Navigation


RSS : Articles / Comments


.. அன்று சிந்திய ரத்தம் தொடர் ...2

12:25 PM, Posted by sathiri, No Comment

புதிய தலைமுறை வார இதழில்
அன்று சிந்திய ரத்தம் தொடர் ...2

கிழக்கு நோக்கிய படையெடுப்பை கைவிட்டு வடக்கு நோக்கி படையெடுக்கும் முடிவை தனது கிழக்கு தளபதிகள் பலர் விரும்பவில்லைஎன்பதை அவர்களது முகத்தைப் பார்த்தே கணித்துக்கொண்ட பிரபாகரன் விருப்பமில்லாதவர்களை சமர்க்களம் அனுப்பினால் வெற்றிச் செய்திகள் வராது என்பதால்அவர்கள் தங்கள் இடங்களுக்கு திரும்பி காவலரண்களை பலப்படுத்தி இராணுவம் முன்னேறது தடுத்தாலே போதும் தேவை ஏற்பட்டால் அழைக்கிறேன் என்று சொல்லி அனுப்பிவிட்டு வடக்கு நோக்கிய படையெடுப்புக்கு ஆதரவு தெரிவித்த தளபதிகளான தீபன் மற்றும் துர்க்காவின் தலைமையில் அடுத்த கட்ட நவடிக்கைக்கு தயாரானார் .

ஆட்பற்றாக்குறை காரணமாக யாழ்ப்பாணம் நோக்கிய படையெடுப்புக்கு ஆண்களைவிட பெருமளவு பெண்போராளிகளே களமிறக்கப்பட்டிருந்தனர்.
ஈழப் போர் நான்கு எனப் பெயரிடப்பட்டு அவசர அவசமாக இரண்டு முனைகள் ஊடாக புலிகளின் படையணிகள் இறக்கப் பட்டன .யாழ் கண்டி வீதி ஊடாக முன்னேறியிருந்த புலிகள் அணியினர் சாவகச்சேரி நகரை தாண்டி கோப்பாய் பாலத்தையும் தாண்டி செம்மணி பகுதிவரை முன்னேறியிருந்தார்கள். அதே நேரம் யாழ் வடமராச்சி பக்கமாக முன்னேறிய புலிகளின் படையணி நாகர் கேயில் பகுதியில் பலமாக அமைக்கப்பட்டிருந்த இலங்கை இராணுவத்தின் சில காவலரண்களை மட்டுமே அழிக்க முடிந்ததோடு முன்னேற முடியாது சண்டையிட்டுக்கொண்டிருந்தார்கள்.இதற்கிடையில் யாழ் குடாவில் இருந்த இராணுவத்தினர் புலிகள் யாழையும் பிடித்து விடுவார்கள் என்கிற பயத்திலேயே இருந்தார்கள் .அதே நேரம் இலங்கை இராணுவத்தினர் ஒரு துப்பாக்கி ரவையை கூட எடுத்துச் சொல்ல அனுமதிக்க முடியாது சரணடைபவர்கள் பாதுகாப்பாக அவர்கள் வீடுகளிற்கு திரும்ப புலிகள் உதவுவார்கள் என்கிற் செய்தியும் பிரபாகரனை மேற்கோள் காட்டி உள்ளூர் பத்திரிகைகளில் வெளியாகியிருந்தது.யாழ் குடாவில் இருந்த சுமார் 50 ஆயிரம் வரையான படையினர் புலிகளிடம் சரணடைந்து தலை குனிந்து ஏ9 பாதை வழியாக வெளியேறி வருவதை கொழும்பில் இருந்த தளபதிகளும் அரசாங்கமும் விரும்பியிருக்கவில்லை.

அப்படியொரு நிலை வந்தால் யாழில் உள்ள படையினரை பத்திரமாக கடல்வழியாக வெளியேற்ற இந்தியாவின் உதவியினை நாடியிருந்தார்கள். இந்தியாவில் ஆட்சியிலிருந்த பாரதிய ஜனதா கூட்டணி அரசு அதற்கான ஏற்பாடுகள் செய்து இலங்கை படையினரை கப்பல் மூலம் வெளியேற்றி கேரளா பகுதிக்கு கொண்டு சென்று தங்க வைக் முடியும் என்கிற செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தநேரத்தில்தான். புலிகள் நாகர் கோயில் பக்கமாக உள்ள இலங்கை இராணுவத்தின் காவலரண்களை தாண்டி முன்னேற முடியாது நிற்பதையும் செம்மணிவரை முன்னேறியிருந்த புலிகளின் மற்றைய அணி மீண்டும் கோப்பாய் வெளியை தாண்டி சாவகச்சேரிக்கு பின் தள்ளப் பட்டிருப்பதையும் இலங்கை இராணுவ தலைமை அவதானித்து.அரச அதிபர் சந்திரிக்கா கதிரையில் நிமிர்ந்து உட்கார்ந்தார். அவர் முன்னால் நெளிந்து வளைந்து கொண்டிருந்த முப்படைத் தளபதிகளும் விறைப்பாய் மிடுக்கோடு நின்றார்கள்.அவர்களுக்கு புதியதொரு நம்பிக்கை பிறந்தது.
அதே நேரம் திடீரென புலிகளும் 24.12.2000 ம் ஆண்டு ஒரு தலைப் பட்சமாக யுத்த நிறுத்தம் ஒன்றினை அறிவித்தார்கள். புலிகள் யாழை கைப்பற்றுவதற்கான தங்கள் முழுப் பலத்தையையும் பிரயோகித்து பார்த்ததோடு யுத்தத்தால் களைத்துப் போயிருக்கிறார்கள் என்பதை இலங்கையரசு உணர்ந்தது .அவசரமாக திட்டங்கள் தீட்டப்பட்டது கழற்றிஎடுத்த கனரக பீரங்கிகள் எல்லாம் மீண்டும் பொருத்தப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் மீண்டும் ஆயுதங்கள் குவிக்கப் பட்டது .

 தங்கள் முழு பலத்தையும் வளத்தையும் ஒன்று திரட்டி 25.04.2001 அன்று அதிகாலை `ஹீனிகல(தீச்சுவாலை)என்கிற நடவடிக்கையை இலங்கை ராணுவம் ஆரம்பித்தார்கள் புலிகள் பின் தள்ளப் பட்டால் தொடர்ந்து சண்டையிட்டு இழந்த ஆனையிறவையும் மீட்டுவிடுவது இலங்கையரசின் திட்டமாக இருந்தது.மூன்று நாட்கள் நடந்த மோசமான தொடர் சண்டையில் புலிகளின் தரப்பில் சுமார் 350 பேர்வரை கொல்லப் பட்டும் ஏராளமானவார்கள் காயமடைந்து போகவும் மீண்டும் அவர்கள் சில கிலோமீற்றர்கள் முகமாலை வரை பின்னிற்கு தள்ளப்பட்டு அங்கு தங்கள் காவல்நிலைகளை புலிகள் பலப்படுத்தியிருந்தார்கள்.இலங்கையரசு நினைத்ததைப்போல ஆனையிறவை மீண்டும் கைப்பற்ற முடிந்திருக்காவிட்டாலும் யாழ்ப்பாணத்தினை தக்கவைத்ததில் நிம்மதியடைந்திருந்தனர்.அதே நேரம் இலங்கை இராணுவமும் களைத்துப் போயிருந்ததால் ஒரு யுத்த நிறுத்தத் திற்க்கு உடன்பட்டனர் .

பிரபாகரனின் திட்டத்தின் படி யாழ் நோக்கியா படையெடுப்பு தோல்வியில் முடிந்து போக கிடைத்த அவகாசத்தில் அவசரமாக அடுத்த திட்டத்தை நிறைவேற்றத் தொடங்கினார்கள் .அடுத்த திட்டம் என்னவெனில் ஆட்பற்றாக்குறையை போக்குவதற்கு தங்கள் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்த அனைவரிற்கும் ஆயுதப்பயிற்சி கொடுப்பது .அதாவது கட்டாய ஆட்சேர்ப்பு நடத்துவது.வீட்டுக்கு ஒருவர் கட்டாயம் புலிகளில் இனைய வேண்டும் என்கிற பிரசாரத்தை அரசியல் துறைப்பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் கடுமையாக்கினார் .எப்படியும் பத்தாயிரம் பேரையாவது இணைப்பது என்பது அவரது இலக்கு .அதற்கு உறுதுணையாக அரசியல் மகளிர் துறைப்பொறுப்பாளர் தமிழினியும் வேகமாக இயங்கினார் .பதினைந்து வயதிற்க்கு மேற்பட்டவர்கள் அனைவரும் அழைக்கப் பட்டனர் மறுத்தவர்கள் பலவந்தமாக பிடித்துச் செல்லப் பட்டனர் .திருமணமானவர்களை புலிகள் படையில் சேர்க்காது விட்டிருந்ததால் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பதினெட்டு வயதிற்கு முன்னர் பால்ய திருமணங்களை நடத்த தொடங்கியிருந்தனர்.அதனால் புலிகள் புதிதாக திருமனமானவர்களையும் தேடித் தேடிப்பிடித்து பயிற்ச்சி முகாமுக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர்

.இந்தக் கால கட்டத்தில் தான் உலக ஒழுங்கையே மாற்றியமைத்த அமெரிக்கா இரட்டைக் கோபுரத் தாக்குதல் 11.09.2001 நடந்தேறுகின்றது. இதனையடுத்து உலகப் பந்தில் ஒரு அரசு தவிர்ந்த அனைத்து போராட்ட ஆயுதக்குழுக்களுமே பயங்கரவாதிகள் என அமெரிக்கா அறிவித்து அந்த அமைப்புக்களை பட்டியலிட்டு தடையும் செய்தது அவர்கள் தயாரித்த பட்டியலில் புலிகளின் பெயரையும் இணைத்து விட்டிருந்தார்கள்.இந்தப் பட்டியலை ஜரோப்பிய ஒன்றிமும் நடைமுறைப்படுத்தியிருந்தது. இதனையடுத்து புலிகள் பேச்சுவார்த்தைக்கு தயார் என மீண்டும் அறிவிக்கவே நோர்வே சமாதான பேச்சு வார்த்தைகளிற்கு உதவுவதாக அறிவித்திருந்தாலும். அன்றைய சந்திரிக்கா அரசு அதனை இழுத்தடித்துக்கொண்டிருந்த நேரம் 2001ம் ஆண்டு வருட இறுதியில் நடந்த பொதுத் தேர்தலில் ரணில் வெற்றிபெற்று பிரதமரானதைத் தொடர்ந்து ரணிலும் பிரபாகரனும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.ரணில் ஏற்கனவே மேற்குலகத்திற்கு சார்பானவர் என்பதால் மேற்குலக நாடுகளும் இலங்கை பிரச்சனையை தீர்த்துவிடலாம் என்கிற நம்பிக்கை இருந்தாலும் ஏற்கனவே நடந்த பேச்சு வார்த்தைகளை புலிகளே குழப்பிருந்ததால் அவர்கள் இந்தத் தடைவையும் பேச்சுவார்தைகளை குழப்பாமல் கவனிக்கவும் பேச்சுவார்த்தையை குழப்ப இரு தரப்புமே முயற்சிக்கலாமென்பதால் நோர்வே .சவீடன்.பின்லாந்து.டென்மார்க்.ஜஸ்லாந்து அகிய நாட்டு உறுப்பினர்கள் அடங்கிய யுத்தநிறுத்த கண்காணிப்பு குழு ஒன்றையும் அமைத்தார்கள்.

இலங்கையில் மீண்டுமொரு சமாதான காலம் துப்பாக்கி சத்தம் இல்லாதுபோய் புலிகளும் ஆயுதமின்றி அரசியல் பிரிவினர் யாழ்பாணத்திற்குள் பிரவேசித்திருந்தார்கள்.அதே நேரம் புலிகளின் புலனாய்வு பிஸ்ரல் குழுவினரும் யாழிற்குள் நுளைந்து இராணுவத்துடன் இணைந்து இயங்கியவர்களை போட்டுத்தள்ளத் தொடங்கியிருந்தார்கள் இவை யுத்தமீறல்களாக பதிவாகிக் கொண்டிருந்தது.பேச்சு வார்த்தைகளுக்கான ஏற்பாடுகளையும் வரைபுகளையும் மேற்குலகம் ஏற்பாடு செய்துகொண்டிருந்தது .
.அப்போது தான் கருணாவை மட்டும் தனியாக சந்திக்கும்படி பிரபாகரனிடமிருந்து அழைப்பு கிடைக்கிறது .இது கருணாவும் எதிர்பார்த்த அழைப்புத்தான் .பிரபாகரன் முன்னால் போய் நின்ற கருணாவிடம் கிழக்கு மாகாணம் நோக்கிய படையெடுப்பு ஆலோசனையை கேட்காமல் வடக்கு நோக்கி நகர்ந்தது தவறுதான். பெரிய இழப்பு ஏற்பட்டு விட்டது.இந்த பேச்சு வார்த்தையில் வழக்கம் போலவே எனக்கு நம்பிக்கையில்லை இந்தக் காலத்தை நாம் பயன்படுத்தி மீண்டும் எம்மை பலப் படுத்தவேண்டும்.அடுத்ததாக ஒரு புதிய தாக்குதல் திட்டம் என்னிடம் உள்ளது.

அதுதான் எமது இறுதித் தாக்குதலாக இருக்கும் .அதோடு வடக்கு கிழக்கு முழுவதும் எமது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் தமிழீழப் பிரகடனம் செய்து விடலாம் அதன்பின்னர் சர்வதேசம் எம்மை அங்கீகரிப்பதை தவிர வேறு வழி இல்லை அவகளுக்குஓயாத அலைகள் மூன்றிட்கு நீகொடுததைப் போலவே இந்த இறுதி தாக்குதல் திட்டத்திற்கு மீண்டும் உன்னுடைய பெரும் ஆதரவும் உதவியும் தேவை என்று சொல்லி நிறுத்தி கருணாவை பார்த்தார்.
எப்போதுமே பிரபாகனுக்கு என்ன தேவை என்பதை அவர் கேட்பதற்க்கு முன்னரே உணர்த்து கொள்ளும் கருணாவிற்கு இந்தத் தடவையும் என்ன கேட்கப் போகிறார் என்பது புரிந்திருந்தது ஆனாலும் வழமைக்கு மாறாக புரியாதது போலவே மௌனமாக நிற்கவே கருணாவின் மௌனத்தை தெரிந்து கொண்ட பிரபாகரன் தன் குரலை உயர்த்தி "இதுதான் கடைசி யுத்தம் எனவே நீ உனக்கு தேவையான ஆட்களை அழைத்துக்கொண்டு கிழக்கிற்கு போய் உடனடியாக பத்தாயிரம் பேரை சேர்த்து பயிற்ச்சி கொடுத்து மீண்டும் வன்னிக்குள் அழைத்து வா .அதே நேரம் இங்குள்ள கிழக்கு மாகாணப் போராளிகளுக்கு நான் ஒரு கூட்டம் வைக்க வேண்டும் அதற்கான ஏற்பாட்டையும் செய்து முடி .நீ போகலாம் "...என்று கட்டளையிட்டார் .
கருணாவும் தலையாட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பிப் போய் தலைவர் சொன்னது போல ஒரு கூட்டத்தை ஒழுங்கு பண்ணினான்.அங்கு பேசிய தலைவர் "விரைவில் மீண்டும் யுத்தம் தொடங்கும்.பேச்சுவார்த்தை என்பது வெறும் கண்துடைப்புத்தான் எனவே இறுதி யுத்ததிற்கு தயாராக இருங்கள் அதே நேரம் புதியவர்களை இணைக்க கருணா அம்மானுக்கு உறுதுணையாக இருங்கள் .மீண்டும் அடுத்த யுத்தகளத்தில் சந்திப்போம் புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் " என்று பேசி முடித்தார் .ஓயாத அலை மூன்று வெற்றிக்குப் பின்னர் தலைவர் போராளிகளிடம் நேரடியாகப் பேசிய முதல் கூட்டம் அதுதான்.இங்கு தலைவர் பேசியதை கருணாவின் உதவியாளர் ஒருவர் வீடியோ பதிவு செய்துகொண்டிருந்தார் அந்த வீடியோ பதிவும் பின்னர் பேச்சு வார்த்தை மேசையில் புலிகளுக்கு நெருக்கடியை கொடுத்தது.

அன்று சிந்திய ரத்தம் ..

12:58 PM, Posted by sathiri, No Comment

புதிய தலைமுறை வார இதழில் ..புதிய தொடர்
அன்று சிந்திய ரத்தம் ...
30ம் திகதி ஏப்ரல் மாதம் 2000 ஆண்டு
புதுக்குடியிருப்பு பகுதியில் அமைத்திருந்த புலிகளின் இரகசிய முகாம் ஒன்றில் நிலத்தில் விரித்து வைக்கப்பட்டிருந்த பாரிய இலங்கையின் வரை படத்தில் தமிழீழப் பகுதிகள் சிகப்பு வர்ணத்தால் துல்லியமாக எல்லைக்கோடு பிரிக்கப் பட்டிருந்தது.வரைபடத்தின் சிங்களப் பகுதிகள் மீது வரிப்புலிச் சீருடையில் கைகளை கட்டியபடி கம்பீரமாக புன்னகைத்தபடி பிரபாகரன் நின்றிருக்க அவர் அருகே அதே சீருடையில் பொட்டம்மான் .தனித் தனியாகவும் ஒரே நேரத்திலும் பல அலைவரிசைகளில் பேசக் கூடிய அங்கிருந்த அதி சக்தி வாய்ந்த வோக்கி டாக்கியில் சங்கேத மொழியில் இடை விடாது தொடர்ந்து வரும் செய்திகளை தொகுத்து அதனை இயக்குபவர் சொல்லிக்கொண்டிருக்க பிரபாகரனின் மெய்ப்பாது காவலர் ஒருவர் உடனுக்குடன் அவரது காலடியில் கிடக்கும் வரை படத்தில்புலிகள் முன்னேறும் இடங்களை அம்புக்குறிகள் இட்டபடி விளக்கிக்கொண்டிருந்தார்.
மார்ச் மாதம் 26 ந் திகதி ஈழத்தின் குடாரப்பு பகுதியில் கடற்புலிகளால் தரையிறக்கப் பட்ட 1200 போராளிகளோடு பால்ராஜ் தலைமையில் தொடங்கப் பட்டதுதான் புலிகளின் ஓயாத அலைகள் 3 தாக்குதல் நடவடிக்கை.உள்ளே சுமார் பத்தாயிரம் ஸ்ரீலங்கா இராணுவத்தையும் வெளியே தொடர்ச்சியாக 55 ஆயிரம் ஸ்ரீலங்கா இராணுவத்தையும் கொண்டிருந்த ஆனையிறவுபடைத்தளம் 35 நாட்கள் தொடர்ச்சியான முற்றுகை தாக்குதலாலும் முற்றுகைக்குள் இருந்த இராணுவத்தினருக்கு உதவிக்கு வந்த படைகளின் மீது நடத்திய ஊடறுப்பு தாக்குதலாலும் ஆனையிறவு படைத்தளம் புலிகளால் கைப்பற்றப் பட்ட பின்னர் உற்சாகத்தோடு நிலப்பரப்புகளை தங்கள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தபடி நான்கு பக்கமும் தமிழீழத்தின் எல்லைகளை நோக்கி தொடர்ந்து முன்னேறும் செய்திகள் தான் இப்போது வந்து கொண்டிருக்கின்றது .
இடையே கொசுறுத் தகவலாக சிறிலங்காவின் 53ஆம் படையணியின் தளபதியாக விளங்கிய காமினி ஹெட்டியாராச்சி பதவியிலிருந்து விலக்கப்பட்ட செய்தியும் வந்து சேர்க்கிறது .பால்ராஜ்சின் அதிரடி திட்டங்களும்.கருணாவின் துல்லியமான ஊடறுப்பு தாக்குதல்களையும் எதிர் கொள்ள முடியாமல் சிங்களப் படைகள் ஆயுதங்களை எறிந்துவிட்டு ஓட்டம் பிடிக்கத் தொடங்குகிறார்கள் .பலர் தங்கள் இராணுவ சீருடைகளை கழற்றி எறிந்து விட்டு மக்களின் வீடுகளுக்குள் புகுந்து கையில் கிடைத்ததை அணிந்து கொண்டும் சிலர் யட்டியோடு ஓடிய சம்பவங்களும் நடந்தது .புலிகளின் படையணிகள் நான்குபுறமும் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தனர் .இவர்களின் வெற்றிகளை ஒரு கிரிக்கெட் கமேன்றியைப்போல செய்திகளில் கேட்டுக் கொண்டிருந்த வெளிநாட்டுத் தமிழர்கள் கைதட்டி விசிலடித்தும் கேக் வெட்டி பட்டாசு கொளுத்தியும் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.புலிகளின் நிலப்பரப்பு விரிந்துகொண்டிருந்தது.புலிகள் யாழ்ப்பாணத்தையும் கைப்பற்றி விடலாம் என்கிற பயம் இலங்கை அரசுக்கு வந்திருந்தது அதனால் யாழ்ப்பாணத்தில் இருந்த பலாலிப் படைத்தளத்தில் இருந்த கன ரக ஆயுதங்கள் பீரங்கிகள் அனைத்தையும் கழற்றி கரை நகர் படைத்தளத்துக்கு மாற்றியிருந்தனர் .

அப்படி புலிகள் யாழ்பானத்தை கைப்பற்றினால் அங்கிருந்த 50 ஆயிரம் படையினரையும் இந்தியா பத்திரமாக மீட்டெடுத்து கேரளா பகுதிக்கு கொண்டு செல்வதென பேச்சு வார்த்தைகளும் இலங்கை இந்திய அரசுகளிடையே நடந்து கொண்டிருந்தது..வரை படத்தில் அம்புக்குறிகளால் புலிகள் முன்னேறிக் கொண்டிருக்கும் இடங்களை கவனித்த பிரபாகரன் . கிழக்கே ஒரு இடத்தில் தமிழீழ எல்லைக்கோட்டையும் தாண்டி அந்த அம்புக்குறிகள் நீண்டுகொண்டே போய்க்கொண்டிருந்தது .அந்தப்பகுதியில் கேணல் சங்கரின் தலைமையிலான சிறிய படையணி ஒன்று பதவியா பகுதியில் தமிழர் பிரதேசங்களையும் தாண்டி சிங்களப் பகுதிக்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள் .அந்தப்பகுதி ஸ்ரீலங்கா படையினர் காவல்துறையினர் மட்டுமல்லாது பொது மக்களும் இடங்களை விட்டு ஓடத் தொடங்கியிருந்தனர் .சங்கரின் அணியில் உண்மையில் 50 க்கும் குறைவானவர்களே இருந்தனர்.ஆனாலும் புலிகளின் பெரும் படையணி ஒன்று வருவதாக நினைத்தே அனைவரும் ஓடிக் கொண்டிருந்தனர் .அதை கவனித்த பிரபாகரன் அவசரமாக வாக்கி டோக்கியை எடுத்து தனது தளபதிகள் அனைவரையும் ஒரே அலை வரிசைக்கு வரச்சொன்னவர் உடனடியாக முன்னேறுவதை நிறுத்தி கைப்பற்றிய இடங்களில் பாதுகாப்பை பலப் படுத்திவிட்டு அனை வரையும் தன்னிடம் வருமாறு கட்டையிட்டர் .
எதற்கு முன்னேற்றத்தை நிறுத்தச் சொன்னார் என்று அருகில் நின்றிருந்த பொட்டம்மானுக்கு மட்டுமல்ல களத்தில் உற்சாகமா முன்னேறிக் கொண்டிருந்த தளபதிகளுக்கும் புரியவில்லை.ஆனால் கட்டளைக்கேட்ப அனைவரும் அவசரமாக வன்னிக்கு பிரபாகரனின் இருப்பிடத்திற்கு திரும்பினார்கள் .அப்போதுதான் யுத்த களத்தில் ஒரு மாற்றம் வந்தது .
கூடியிருந்த தளபதிகளிடம் முன்னேற்றத்தை உடனடியாக நிறுத்தச் சொன்ன காரணத்தை விளக்கினார் .இரண்டு மாதங்களாக தொடர்ச்சியாக நடந்த யுத்தத்தில் பெருமளவான போராளிகளை இழந்தும் காயமடைந்து சண்டையில் இருந்து அகற்றப்பட்டும் விட்ட நிலையில் .

நாங்கள் பெருமளவு நிலத்தை பிடித்துவிட்டோம் அதனை பாதுகாக்க போதுமான ஆட்பலம் எம்மிடம் இல்லை .ஓடிக்கொண்டிருக்கும் எதிரிக்கு எமது பலவீனம் தெரிந்துவிட்டால் நாங்கள் பிடித்த இடங்களை மீண்டும் இழக்க வேண்டி வரும் எனவே உடனடியாக எமது ஆட்பலத்தை கூட்ட வேண்டும் அடுத்தது முக்கியமான குறித்த இலக்கை மட்டும் நோக்கி முன்னேற வேண்டும்.இதுதான் அடுத்த திட்டம் .எனவே அவசரமாக புதிய ஆட்களை சேர்க்க வேண்டியது ஒவ்வொரு மாவட்ட தளபதிகளின் பொறுப்பு என்றுவிட்டு அனைவரையும் பார்த்தார் .தமிழ் செல்வன் வழமைபோல சிரித்தார் .மற்றவர்கள் ஒருவரையொருவர் பார்க்க கருணா மட்டும் குனிந்து நிலத்தில் விரிக்கப்பட்டிருந்த வரைபடத்தை பார்த்துக்கொண்டிருந்தான் .(அதற்கான காரணத்தை பின்னர் சொல்கிறேன் ..)

அடுத்ததாக எமது முக்கிய இலக்காக எதை நோக்கி நகரவேண்டும் என்கிற பிரபாகரனின் கேள்விக்கு அப்பொழுது சாள்ஸ் அன்ரனி சிறப்பு படைப் பிரிவுத் தளபதி பால்ராச் ஒரு யோசனையை முன்வைத்தார் யாழ் குடா நாட்டு காவலரண்களை பலப் படுத்தி விட்டு அனைத்து வளங்களையும் பாவித்து கிழக்கு பக்கமாக முன்னேறியிருக்கும் படையணியுடன் இணைந்து திருகோணமலை மாவட்டத்தை நோக்கி ஓயாத அலை நான்கு திட்டத்தை தொடக்கி முன்றேலாம் ஓடிக்கொண்டிருக்கும் படையினர் தொர்ந்து ஓடிக்கொண்டேயிருப்பார்கள். திருமலையில் அமைந்திருக்கும் கடற்படைத்தளம்தான் பலமானது அதனை கடல்வழியாக கடற்புலிகளும் தாக்கத் தொடங்கும் போது தரைவழியாக முன்னேறும் புலிகளும் தாக்கினால் அவர்களும் நிலை குலைந்து விடுவார்கள் திருகோணமலையை கட்டுப் பாட்டில் கொண்டுவந்தால் ஏற்கனவே கட்டுப் பாட்டில் இருக்கும் மட்டு அம்பாறை மாவட்டத்தில் இருந்தும் ராம் தலைமையில் ஒரு படையணி தாக்குதலை நடத்தியபடி முன்னேறி வரும் இரண்டு புலிகளின் அணியினரும் திருகோண மலையில் சந்தித்து வட தென் தமிழீழத்திற்கான நேரடி தரைவளித் தொர்பை ஏற்படுத்தி விடுவதோடு இதன் மூலம் தமிழீழத்தின் 70 வீதம் தரை மற்றும் கடற் பகுதி எமது கைளிற்கு வந்துவிடும்.அதற்கு பின்னர் யாழ் குடாவில் உள்ள படையினரிற்கான ஆயுத உணவு வழங்கல்கள் கடல் மூலம் நடாத்துவது இலங்கையரசிற்கு சிரமானது எனவே ஆகாய மார்க்கமாக நடக்கும் வழங்கலை சீர் குலைத்தாலே இலகுவாக யாழும் விழுந்துவிடும் என்று தனது திட்டத்தை வைத்தார்.

இவரது இந்தத் திட்டத்திற்கு சொர்ணம் ஆவலோடு தனது ஆதரவை தெரிவித்திருந்தார் காரணம் அவரது சொந்த மாவட்டமான திருகோணமலையை கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவருவது அவரது நீண்டநாள் கனவாக இருந்தது. அதே நேரம் பால்ராச்சின் யோசனைக்கு கருணா .பானு.பதுமன். சொர்ணம்.ஜெயம்.என முக்கிய தளபதிகளோடு பொரும்பாலானவர்கள் ஆதரித்தார்கள். ஆனால் குறுக்கிட்ட தமிழ்ச்செல்வன் கிழக்கை முழுவதுமாக கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்தால் மக்களற்ற பெருமளவான காடுகளும் வயல்களும் கொண்ட வெறும் நிலம் மட்டுமே கட்டுப் பாட்டில் வரும். அதே நேரம் கிழக்கு மாகணத்தை முழுவதுமாக கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்தாலும் அங்குள்ள மக்களின் நிதி நிலைமை யாழ்ப்பாணத்தோடு ஒப்பிடும் படியானதாக இல்லை கிழக்கை சேர்ந்தவர்களும் வெளிநாடுகளில் அதிகம் இல்லை எனவே இயக்கத்திற்கான நிதிவளத்தை பெருமளவாக அவர்களிடமிருந்து பெற முடியாது. யாழ்ப்பாணத்தை புலிகள் இழந்தபின்னர் சோர்வடைந்திருந்த புலம்பெயர் யாழ்ப்பாண சமூகம் மாங்குளம் ஆனையிறவு வெற்றியின் பின்னர்தான் பெருமளவான நிதி உதவியினை செய்திருக்கிறார்கள்.

எனவே யாழ்ப்பாணத்தை பிடிப்பதன் மூலமே பெருமளவு நிதியினை யாழிலும் வெளிநாட்டிலும் பெறமுடியும் அதுவே இயக்கதின் வளர்ச்சிக்கு உதவும் என தமிழ்ச்செல்வன் இலாப நட்ட கணக்கு போட்டு காண்பித்தார். இதற்கு புலிகளின் நிதிப் பொறுப்பாளர் தமிழேந்தி(றஞ்சித்) அனைத்துலக பொறுப்பாளர் கஸ்ரோ தளபதி தீபன் தளபதி துர்க்கா ஆகியோர் ஆதரவு தெரிவிக்க மற்றைய தளபதிகள் தலைவர் எது சொன்னாலும் சரி என்கிற நிலையை எடுத்திருந்தனர். யாழை நோக்கி படையெடுத்தால் முன்று பக்கம் கடலாலும் ஒரு பக்கம் புலிகளாலும் சூழப்பட்டிருக்கும் படையினரிற்கு ஓடுவதற்கு இடமில்லை அவர்களிற்கு புலிகளை எதிர்த்து போரிட்டு வெல்லவேண்டும் என்பதற்குமப்பால் வாழ்வா சாவா என்கிற போராகிவிடும் எனவே முடிந்தவரை சண்டையிடவே விரும்புவார்கள் என்கிற வாதத்தை பால்ராச் அணியினர் வைத்தார்கள்.ஆனையிறவு தாக்குதல்களின் போது யாழ்ப்பாணத்திற்கும் படையினர் தப்பிச் சென்றிருந்தனர் எனவே அவர்களும் புலிகளின் பலத்தைப் பற்றி மற்றைய படையினர்களிற்கு சொல்லியிருப்பார்கள் எனவே யாழ்ப்பாணத்தில் உள்ள இராணுவத்தினரும் உள ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பர்கள் நாங்கள் முன்னேறியபடியே இராணுவத்தை சரணடையச் சொல்லி அறிவித்தல்களை கொடுப்போம் ஒரு கட்டத்தில் இராணுவத்தினர் சரணடைய முடிவெடுத்ததும் அவர்கள் ஆயுதங்களை போட்டு விட்டு புலிகளின் கடும் பாதுகாப்புடன் ஏ 9 பாதை வழியாக வவுனியாவரை போய் சேருவதற்கு வழிவகை செய்யலாம் என்பது தமிழ்ச்செல்வன் தரப்பு வாதமாக இருந்தது.இறுதியில் வழைமை போல தமிழ்ச் செல்வன் சொன்னதே பிரபாகரனிடம் எடுபட்டது. இதனால் கிழக்கு மாகாணத் தளபதிகளும் போரளிகளும் மனச்சோர்வடைந்திருந்தனர்.
J’aimeCommenter