கள். சாதரமணமாய் காயப்பட்டவைவைக்கே மருந்து வசதியள் இல்லாத நேரம். ஜயாக்கு கான்சர் மருந்துக்கு எங்கை போறது அவர் வன்னியிலையே செத்துப்போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;தம்பி ஆயிரம் பேருக்கு மேலை கேஸ் எழுதி விசா எடுத்துக்குடுத்திருக்கிறன்.நீர் சொல்லுறமாதிரி நான் கேஸ் எழுதினால் நீர் கெலிங்பாற பிற்றக்கொட்டுவாதான்.உமக்கு விசா வேணுமெண்டால் நீர் விபரங்களை மட்டும் சொல்லும் நான் எழுதித்தாற கேசை அனுப்பும்.இல்லாட்டி நடையை கட்டும் எனக்கு அடுத்த கேஸ் பின்னாலை நிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இல்லையண்ணை மன்னிச்சுக்கொள்ளுங்கோ நீங்களே விரும்பினமாதிரி எழுதுங்கோ.&lt;br /&gt;&lt;br /&gt;சரி தம்பி உடம்பிலை ஏதும் காயங்கள் கிடக்கோ&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் யோசித்தவன் ம் ..ஓமண்ணை ஒருக்கா என்ரை 90 யின்ரை சைலெஞ்சர் பட்டு வலக்கால்லை எரிஞ்சகாயமெண்டு இப்வும் பெரிசாய் இருக்கு பிறகு கடைசியாய் கிளாலியை கடக்கேக்கை ஆமி அடிச்ச செல் ஒண்டு நான் சரியாய் விழுந்து படுக்கிறதுக்கிடேலை கிட்ட வந்து விழுந்து வெடிச்சதிலை எனக்கு பின்பக்கத்திலை செல் பீஸ் பட்ட காயம் ஒண்டும் இருக்கு&lt;br /&gt;&lt;br /&gt;உமக்கு ஒவ்றாவிலையே காட்தான் அரக்காது. ஆனால் நான் சொல்லுற புறுவ்கள் எல்லாம் உடைனை எடுக்கவேணும். நான் எழுதித் தாறதுகளை உடைனை எடுக்கிற வேலையை பாரும்.என்றபடி ஒரு துண்டில் மரணஅத்தாட்சிப்பத்திரம். காயம் பட்டதற்கான வைத்தியரின் அத்தாட்சி பத்திரங்கள்.கிராம சேவையாளரின் உறுதிக்கடிதம் என்று எழுதி நீட்டியவர். இதுகளை கெதியாய் எடும். அதோடை உம்மடை அப்பா செத்தது சூட்டுக்காயத்தாலையெண்டும் உமக்கு வலக்காலிலை எரிகுண்டு பட்டதெண்டும் பின்னாலை செல்பட்டதெண்டும் விபரமாய் டொக்ரர் சேட்டிபிக்கற்றுகளும்.எழுதியெடும்&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணை இதெல்லாம் ஊரிலையிருந்தே எடுக்கவேணும்...இழுத்தான்&lt;br /&gt;&lt;br /&gt;தம்பி விபரமில்லாத ஆளாய் இருக்கிறீர். உதிலை லாசப்பல் பக்கம் போனாலே ஆரையும் பிடிச்சு லைசன்சிலை இருந்து பிறப்பத்தாட்சி பத்திரம் மரண அத்தாட்சி பத்திரம் ஊர் விதானை மாரின்ரை கடிதம் எல்லாம் எடுக்கலாம். ஆனாலும் பிரெஞ்சுக்காரன் கெட்டிக்காரன் கனக்க கள்ளமெண்டு பிடிச்சிருக்கிறான். அதாலை கண்டவையிட்டையும் போய் வாங்காமல் நான் ஒரு நம்பர் தாறன் அவருக்கு போனடியும் எல்லாம் செய்து தருவர். ஒறிச்சினல்மாதிரியே இருக்கும் என்றபடி ஒரு விசிட்டிங் காட்டை நீட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;மோகன் பவ்வியமாக எழுந்து கையில் என்பலப்பில் இருந்த ஒருதொகையை கொடுத்து அண்ணை இந்தாங்கோ அட்வான்ஸ் மிச்சம் கேஸ் எடுக்கேக்கை தாறதெண்டு மாமா சொன்னவர்.&lt;br /&gt;&lt;br /&gt;ம்...நான் கடன் வியாபாரம் செய்யிறேல்லை தம்பி கட்டாயம் கேஸ் எடுக்க வரேக்குள்ளை மிச்சத்தை கொண்டுவரவேணும் அப்பதான் கேஸ் தருவன். வாறகிழைமை வாரும். எதுக்கும் வரமுதல் ஒரு போனடிச்சு முடிஞ்சிட்டுதோ எண்டு கேட்டிட்டுவாரும் நான் சொன்ன புறுவுகள் மறக்கவேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;விடைபெற்றான் மோகன் அடுத்தாவாரம் தயாரிக்கப்பட்ட ஆவணங்களுடன் கேசை எடுப்பதற்காக மிகுதி பணத்துடன் போயிருந்தான் ஆவணங்களை சரிபார்த்தவர். தமிழில் எழுதிய வாக்குமூலம் ஒன்றினையும் அதன் பிரெஞ்சு மொழிபெயர்ப்பையும்கொடுத்து. தம்பி தமிழிலை உள்ளதை வடிவாய் மனப்பாடம் பண்ணி வையும் ஒவ்றா காரன் குறுக்கு கேள்வியள் கேட்பான் டக்கு டக்கெண்டு பதில் சொல்லவேணும். முக்கியமாய். திகதி மாதங்கள் கவனம்.எல்லாத்தையும் ஒரு போட்டோகொப்பி எடுத்துப்போட்டு ஒவ்றாவுக்கு அனுப்பும்.&lt;br /&gt;&lt;br /&gt;மோகன் விடைபெற்றான் போகிற வழியிலேயே இரயிலில் பலதடைவை படித்துப்பார்த்தவன் ""சங்கானை ஞானவைரவரே எனக்கு காட் கிடைக்க வேணும் நல்லதொரு வேலை கிடைக்கவேணும். கல்வீடு கட்டவேணும்.உனக்கு வடைமாலையோடை பொங்கல்"".என்று நேத்திக்கடன் வைச்சபடி கேசை அனுப்பிவிட்டிருந்தான்.விசா பதில் வரும்வரை லாசப்பல் தமிழ்க்கடை ஒன்றில் சாமான் அடுக்கும் கள்ளவேலையும் ஒன்று கிடைத்திருந்தது. ஞான வைரவரிற்கு வடைமாலை விருப்பம் இருந்ததோ இல்லாட்டி கேசை படிச்ச ஒவ்றா காரனிற்கு பரிதாபம் ஏற்பட்டதோ தெரியாது மோகனை கூப்பிட்டு கனக்க கேள்வி ஒண்டும் கேக்கேல்லை அகதி அந்தத்து ஏற்கப்பட்டுள்ளது என்று கடிதம் வந்திருந்தது. வைரவரே நானும் உன்னை ஏதோ சிம்பிளா நினைச்சன் நீ பேய்காய்தான் உனக்கு வடைமாலை என்று மனதில் நினைத்தபடி வேலை ஒன்று தேடத்தொடங்கியிருந்தான்.&lt;br /&gt;00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000&lt;br /&gt;20.06.1997 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம்.&lt;br /&gt;விமான நிலையத்தினுள் புகுந்துவிட்டிருந்த ரகுவிற்கு கண்ணாடி தடுப்பின் பின்னால் நின்றபடி கையசைத்படி மீனாச்சி நின்றிருந்தாள். கண்கள் கலங்கியிருந்தது ரகு கைகாட்டியபடியே மறைந்து போனான். "போய் இறங்கி போன் வந்ததும் வெள்ளவத்தை பிள்ளையாருக்கு நேத்தி வைச்சபடியே தங்க எலி வாங்கிக் குடுங்கவேணும். " என்று மனதில் நினைத்தபடி வாகனத்தில் போய் மீனாச்சி ஏறினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மீனாச்சி வவுனியா தாண்டியதுமே தாண்டிக்குளத்துக்கு அங்காலை நினைக்கவே விரும்பவில்லை நடந்தெல்லாம் கெட்ட கனவாய் மறந்து போனாள். அதாலைதான் பிறந்து வளந்த ஊர்கோயில் தாமரை வைரவருக்கே நேத்தி வைக்காமல் வெள்ளவத்தை பிள்ளையாருக்கு நேர்த்தி வைத்திருந்தாள். ரகுவும் இத்தாலியிலை இறங்கி சுவிசுக்குள்ளை போய் சேந்திட்டானாம் எண்டு செய்தி கிடைச்சதும். இரண்டு பவுணில் ஒரு எலி செய்து பிள்ளையார் கோயில் ஜயரின் அரிச்சனைத்தட்டில் போட்டாள்.ஜயருக்கு வாயெல்லாம் பல்லு......அடுத்த ஒரு மாதத்திலேயே மீனாச்சிக்கும் கொலண்ட் ஸ்பொன்சர் கிடைத்து வந்து சேர்ந்துவிட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;சுவிசில் அகதி விசா கேட்ட ரகு சுறிச்மானிலத்திற்கு அருகில் ஒரு இடத்திற்கு ஒரு முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தான்.உதவிப்பணம் மட்டும் கிடைத்து வேலை ஏதும் செய்யமுடியாது என்பதால் பொழுது போக்குவதற்கு சுரிற் பாணெவ்(இரயில் நிலையம்)அங்கைதான் சில தமிழ் பெடியளோடை பழக்கம் கிடைச்சது அவர்கள்தான் பாம்பு குறூப் எண்டு பிறகு தெரியவந்தது.ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் சுறிச் பொது பூங்காதான் அவர்களது சந்திப்பிடமாக மாறியிருந்தது.இரவு நேரம் செல்லச் செல்ல பியர் . கட்டை.கஞ்சா.என்று அந்தப்பூங்கா அவர்களிற்கு ஒரு சொர்க்கமாக மாறிவிடும்.இடையிடை வேறு யாருடனாவது அல்லது வேறு தமிழ் குழுக்கழுடனும் மோதல்களும் நடக்கும்.சண்டைகளை பாத்தால் ஏதும் பெரிய விடயமாக இருக்காது பெரும்பாலும் பெட்டையளை அடிப்படையாக கொண்டு தொடங்கினதாய்தான் இருக்கும்.பெட்டையை நக்கலடிச்சது.வெவ்வேறை குறுப்பிலை இருந்த பெடியள் ஒரு பெட்டையை லவ் பண்ணினது. பெட்டையை பின் தொடர்ந்து போனது இப்பிடித்தான் சண்டையள்.. சூறிச் பொலிசும் ஆரம்பத்திலை தமிழ் குழு சண்டையளை ஏதோ பெரிய அளவிலை நினைச்சுத்தான் தனிப்படை அமைச்சு வேகமாய் விசாரணை எல்லாம் செய்தவங்கள். பிறகு விசாரிச்சு கொண்டு போனதிலை அவங்களுக்கே வெறுத்துப்போச்சு. இப்பவெல்லாம் தமிழ் பெடியள் சண்டை எண்டு தகவல் போனாலே ஆறுதலாய் ஆடி அசைஞ்சு எல்லாம் முடிஞ்சால் பிறகு வந்து அங்கை காயப்பட்டவையளை ஆஸ்பத்திரிக்கு அனுபிப்போட்டு விசாரணையை தொடங்குவாங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பாம்பு குறூப்பிலை சேர்ந்த ரகு தானும் புலியள் இயக்கத்தின்ரை றெயினிங். தவளைப்பாச்சல் நடவடிக்கைக்கு தானும் தவளை மாதிரியே பாய்ஞ்சு பழகின்னனான்.முல்லைத்தீவு முகாமுக்கள்ளை முதலாவதா புகுந்ததுநான்தான் என்று கொழுத்தி விட்ட வாணங்களை பலரும் நம்பி அண்ணாந்து பாத்தனர். அதுகளுக்குள்ளை நடந்த சண்டை ஒண்டிலை ரகு ஒருத்தனை கத்தியாலை குத்திப்போட்டான் குத்து வாங்கினவன் தப்பிட்டான்..குத்துவாங்கின பெடியனுக்கு விசா இல்லை அதோடை அவனும் அடிபாட்டு குறூப் எண்டதாலை அவனும் பொலிஸ் கேஸ் எண்டு போகேல்லை. அதோடை ரகு கீரோவாகிட்டான். அதுக்குப்பிறகு எந்த சண்டையெண்டாலும் பாம்பு குழு அவனைத்தான் கூப்பிடுவினம்.&lt;br /&gt;.............................................................................................................................................................................................&lt;br /&gt;01.05 1998 ம் ஆண்டு&lt;br /&gt;அன்று மேதினம்.தொழிலாளர் தினம்&lt;br /&gt;இது ஒரு தனி வரலாறை உலகில் உருவாக்கிய நினைவு நாள். 1886 இல் அமெரிக்காவின் சிக்காகோ நகரில் வெடித்த ஒரு வரலாற்று புரட்சி உலகில் அனைவரின் வாழ்விலும் மாற்றத்தை வழங்கியது! அப்படி என்ன நடந்தது?நீராவி எந்திரத்தின் கண்டுபிடிப்பு உலகில் புதிய எந்திரங்களையும், தொழிற்கூடங்களையும் உருவாக்கியது. தொழிற்புரட்சி இந்த உலகில் அதிரடி மாற்றங்களை வழங்கிய காலமது. ஆலைகள், சுரங்கங்கள் என எங்கும் புது உருவாக்கங்களால் உலகம் வேகமாக சுழன்றது. வேலை, உற்பத்தி பெருக்கம் என உலகம் வேகமாக சுழன்ற வேளை குடும்பங்களில் அதன் தாக்கம் இருந்தது. எல்லோரும் 16, 18 மணி நேரம் வரை சுரங்கங்களிலும், ஆலைகளிலும் கடுமையாக உழைத்தனர். அப்போதெல்லம் கழைப்புடன் வேலையை விட்டு வரும்வேளை குழந்தைகள் நித்திரையில் இருப்பார்கள். இப்படியே காலங்கள் ஓடியத்தால் பல குழந்தைகளுக்கு தனது வீட்டுக்கு வரும் அந்த மனிதர் (அப்பா) யார் என்றே தெரியவில்லை. பாசத்தை பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பில்லாமல் போனது. உறவுகளோடு கலந்து வாழவும், ஓய்வு எடுத்துக்கொள்ளவும் வாய்ப்பு இல்லாமல் இயந்திரம் போன்ற வாழ்க்கையானது. ஆலை நிர்வாகமும், முதலாளிகளும் உற்பத்தி, இலாபம் என்பதில் மட்டும் கவனமாக இருந்தனர்.வேலை நேரத்தை குறைக்கவேண்டும் என பல போராட்டங்கள் நடந்தும் அந்த குரலுக்கு செவிசாய்க்காமல் அடிமைத்தனமான அணுகுமுறைகள் தொடர்ந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;வேலைநேரம் வரையறுக்க கேட்டு 1886 மே 1இல் அமெரிக்காவின் பல பகுதிகளிலுமாக சுமார் ஆறு லட்சம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். அதன் ஒரு கட்டமாக 8 மணி நேரம் வேலை என்ற கோரிக்கையை முன் வைத்து சிக்காகோ நகரில் "மெர்க்காமிக் ஹார்வெஸ்ட் ஒர்க்ஸ்" என்ற ஆலையின் தொழிலாளர்கள் போராடினார்கள். போராட்டம் தொடர்ந்ததால் ஆலை மூடப்பட்டது, துப்பாக்கி தோட்டாக்கள் தொழிலாளர்களை கொன்றுகுவித்தது. அந்த அடக்குமுறையில் பிறந்தது 8 மணி நேரம் என்ற உரிமை! வடிந்த குருதியுடன் உயிர் சாயும் வேளையில், உதிரத்தில் தோய்த்து கரம் உயர்த்தி முழக்கமிட்ட அந்த மாமனிதர்களால் நமது உரிமைகள் பிறந்தன. அதில் ஒரு உரிமை தான் 8 மணி நேரம் வேலை என்ற உரிமை கிடைத்தது. சிகப்பு சிந்தனையின் தொடக்கமும், சிகப்பு கொடி உருவான வரலாறும் இதுவே.&lt;br /&gt;சிக்காகோ நகரில் கொன்று குவிக்கப்பட்ட தொழிலாளர்களின் நினைவாக அவர்களிற்கு மே மாதத்தில் மலர்கின்ற சிறிய வெள்ளைப்பூக்களால் அஞ்சலி செலுத்து முகவாகவும் தொழிலாளர்களின் உரிமைகளை மீண்டும் உறுதிப்படுத்தவும் உலகம் முழுவதுமே தொழிலாளர்கள் மே முதலாம் திகதி ஒன்று கூடி ஊர்வலம் நடாத்தி ஆடிப்பாடி மகிழ்வார்கள். அப்படி நடக்கும் ஒரு நிகழ்வில் ஒரு நூற்றாண்டு கடந்தும் மே தினக்கூட்டத்தில் இரத்தக்களரி நடக்கும் இடமாக சுவிஸ் சூறிச் மானிலம் விளங்கியது. அதுவும் ஈழத் தமிழர்களால்.&lt;br /&gt;&lt;br /&gt;பல வருடங்களாக சுவிஸ் மக்களாலும் சுவிஸ்வாழ் வேற்றின மக்களாலும் தொழிலாளர் கட்சியின் செங்கொடிகள் ஏந்தி ஆடிப்பாடி மகிழ்ச்சியாய் நடந்துகொண்டிருந்த ஊர்வலத்தில் எண்பதுகளின் இறுதியில் சிவப்பு கறுப்பு கலந்த கொடிகளுடன் இணைந்து கொண்டார்கள். டொச்சு .பிறெஞ்சு.இத்தாலி.துருக்கி ஆகிய மொழிகளுடன் "அனைத்து அடக்கு முறைகளையும் உடைத்தெறிவோம் "என்று தமிழிலும் கோசங்கள் கிழம்பியது. இவர்கள் சிறீலங்காவை சேர்ந்தவர்கள் இனம் மொழி மதம் இவையனைத்தையும் கடந்து உழைக்கும் வர்க்கம் என்கிற உணர்வுடன் மற்றைய இனத்தவர்களும் கைகொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தடுத்த வருடங்களில் வேறும் பலர் இணைந்து கொண்டார்கள் அவர்கள் கொடியிலும் சிவப்பு வர்ணம் இருந்தது ஆனால் கோசம் வேறாக இருந்தது ""எங்கள் தலைவன் பிரபாகரன் புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்."" ஊர்வலம் நகர்ந்து கொண்டிருந்தது அனைத்து அடக்கு முறைகளையும் உடைத்து எறிவோம் என்கிற கோசங்களும். எங்கள் தலைவன் பிரபாகரன் என்கிற கோசமும் மாற்றமடைந்தது ..அடியடா அவனை உதையடா.வெட்டடா.. என்றும் வேறு சில கெட்ட வார்ததைகளாகவும் மாறிப்போனது. எங்கும் இரத்தக்களரி மற்றைய இனத்தவர் திகைத்து நின்றனர். வருடத்தில் ஒரேயொருநாள் நிம்மதியாக இருக்கலாமென நினைத்திருந்த சூறிச் காவல்த்துறையினரிற்கு வேலை வந்து விட்டது. பலரையும் கைது செய்து விசாரித்தனர். அடிபட்டது இலங்கைத்தமிழர்கள்தான் ஆனால் இரண்டு பிரிவு வாக இருக்கின்றனர்அப்பொழுதுதான் அவர்களிற்கு புரிந்தது நாங்கள் தான் முதல்லை ஊர்வலம் நடத்த தொடங்கினாங்கள் அதாலை . அவங்களை ஊர்வலம் நடக்க விடமாட்டம். எண்டனர் ஒரு குறூப். நாங்கள்தான் நாட்டுக்காக போராடிக்கொண்டிருக்கிறம் எங்கள் தலைவன்தான் உயர்ந்தவன் எனவே நாங்கள் அவங்களை ஊர்வலம் நடத்த விடமாட்டம் என்றனர் மற்றைய குறூப். இரண்டு குறூப்பையும் விசாரித்த அதிகாரிக்கு தலையை சுத்தியது. தங்கடை நாட்டிலை வாழ வழியில்லையெண்டு இஞ்சை வந்து தஞ்சம் கோரிப்போட்டு எங்கடை நாட்டிலை யாரார் ஊர்வலம் நடத்தலாம் நடத்தக்கூடாது எண்டு இவங்களே தீர்மானிப்பாங்களாம். என்று நினைத்தபடி கைதுகள் தண்டனைகள் தொடர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் வருடாவரும் மேதினக்கூட்டத்தில் சண்டையும் தொடர்ந்தது.எண்பதுகளில் சுவிஸ் நாட்டில் தமிழர்கள் குறிப்பாக சூறிச் நகரம் புளொட் அமைப்பு மற்றும் புளொட் ஆதரவாளர்களையே அதிகமாகக் கொண்டிருந்தது.புலிகளின் அமைப்பிற்கு முரளி பொறுப்பேற்றபின்னர் அவரின் போச்சாற்றல் மற்றும் நிருவாகத்திறமை என்பன சுவிஸ்தமிழர்களை புலிஆதரவாளர்களாக மாற்றியது.இவருடைய காலத்திலேயே மேதினக் கூட்டத்தில் புலிக்கொடிகளுடனும் பிரபாரனது படங்களுடனும் மக்கள் தொகை அதிகரித்திருந்தது. ஆனால் அவரது தனிப்பட்ட சில தகாத செயற்பாடுகளும் நிதி கேட்டு சிலரை நேரடியாக மிரட்டியதாலும் சுவிஸ் பொலிசாரால் கைது செய்யப்பட்டு சிறையவாசம் அனுபவிக்க வேண்டி வந்தது.&lt;br /&gt;அன்று மேதினம் ரகு குழுவினர் ஒரு காரின் டிக்கியில் பேஸ்போல் மட்டைகள் பொலுகள் உடலில் மறைக்கப்பட்ட கத்திகளுடன் தயாரானார்கள். அந்தக் குழுவின் தவைர் குகன் மற்றவர்களிற்கு திட்டத்தை விளங்கப்படுத்தினான் .இதுதான் இவங்களுக்கு கடைசி ஊர்வலம் இண்டைக்கு எப்பிடியும் ரஞ்சனை போடுறது. எல்லாரும் ஒதுங்கிட்டாங்கள் அவன் மட்டும்தான் இப்ப தனியா ஆடுறான் அவனுமில்லாட்டி அடுத்தவருசம் அனைத்து அடக்கு முறையளையும் உடைப்பம் எண்டு கத்த ஒருத்தரும் வரமாட்டாங்கள். பஸ் ஸ்ரான் தாண்டி பார்க் வற இடத்திலை கரை நிப்பாட்டி வைப்பம். நாங்களும் சனத்தோடை ஊர்வலமாய் வந்து காருக்கு கிட்டை நிப்பம் அங்கள் வந்ததும் தொடங்குவம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் திட்டம் தீட்டிக்கொண்டிருக்கும் பொழுதே புளொட் ஆதரவாளர்களும் திட்டம் தீட்டினார்கள். அவங்கள் எப்பிடியும் வருவாங்கள் நாங்கள் எங்கடையாக்களோடை போகாமல் அவங்களுக்கு முதல் வெள்ளையளோடை கலந்தபடி வெள்ளையளுக்கு நடுவிலையே போவம். அடிவிழுந்தால் வெள்ளையளிற்கும் சேந்துதான் விழும் அப்பதான் பிரச்சனை பெரிசாகும். புலியள் எண்டால் இப்பிடித்தான் எண்டு எல்லாருக்கும் தெரியவரும். இவர்கள் திட்டம் இப்பிடியிருக்க சூறிச் நகர காவல்த்துறை எப்பிடியும் சிறிலங்கன் அடிபடுவாங்கள் என்று எதிர்பார்த்தபடி தங்களது திட்டத்துடன் ஊசார் நிலையில் நின்றிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊர்வலம் நகர்ந்து கொண்டிருந்தது மேளதாளங்கள் பாண்ட வாத்திய இசைகள்.பலமொழிகளில் கோசங்கள்.இவற்றுடன் நட்டுவமேளம் நாதஸ்வர இசையுடன் எங்கள் தலைவன் பிரபாகரன் புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற கோசமும் உரத்து ஒலித்து .ரகு குழுவினர் கார்டிக்கியை திறந்து ஆளிற்கொன்றை கையில் எடுத்தனர்.கொக்கியே விழையாடத் தெரியாத ரகுவின் கையிலும் ஒரு கொக்கி மட்டை.புளொட் கொடி ஏந்தியிருந்தவர்களை நோக்கி நகரத் தொடங்கினார்கள் சனங்கள் சிதறி ஓடத் தொடங்க ஊசார் நிலையிலிருந்த காவல்த்துறை செயலில் இறங்கியது.&lt;br /&gt;ரகு ஒரு மாதகாலம் கவலில் வைக்கப்பட்டு அவனிற்கான அகதி அந்தஸ்த்து கோரலும் நிராகரிக்கப்பட்டு பதினைந்து நாட்களில் சுவிஸ் நாட்டை விட்டு வெறியேறிவிடவேண்டும் அதன் பின்னரும் சுவிசில் இருந்தால் இலங்கைக்கு நாடுகடத்தப்படுவான் என்று காவல்த்துறை எச்சரித்து விடுவித்திருந்தது.&lt;br /&gt;சுவிசில் ஜெனிவா ஊடாக பிரான்ஸ் நோக்கி போய்க்கொண்டிருந்த கார் ஒன்றில் ரகு அமர்ந்திருந்தான். &lt;br /&gt;000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000&lt;br /&gt;20.02.2000 ஆண்டு. பாரிஸ்&lt;br /&gt;மோகனிற்கு நிரந்தரமாக உணவு விடுதியென்றில் வேலை கிடைத்துவிட்டது. பாரிஸ் 20 ல் ஸ்ருடியோ(சிறியஅறை)ஒன்றையும் எடுத்து தனியாகவே தங்கியிருந்தான்.வெளிநாடு வந்த கடனை அடைப்பதற்காக பெரிய சீட்டும் ஒண்டு போட்டிருந்தான். அன்று மாலை வேலையால் வந்தவன் அவசரமாக தமிழ் தொலைக்காட்சியை போட்டான் காரணம் வன்னியில் ஓயத அலைகள் சுழன்றடித்துக்கொண்டிருந்த நேரம் அது. எனவே வேலையிலேயே மோகனிற்கு கவனம் போகவில்லை ஊரிலை என்ன நடக்கிறது புலிகள் எங்கையெங்கை பிடிச்சிட்டினம் எந்தப்பக்கமாய் முன்னேறிக்கொண்டு போகினம் என்று அறியிற ஆவல்.இடைக்கிடை கைத்தெலைபேசியிலை தெரிஞ்சவர்களிடமெல்லாம் புதினம் கேட்டுக்கொண்டே வேலையை செய்துகொண்டிருந்தான். தமிழ் தொலைக்காட்சியில் விசேட செய்திகளில் புலிகள் ஆனையிறவுப் பகுதியை அண்டிபகுதிவரை முன்னேறி தாக்குதல் நடந்து கொண்டிருப்பதாகவும். ஆனையிறவுத்தளம் விரைவில் வீழலாமென எதிர்பாக்கப்படுவதாகவும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அது மட்டுமில்லை ஆய்வாளர் வல்லவன் கூட தொலைபேசியூடாக வந்து புலிகள் ஆனையிறவை எப்படித்தாக்குகிறார்கள் என்னென்ன வியூகத்தில் தாக்குகின்றார்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார்.உவர் வல்லவன் ஆயிறதிலை சரியான கெட்டிக்காரன்.அரசியல்.. இராணுவத்தாக்குதல்..கலாச்சாரம் எண்டு என்ன கிடைச்சாலும் சப்பி சக்கையாக்கி துப்பிப் போடுவார். அதாலையே அவரை சக்கை லைக்கை லா வல்லவன் எண்டுதான் எல்லாரும் சொல்லுறவை.&lt;br /&gt;&lt;br /&gt;மோகனிற்கு ஒரே புளுகம் எப்பிடியும் ஆனையிறவை பிடிச்சிடுவாங்கள்.என்ரை தங்கச்சியும் ஏதாவது ஒருஇடத்திலை நிண்டு அடிபட்டுக்கொண்டிருப்பாள்.கடவுளே ஒரு கெடுதியான செய்தியும் வரக்கூடாது எண்டு சுவரில் மாட்டியிருந்த கலண்டர் பிள்ளையாரை பார்த்து மனதில் வேண்டிக்கொண்டான். வீட்டு அழைப்பு மணி அடிச்சது எடுத்து யாரது எண்டான். நான்தான் உதயன் .....&lt;br /&gt;உதயன் பாரிசில் புலிகள் இயக்கத்திற்கு நிதி சேகரிக்கும் ஒருவன்.அவன் ஒரு உணவுவிடுதியில்தான் வேவை செய்கிறான் வேலை ஓய்வு நேரம் மற்றும் லீவுநாள் எல்லாம் இயக்கத்தின்ரை பிரசுங்களை கொண்டு திரிந்து விக்கிறது.நிதி சேகரிக்கிறதுதான் இவனது இரண்டாவது வேலை . மெல்லிய கறுத்த உருவம் முன் நெற்றிவழுக்கை தோளில் தொங்கும் பை அது நிறைய புலிகள் அமைப்பின் பிரசுரங்கள் சி டிக்கள் புத்தகங்கள். ஒரு கணக்கு கொப்பி தூக்க முடியாமல் துக்கிக் கொண்டு அலைவான். இயக்கத்துக்கு ஜம்பது ரூபாய் தருவதாக சொல்லி விட்டு ஜம்பது தரம் அலைய வைத்தாலும் சினக்காமல் சிரித்தபடியே "வணக்கம் இண்டைக்காவது தருவியளோ இல்லாட்டி இன்னொரு நாளைக்கு வரவோ" எண்டுதான் கேட்பான். எங்கை தமிழாக்கள் இருந்தாலும் மணந்து பிடித்து அவையளின்ரை வீட்டு அழைப்பு மணியை அடித்துவிடுவான். புலிகள் இயக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த இயக்கத்தை வெறுப்பவர்கள் கூட ஆரம்பத்தில் அவனை திட்டி அனுப்பினாலும் பிறகு உதயனை பார்த்து பரிதாபப் பட்டு பணம் குடுத்திருக்கினம். காரணம் அவனின்ரை கதை அணுகு முறை அப்பிடி.&lt;br /&gt;மோகன் கதைவைத் திறந்துவிட உள்ளே வந்த உதயன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன இண்டைக்கு லீவுதானே&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை ஒருத்தனுக்கு சுகமில்லையெண்டு காத்தாலை வேலைக்கு கூப்பிட்டாங்கள் போட்டு இப்பதான் வந்தனான்.இந்தாங்கோ உங்கடை காசு எடுத்து வைச்சிருக்கிறன்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி பாக்கிறியள் போலை எப்படி அடி ..இதுதான் கடைசி அடியாய் இருக்கும் ..&lt;br /&gt;&lt;br /&gt;உண்ணானை சொல்லுறன் பெரிய சந்தோசம். ஆனால் என்னமாதிரி ஆனையிறவு விழுமோ??&lt;br /&gt;&lt;br /&gt;என்ன இப்பிடி கேட்டிட்டியள் உள்ளை இறங்கி நிக்கிறது ஆர்??பால்ராச் அண்ணையல்லோ.விழாமல் எங்கை போகப்போகுது.&lt;br /&gt;&lt;br /&gt;அவரைபத்தி கேள்விப்பட்டிருக்கிறன் ஆள் பெரிய விண்ணன் தானாம். ஆனையிறவு விழவேணும் அதுதான் என்ரை ஆசை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப உள்ள நிலைமையிலை நிதி கொஞ்சம் கூடுதலாய் தேவைப்படுதாம் அதலை அவசரகால நிதி சேகரிக்கிறம் குறைஞ்ச தொகை ஆயிரம் யுரோ கேக்கிறம் ஆனால் அது குலுக்கல் முறையிலை திருப்பித் தருவம்.&lt;br /&gt;&lt;br /&gt;இஞ்சை பாருங்கோ உதயன் அவசரகால நிதி அவசரமில்லாத நிதி எண்டெல்லாம் என்னட்டை கேக்ககூடாது . உங்களுக்கு ஆரம்பத்திலையே சொல்லியிருக்கிறன் எனக்கு வந்த கடன் இருக்கு. அதைவிட எனக்கொரு கனவு இருக்கு கல்வீடு கட்டுறது. என்ரை தங்கச்சியும் இயக்கத்திலைதான் இருக்கிறாள்.என்ரை செலவுகளையும் சமாளிச்சுதான் ஒரு நாளைக்கு இரண்டு யூரோ எண்டு சேத்து உங்களுக்கு மாதம் அறுபது யூரோ தாறன்.அதைவிட சிடியள் புத்தகங்கள் கலண்டர் வாங்கிறன் இவ்வளவுதான் என்னாலை ஏலும்.இந்தாங்கோ அறுபது யூரோ.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்கம் ஆனையிறவு வரைக்கும் போயிட்டுது கூடுதலாய் ஒரு ஜம்பது யூரேவை குடுக்கலாமா எண்டு யேசித்தாலும். எதுக்கும் ஆனையிறவு விழட்டும் அடுத்தரம் சேத்து குடுக்கலாம் எண்டு நினைத்தபடி காசை நீட்டினான்.&lt;br /&gt;உதயன் கணக்கு கொப்பியை எடுத்து மேகன் அறுபது யூரோ எண்டு வரவு வைத்தவன் ""சரி கேட்டுப்பாத்தன் வசதி இருந்தால் முயற்சி பண்ணி பாருங்கோ. சந்திப்பம்."&lt;br /&gt;உதயன் போய்விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லாசப்பல் பக்கம் போனால் இன்னமும் செய்தியள் ஏதாவது கிடைக்கும். வரேக்குள்ளை ஒரு பங்காட்டு இறைச்சியும் ஒரு சப்பட்டையும் வாங்கி கொண்டந்து சமைச்சிட்டு சப்பட்டையை அடிச்சிட்டு சாப்பிட்டு ஒரு படம் பாக்கலாம் எண்டு நினைச்சபடி வெளிக்கிட்டான்.என்ன தான் ரி வி ..றேடியோவிலை செய்தி கேட்டாலும் எங்கடையாக்களிட்டை லா சப்பலிலை செய்தி கேக்கிறமாதிரி வராது.இயக்கம் ஒரு ராங்கை அடிச்சாலும் அதை பத்தாலை பெருக்கி பத்து ராங்க் அடிச்சிட்டாங்களாம் எண்டுவாங்கள். அதுவும் ஒருத்தன் தானே நேரை அடிச்சமாதிரி அக்சனோடை சொல்லுவான். அது பொய் எண்டு தெரிஞ்சாலும் கேக்க ஒரு திறிலாத்தான் இருக்கும்.........&lt;br /&gt;......................................................................................................................................................................................&lt;br /&gt;15.03.2009ம் ஆண்டு பாரிஸ் பிரான்ஸ் குற்றத்தடுப்பு பிரிவு பாரிஸ் அலுவலகம்.&lt;br /&gt;பாரிசின் குற்றத்தடுப்பு பிரிவு தலைமை அதிகாரி ஜோன் பியரின் அலுவலகம். ஜேன்பியர் ஜரோப்பாவிலிருந்து ஒலிபரப்பாகும் இரண்டு தமிழ் தொலைக்காட்சிகளையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டிருந்தான். ஜேன் பியரிற்கு தற்சமயம் முக்கியமானதொரு நடவடிக்கை ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. அது ஈழத் தமிழர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களில் வன்முறைகள் நடக்காமல் கண்காணித்து கட்டுப்படுத்தவேண்டும். இதுதான் அவனது இறுதி நடவடிக்கை இந்த நடவடிக்கை முடிந்ததுதம் அவன் வேலையிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ளப் போகிறான். இதே இவன் காவல் துறையில் இருந்துவிட்டு பின்னர் குற்றத்தடுப்புப் பிரிவின் சாதாரண அதிகாரியாக 1988 ம் ஆண்டு கடைமையில் இணைந்த பொழுதும் ஒரு ஈழத் தமிழரை புலன் விசாரணை செய்ததுடன் ஆரம்பித்திருந்தான். 88 ம் ஆண்டு இறுதியில் பிரான்ஸ் பெல்ஜியம் எல்லையில் ஒரு தமிழரின் காரை எல்லைக்காவல் துறையினர் சோதனையிடுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;காரில் சக்திவாய்ந்த தொலைத்தொடர்புக்கருவிகள் மற்றும் ஒரு வானொலி இயக்குவதற்கான கருவிகளும் இருந்தது உடனடியாக அவரை கைது செய்ததோடு பொருட்களையும் பறிமுதல்செய்த எல்லைக்காவல் காவல்துறையினர் பரிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரிற்கு தகவல் அனுப்பியிருந்தனர். பாரிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் அவரது வீட்டினை உடைத்து சோதனை செய்தபொழுது மேலும் சில தகவல் தொடர்பு கருவிகளுடன் புலிகள் இயக்கத்தின் பத்திரிகைகள் பிரசுரங்கள் என்பனவும் அகப்பட்டது. எல்லையில் கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளிற்காக பாரிசிற்கு கொண்டுவரப்பட்டார். புதிதாக குற்றப்புலனாய்வு பிரிவில் பதவிற்றிருந்த ஜேன்பியர் அவரை விசாரிக்கிறான்.அந்தப் பொருட்கள் அனைத்தும் புலிகள் இயக்கத்திற்காக பெல்யியம்புறுக்செல்லில் சபீனா விமானத்தில் ஓற்றப்பட்டு அவனும் அதனுடன் பயணிக்கவேண்டும் இடையில் கைது செய்யப்பட்டுவிட்டான். அந்த விசாரணைகளின் போதுதான் ஜேன் பியரிற்கு சிறிலங்கா தீவில் புலிகள் இயக்கம் பற்றிய விபரங்கள் தெரியவருகின்றது. ஆனால் அவனது விசாரணைகள் எல்லாம் கைப்பற்றப் பட்ட பொருட்களால் பிரான்ஸ் நாட்டிற்கு ஏதாவது கெடுதல்கள் சதி வேலைகள் உண்டா என்பதுதான். அப்படி எதுவும் இல்லை அதனால் கைது செய்யப்பட்டவர் பொருட்கள் பறிமுதல் செய்ததுடன் விடுதலை செய்யப் படுகிறார்.அவரை விடுதலை செய்தாலும் தன்னுடைய தொழில் ரீதியாக புலிகள் இயக்கம் அதன் செயற்பாடுகள் முக்கியமாக பிரான்சில் அவர்களது செயற்பாடுகளை அறிந்து கொள்ளவும் அதனை கண்காணிக்கவும் விடுதலை செய்யப்பட்டவருடன் தனிப்பட்ட நட்பை பேணுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் நிறையவே ஈழத்தமிழர் பற்றிய விபரங்களையும் அறிந்து கொள்கிறான். அதன்பின்னர் இலங்கையில் இந்தியப் படைகாலத்தில் புலிகள் இந்தியப்படை மோதல்கள் நடந்து கொண்டிருந்த பொழுதுதான் அனிதா பிரதாப் சி என் என் செய்தி சேவைக்காக பிரபாகரன் பற்றி தயாரித்திருந்த சிறு விவரணம் வெளியாகியிருந்தது அதனை பிரான்சின் பிரபல பத்திரிகையான. லு மோந் பத்திரிகை பிரபாகனின் படத்துடன் கட்டுரையாக வெளியிட்டிருந்தனர்.பிரபாகரனைப்பற்றி ஏற்கனவே அறிந்திருந்த ஜேன்பியரிற்கு அந்தக் கட்டுரை அவரின் மீது ஒரு ஈர்ப்பை கொடுத்திருந்தது. காரணம் இந்தியப்படையின் ஆளணி ஆயத பலம் என்பதும் புலிகளின் பலம் எனபதும் ஊகிக்கக்கூடியதுதான்.. கட்டுரையில் வெளியாகியிருந்த பிரபாகரனின் படத்தினை வெட்டியெடுத்து அதை சிறிய பிறேமில் போட்டு தன்னுடைய குடும்ப அங்கத்தவர்களின் படங்களுடன் அலுவலக மேசையில் வைத்திருந்தான். அதன் பிறகு எத்ததையோ வடிவங்களில் பிரபாகரனின் படங்கள் வெளிவந்திருந்த போதும் அவன் அந்தப் படத்தை மாற்றவில்லை அதுமட்டும்தான் அவனை ஈர்ந்திருந்தது. அதே நேரம் அவனிடம் விசாரணைக்கு வரும் தமிழர்களிடமெல்லாம் பிரபாகரனின் படத்தைக்காட்டி இவரைத் தெரியுமா. இவரை எனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் சொல்லத் தவறுவதில்லை..&lt;br /&gt;&lt;br /&gt;அவன் அப்படி சொல்லும் பேதெல்லாம் விசாரிக்கப்படும் தமிழர் இவன் பிரபாகரனை தனக்கு பிடிக்கும் எண்டு சொல்லி தானும் எங்களுக்கு சார்பானவன் எண்டு காட்டி எங்களிட்டை உண்மையை கறக்கப் பாக்கிறானோ??எண்டு நினைச்சவையளும் உண்டு அதே நேரம் பிரபாகனை தெரியுமெண்டு சொன்னால் எப்பிடி தெரியும் எங்கை தெரியுமெண்டு கேள்வி கேட்டு என்னையும் புலி எண்டு உள்ளை தூக்கி போட்டுவானோ எண்டு பயந்து தெரியாது எண்டு சொன்னவையளும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s157.photobucket.com/albums/t74/sathiri/?action=view&amp;amp;current=prabhakaran.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i157.photobucket.com/albums/t74/sathiri/prabhakaran.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தெரியாது எண்டு யாராவது சொல்லும் போதெல்லாம் தலையாட்டி சிரிப்பான். தொடர்ச்சியாக தமிழர்களுடன் பழகியதில் கொஞ்சம் தமிழும் கொச்சையாய் கதைக்கப் பழகியிருந்தான் விசாரணை செய்பவர்களை வணக்கம் சுகமாக இருக்கிறீங்களா என தமிழில் கேட்டபடி விசாரணையை தொடங்குவான். அதுவரை அவனை தமிழில் திட்டிக்கொண்டிருந்தவர்கள் அவனது தமிழை கேட்டதும் திடுக்கிட்டு நான் திட்டினது எல்லாம் விழங்கியிருக்குமோ என நினைச்சு பல தடைவை மன்னிப்பு கேட்ட சம்பவங்களும் உண்டு .அதே நேரம் புலிகள் அமைப்பின் பிரான்ஸ் கட்டமைப்பில் சட்டத்திற்கு புறம்பான செயற்பாடுகளில் யார் இறங்கினாலும் அவன் தன் கடைமை தவறியது கிடையாது கைது செய்து விசாரணை செய்து தண்டனை வாங்கிக் கொடுத்து விடுவான். அதுமட்டுமில்லை பாரிசில் இயங்கிய அனைத்து தமிழ் அடிபாட்டு குறூப்புகளின் பெயர்கள் அதன் உறுப்பினர்களின் விபரங்கள் எல்லாமே அவனிற்கு அத்துபடி. அவைகளில் பலரிற்கு தண்டனை வாங்கிக் கொடுத்திரக்கிறான். பிரான்சின் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரின் கைதுகளும் இவன் தலைமையிலான குழுவே தகவல்களை திரட்டி விசாரணைகளையும் செய்திருந்தனர்..இருபத்தியொரு ஆண்டுகள் கழித்து அவனது இறுதி நடவடிக்கையும் ஈழத்தமிழர் பற்றியதுதான். காரணம் ஈழத்தமிழர்கள் பற்றிய தகவல்கள் .அதுபற்றிய பரிச்சயமும் அவனிற்கு அதிகமாக இருந்ததால் அவனிடமே அந்த பொறுப்பு ஓப்படைக்கபட் பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜேன் பியர். அலுவலகத்தினுள் தேவன் நுளைந்தான். தேவன் அரச அங்கீகாரம் பெற்ற ஒரு மொழிபெயர்ப்பாளர். பாரிஸ் நகரில் குற்றச்செயல்களிற்காக கைது செய்யப்படும் தமிழர்களின் காவல்த்துறை விசாரணைகளின் போது கைது செய்யப்பட்டவர்களிற்கு பிறெஞ்சு மொழியறிவு இல்லாதிருந்தால் மொழிபெயர்ப்பிற்காக காவல்த்துறை அழைப்பவர்களில் தேவனும் ஒருத்தன்.&lt;br /&gt;&lt;br /&gt;தேவனிற்கு கொடுத்து வரவேற்ற ஜேன் பியர்.&lt;br /&gt;&lt;br /&gt;வணக்கம் தேவன் மீண்டும் உங்ளது சேவை எங்களிற்கு தேவை தற்சமயம் நடக்கும் ஊர்வலங்கள் ஆர்ப்பாட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கும் என நினைக்கிறேன். ஆர்ப்பாட்டங்களின் பொழுது யாராவது உணரச்சி வயப்பட்டு வன்முறைகளில் இறங்கலாம்..அல்லது இந் ஆர்ப்பாட்டங்களின் வன்முறைக் குழுக்கள் புகுந்து தமக்கு சாதகமாக்கி வன்முறையை துண்டலாம். அல்லது குழப்புவதற்காகவே வேறு சிலரும் முயற்சிக்கலாம். எது எப்படியோ பொது மக்களோ சொத்துக்களோ பாதிக்கப்படக்கூடாது அதுதான் எனது நோக்கம் . அதற்கான நான் ஒரு சிறப்புப் பிரிவை உருவாக்கியிருக்கிறேன். அதில் ஒரு பாண்டிச்சேரி தமிழரும் உள்ளார். ஆனால் அவரிற்கு உங்கள் வித்தியாசமான உச்சரிப்புக்கள் புரிவதில்லை. இந்த நடவடிக்கை முடியும் வரை எம்முடன் நீங்கள் ஒத்துளைக்கவேண்டும் முக்கியமாக ..பல தொலைபேசி உரையாடல்கள் உடனுக்குடன் எம
